tag:blogger.com,1999:blog-643038166445388492024-02-07T06:59:42.279+03:00"ஆஹா பக்கங்கள்"எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comBlogger108125tag:blogger.com,1999:blog-64303816644538849.post-41822529974190081942013-02-17T11:03:00.000+03:002013-02-17T11:03:13.089+03:00பயணநாளில் ஒரு நாள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyUwulp7_gZcgBzYP2TaaMA3VqEHj2snldiJEKxOJIm4rI-BC1V0yxZVhngp7A2Sg_iyRktiNGlLVVyFqqlIWaHmMkpkXZA3tXN7ZBXka9Ogs9s-RQI-T4FjyRAY2jE_3npvBRBizXJQ/s1600/chozha.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyUwulp7_gZcgBzYP2TaaMA3VqEHj2snldiJEKxOJIm4rI-BC1V0yxZVhngp7A2Sg_iyRktiNGlLVVyFqqlIWaHmMkpkXZA3tXN7ZBXka9Ogs9s-RQI-T4FjyRAY2jE_3npvBRBizXJQ/s320/chozha.jpg" uea="true" width="232" /></a></div>
<br />
<br />
பயணநாளில் ஒரு நாள் <br />
<br />
-----------------------------------<br />
சிதம்பரம் அண்ணாமலை நகரில் இருக்கும் எனது நண்பர் இக்பாலை சந்திப்பதாக ஏற்பாடு. நண்பரை சந்தித்து வெகு காலமாகிவிட்டது. அதோடு கூடவே புத்தூரில் உள்ள அண்ணன் ஜெயராமன் கடையில் பகல் சாப்பாட்டை ஒரு கட்டு கட்டலாம் என்றும் ஒரு திட்டம். ஆனால் கடை ஓனரின் தம்பி தங்கதுரை எனக்கு இங்கே பழக்கமாகிவிட்டார். இருந்தாலும் அவருடைய அலைபேசி நம்பரை வாங்காமல் வந்தது தப்பென்று அப்பொழுது புரிந்தது.<br />
<br />
கார் புறப்பட்டு போகும் வழியில் தான் நினைவு வந்தது கடலூரில் நமது காசிம் பாய் வீட்டுக்கும் போனால் அவரும் சந்தோசப் படுவாரே அங்கும் ஒரு விசிட் அடித்து விடுவோம் என்று முடிவு செய்துக் கொண்டேன். மயிலாடுதுறை தாண்டிப் போகும் போது, டிரைவர் "பரங்கிப்பேட்டையில் ஒரு சின்ன வேலை இருக்கு, அஞ்சு நிமிசத்தில் முடித்து விட்டுப் போய் விடலாம்" என்றார். ஓகே done என்றேன். சமயங்களில் இப்படி இலக்கில்லாமல் போகிறேனோ என்று கூட மனம் யோசிக்கும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
பரங்கிப்பேட்டை என்றவுடன், மனதில் பல்ப் பளிச்சிட்டது. நமது ஆஸ்தான பதிவர் + நண்பர் தான். இவருடைய நல்ல பழக்கம் என்னவென்றால் நாம் அலைபேசினால் எப்போதுமே பதில் பேசமாட்டார். இத்தனைக்கும் ரெண்டு சிம் இருக்கு. ஒரு நம்பர் 050 என்றும், மற்றொரு நம்பர் 055 என்று ஆரம்பித்து மீதி நம்பர் எல்லாம் இரண்டிலுமே ஒரே மாதிரி இருக்கும். ஃபேன்ஸி நம்பராக தேடித் பார்த்து வாங்கியதாக சொல்வார். வீடு கட்டிக் கொண்டிருந்தாரே கட்டி முடித்து விட்டாரா தெரியவில்லை. வீட்டுக்கு வந்தால் பரங்கிப்பேட்டை பிரியாணி நிச்சயம் என்பார். அவருடைய பதில் பேசாத அந்த நல்ல பழக்கத்தினால் அங்கும் போக முடியாமல் போய் விட்டது. <br />
<br />
வண்டி பரங்கிப்பேட்டையில் ஒரு வீட்டின் வாசலில் நின்றவுடன் தான் நினவு கலைந்தது. டிரைவர், "இப்ப வந்துடுறேன்" என்று சொல்லிவிட்டுப் போனவர், உடனே வரவில்லை. அந்த வீட்டிலிருந்த அவரின் உறவினர் ஒருவர் தான் வெளியில் வந்து, எங்களை உள்ளே வந்து விட்டுப் போகச் சொல்லி வற்புறுத்தினார். சரி ரிலாக்ஸ் செய்துக் கொள்ளலாமே என்று எழுந்து போனோம். <br />
<br />
அங்கிருந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டே டீ யை உறிஞ்சுகையில் அந்த நோட்டிஸ் கண்ணில் பட்டது. அந்த நோட்டிஸ் இங்கே உங்கள் பார்வைக்கு! <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxTAOXk-HXTP4GNTlCXbw-EBtbHVjQDN2-WKhfSBcLOqiQtQbMXOQtfllbKqY-o_whM1Ucbo58tqXxMf6-1JVt5tzA9yxJKYf1b8h-_mTBzlaIOJmnePcrICkAeMDgK6fGjU5Xri8fsQ/s1600/iraivazhi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxTAOXk-HXTP4GNTlCXbw-EBtbHVjQDN2-WKhfSBcLOqiQtQbMXOQtfllbKqY-o_whM1Ucbo58tqXxMf6-1JVt5tzA9yxJKYf1b8h-_mTBzlaIOJmnePcrICkAeMDgK6fGjU5Xri8fsQ/s320/iraivazhi.jpg" uea="true" width="232" /></a></div>
<br /><br />
- பயணம் தொடரும் </div>
எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-64303816644538849.post-12285678975834477192012-07-10T21:01:00.002+03:002012-07-11T17:27:28.877+03:00ஸாஃபி-Safi (Herbal)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1geyykWzWQLYuB7K54-OXsm5ZA5IjOrgYt40Hfdf9H4nLRI33_2bLoLEWXU-kdeiGQbq9CxWl70yln7orCyaYtuJx8uXcK2XOkrLzBS8yAsjl6WG0zVMJb2Bv5r32tgvwmYGebriE1g/s1600/safi.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img $ca="true" border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1geyykWzWQLYuB7K54-OXsm5ZA5IjOrgYt40Hfdf9H4nLRI33_2bLoLEWXU-kdeiGQbq9CxWl70yln7orCyaYtuJx8uXcK2XOkrLzBS8yAsjl6WG0zVMJb2Bv5r32tgvwmYGebriE1g/s1600/safi.png" /></a></div>
இந்த படத்தில் பார்க்கும் டானிக் பாட்டிலை உங்கள் வீட்டில் எங்காவது பார்த்திருக்கிறீர்களா? உங்களின் தாத்தா காலம் தொட்டு இப்ப அப்பாக்கள் காலம் வரை இன்னும் பல குடும்பங்களில் உபோயகப் படுத்தப்படும் டானிக். இன்னும் பலருக்கு இதை பற்றி தெரியாமலே இருக்கலாம். அவர்களுக்காக இங்கே சொல்கிறேன். <br />
<br />
ஸாஃபி-Safi (Herbal)<br />
<br />
இது ஹம்தர்த் (Hamdard) கம்பெனியின் தயாரிப்பு! பன்னெடுங் காலமாய் மார்கெட்டில் வளம் வந்துக் கொண்டிருக்கும் இதன் உபயோகம் என்னவென்று தெரியாமல் நான் கூட கவனமில்லாமல் இருந்து விட்டேன். நண்பர் ஒருவர் சொன்ன பிறகே புரிந்தது. பயன் படுத்த ஆரம்பித்தேன். <br />
<br />
அதன் மகாத்மியம் பற்றி அவர்களே சொல்வது : <br />
<br />
Safi இது ஒரு பயனுள்ள இரத்த purifying மூலிகை துணை யாகும். அது உங்களின் உடலில் உள்ள செயல்பாடுகளை சுத்திகரிக்கும் நேரத்தில், குடல், சிறுநீரகம் மற்றும் தோல் மூலம் திரட்டப்பட்ட ஆரோக்கியமற்ற விஷயத்தை நீக்குதல் போன்ற வேலையை முடுக்கி விடுகிறது. Safi, செரிமான அமைப்பை சரி செய்து, மலச்சிக்கல் மற்றும் உடல் சூட்டை தணித்து, பருக்கள் , தோல் வெடிப்புகளை நீக்குகிறது.<br />
<br />
விவரம் போதுமா?<br />
<br />
இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், படிக்கிற பிள்ளைகளுக்கு அரவணைப்பாய் அன்னையும், கல்யாணம் முடிந்திருந்தால் அன்பான மனைவியும் அனுசரணையாய் பரிமாறிய கூட்டுக்குடும்பக் காலம் டெலிவிஷன் ஊடாய் தொடர்கள் என்னும் பின்னனியூடே கனவாகிப் போனது. என்றாலும், எல்லாக் குடும்பத்தையும் அப்படி சொல்லிவிட முடியாது, எங்கோ ஏதோ கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் சில குடும்பங்களில் கனவில் பலன் நடந்துக் கொண்டிருக்கலாம். <br />
<br />
வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் நம்மை போன்ற பலர் நம் உடல் நலனில் என்றைக்குமே அக்கறை கொள்வதில்லை. குடும்பம், பிள்ளைகள், சொந்தங்கள் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும். பெரும்பாலோனோர் இருக்கையில் அமர்ந்து கணிணியில் வேலை செய்து விட்டு, இரவில் அவசரம் அவசரமாய் சாப்பிட்டு விட்டு உறங்கி, உடல் உஷ்ணத்தால் காலையில் பாத்ரூமில் அமர்ந்து படும் அவதி சொல்லில் மாளாது. அவசர யுகம் நம்மை பாடாய் படுத்துகிறது.<br />
<br />
இரவில் இந்த டானிக்கை சாப்பிட்டுவிட்டு படுத்துறங்குங்கள். காலையில் எழுந்து பாத்ரூமுக்கு ஓட வேண்டியிருக்கும். அங்கே சென்று விட்டு வந்தால் கலகலாதான் :) எங்கள் பக்கமுள்ள வேளாங்கண்ணியை சுற்றிய கிராமப்புறங்களில் “மடா உடைத்த மாதிரி” (மண் பானையை போட்டுடைத்த) மாதிரி என்ற சொலவாடை சொல்வார்கள் :))<br />
<br />
சாப்பிடும் முறை : <br />
<br />
இரவில் சாப்பாட்டுக்குப் பின் படுக்கப் போகுமுன் பாலிலோ, தண்ணீரிலோ (தண்ணீர் என்றால் குடிக்கிற தண்ணீர் ஐயா!!) ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் கலந்து சாப்பிடவேண்டும். பாலில் கூடுதலாய் ஒரு ஸ்பூன் சுகர் கலந்துக் கொள்வது நல்லது. ஏனெனில் இந்த டானிக் கசப்போ கசப்பு அப்படி ஒரு கசப்பு!<br />
<br />
அதனுள்ளே உள்ள Leaflet-ல் விவரமிருக்கிறது. பார்த்துக் கொள்ளுங்கள். http://www.hamdard.com.pk/safi போய் தெரிந்துக் கொள்ளுங்கள் <br />
<br />
இந்தியாவில் இருந்து தயாராகும் இந்த 200 மிலி டானிக்கின் விலை ரூ.70 தான். இது நாட்டு மருந்துக் கடைகளிலும், பார்மஸிகளிலும் கிடைக்கிறது. <br />
<br />
பாகிஸ்தானிலிருந்து தயாராகி வெளிநாடுகளில், குறிப்பாக சவுதி போன்ற வளைகுடா நாடுகளில் விற்பனையாகும் இந்த 175 மிலி டானிக்கின் விலை Pkr 50/- ஆனால் இங்கே ரொம்ப கடைகளில் கிடைப்பதில்லை. வந்த உடனே விற்று தீர்ந்து விடுகிறது. நாட்டு மருந்துக் கடைகளிலும், Bhatkal போன்ற ஷாப்பிங் சென்டர்களில் மட்டுமே கிடைக்கிறது. விலை SR.10/= (சவுதி ரியால்கள்)<br />
<br />
<br />
<br /></div>எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-64303816644538849.post-16888278331068512052012-05-31T16:55:00.000+03:002012-05-31T16:55:00.536+03:00தெரிந்த சவுதி அரபியா, தெரியாத பல விஷயங்கள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXjZCBNjTRApSGMFWpePJbKVwM7fMwuZ9qbu-yf0f01c8yaB8U_G7bBXyt6FaDMdQsZaRwxB_h9e_TqvfXtk7pY8abdgazfvSaI0xkL0PerENm_bP-zey0JnfIV6JzTz4IAg54_7CHZg/s1600/saudi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="207" rba="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXjZCBNjTRApSGMFWpePJbKVwM7fMwuZ9qbu-yf0f01c8yaB8U_G7bBXyt6FaDMdQsZaRwxB_h9e_TqvfXtk7pY8abdgazfvSaI0xkL0PerENm_bP-zey0JnfIV6JzTz4IAg54_7CHZg/s320/saudi.jpg" width="320" /></a></div>
<br />
<br />
தெரிந்த சவுதி அரபியா.. தெரியாத பல விஷயங்கள்.. சவுதி பற்றி நல்ல விஷயங்களை நீங்களும் தெரிந்து கொள்ள.. <br />
<br />
<br />
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நாட்டைப் பற்றி ஒரு அபிப்ராயம் இருக்கிறது.<br />
<br />
அது அவர்கள் நாளிதழ்கள் வாயிலாகவோ, நண்பர்கள் வாயிலாகவோ, இன்ன பிற ஊடக வாயிலாகவோ அறிந்தவை. பொதுவாக அமெரிக்கா என்றால் மனதிற்குள் அது ஒரு சொர்க்க பூமியாகத் தோன்றும்.<br />
<br />
சவுதி அரபியா என்றால், அது குறித்த எண்ண ஓட்டங்கள் உலக பார்வையில் தரக் குறைவாகவே இருக்கிறது. அது பல இடங்களில் தன்னுடைய சட்ட திட்டங்களிலும், மனிதாபி மானத்திலும் கடுமையான உலக விமரிசனத்துக்கு உள்ளாகி இருப்பது உண்மைதான் என்றாலும், சவுதி அரபியா, தன் நாட்டின் பெருமையாக கொண்டுள்ள விடயங்களை, அது குறித்து நான் அறிந்த விடயங்களை மட்டுமே சில இங்கு பகிரப்பட்டுள்ளன.<br />
<br />
பெரும்பாலான சவுதி அரபிய சட்டதிட்டங்களிலும் மற்ற நாட்டினனுக்கான நீதி முறைகளிலும் பல கருத்துகள் ஒவ்வாது என்பதை சொல்லிக்கொண்டு, சவுதி அரபியாவின் வியக்கத்தக்க செய்திகளை நீங்கள் அறிய வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே படியுங்கள்.<br />
<br />
*முஸ்லிம் ஒருவர் தன் வாழ்வில் ஒருமுறையேனும் புனிதப்பயணம் மேற்கொள்ள வேண்டிய புனிதத்தளமான மெக்காவும், மெதினாவும் இங்குதான் உள்ளது.<br />
<br />
*உலகின் இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் கிடங்குகளை (world’s Second largest oil reserves) கொண்ட நாடாக இது உள்ளது. வெனிசுலா முதலிடத்தில் உள்ளது.<br />
<br />
*கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யாவிற்கு அடுத்த படியாக உலகின் இரண்டாவது மிக அதிகமான கச்சா எண்ணெய் (Worlds second largest oil export) ஏற்றுமதி செய்யும் நாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
*worlds sixth largest natural gas reserves என்ற இயற்கைவாயு சேமிப்பில் உலகின் ஆறாவது இடத்தில் சவுதி உள்ளது.<br />
<br />
*வளைகுடா நாடுகளில் அதிக பரப்பளவையும், அரபு நாடுகளில் அல்ஜீரியாவிற்கு அடுத்த இடத்திலும் சவுதி உள்ளது.<br />
<br />
*Abraj al bait towers இந்த ஹோட்டல் mekkah royal hotel tower என்றும் அழைக்கப் படுகிறது. இது பல உலக சாதனைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த ஹோட்டல் இவ்வாண்டு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இவ்வாண்டு திறக்கப்படும் பட்சத்தில், tallest hotel என்ற பெருமையை அடையும்.<br />
<br />
*Abraj al bait towers ல் உள்ள clock தான் உலகின் tallest clock tower என்ற பெருமையையும், largest clock face என்ற பெருமையையும் பெறுகிறது. இதன் சிறப்பு என்னவென்றால், 25 KM தொலைவில் இருந்து கடிகாரத்தைப் பார்க்க முடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!<br />
<br />
*உலகின் இரண்டாவது மிகப் பெரிய கட்டிடம் (World largest building) என்ற பெருமையை Abraj al bait towers அடைகிறது. இது குறித்து நீங்கள் அறிய விரும்பினால் இதை கிளிக் செய்யவும்.http://en.wikipedia.org/wiki/Abraj_Al_Bait_Towers<br />
<br />
*Worlds largest military funds spends என்பதில் சவுதி உலகில் ஏழாவது இடத்தில் உள்ளது. மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது.<br />
<br />
*மன்னர் அப்துல்லா உலகின் மூன்றாவது வலிமை வாய்ந்த தலைவராகக் கருதப்படுகிறார். சீனா, அமெரிக்கா நாட்டின் presidents முதல் இரு இடங்களை முறையே பெற்றுள்ளதாக இவ்வாண்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.<br />
<br />
*அமெரிக்காவை ஆட்டிப் படைத்த ஒசாமா பின்லேடனின் சொந்த நாடு சவுதி. SBG (Saudi Binladan Group) என்ற கம்பெனி தான் சவுதியில் மிகப் பெரிய contracting company என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
*princess noura bin abdul Rahman university(PNU) , இதுதான் உலகின் மிகப் பெரிய பெண்களுக்கு மட்டுமான university. <br />
<br />
*The world’s largest Automated People Mover (APM) train வசதி பெற்றுள்ள university ஆக PNU விளங்குகிறது. APM Railway யின் நீளம் 14 KM & In rush hour, 70000/HR பயணிகளை ஏற்றி செல்லும் அளவுக்கு ரயில் வசதி செய்யப் பட்டுள்ளது என்றால் PNU University யைப் பற்றி நாம் வேறு என்ன சொல்ல வேண்டும்! சவுதி அரேபியா உலகின் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் ஐந்தாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
*13000 மில்லியன்/வருடம் (ஒரு கோடியே முப்பது லட்சம்), வெளிநாட்டிலிருந்து முஸ்லிம் மக்கள் மெக்காவிற்கு வந்து வழிபட்டு செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மற்ற மதத்தினர் மெக்கா மற்றும் மெதினா நகர எல்கைக்குள் செல்ல முடியாது. கடந்த ஆண்டு 2011 அரசு அறிக்கைப் படி, ஹஜ் பயணிகளாக மெக்கா வந்தவர்கள் எண்ணிக்கை 1828195.<br />
<br />
*முஹம்மது நபி (ஸல்) பிறந்த புண்ணியத் தளம்தான் முஸ்லிம்கள் வழிபடும் இந்த மெக்கா.<br />
<br />
*உலகின் மிகப் பெரிய மசூதிக்குரிய பெருமை, மெக்கா மசூதியையே சாரும்.<br />
<br />
*ஆசியாவின் மிகச் சிறந்த university ஆக KSU(King Saud Univesity, Riyadh) 19 ஆவது இடத்திலும், உலகில் சிறந்த university வரிசையில் 200 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. அரபு நாடுகளின் மிகச் சிறந்த university ஆக KSU விளங்குகிறது.<br />
<br />
*சவுதி அரபியாவின் தேசிய விலங்காக ஒட்டகம் உள்ளது. ஒட்டகத்தை வளர்ப்பவர்கள் மிகப் பெரிய செல்வந்தர்களாகப் பார்க்கப் படுகிறார்கள்.<br />
<br />
*கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஓரினச் சேர்க்கை, தீவிர வாதம், விபச்சாரம், போதைப் பொருள் தயாரித்தல் அல்லது கடத்தல், தேசப் பாதுகாப்பு, கடவுளுக்கு எதிராக விமர்சித்தல், இன்னும் சில விரோத செயல்களுக்கு மரண தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கப்படுகிறது. குற்றங்களுக்கு கடும் தண்டனை என்பதை உபயோகிக்கும் உலக நாடுகளில் முதன்மையானது சவுதி.<br />
<br />
*திரை அரங்குகள் இல்லாத ஒரே நாடாக சவுதி அரபியா உள்ளது.<br />
<br />
*பூங்காக்களைப் பொறுத்தவரை Familiy park and Bachelor park என்று தனித் தனியாகவே உள்ளது. <br />
<br />
*உணவகங்களில் Familiy Restaurant இருக்கின்ற இடங்களில், இருக்கைகள் family க்குத் தனியாகவும், bachelor க்குத் தனியாகவும் உள்ளன.<br />
<br />
*மேற்கூறிய கடைசி மூன்று விசயங்கள் பெரும்பாலோர் விரும்புவதில்லை என்றாலும் சவுதி அரசின் கட்டளைப் படி அவ்வாறே இயங்குகின்றன.<br />
<br />
*தொழுகை நேரங்களில் அரசின் உத்தரவுப்படி அனைத்து கடைகளும் அடைத்து வைக்கப்படும்.<br />
<br />
ஒரு சில மிகப் பெரிய ஷாப்பிங் மாலில் மட்டும் உள்ளே செல்ல அனுமதி உண்டு. விலை போடுவது என்பது கிடையாது. இறைவனுக்குப் பிறகு தான் வியாபாரம் என்பதைக் கடைபிடிக்கும் ஒரே இஸ்லாம் நாடாக சவுதி உள்ளது.<br />
<br />
*King Fahd International Airport (KFIA) தான் உலகின் largest airport in the world ஆக உள்ளது.<br />
<br />
*Saudi ARAMCO தான் உலகின் second largest public company ஆக உள்ளது. இது dammam ல் உள்ளது.<br />
<br />
*Saudi ARAMCO உலகில் அதிக அளவு crude oil reserves ஐயும், உலகில் அதிக அளவு ஒரே நாளில் ஆயில் உற்பத்தி செய்யும் நிறுவனமும் சவுதியில்தான் உள்ளது. ஆயில் சம்பந்தமான 1oo pattern rights வைத்துள்ள saudi aramco, இங்குதான் உள்ளது.<br />
<br />
*ஒரேநாளில் 12 millions/day அளவுக்கு SAUDI ARAMCO நிறுவனம் உற்பத்தி செய்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.<br />
<br />
*கெமிக்கல் உற்பத்தியில் SABIC SAUDI ARABIYA தான் பல பொருட்களை உற்பத்தி செய்வதில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக Ethlene glycol உற்பத்தியில் உலகில் இரண்டாம் இடத்தையும், Poly ethlene தயாரிப்பில் மூன்றாமிடத்தையும், Poly propline, Poliyofins உற்பத்தியில் உலகில் நான்காம் இடத்தையும் தன்னகத்தே வைத்துள்ள, SABIC சவுதியில் தான் உள்ளது.<br />
<br />
*உலகில் அதிகம் வாகன போக்குவரத்து உள்ள நாடுகளில் சவுதியும் ஒன்று. ஆனால் இங்கு கார் தயாரிப்பு கிடையாது.<br />
<br />
*உலகில் எங்கும் கிடைக்காத அமைதி தவழும் பூமி!<br />
<br />
நன்றி : கதம்பம் <br />
<br /></div>எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-64303816644538849.post-65197249961784459602012-04-27T14:41:00.000+03:002012-04-27T14:41:37.516+03:00மரவள்ளிக் கிழங்கு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_0UfC9yveV0fOaz5XAmQU2Y25pKUi6cLLwSLSCzSrUSdHDRbguz73KUW4ic035est9GV-cjJh7LnR6oYIMtxFRfIvwdjInsBIIh-VfjXCJT5gwruNodL8DziaWcGQpWC4lpCPtWhUCg/s1600/120px-Bollo_de_yuca.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="150" oda="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_0UfC9yveV0fOaz5XAmQU2Y25pKUi6cLLwSLSCzSrUSdHDRbguz73KUW4ic035est9GV-cjJh7LnR6oYIMtxFRfIvwdjInsBIIh-VfjXCJT5gwruNodL8DziaWcGQpWC4lpCPtWhUCg/s200/120px-Bollo_de_yuca.jpg" width="200" /></a></div>
<br />
படிக்கிற காலத்தில் நான் விரும்பி சாப்பிடும் ஐட்டங்களில் இந்த மரவள்ளிக் கிழங்கும் ஒன்று. கடைதெருவில் கூடைகளில் வைத்து விற்பவர்கள், கூடைகளின் மேல் ஒரு பலகையை வைத்து அழகாய் வெந்து வெடித்த கிழங்குகளை பார்வைக்கு வைத்திருப்பார்கள். பார்க்கும் போதே வாங்கிடனும் போல ஆசை வரும். வாங்கி விடுவேன். வீட்டில் கொண்டு வந்து கொடுத்தால், அம்மா அதை அழகாக தோலுரித்து, சிறிது சிறிதாக வெட்டி, சீனி, தேங்காய் பூ போட்டு பிளேட்டில் கொண்டு வந்து தருவார்கள். சாப்பிட சாப்பிட சுவையாய் இருக்கும். <br />
<br />
<br />
பின்னாளில் நான் ஊர் செல்லும்போதெல்லாம் அம்மா இதை நினைவு வைத்து, ஒரு கடமையாகவே எனக்கு வாங்கி வைத்திருப்பார்கள். அது ஒரு கனாக்காலம்.இப்பொழுது இங்கே கிடைக்கிற மரவள்ளிக் கிழங்குகளை வேக வைத்து சாப்பிட்டாலும், அம்மாவின் கைமணம் இல்லவே இல்லை. ஆனால் கடைகளில் விற்கும் கிழங்குகள் மட்டும் எப்படி அழகாய் வெந்து வெடித்திருக்கிறது என்று இன்று வரை புரியவில்லை.<br />
<br />
கொஞ்சம் அதன் கதையை தெரிந்துக் கொள்வோம் <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgewAmGWSvAicqaLmV0eYi_jFTq7h5xoEu9epSA9Zpq-BQ63uQEEglct6VZrKZXozLLG0kenfdEKHIfrxoRfuXbrqpDLuJ_JbG_p-8kVlMwt-UyxY_S7TGJSuaq_lEj95Fc6rQWti4dXw/s1600/imagesCAIF0GKT.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" oda="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgewAmGWSvAicqaLmV0eYi_jFTq7h5xoEu9epSA9Zpq-BQ63uQEEglct6VZrKZXozLLG0kenfdEKHIfrxoRfuXbrqpDLuJ_JbG_p-8kVlMwt-UyxY_S7TGJSuaq_lEj95Fc6rQWti4dXw/s1600/imagesCAIF0GKT.jpg" /></a></div>
<br />
தமிழ்நாட்டில் இக்கிழங்கிற்கு மரவள்ளிக் கிழங்கு என்பது தவிர கப்பக் கிழங்கு, ஏலேலங் கிழங்கு (திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம்) குச்சிக் கிழங்கு, குச்சிவள்ளிக் கிழங்கு என வேறு சில பெயர்களும் உண்டு. <br />
<br />
<u><span style="background-color: white; color: blue;">வரலாறு :</span></u><br />
<br />
தென் அமெரிக்காவையும் மேற்கு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்ட இச்செடி இன்று ஆப்பிரிக்காவில் அதிகம் பயிர் செய்யப் படுகிறது, என்றாலும் அமேசானை பிறப்பிடமாகக் கொண்ட மரவள்ளிக் கிழங்கு இந்தியாவில் 17-ஆம் நூற்றாண்டில் கேரளாவில் போர்துகீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. (கப்பலில் வந்ததால் “கப்பக் கிழங்கா” என்ற வரலாறு தெரியவில்லை அமைச்சரே!) கொலம்பசின் காலத்துக்கு முற்பட்ட அமெரிக்காக் கண்டத்தில் வாழ்ந்த மக்களின் முக்கிய உணவாக விளங்கிய மரவள்ளி அவர்களின் தாயக ஓவியங்களிலும் இடம் பெற்றது. <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkrOvyO_IXwFt0kH4NiuQdxf3I1hEHCm7YZup_BCWu3ItHTfNEQljEVWnlxgvHtBwcFkChQj5M1JhWUFJcdadcQPStNef-N4xUiRKcVxweqagPYBaC_ZNIxnwQNRXYI0525fOGYUfeRg/s1600/imagesCAY0WPV1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" oda="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkrOvyO_IXwFt0kH4NiuQdxf3I1hEHCm7YZup_BCWu3ItHTfNEQljEVWnlxgvHtBwcFkChQj5M1JhWUFJcdadcQPStNef-N4xUiRKcVxweqagPYBaC_ZNIxnwQNRXYI0525fOGYUfeRg/s1600/imagesCAY0WPV1.jpg" /></a></div>
<br />
இதிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மாவுப் பொருள் ஜவ்வரிசி ஆகும். இது உப்புமா, பாயாசம், கஞ்சி முதலியவை தயாரிக்கப் பயன் படுகிறது. மரவள்ளிக்கிழங்கு ஸ்டார்ச், குளுக்கோஸ், டெக்ஸ்ட்ரின், கோந்து, புரூக்டோஸ் சாறு ஆகியவை தயாரிக்கும் தொழில்துறை சார்ந்த தொழிற்சாலைகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக பயன்படுகிறது. <br />
<br />
மரவள்ளியைச் சமைக்கும்போது இஞ்சியைக் கலந்து சமைத்தல் அல்லது மரவள்ளி உணவுடன் இஞ்சி கலந்த உணவுப் பொருள்களை உட்கொள்ளல் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என அறியப்பட்டுள்ளது. தோலுரித்த மரவள்ளிக் கிழங்கை வெறுமனே அவித்து உண்பது உலகின் பல பகுதிகளிலும் பொதுவாகக் காணப்படுகின்றது. <br />
<br />
இதனைத் துணைக் கறிகளுடன் ஒரு வேளை உணவாகப் பயன் படுத்துவதும் உண்டு. அவித்த கிழங்கை மிளகாய், உப்பு போன்ற பொருட்களுடன் சேர்த்து உரலில் இட்டு இடித்து உண்பதும் உண்டு. கிழங்கைக் குறுக்காக மெல்லிய சீவல்களாக வட்டம் வட்டமாகச் சீவி, எண்ணெயில் இட்டுப் பொரித்து உண்பதுண்டு. <br />
<br />
இது பொதுவாக சிற்றுண்டியாகவே பயன்படுகின்றது. இப் பொரியலைப் பல நாட்கள் வைத்து உண்ண முடியும் என்பதால், இவற்றை நெகிழிப் பைகளில் (பிளாஸ்டிக் கேரி பேக்ஸ்'ங்க) அடைத்து விற்பதுடன் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. <br />
<br />
<u><span style="color: #38761d;">மரவள்ளிக் கிழங்கு புட்டு:</span></u><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvo1zapzAhDgCuDWz9Up887HVG5wug9kZAWvM9OG3RQDOKOS6RVOQua0tjW0r-6s2bCLmiWp0MMPcfRzlPlb4nBzzcGqV_MHBK-BwENIXQSa6G_zVE8VbVDHF_eEpe4kT4DTMm6SHfkw/s1600/p41.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" oda="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvo1zapzAhDgCuDWz9Up887HVG5wug9kZAWvM9OG3RQDOKOS6RVOQua0tjW0r-6s2bCLmiWp0MMPcfRzlPlb4nBzzcGqV_MHBK-BwENIXQSa6G_zVE8VbVDHF_eEpe4kT4DTMm6SHfkw/s1600/p41.jpg" /></a></div>
<br />
வழக்கமா மாவு வகைகள்லதான் புட்டுப் பண்ணுவோம். ஆனா, கிழங்குகளை வெச்சும் கிராமங்கள்ல புட்டு அவிக்கறதுண்டு. அந்த வகைல வர்ற இந்த மரவள்ளிக் கிழங்கு புட்டு சாப்பிட அத்தனை ருசியா இருக்கும்! <br />
<br />
அரைக் கிலோ மரவள்ளிக் கிழங்கை அரை மணி நேரம் தண்ணீர்ல ஊற வெச்சு, அப்புறமா மண் போக கழுவிட்டு மேல இருக்கற பட்டைய உரிச்சுடுங்க. கிழங்கை சன்னமாத் துருவி, இட்லிப் பானைல பரவலாத் தூவி, பதினைந்து நிமிஷம் வேக வைங்க. வெந்ததும், சூட்டோட இருக்கறப்பவே ஒண்ணுலேர்ந்து ஒண்ணரைக் கப் அளவுக்கு சர்க்கரை, ஒரு டீஸ்பூன் ஏலத்தூள், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி விடுங்க. அவ்வளவு தான் வேலை. புட்டு தயார்! <br />
<br />
இதை அப்படியேயும் சாப்பிடலாம். சின்னச் சின்னதா உருண்டை பிடிச்சும் சாப்பிடலாம். கிழங்குத் துருவலை ஒரு டிரேல கொட்டி சமப்படுத்தி, அப்புறமா ஆவியில வேகவெச்சு எடுத்து, விரும்பின வடிவத்துல துண்டுகளா போட்டு, அதுமேல முந்திரி துண்டுகளை பதிச்சுக் கொடுத்தா… குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க. <br />
<br />
தகவல் + படங்கள் : விக்கிபீடியா. </div>எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-64303816644538849.post-81369439648475905132012-03-07T17:22:00.000+03:002012-03-07T17:22:39.854+03:00வைரத்தின் வரலாறு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqQ5F2XTfc5NMqJDRC4jxO2QfLCIG9SkmrjLH2JS6qC71vwD8HIzK5A5qQGgDGHWjH0EMezxHdnr0d04XfWQjsvL83xB5L2YCNw6bKvnr2Ma7PzD2D1PyfOFlsxVGPPY-On6DBwJZRaQ/s1600/imagesCAD1GPLA.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqQ5F2XTfc5NMqJDRC4jxO2QfLCIG9SkmrjLH2JS6qC71vwD8HIzK5A5qQGgDGHWjH0EMezxHdnr0d04XfWQjsvL83xB5L2YCNw6bKvnr2Ma7PzD2D1PyfOFlsxVGPPY-On6DBwJZRaQ/s1600/imagesCAD1GPLA.jpg" yda="true" /></a></div>
<br /><br />
<br />
வைரத்தின் வரலாறு<br />
<br />
இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும்.<br />
<br />
உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது.<br />
<br />
இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.<br />
<br />
வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்து தான் "வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்'' என்ற பழமொழியும் வந்தது.<br />
<br />
வைரம் எப்படி உருவாகிறது?<br />
<br />
பூமியின் மேற்பரப்பில் இருந்து 150-200 கிலோ மீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 டிகிரி சென்டி கிரேடு வெப்பம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போது சுத்தமான கார்பன் மூலக்கூறுகளால் வைரம் உருவாகிறது.<br />
<br />
வைரம் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் ?<br />
<br />
இன்றைக்கு நாம் உபயோகிக்கும் வைரங்களில் மிகவும் வயது குறைந்த வைரம் 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக 1977-ல் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.<br />
<br />
வைரம் ஏன் இவ்வளவு ஜொலிக்கிறது ?<br />
<br />
வைரம் மட்டுமே தன்னுள் பாய்கின்ற வெளிச்சத்தில் 85 சதவீதம் ஒளியை பல கோணங்களில் பிரதிபலித்துத் திருப்பி வெளியிலேயே அனுப்பி விடும். வேறு எந்த ரத்தினத்துக்கும் இந்த தன்மை கிடையாது. இதனை ஆங்கிலத்தில் Internal Reflection (TIR) முழுமையான உள்பிரதிபலிப்பு என்பர். அதனால் தான் இதனை அடம் பிடிக்கும் ஜொலிப்பு (Adamantine Luster) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.<br />
<br />
வைரத்தின் ஆங்கிலப் பெயர் Admas என்பதாகும்.<br />
<br />
இந்த வார்த்தை மருவி, Diamond என்று வழக்கத்தில் ஆகிவிட்டது.<br />
<br />
வைரத்தை ஏன் காரட்(Carat)முறையில் எடை போடுகிறார்கள் ?<br />
<br />
இந்தியாவிற்குப் பிறகு, 1870 லிருந்து தென் ஆப்பிரிக்காவில் வைரங்கள் கண்டெடுக்கப்ப டுகிறது. இங்கு, எடை அளவுகள் நிர்ணயிக்கப் படாத காலகட்டத்தில் காரப் விதை (Carob Seeds) என்ற ஒருவித விதைகளையே எடையாக பயன்படுத்தினர். ஏனென்றால் இந்த விதைகள் அனைத்தும் அநேகமாக ஒரே அளவு எடை உடையவை.இந்த காரப் என்ற பெயர் மருவி, காலப்போக்கில் காரட் என்றாகி விட்டது.<br />
<br />
ஒவ்வொரு காரப் விதையும் 200 மில்லி கிராம் எடை கொண்டது. ஆகவே, ஒரு காரட் வைரத்தின் எடை 200 மில்லி கிராம். அதாவது 5 காரட் 1 கிராம் எடை.<br />
<br />
சென்ட் என்பது எந்த எடையை குறிக்கும் ?<br />
<br />
ஒரு காரட் என்பது 100 பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகமும் 1 சென்ட் எனப்படும். ஒரு காரட் வைரம் 100 சென்ட்டுகள்.<br />
<br />
உம் : 10 சென்ட் கற்கள் 10 எண்ணிக்கை 1 காரட்.<br />
<br />
ப்ளு ஜாகர்(Blue Jager)வைரம் என்றால் என்ன ?<br />
<br />
தென் ஆப்பிரிக்காவில் ஜாகர் பவுண்டன் (Jagers Fontein) என்ற இடத்தில் ஒரு வைரச்சுரங்கம் இருந்தது. அங்கிருந்து எடுக்கப்பட்ட வைரங்கள் வெண்மையோடு சேர்ந்த ஒரு நீலநிற ஒளியைக் கொடுக்கும். அதனால் தான் அந்த வைரங்களுக்கு Blue Jager என்று பெயர். ஆனால் இப்பொழுது இந்த சுரங்கம் உபயோகத்தில் இல்லை.<br />
<br />
வைரத்திற்கு இவ்வளவு விலை ஏன் ?<br />
<br />
ஒரு காரட் வைரம் தோண்டி எடுக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 350 டன் (35/40 லாரி லோடு) பூமியை தோண்டி எடுக்க வேண்டும். அதிலும் நிச்சயமாய் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதற்காகும் செலவு, பட்டை தீட்டும் போது ஏற்படும் சேதம், சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்), இதில் செய்யும் முதலீடு, தரம் பிரித்தல் மற்றும் பிற செலவுகள் சேரும் போது விலை கூடுகிறது.<br />
<br />
இந்தியாவில் எங்கு வைரம் கிடைக்கிறது ?<br />
<br />
இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் பன்னா (Panna) என்னும் இடத்தில் உள்ள வைர சுரங்கத்திலிருந்து தினமும் வைரம் தோண்டி எடுக்கிறார்கள். இங்கிருந்து இன்றும் நல்ல தரமான வைரங்கள் கிடைக்கிறது. ஆனால் ஆப்பிரிக்காவை ஒப்பிட்டால், மிகவும் குறைந்த அளவே இங்கு கிடைக்கிறது.<br />
<br />
பெல்ஜியம் கட்டிங் என்றால் என்ன ?<br />
<br />
முதல் முதலில் இந்திய வல்லுநர்கள் பட்டை தீட்டியதை இன்னும் மேம்படுத்தி, பெல்ஜியம் நாட்டை சேர்ந்த லோடெவிஜ்க் வேன் பெர்க்காம் என்ற வல்லுநர் 58 பட்டைகளோடு மிகவும் நன்றாக ஜொலிக்கும் முறையில் வைரத்தை பட்டை தீட்டினார். இதற்கு (Round Brilliant cut) என்று பெயர். இது தான் பெல்ஜியம் கட்டிங்.<br />
<br />
வைரம் உலகிலேயே மிகவும் கடினமானது என்கிறார்களே ?<br />
<br />
வைரத்தை வெட்டவோ, பட்டை தீட்டவோ செய்வதற்கு வைரத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் வைரத்தை வைத்து மற்ற எல்லா ரத்தினக் கற்களையும் பட்டை தீட்டலாம். ஆனால் வைரத்தை பட்டை தீட்ட, வைரத்தால் மட்டுமே முடியும்.<br />
<br />
பட்டை தீட்டிய வைரக்கல்லில் உலகில் உள்ள எந்தப் பொருளை வைத்து உரசினாலும் அதில் கீறல் விழாது. இதைத்தான் வைரத்தின் கடினத்தன்மை Hardness என்கிறோம்.<br />
<br />
வைரம் என்னென்ன நிறங்களில் கிடைக்கிறது ?<br />
<br />
வெள்ளை (நிறமற்றது), மஞ்சள், பிரவுன், கிரே பச்சை, ஆரஞ்சு, பிங்க், நீலம், வெளிர்பச்சை, வயலட் கலர்களில் கிடைக்கிறது. முழுக்கறுப்பிலும் காணப்படுகிறது.<br />
<br />
இந்தியாவில் கிடைத்த மிகப் பெரிய வைரம் எது ?<br />
<br />
கோல்கொண்டாவில் கிடைத்த கோகினூர் வைரம் தான் மிகப் பெரியது. இதன் எடை 105.80 காரட்கள். இன்று இங்கிலாந்தில் Tower of London என்னும் இடத்தில் அரச பரம்பரை நகைகள் ஒரு மகுடத்தில் சூட்டப்பட்டு காட்சியளிக்கிறது.<br />
<br />
இதுவரை உலகில் கிடைத்த மிகப்பெரிய வைரம் எது ?<br />
<br />
தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட Golden Jubilee தான் மிகப்பெரியது இதன் எடை : 545.67 காரட்டுகள், தாய்லாந்து அரசரிடம் இது உள்ளது. <br />
<br />
<br />
நன்றி : இன்று ஒரு தகவல் <br />
<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIdfvBpWehFJnbN22l0jF-H95MChonPUj3d_wo6JbA50uFjbgSzaEN4rRcB4jiKrylWxeAJ0d4RflHHwpJ_F7FU-FmhJ0XDV6ogK3cHE0VIGykFuVLVBI7_VDXYlsAI4HwWjXJubmwzw/s1600/imagesCAA620X5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIdfvBpWehFJnbN22l0jF-H95MChonPUj3d_wo6JbA50uFjbgSzaEN4rRcB4jiKrylWxeAJ0d4RflHHwpJ_F7FU-FmhJ0XDV6ogK3cHE0VIGykFuVLVBI7_VDXYlsAI4HwWjXJubmwzw/s1600/imagesCAA620X5.jpg" yda="true" /></a></div>
<br />
</div>எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-64303816644538849.post-48302289222405182022012-02-16T20:40:00.000+03:002012-03-11T17:16:26.798+03:00செவி வழி தொடு சிகிச்சை [[செலவில்லா மருத்துவம்]]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/mjUsf54YEPU?feature=player_embedded' frameborder='0'></iframe></div>
<br />
<br />
<u>செவி வழி தொடு சிகிச்சை !! [[செலவில்லா மருத்துவம்]] </u><br />
<br />
நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி! எனது நண்பர் ஒரு மாதமாக அவருக்கு கிடைத்த cd யை பார்க்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தார். பார்த்தேன். அதை உங்களோடு பகிர்கிறேன். மருத்துவப் பதிவுகளாகவே போட்டுக் கொண்டிருப்பதால் என்னை டாக்டர் என்று யாரும் நினைத்து விடவேண்டாம் :-)<br />
<br />
நீரிழிவு எனும் சக்கரை நோய் (Diabetes) அவருக்கு இருக்கிறது. இது ஒரு குணப்படுத்த முடியாத வியாதி என்றாலும் இதை முழுமையாக குணப்படுத்த முடியும் என்றே சொல்லுகிறார் இந்த டாக்டர். <br />
<br />
இலவசம் என்றால் எப்பவுமே ஒரு கிரேஸ் இருக்கும் அல்லது பெரிதாய் ஒரு எதிர்பார்ப்பு இருக்காது. டாக்டரே எல்லா விஷயங்களையும் முழுமையாக இலவசமாக சொல்லிக் கொடுக்கிறார். <br />
<div>
</div>
<div>
<br />
வீடியோவை இங்கே அழுத்தி <a href="http://www.anatomictherapy.org/">http://www.anatomictherapy.org/</a> முழுமையாக பொறுமையாகப் பாருங்கள். வீடியோ பார்க்க நேரமில்லாதவர்களுக்கு சின்னதாய் ஒரு இன்ட்ரடொக்சன்.</div>
<br />
<u>Anatomic Therapy என்றால் என்ன</u>?<br />
<br />
நாம் அனைவரின் உடலிலும் ஒரு சுரப்பி இருக்கிறது. அது சுரக்கும் ஒரு திரவம் மனிதனின் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். இந்த திரவம் 120 வயது வரை சுரக்கும்.<br />
<br />
அந்த சுரப்பியின் பெயர் என்ன? உடலில் எங்கே உள்ளது? அது சுரக்கும் திரவத்தின் பெயர் என்ன? அதை எப்படி நமக்கு நாமே சுலபமாக சுரக்க வைப்பது என்பதை படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவருக்கும் தெரியும்படி பல மொழிகளில் விளக்கமாக நான்கு மணி நேரத்தில் புரிய வைத்து கற்றுகொடுக்கிறார் டாக்டர் Healer பாஸ்கர்.<br />
<br />
48 மணி நேரத்தில் இந்த சுரப்பியை சுரக்க வைக்க முடியும். அனைத்து நோய்களும் 120 நாள் முதல் 360 நாளுக்குள் முற்றிலும் குணமாகும்.<br />
<br />
இந்த சிகிச்சையில் எந்த மருந்து, மாத்திரை, ஊசி, தியானம், யோகா, மூச்சுபயிற்சி, உடற்பயிற்சி, அக்குபஞ்சர், ரெய்க்கி, நாடிபார்த்தல், பத்தியம் கிடையாது. <br />
<br />
இவ்வாறு நமது உடலில் உள்ள ஒரு சுரப்பியை நாமே சுரக்க வைத்து நமது நோய்களை நமக்கு நாமே குணப்படுத்தி கொள்ளும் முறைக்கு அனடாமிக் தெரபி, செவிவலி தொடு சிகிச்சை என்று பெயர்.<br />
<br />
இந்த சிகிச்சைக்கு 4 மணி நேரம் செலவு செய்தால் போதும்.<br />
<br />
உப்பு, புளி, காரம், குறைக்க தேவையில்லை, பத்தியமும் இல்லை, வாக்கிங் தேவை இல்லை. <br />
<br />
சக்கரை மற்றும் அனைத்து நோயாளிகளும் சிகிச்சை முடிந்த அடுத்த வினாடி முதல் எல்லா இனிப்புகள், பழங்கள், எண்ணெய் பலகாரங்கள், மனதுக்கு பிடித்த எல்லா உணவுகளையும் வாழ்க்கை முழுவதும் தாராளாமாக சாப்பிடலாம். <br />
<br />
ஒரே ஒரு முறை சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதும் இரண்டாவது முறை சிகிச்சை எடுக்க அவசியம் இல்லை.<br />
<br />
இந்த சிகிச்சை எந்த மதமும் சம்பந்தப்பட்டது அல்ல. எனவே எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்.<br />
<br />
வழி - 1 # 9944221007, 9842452508 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் ஊரில் இலவச சிகிச்சை நடக்கும் நாள் மற்றும் இடத்தை தெரிந்து கொண்டு நேரில் வரலாம். <br />
<br />
வழி - 2 # நேரில் வரமுடியாத நோயாளிகளும் மருத்துவ துறையில் உள்ளவர்களும் DVD -ஐ VPP அஞ்சல் மூலம் பெற்று உங்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெறலாம். <br />
<br />
வழி - 3 # 500- பேர் ஒன்று சேர்ந்து அழைத்தால் உங்கள் இடத்திற்கே வந்து இலவச சிகிச்சை அளிக்கப்படும் (வீடு, ஆசிரமம், அப்பார்ட்மெண்ட், கல்லுரி, பள்ளி, முதியோர் இல்லம், அலுவலகம்).<br />
<br />
வழி- 4 # முழு சிகிச்சை முறையை <a href="http://www.anatomictherapy.org/">http://www.anatomictherapy.org/</a> என்ற இணைய தளத்தில் இலவசமாக பார்த்து கொள்ளுங்கள். <br />
<br />
யாராவது இதற்கு முன் இதை பார்த்திருந்தாலும், படித்திருந்தாலும் நீங்களும் இதை ‘உங்களுடைய ஆலோசனையை கருத்துரையாய்’ மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் நம்மில் பலர் நோயாளிகளாகவே இருக்கிறோம். ஆகவே சபையோர்களே இதனால் எனக்கு எந்தவித கமிஷனும் கிடைத்து விடாது என்று சொல்லிக் கொள்ள விழைகிறேன் :-)</div>எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com34tag:blogger.com,1999:blog-64303816644538849.post-69683217302967107882012-01-24T20:05:00.000+03:002012-01-28T20:33:25.099+03:00கடையில் அரைத்து பாக்கெட்டில் விற்கும் இட்லி, தோசை மாவு: ஒரு ஸ்லோ பாய்ஸன்??!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4v0j7et74sNKu3b9ePzVlrnqEXQBztZd6qmND8lpOJx311LOn5dqI2atp6ftyjPb09Mci3RRr-F2XQkcrziMNgpbpGq_2TDKqX_sIBpv5R5neHrBQXSYqaep_PCPUU2hCGCfeBbhvoA/s1600/404260_291325990916100_100001161044568_784414_1852041782_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" gda="true" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4v0j7et74sNKu3b9ePzVlrnqEXQBztZd6qmND8lpOJx311LOn5dqI2atp6ftyjPb09Mci3RRr-F2XQkcrziMNgpbpGq_2TDKqX_sIBpv5R5neHrBQXSYqaep_PCPUU2hCGCfeBbhvoA/s320/404260_291325990916100_100001161044568_784414_1852041782_n.jpg" width="320" /></a></div>
<br />
என்ன தலைப்பை பார்த்து பயந்துவிட்டீர்களா, ஆம் இது <br />
<div>
<span id="6_TRN_0">முற்றிலும் </span> உண்மை!!</div>
<br />
மைதாவினால் செய்த பரோட்டா, அதில் உள்ள கெமிக்கல் உடம்புக்கு நல்லது அல்ல என கொஞ்ச நாளுக்கு முன் ஃபேஸ்புக்கில் பெரிதளவில் ஷேர் செய்யபட்ட பரபரப்பு அடங்கு முன்னர், இப்பொழுது இட்லி எனப்படும் வேகவைத்த "ரைஸ் பேன்கேக்" பற்றிய சிறு ஆய்வு. <br />
<br />
பரோட்டாவாவது நமது பாரம்பரிய உணவு அல்ல, மற்றும் அதை இளைஞர்கள் தான் உண்ணுவார்கள், ஆனால் இப்பொழுது நமது ஒரு வயது குழந்தை முதல் வயாதனவர்கள் வரை உண்பது "இட்லி" எனப்படும் ஒரு தமிழனின் உணவு. இது போக பேஷண்ட்களும், அறுவை சிகிச்சை செய்தவர்களும் மற்றும் திட உணவு சாப்பிட ஆரம்பிக்கும் எந்த ஒரு பேஷண்டுக்கும் பரிந்துரைக்கும் முதல் உணவு இட்லி தான். <br />
<br />
இந்த கட்டுரையை நான் எழுதவேண்டும் என பல மாதங்கள் நினைத்தும் ஏனோ சில பல காரணங்களால் அது நடக்காமல் போனதற்கு ஒரு முக்கிய காரணம் அதற்கு தேவையான ஆராய்ச்சி விஷயங்கள் தான். அதற்குரிய பொறுமையான தேடல்களில் சமீபமாய் கிடைத்தவைகளை தான் உங்களுடன் பகிர்கிறேன். <br />
<br />
ஆம், நான் கூறும் இந்த விஷயங்கள் 100% சதவிகிதம் உண்மை. இட்லியை நீங்கள் வீட்டில் மாவரைத்து சாப்பிட்டால் பிரச்சினை கொஞ்சமும் இல்லை இதையே கடையில் வாங்கி சாப்பிட்டால் பல பேருக்கு ஒத்து வராது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்ப என்ன தான் பிரச்சினை என்கிறீர்களா?? அதற்கும் தேவையான் மாவு பற்றி தான் இந்த ஆய்வு கட்டுரை.<br />
<br />
ஆம். ஒரு காலத்தில் நாம் ஆட்டுரலில் மாவு அரைத்தோம், பின்பு அது மிக்ஸி மற்றும் எலக்ட்ரானிக் கிரைண்டர்ஸ் வந்தது. அதுவும் பரவாயில்லை வாழ்க்கை மாற்றங்களின் காரணத்தால் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகி போனது. சமீப காலமாக இட்லி தோசை மாவு ‘ரெடிமேடாக’ பட்டிதொட்டி அண்ணாச்சி கடை முதல் பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட் வரை எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. மக்களும் இட்லிக்கு மாவு அரைப்பதையே மெல்ல மறந்து வருகின்றனர்.<br />
<br />
முன்பாவது திடீர் டிபன் ரவா உப்புமாதான். இப்பொழுது நம்ம வாண்டுகளிடம் "தம்பி முனை கடையில ஒடி போய் ஒரு பாக்கெட் இட்லி தோசை மாவு வாங்கி வா"ன்னு சொல்லி வந்த மாவை இட்லி தோசை ஊத்தி மிச்சத்தை ஃபிரிஜ்ஜில் வைத்து அது முடியும் வரை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். ஏனோ இதற்கு பேச்சிலர்சும் விதிவிலக்கில்லை. <br />
<br />
இந்த மாவு ஒரு உயிர்கொல்லி - ஸ்லோ பாய்ஸன் என்பது ஏனோ நிறைய பேருக்கு தெரிவதில்லை. இதன் பயங்கரத்தை இப்பொழுது கூறுகிறேன் கேளுங்கள்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcj7b7bknw4Sl0VLvYl3fyj3M-m_-4Jp4Bjb4QtBmhyu3_x7kj9e62-4rEIdtZM-Ph7OnC9HD_z-MSxfMx0wyxvfrm_rZ8H3J78TThHUQ44_ANa5mzibO0S89KcF_NfDTE_Mefm4STBQ/s1600/imagesCATE0JJ5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" nfa="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcj7b7bknw4Sl0VLvYl3fyj3M-m_-4Jp4Bjb4QtBmhyu3_x7kj9e62-4rEIdtZM-Ph7OnC9HD_z-MSxfMx0wyxvfrm_rZ8H3J78TThHUQ44_ANa5mzibO0S89KcF_NfDTE_Mefm4STBQ/s1600/imagesCATE0JJ5.jpg" /></a></div>
<br />
<br />
1. நீங்கள் வாங்கும் எந்த ஒரு வெட் ஃப்ளோர்-Wet Flour (ஈர பத தோசை மாவிற்கும்) ஐ எஸ் ஐ-ISI சான்றிதல் கிடையாது. அதனால் இது எந்த ஒரு ஆராய்ச்சி கூடத்திலும் சோதனை செய்யபடவில்லை.<br />
<br />
2. இந்த மாவு சில மட்டமான அரிசியும் உளுந்தும் அத்துடன்,<br />
புண்ணுக்கு பயன்படும் போரிங் பவுடர் மற்றும் ஆரோட் மாவு போடுவதால் மாவில் புளிப்பு வாசனை கண்டிப்பாக வராது. அது போக, மாவும் பொங்கி நிறைய வரும் என்பதால் இதை செய்கின்றனர். இதே மாதிரி வீட்டில் அரைத்த மாவை ரெண்டு நாள் வைத்து மூன்றாவது நாள் முகர்ந்து பாருங்கள் புளிப்பு வாசனையும் வரும் தோசையும் புளிக்கும். ஏனென்றால் மாவு பக்குவமாவதும் தயிர் உறைவதும் ஒரு நல்ல பேக்டீரியாவின் செயலாகும். இதை தவிர்க்க தான் கடையில் வாங்கும் மாவுக்கு 6 நாள் கியாரண்டி அளித்தும் ஒரு வாசனையும் வராமல் இருக்கக் காரணம். <br />
<br />
3. முக்கியமாக இந்த கிரைண்டர்கள் கமர்ஷியல் ரகம் இல்லை. அதாவது, ஒரு நாளைக்கு 3 - 6 மணி நேரம் அரைக்க முடியும். ஆனால் இவர்கள் 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து பல சமயம் இந்த சிறு கருங்கல் துகள்களால் சிறு நீரகத்தில் கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஒரு நல்ல கல்லின் ஆயுள் 12 மணி நேரம் அரைத்தால் வெறும் 6 மாதம் தான். கொத்தி திரும்ப போட்டாலும் அடுத்த மூன்று மாதம் தான் மேக்ஸிமம்.<br />
<br />
4. உங்களுக்கு நன்கு தெரியும். சமையல் செய்யும் ஆட்கள் கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மற்றும் நகங்கள் வளர்க்கவே கூடாது. ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு சுத்ததையும் இவர்கள் பேணுவது இல்லை. ஒவ்வொரு நகத்தின் இடுக்கிலும் உள்ள கிருமிகள் இந்த மாவில் கெட்ட பேக்டிரியாக்கள் மற்றும் கிருமிகள் ஈஸியாக உருவாகி எதிர்ப்பு சக்தி குறைந்து வாந்தி, பேதி மற்றும் அடிக்கடி உடம்பு முடியாமல் போவதற்கும் இது தான் காரணம்.<br />
<br />
5. கிரைண்டர்களை எனக்கு தெரிந்து தாய்மார்கள் பயன்படுத்த <br />
<div>
தயங்கும் இரண்டு காரணங்கள் </div>
<br />
i. கிரைண்டரை சுத்தம் செய்யும் கஷ்டம்.<br />
<br />
ii. ஒவ்வொரு முறையும் கழுவிய கல்லை தூக்கி மாட்ட வேண்டும். பெரிய குடும்பமென்றால் இது சாத்தியம். சிறுகுடும்பம் என்பதால் கடையில் மாவு வாங்குவது அவசியமாகிறது. ஆனால் அரைத்து விற்பவர்களோ, அல்லது கடையிலோ, கிரைண்டரை ஒவ்வொரு முறையும் அரைத்து முடிந்து கழுவுவதில்லை. அதனால் அந்த கிரைண்டரில் கிருமி அதிகரித்து கொண்டே செல்கிறது. இவர்கள் கமர்ஷியலாக பயன்படுத்த ஒவ்வொரு முறையும் வென்னீர் (Hot Water) உற்றி தான் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் ஒரு வாரத்திற்கு ஒரு முறை கழுவினாலே அதிகம், மாவு பொருட்களினாலும், எலிகள் மற்றும் பூச்சிகள் அந்த மிச்ச மாவை ருசித்து அந்த மெஷினின் சுத்ததன்மை அறவே<br />
போய்விடுகிறது. <br />
<br />
6. என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீர் ஊற்றி தான் மாவு அரைக்க வேண்டும். இவர்கள் எந்த தண்ணீரை உபயோகப்டுத்துகின்றனர் என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம். எனக்கு தெரிந்த தகவல் படி இவர்கள் போரிங் தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரை ஊற்றும் காரணம் உப்பு போட வேண்டிய வேலை இல்லை.<br />
<br />
7. அந்த கால ஃபார்முலா படி நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கை ஆண்டிபயாடிக், உடம்பு உஷ்ணம், வாய் நாற்றம், அல்சருக்கு கைகண்ட மருந்து. ஆனால் இவர்கள் யாரும் வெந்தயத்தை உபயோகிப்பதில்லை.<br />
<br />
8. கிரைண்டரில் மாவு தள்ளிவிடும் அந்த ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆறு மாதத்திற்கு அல்லது வருடத்திற்க்கு ஒரு முறை மாற்ற வேண்டும். ஆனால் இவர்கள் அதை மாற்றவே மாட்டார்கள். அதனால் அந்த பிளாஸ்டிக்கும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து இந்த மாவில்தான் கலக்கும்.<br />
<br />
9. கிரைண்டர் ஓட அதன் மத்திய குளவியை இணைக்கும் செயினை இவர்கள் கழட்டி ஒரு கார்பன்டம் பெல்ட்டை மாட்டி இருப்பர்கள். ஒன்று சத்தம் வராமல் இருப்பதற்கும் மற்றும் மாவை கையால் தள்ளி விடாமல் அரைக்கும் டெக்னிக்குககாக. தண்ணீர் பட்டு பட்டு அந்த பெல்ட் துகள்களும் நமது மாவில்தான் கலக்கும்.<br />
<br />
10. இந்த மாவை இவர்கள் அரைத்து கடைக்கு பிளாஸ்டிக் பேக் மூலம் சப்ளை செய்கின்றனர். நமது தமிழ் நாட்டு கிளைமேட் படி இதை ஃப்ரீஜரில் தான் வைக்க வேண்டும். அப்பொழுது தன் இந்த மாவில் பாக்டீரியாவின் உற்பத்தியை கட்டுப்படுத்த முடியும், ஆனால் நம்மூரில் பாதி கடைகளில் ஃப்ரிட்ஜில் தான் இதை வைக்கிறார்கள். இப்ப இருக்கிற கரெண்டு ‘கட்’ பிரச்சனையில் இந்த மாவு கண்டிப்பாக பாய்ஸனாகிறது.<br />
<br />
இந்த மாவில் இப்பொழுது நிறைய இடங்களில் பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டு இறைச்சிகளில் காணப்படும் ஈகோலி (E-COLI) எனும் பேக்டீரியா பரவி சிலருக்கு உடனே பிரச்சினையும் சிலருக்கு இந்த மாவுகள் ஸ்லோ பாய்ஸனாக உருவாகிறது. இந்த ஈகோலி மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும். அதனால் தயவு செய்து இவர்கள் கொடுக்கும் 6 நாள் கியாரண்டியில் ஈரமான இட்லி தோசை மாவை கண்டிப்பாக வாங்குவதை தவிருங்கள்.<br />
<br />
உலர்ந்த மாவு ஓரளவு பரவாயில்லை. ஆனால் இதே மாதிரி சில தாய்மார்களும் மாவரைத்து நான்கு அல்லது ஐந்து பேர் ஷேர் செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கும் இதில் கண்டிப்பாக கவனம் தேவை.<br />
<br />
இப்பொழுது இது ஒரு அங்கிகரிக்கபட்ட தொழில் அல்ல. அதனால் சென்னை மாநகராட்சி ரெய்டு நடத்தி, பல இடங்களில் சுகாதாரமற்ற, தரமற்ற முறைகளில் தயார் செய்யும் இதுபோன்ற பொருட்களை கைப்பற்றி பெனால்டியும் விதிக்கிறது.<br />
<br />
ஆகவே, இந்த விழிப்புணர்வை உங்களால் முடிந்த அளவு <br />
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மாற்று கருத்து இருப்பினும் அதையும் இங்கே பகிருங்கள். <br />
<br />
ஃபேஸ் புக்கில் (பகிரச்சொல்லி) பகிர்ந்தவர்:<br />
எஸ் எம் ஆரீப் மரைக்காயர் <br />
<div>
<span id="6_TRN_1">காரைக்கால் </span></div>
<br />
<br />
<br />
<br /></div>எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com38tag:blogger.com,1999:blog-64303816644538849.post-239225386885781622011-11-26T11:24:00.003+03:002011-11-26T17:14:20.023+03:00ஹைப்பர் கொள்ளைகள்!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div>பத்து நாள் வலைப்பூ பக்கம் வாராமல் போனால் "காணவில்லை" போர்டு </div><div>மாட்டிடுராங்கைய்யா...!! மீ... நடந்தாலும் கடல் மேல் தான் நடந்துக் கொண்டிருப்பேன். அவ்வ்வ்வ்... </div><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRT3B0G1dnDFkOB-EnLcJPSEaHK83d0KPNKgH-GGgdj0FY9IjFF4wscBoPVZ5i8SGEhCxlSyUMFfNTgmLhsHEZ-auG8pTa9TGak5nNT6yDb0b_PyjrOPwKiEuKVTBBbsGQ8M4Mi0PgQQ/s1600/ages.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" hda="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRT3B0G1dnDFkOB-EnLcJPSEaHK83d0KPNKgH-GGgdj0FY9IjFF4wscBoPVZ5i8SGEhCxlSyUMFfNTgmLhsHEZ-auG8pTa9TGak5nNT6yDb0b_PyjrOPwKiEuKVTBBbsGQ8M4Mi0PgQQ/s1600/ages.jpg" /></a></div> <br />
கல்யாணம் முடிந்தும் பேச்சிலர்ஸாக சமைத்துக் கொண்டிருந்த காலத்தில், இங்குள்ள மினி மார்கெட்களில் தான் பொருட்கள்களை வாங்குவோம். அப்பொழுதெல்லாம் குறைந்தபட்சமாக 25-லிருந்து 50- ரியால்கள் வரை வாங்கினால், ராஃபில் டிக்கட் ஒன்று தருவார்கள். மாதக் கடைசியில் பரிசு விழும் நம்பருக்கு, அவர்கள் பக்கத்திலேயே திறந்து வைத்திருக்கும் புடவைக் கடையில் ஒரு புடவை எடுத்துக் கொள்ளலாம். புடவையின் மதிப்பு சுமாராக ஐம்பது ரியாலுக்கு குறையாமல் இருக்கும். நல்ல டிசைனில், விலை அதிகமுள்ள புடவை வேணுமென்றால் நாம் மேற்கொண்டு பணம் கொடுக்க வேண்டும். மாதா மாதம் நண்பர்கள் நாங்கள் ஆளுக்கொன்று என்று கணக்கு வைத்து எடுத்துக் கொள்வோம். <br />
<br />
இது மாதம் முழுக்க (கிட்டத்தட்ட அறுநூறு ரியாலுக்கு மேல்) நாம் பணம் கொடுத்து வாங்கும் பொருட்களுக்கு, நம்மிடமே வாங்கிய பணத்தை, இப்படி புடவை என்ற பெயரில் அட்ராக்ஸனாக திருப்பி தந்து விடுவது. கஸ்டமர் களை கட்டிப் போடும் டெக்னிக்கும் இதுதான்! இதை எவ்வளவோ மேல் என்று இப்ப கூட ஒப்புக் கொள்ளலாம். ஆனால் - <br />
<br />
இப்பொழுது புற்றீசல்கள் போல் தெருவுக்குத் தெரு பல ஹைப்பர் மார்க்கெட்கள் நம்மை எப்படி எல்லாம் கவர்ந்து கொள்ளையடிக்கின்றன என்றால் வாரா வாரம் ஆஃபர் மழை என்ற பெயரில் தான். <br />
<br />
கட்டுகட்டாய் புக்லெட்டுகளை எல்லா இடங்களிலும் கொண்டு வந்து வீசிவிட்டு போவார்கள். எப்படி என்றால் சாதரணமாக மினி மார்கெட்களில் வாங்கும் ஒரு பொருளின் விலையை ஐந்து ரியாலிலிருந்து பத்து ரியால்கள் வரை குறைத்துப் போட்டு நம் மனதில் சலனமேற்ப் படுத்து வார்கள். சரி, சலனமேற்ப்படுத்திய மனதை சமாதனப் படுத்தலாம் என்று நம் பர்சை தொட்டுப் பார்த்துக் கொண்டு அங்கே போனால், அந்த பிரமாண்டமான மார்க்கெட்களின் வாசல்களில் வகைக்கு ஒன்றாக அப்பொழுது தான் புதிதாக இறங்கிய கார்களின் அணிவகுப்பை நிறுத்தி வைத்து இருப்பார்கள். மனம் இப்ப ஒருவகை உவகைக் கொண்டு உள்ளே நுழைய அடியெடுத்து வைப்போம்.<br />
<br />
சரி...... <br />
<br />
உள்ளே போயாச்சா?..... <br />
<br />
போயாச்சு!! <br />
<br />
இனிமேல் தான் நமக்கு கவனமோ கவனம் ரொம்ப தேவை. மறந்து விடாமல் அவர்கள் ஆஃபர் போட்டிருக்கும் ஒரு புக் லெட்டை நம் கையில் வைத்திருப்பது உத்தமம்.<br />
<br />
நீங்கள் விருப்பப்பட்ட பொருட்களை எடுக்கும் போது செல்ஃபில் அதன் விலையையும், புக் லெட்டில் போட்டிருக்கும் விலையோடு ஒப்பிட்டு சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ஒவ்வொரு பொருளுக்கும் அதன் மேல் விலை குறிக்கப் பட்டு இருக்காது. தோராயமாக ஒரு பொருளுக்கும் இன்னொரு பொருளுக்கும் இடையே செல்ஃபிலேயே விலை குறிக்கப்பட்டு இருக்கும். இது தான் ஹைப்பர் மார்கெட்களின் ட்ரிக். ஆஃபரில் மதிமயங்கி எல்லா பொருட்களின் விலையுமே குறைவாகத் தானிருக்கும் அள்ளிக் கொண்டு போவர் பலர். அவர்களை உஷார் படுத்தவே இந்தப் பதிவு!! <br />
<br />
விலை குறைக்கப்பட்ட ஒரு பொருளை வைத்துக் கொண்டு, பத்துப் பொருட்களில் பலமடங்கு விலை ஏற்றி வைத்திருப்பார்கள். மனதில் பட்டதை எல்லாம் ட்ராலியில் அள்ளிப் போட்டுக் கொண்டு, கவுண்டரில் போய் நின்றால், பார்கோடு நம்பரை வைத்து க்ளிக்கி கிடுகிடுவென்று சிலிப்பை கிழித்து கையில் கொடுத்து, பணத்தை வாங்கிக் கொண்டு நம்மை அங்கிருத்து நகர்த்தத்தான் பார்ப்பார்கள். அங்கே நின்று கொண்டு நாம் எடுத்த பொருளையும் விலையையும் சரி பார்த்துக் கொண்டிக்க முடியாது. கூட்டம் முட்டித் தள்ளும். <br />
<br />
கவனமாய் பொருட்களை தேடி எடுத்தாலும், இந்த கேஷியர் கவுண்டரில் பணம் கொடுக்கும் போது தான் ரொம்ப உஷாராய் இருக்கணும். <br />
<br />
சில நேரங்களில் சில ஹைப்பர் மார்க்கெட்களில் ஆஃபர் போட்ட விலையை கேஷியர் டேட்டாவில் என்ட்ரி செய்யாமல் வைத்திருப் பார்கள். நீங்கள் எடுத்த (ஆஃபர்) பொருளின் விலையை பார்கோடை வைத்து அடிக்கும் போது பழைய கூடுதல் விலையே பிரிண்ட் ஆகும் அபாயமும் இருக்கு! இப்படி தான் சென்ற வாரம் நான் வாங்கிய ஷாம்பூவில் கேஷியர் கவுண்டரில் விலை அதிகமாக ப்ரிண்டாகி வந்தது. கேட்டால் "அது வேறு நமுனா- (BRAND), இது வேறு நமுனா" என்கிறான். ரெண்டும் ஒன்று தான் என்று ஆஃபர் லீப்லெட்டை காட்டிய போது, ஏதேதோ சொல்லி நம்மை சமாளிக்கப் பார்க்கிறான். (நம்ம கிட்டேயேவா??) வேணாம் என்று அதை கேன்சல் செய்வதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. <br />
<br />
இதெல்லாம் ஒரு கண்கட்டு வித்தை மாதிரியே இப்பல்லாம் எல்லா இடங்களிலும் நடக்கிறது. கேட்பதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு சிலபேரும், மொழி தெரியாமல் எப்படி கேட்பது என்று பலபேரும், வாய் பேசாமல் அப்படியே வாங்கிச் செல்வதை பார்க்க முடிகிறது. <br />
<br />
இறுதியாக -<br />
<br />
இந்த மாதிரி ஹைப்பர்களில் இரண்டு வாரத்திற்க்கு ஒருமுறை ஆஃபர் போடுவதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் போகும் போது ஆஃபர் போட்டிருக்கும் பாதி பொருட்களுக்கு மேல் அங்கே இருக்காது. கேட்டால் "விற்று தீர்ந்து போச்சு" என்பார்கள். ஆஃபர் போட்ட அன்றே போனால் கூட இதே கதை தான். ஏனெனில் நீங்கள் விரும்பி வாங்கும் அந்த பொருட்களை அவர்கள் அங்கே வைப்பதே இல்லை. வெறுமனே புக்லெட்டில் மட்டும் தான் ஆஃபர் என்று பெயருக்கு இருக்கும். காரணம் உங்களை மால்களுக்கு வரவழைக்கவே! வந்தது தான் வந்தோம் வெறுமனே கைவீசிக் கொண்டு போக வேணாம் வேறு ஏதாவது வாங்கிக் கொண்டு போவோம் என்ற உங்களின் நாடி துடிப்பு தான் அவர்கள் கையில்!<br />
<br />
முடிவாக –<br />
<br />
பணத்தை கொடுத்துக் கொண்டிருக்கும்போது, நாம் வாங்கிய பொருளை பையில் எடுத்துப் போட்டு, நம் கையில் கொடுக்கும் இந்தியர் ஒருவர் சொல்கிறார். "இங்கே எல்லாமே கோல்மால் வேலை தான் நடக்கிறது பய்யா(சகோதரா), நேற்று பம்பர் பரிசுக்காக பெட்டியில் போட்ட சீட்டுக் களை, நேற்றிரவே குப்பையில் தூக்கி கொட்டச் சொல்லி விட்டார்கள்" என்று ஹஸ்கியாய் என்னிடம் சொல்கிறார். அடப்பாவிகளா?? இந்தக் கொடுமையை நான் எங்கே போய் சொல்வது... உங்களைத் தவிர!!<br />
<br />
அப்ப தினம்தினம் இப்படித் தானா??<br />
<br />
கடைசி கடைசியாக -<br />
<br />
நாம் சம்பாதித்த பணத்துக்கு, பணமும் போய், கடைசியில் 'பல்பு' வாங்காமல் இருந்தால் சரி!! இதற்குமேல் ஒன்றும் சொல்வதிற்கில்லை!!</div>எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com48tag:blogger.com,1999:blog-64303816644538849.post-78606550770992172152011-10-26T10:06:00.000+03:002011-10-26T10:06:20.678+03:00சவூதி வாழ் இந்தியர்களுக்கு தூதர் வேண்டுகோள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhk4llOYmo80quhXCdflCMSbm3j3QW-FltdNxkJRPtBcR5ds3FmKK7FWI3GYeK0YNTTILNIFNj4cSVhzAdWNf3bzGASyfLifiIdMKzc0mVcGU2HK4vReYE9hqq9-43BDwNj38DxEBzfgQ/s1600/Embassy-Building1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" ida="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhk4llOYmo80quhXCdflCMSbm3j3QW-FltdNxkJRPtBcR5ds3FmKK7FWI3GYeK0YNTTILNIFNj4cSVhzAdWNf3bzGASyfLifiIdMKzc0mVcGU2HK4vReYE9hqq9-43BDwNj38DxEBzfgQ/s320/Embassy-Building1.jpg" width="320" /></a></div> <span style="font-size: xx-small;">ரியாத் இந்திய தூதரகம் </span><br />
<br />
<br />
<br />
சவூதி வாழ் இந்தியர்களுக்கு தூதர் வேண்டுகோள் : ஆன்லைனில் தூதரகத்தில் பதிவு செய்க! <br />
<br />
சவூதி அரேபியாவுக்கான புதிய இந்திய தூதராக பதவியேற்ற ஹமீத் அலி ராவ் அவர்களுக்கு சவூதி வாழ் இந்தியர்கள் சார்பில் கடந்த 20ம் தேதி வரவேற்பு விழா நடத்தப்பட்டது.<br />
<br />
அந்த நிகழ்ச்சியில் தூதுரக அதிகாரிகள், 600-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் குடும்பத்தாருடன் கலந்து கொண்டனர்.<br />
<br />
அப்போது பேசிய ரியாத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் <br />
<div><span id="6_TRN_0">ஜனாப்</span>. இம்தியாஸ் கூறியதாவது,</div><br />
சவூதி அரேபியாவில் 21 லட்சம் இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் குறைந்த சம்பளத்தில் வேலை பார்ப்பவர்கள். அவர்கள் ஏஜென்சிகளால் ஏமாற்றப்படுகிறார்கள், அடிப்படை வசதிகள் கூட இல்லாத இடங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். பெரும்பாலன நேரங்களில் அவர்களின் நிறுவனத்தினரினாலேயே ஏமாற்றப்படுகிறார்கள், அவர்களுக்கு தூதரகம் உரிய உதவிகள் செய்யவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் நோக்கில் இந்திய தூதரகத்தின் சமுதாய நலப்பிரிவில் கூடுதல் ஆட்களை பணியமர்த்த வேண்டும்.<br />
<br />
சவூதி அரேபியாவில் இந்திய தூதுரகத்தின் சார்பில் நடக்கும் பள்ளிகளின் வருட வாடகை சுமார் 20 முதல் 25 மில்லியனாக உள்ளது. ஒவ்வொரு முறை ஒப்பந்தம் முடியும் பொழுதும் கட்டிட உரிமையாளர்கள் உயர்த்தும் வாடகையால் பள்ளிகளின் நிர்வாகம் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றது. எனவே, தூதர் அவர்கள் பள்ளி நிர்வாகம் மற்றும் சமுதாய ஆர்வலர் களையும் சேர்த்து ஒரு குழு அமைத்து அரசாங்க கடனுதவியுடன் முதல் கட்டமாக மூன்று முக்கிய பிராந்தியங்களிலும் நமக்குச் சொந்தமான பள்ளிக் கட்டிடத்தை கட்டுவதற்கு ஆவண செய்ய வேண்டும்.<br />
<br />
சவூதி அரேபியாவில் வாழும் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுள் ஒன்று அவர்களின் பிள்ளைகளின் மேல்படிப்பு. பிள்ளைகளின் படிப்பு காரணமாக ஆண்கள் இங்கு வேலை செய்வதும், குடும்பம் இந்தியாவில் தனித்து இருப்பதுமாக அவதியுற நேர்கிறது. இதனை மனதில் கொண்டு தூதர் அவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு இந்தியக் கல்வி நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் சவூதி அரேபியாவில் மேல்படிப்பு படிப்பதற்குண்டான கல்லூரிகள் தொடங்க ஆவண செய்ய வேண்டும் என்றார்.<br />
<br />
மேலும் பலரும் கோரிக்கைகளுடன் தூதுவரை வாழ்த்தினார்கள். இதற்கு ஏற்புரை வழங்கிய இந்திய தூதர் ஹமீத் அலி ராவ் அனைவரின் கோரிக்கைகளையும் உரிய முறையில் பரிசீலிப்பதாக வாக்குறுதியளித்தார்.<br />
<br />
மேலும், சவூதி அரேபியாவில் வாழும் இந்தியர்கள் தங்களை தூதரகத்தில் பதிவு செய்து கொள்ளும்படியும் அதற்காக தூதரகம் <a href="http://www.indianembassy.org.sa/">http://www.indianembassy.org.sa/</a> என்ற இணையதளத்தில் வசதிகள் செய்துள்ளதாகவும் அறிவித்தார்.<br />
<br />
மேலும் அவர் கூறும்பொழுது இந்தியா-சவூதி இருவழி வர்த்தகம் கடந்த வருடம் 25 பில்லியன் அமெரிக்க டாலர்களை தொட்டதாகவும், கடந்த 15 வருடங்களாக இந்தியாவின் எண்ணெய்த் தேவையை 20 சதவீதம் சவூதி அரேபியா பூர்த்தி செய்வதாகவும் தெரிவித்தார். சவூதி அரேபியாவிற்கு இந்தியாவின் ஏற்றுமதி 4 பில்லியன் டாலராக உள்ளதாகவும், இந்தியா சவூதி அரேபியாவின் நான்காவது பெரிய வர்த்தக கூட்டாளியாக இருப்பதாக தெரிவித்த அவர் இந்தியர்களின் முதலீடு 2 பில்லியன் டாலராக உள்ளது என்றும் தெரிவித்தார்.<br />
<br />
இந்தியர்களின் கண்ணியமும், கடின உழைப்பும், சட்டத்தை மதிக்கும் தன்மையும் இந்தியர்கள் அனைவருக்கும் பெரும் மதிப்பை பெற்றுத் தந்துள்ளது என்றும் கூறினார்.<br />
<br />
நிகழ்ச்சியின் இறுதியில் தூதர் அவர்கள் அங்கு கூடியிருந்த அனைத்து இந்தியர்களையும் தனித்தனியாக சந்தித்து அவர்களுடன் கைகுலுக்கிக் கொண்டது இந்தியர்களின் மனதில் மக்களுக்காக அமர்த்தப்பட்ட தூதுவர் என்ற நம்பிக்கை விதையை விதைத்தது.<br />
<br />
<a href="http://muthupet.org/2011/10/24/%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d/#comments">நன்றி : முத்துபேட்டை.org </a><br />
<br />
<br />
<br />
</div>எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-64303816644538849.post-78720931275731201382011-10-20T09:59:00.004+03:002011-10-24T12:44:43.341+03:00அவசரம்...!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvNVo9e1mMVS_Siczx7-E-XOIgF-jwBPXM3NLKTVHg7zPW1dAl2jFeWq_zYMmOIfieKPolRTnxYvnz3gfagXx-BTWUbvdid7QR69MWTVQYMNhkIrmsBWO19S0_fuM48km_rkluckfUhA/s1600/friend.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="186" rda="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvNVo9e1mMVS_Siczx7-E-XOIgF-jwBPXM3NLKTVHg7zPW1dAl2jFeWq_zYMmOIfieKPolRTnxYvnz3gfagXx-BTWUbvdid7QR69MWTVQYMNhkIrmsBWO19S0_fuM48km_rkluckfUhA/s200/friend.png" width="200" /></a></div><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: left;"><span style="background-color: yellow; color: blue;"><u><strong>தமிழ்மணத்தை சவுதியில் மீட்க கை கோர்ப்போம் </strong></u></span></div><br />
<br />
அஸ்ஸலாமு அலைக்கும்!! <br />
<br />
சவுதியில் தமிழ்மணம் தடை செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. <br />
எல்லோருடைய பதிவுகளையும் படித்தவர்கள் தான் உணர்ச்சி வசப்பட்டு மெயில் அனுப்பி இருக்க வேண்டும். சவுதியில் unblock செய்ய வேண்டிய வேலையை பாருங்கள். <br />
<br />
நீங்கள் சவுதியில் இருக்கிறீர்களா? தமிழரா? இணைய வசதி இருக்கா?<br />
தயவு செய்து <span style="color: #274e13; font-size: large;"><u><strong><a href="http://www.internet.gov.sa/resources/block-unblock-request/unblock/">unblock request</a></strong></u></span> கொடுங்கள். <br />
<br />
கிழேயுள்ள இந்த லிங்கில் கொடுக்கவும். <br />
<br />
http://www.internet.gov.sa/resources/block-unblock-request/unblock/<br />
<br />
நானும் என்னை சார்ந்த நண்பர்களும் unblock-request கொடுத்து விட்டோம். <br />
<br />
குறைந்தது 25 நபர்களாவது இந்த பரிந்துரை கொடுக்க வேண்டும்<br />
<br />
இன்னும் 24 மணிநேரம் தான் டைம் இருக்கு. ப்ளீஸ்!!!<br />
<br />
</div>எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-64303816644538849.post-53862460757951659782011-10-17T19:00:00.009+03:002011-10-24T12:19:59.135+03:00தமிழ் மணம்!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
உங்கள் அனைவர்களின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...!!<br />
<br />
எனக்கு நட்பு வட்டங்களில் மிகப் பெரியது மாற்று மதசகோதரர்கள் தான். அவர்களே நான் சொல்லும் சலாத்தின் அர்த்தம் அறிந்து கொண்டு, என்னை சந்திக்க வரும் பல நேரங்களிலும் சலாம் சொல்லாமல் என்னை பார்க்க வருவதில்லை. அவர்களோடு பழக்க வழக்கங்களும் சொல்லில் சொல்ல முடியாதவை. <br />
<br />
சமீபத்தில் தமிழ்மணம் பற்றி <a href="http://www.blogger.com/சமீபத்தில்%20தமிழ்மணம்%20பற்றி%20தமிழ்மணம்%20ஒரு%20பய(ங்கர)%20டேட்டா...%20என்ற%20%20பதிவு%20டெர்ரர்%20கும்மி%20தளத்தில்%20வந்தது.%20அதில்%20தமிழ்மணம்%20திரட்டியின்%20சமீப%20நிலைகளை%20நகைச்சுவையாக%20அல்லது%20நக்கலாக%20எழுதப்பட்டிருந்தது.%20அதில்%20பின்னூட்டமிட்ட%20பெயரிலி%20என்கிற%20இரமணிதரன்%20என்கிற%20தமிழ்மணத்தின்%20நிர்வாகி%20ஒருவர்%20அப்பதிவிற்கு%20ஆட்சேபனை%20செய்தார்.%20அவர்%20ஆட்சேபனை%20செய்ததில்%20எந்த%20தவறும்%20இல்லை.%20ஆனால்%20அவர்%20பயன்படுத்திய%20வார்த்தைகள்%20தான்%20கண்டனத்துக்குரியது.%20சக%20பதிவர்கள்%20பலர்%20மீது%20அவர்%20பயன்படுத்திய%20கீழ்த்தரமான,%20கேவலமான%20வார்த்தைகள்%20இங்கு%20மேற்கோள்காட்டுவதற்காக%20கூட%20பிரசுரிக்க%20முடியாதவைகள்.%20அந்த%20பதிவிற்கு%20http://www.terrorkummi.com/2011/10/blog-post_10.html"><span style="color: red;">தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...</span></a> என்ற பதிவு டெர்ரர் கும்மி தளத்தில் வந்தது. அதில் தமிழ்மணம் திரட்டியின் சமீப நிலைகளை நகைச்சுவையாக அல்லது நக்கலாக எழுதப்பட்டிருந்தது. அதில் பின்னூட்டமிட்ட பெயரிலி என்கிற இரமணிதரன் என்கிற தமிழ்மணத்தின் நிர்வாகி ஒருவர் அப்பதிவிற்கு ஆட்சேபனை செய்தார். அவர் ஆட்சேபனை செய்ததில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தான் கண்டனத்துக்குரியது. சக பதிவர்கள் பலர் மீது அவர் பயன்படுத்திய கீழ்த்தரமான, கேவலமான வார்த்தைகள் இங்கு மேற்கோள்காட்டுவதற்காக கூட பிரசுரிக்க முடியாதவைகள். அந்த பதிவிற்கு சென்று நீங்களே அறிந்துக் கொள்ளுங்கள்.<br />
<br />
மேலும், முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது சொல்லிக்கொள்ளும் <span style="color: blue;"><u>"சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது நிலவட்டுமாக"</u></span> என்னும் முகமனை கேலி செய்யும் விதமாக <span style="color: red;"><u>"...சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்..."</u></span> என்று கொச்சைப் படுத்தியுள்ளார்.<br />
<br />
இப்பொழுது வலைத்தளத்தை கேலி மற்றும் மனித மதங்களை (மனங்களை) புண்படுத்தும் ஒரு ஆயுதமாக பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். தனது வக்கிரத்திற்காக மதங்களை பயன்படுத்திக் கொள்ளும் நபர்களை இங்கே வண்மையாய் கண்டிக்கிறோம். <br />
<br />
</div>எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-64303816644538849.post-46591322994120226282011-09-26T20:24:00.006+03:002011-09-27T10:44:28.918+03:00"நல்ல ஓஹுத்திரியமா தாம்மா இக்கிது....!!!"<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXbUTWh_3p7X0fQa9fGxiCDdwzEuvwtprdQiIm4Ra_Yth1FlI3l9jfgAnpJUjgGDe8ICRoCN4ixsjKYPbpj-9W1RvxsvplnK1h7U0jf-JXRCrF9XhzrwRoaBoeZeO59GPENkVbSqP6hA/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" kca="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXbUTWh_3p7X0fQa9fGxiCDdwzEuvwtprdQiIm4Ra_Yth1FlI3l9jfgAnpJUjgGDe8ICRoCN4ixsjKYPbpj-9W1RvxsvplnK1h7U0jf-JXRCrF9XhzrwRoaBoeZeO59GPENkVbSqP6hA/s1600/images.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"></div><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">நெருங்கிய</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">நண்பரின்</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">குழந்தைகளுக்கு</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">பர்த்டேயாம்</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;">. </span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">ரொம்ம்ம்ம்ப....</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">வற்புறுத்தினார்</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;">. </span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">சாதரணமா</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">இதுமாதிரி</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">விழாக்களில்</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">எல்லாம்</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><br />
<span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"></span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">நாம்</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">எப்பவுமே</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">கவனம்</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">செலுத்துவதில்லை</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;">. </span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">ஆனால்</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="mso-bidi-language: TA;">பிரியாணியாம்</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;">... </span><span lang="TA" style="mso-bidi-language: TA;">அதுவும்</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="mso-bidi-language: TA;">இறால்</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="mso-bidi-language: TA;">பிரியாணி</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;">!! </span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">இன்னும்</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">ஏதேதோ</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">அய்ட்டங்களை</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">எல்லாம்</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">சொல்லிக்</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">கொண்டே</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">போனார்</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;">. </span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">அதெல்லாம்</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">காதில்</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">விழவில்லை</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;">. </span><span lang="TA" style="mso-bidi-language: TA;">விடுவமா</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> ?? </span><span lang="TA" style="mso-bidi-language: TA;">சாப்பாடு</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="mso-bidi-language: TA;">என்றால்</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="mso-bidi-language: TA;">தான்</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="mso-bidi-language: TA;">எங்க </span><span lang="TA" style="mso-bidi-language: TA;">வேணும்னாலும்</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="mso-bidi-language: TA;">போவோமே</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;">! </span><span lang="TA" style="mso-bidi-language: TA;">ஹி</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;">..</span><span lang="TA" style="mso-bidi-language: TA;">ஹி</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;">. (</span><span lang="TA" style="mso-bidi-language: TA;">ஆனா</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="mso-bidi-language: TA;">புளிய</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="mso-bidi-language: TA;">மர</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="mso-bidi-language: TA;">உச்சிக்கி</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="mso-bidi-language: TA;">மட்டும்</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="mso-bidi-language: TA;">போக</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="mso-bidi-language: TA;">மாட்டோம்</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;">. </span><span lang="TA" style="mso-bidi-language: TA;">அவ்வ்வ்வ்</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;">.... </span><span lang="TA" style="mso-bidi-language: TA;">அங்கே</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;">.. </span><span lang="TA" style="mso-bidi-language: TA;">அங்கே</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;">.. </span><span lang="TA" style="mso-bidi-language: TA;">நா</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="mso-bidi-language: TA;">சொல்லமாட்</span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">டேம்பா</span><span lang="TA" style="mso-bidi-language: TA;">!!!!</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;">) </span><br />
<br />
<span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"></span><span lang="TA" style="mso-bidi-language: TA;">பாருங்க</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="mso-bidi-language: TA;">நாம</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">எவ்வளவு</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="mso-bidi-language: TA;">பொறுப்போடு</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;"> </span><span lang="TA" style="mso-bidi-language: TA;">வளர்ந்திருக்கிறோம்</span><span lang="TA" style="font-family: Arial; mso-bidi-language: TA;">. </span><br />
<br />
சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். பேச்சு சுவாரஸ்யத்தில் நான் கொஞ்சம் நிறையவே சாப்பிட்டு விட்டேன். (ஹா.. இது எப்போதும் நடக்கிற கதை தானே என்று நீங்க கேட்பதெல்லாம் இப்ப காதில் விழாது!) ஆச்சு முடிஞ்சுச்சு...!! கல்லா கட்டியாச்சு. <br />
<br />
<br />
அவருடைய மகள் பாயாசத்தை ஸ்பூன் ஸ்பூனாய் குடித்துக் கொண்டிருக்கும் போது 'கடக்'கென்று சப்தம் (கல்). அப்படியே வாயில் தண்ணீரை கட கடவென்று சப்தமிட்டு பக்கத்திலிருந்த குண்டானில் துப்ப..<br />
<br />
"ஏன்?? என்னாச்சு??" (கேட்கனும்ல!)..கேட்டேன்.<br />
<br />
"சாப்பிட்ட பாயாசத்தில் கல் இருந்துச்சு uncle..."<br />
<br />
சொல்லி முடிக்கலை..<br />
<br />
"கல் சாப்பிட்டா, கல் செறிக்கிற வயசு உனக்கு"- இது அவருடைய மகன்.<br />
<br />
"அப்ப ஏன் சோறு சாப்பிடுறீங்க?" இது அவர் மகள்.<br />
<br />
அறிவு.. அறிவு.. <span id="6_TRN_0"><span id="6_TRN_1">அவங்க </span></span>வாப்பா மாதிரியே! (ஹி..ஹி..!!)<br />
<br />
இவர்கள் பேச்சைக் கேட்டு நண்பர் நெளிந்தார்!!<br />
<br />
இந்தக் காலத்து பிள்ளைகள் எப்படி எல்லாம் பேசிக்கிறார்கள், யோசிக்கிறார்கள். நாமும் தான் இக்கிறோமே!! <br />
<br />
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@<br />
<br />
<span style="background-color: yellow; color: blue; font-size: large;"><u>" பாட்சா"</u></span> <br />
<br />
இங்கே மங்களூரைச் சேர்ந்த மூன்று அண்ணன் தம்பிகள் இருக்கிறார்கள். அவர்களில் இருவர் மூத்தவர்கள். கடைசிப் பையன் இளையவன் (இதுக்கு மேலே நான் விவரிச்சா நீங்க அழுதுடுவீங்க!! ஹி..ஹி.!!) இவர்கள் என் கண் பார்க்க படிப்படியாய் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் <br />
<br />
எப்படி என்றால், இவர்கள் வேறு கம்பெனிகளிலோ, கடைகளிலோ வேலை செய்யவில்லை. மீன்களை குறைந்த விலைக்கு வாங்கி நல்ல விலைக்கு விற்பது. அதாவது சொந்தமாய் கடை ஏதும் வைக்காமல், வாங்கி வந்த வேனிலேயே ஒரு முட்டு சந்தில் வைத்து மீன்களை விற்று விடுவது. மூன்று பேரில் ஒருவர் விலை பேசி எடை போட்டு தந்துவிடுவார். <br />
<br />
மற்ற இருவரும் அதை வெட்டி சுத்தம் செய்து தந்துக் கொண்டி ருப்பார்கள். கடையில் வாங்குவதை விட, விலை மலிவாக இருப்பதால், இவர்களுக்கு நிறைய கஸ்டமர்கள். இரவில் ஒன்பது பத்து மணிக்கு மேல்தான் நிறைய பேருக்கு டூட்டி முடிந்து வருவதாலும், முனிசிபாலிட்டி (பலதியா) செக்கிங் இல்லாததாலும் இவர்கள் வியாபாரம் அமோகம்.<br />
<br />
இப்படி சம்பாதித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து கண் படுமா இல்லையா? பட்டது!! யாராவது முனிசிபாலிட்டிக்கு போட்டுக் கொடுப்பது போல் போட்டு மாட்டிவிடுவது. முனிசிபாலிட்டிகாரன் வந்து இவர்களையும், மீன்களையும் அள்ளிக் கொண்டு போய் விடுவான்கள். அப்படி மாட்டி ரெண்டு மூணு தடவை கப்பம் கட்டியும் வெளியே வந்திருக்கிறார்கள். முன்னேறுவதற்கு இந்த ஒரு அடையாளம் போதாதா??<br />
<br />
கண் சிமிட்டும் நேரம் போல் ஒரு நல்ல நாளில், ஒரு இடத்தைப் பிடித்து, நட்ஸ் கடை திறந்து விட்டார்கள். நட்ஸ் என்றால் போல்ட் நட்ஸ் இல்லை. பாதாம் பிஸ்தா கடை. இன்ன பிற அரைத்த கிச்சன் மசாலா சாமான்கள் சில்லறையில் விற்பனை மற்றும் டெலிபோன் கார்ட்கள் மொத்தமாய் கொள்முதல் செய்து wholesale/ retail-லில் விற்பது. அச்சா பஹூத் அச்சா. <br />
<br />
இப்பல்லாம் பிற மாநிலத்துக்காரர்களிடம் ‘மெட்ராஸ்காரங்க’ என்று சொல்லிப் பாருங்க!! அப்படி ஒரு படுகேவலமான பார்வையைப் பார்ப்பார்கள் பாமரர்கள் கூட. ஆனால் இவர்கள் அப்படியல்ல!!! <br />
<br />
நான் எப்ப கடைக்கு போனாலும் "பாட்ஷா" படத்தை பற்றி ரொம்ப சிலாகித்துப் பேசுவார்கள். "ஏய் நீ என்ன பெரிய பாஷாவா? ஒரு ஆளை அடிச்சா நூறு பேரு செத்து போய்டுவாங்கலாமே? அப்படிம்பாங்க. தமாஷுக்கு தான். அவர்கள் பேச்சு (ததிங்கினத்தோம் தமிழில்) ஒரே சிரிப்பாய் இருக்கும். அப்பத்திலிருந்து அவர்களை நான் பாட்சா என்று அழைப்பதும் , அவர்கள் என்னை பாட்சா என்று அழைப்பதுமாய் போய்க் கொண்டிருந்தது. ஆனா என்பெயர் அவர்களுக்கு தெரியாது. அவர்கள் பெயரும் எனக்கு தெரியாது. மொத்தத்தில் பாட்சா.. பாட்சா.. தான். <br />
<br />
ஃபேமிலி வந்த பிறகு இவர்களையும் அழைத்துப் போய் எல்லாப் பொருட்களும் வாங்குவோம். அப்பவெல்லாம் மூத்தவர்கள் இரண்டு பேர் கடையில் எப்போதும் இருப்பார்கள். இளையவன் கடையில் எப்போதாவது தான் இருப்பான். <br />
<br />
ஒரு நாள் என்னிடம் ‘இவங்க’ ஏதோ வாங்கச் சொன்னங்க. நான் வேலை விஷயமாய் எங்கோ போவதாய் சொல்லி, பாட்சா கடையில் வாங்கிக்க சொல்லிவிட்டு போய் விட்டேன். <br />
<br />
இவங்க போயிருந்த சமயம் கடைசி தம்பி தான் இருந்திருக்கான். "பாட்சா இல்லையா" என்று இவங்க கேட்க, அவன் "பாட்சா என்று யாரும் இங்க இல்லையேக்கா" என்று சொல்லி இருக்கான். இவங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு வந்துட்டாங்க! என் கிட்டேயும் அதைப் பற்றி கேட்கலை!!<br />
<br />
பிறகொரு நாள் அந்தக் கடைக்கு போகும் போது, அந்த நேரத்தில் மூன்று பேருமே இருந்தாங்க. போன உடனேயே இவங்க கேட்டக் கேள்வி "உங்க மூணு பேர்ல யார் பாட்சான்னாங்க? ", அவர்கள் எல்லோருமே சிரிக்க, நானும் சிரித்தேன். <br />
<br />
நடுவன், "யக்கா இங்கே யாருமே பாட்சா கிடையாது. என் பெயர் சௌகத், அண்ணன் பெயர் அப்துல் ரஹ்மான், இளையவன் பெயர் நூருல்லாஹ்" என்று சொல்ல, <br />
<br />
நானும் "என்னை அவங்க பாட்சான்னு கூப்பிடுவாங்க, நான் அவங்களை பாட்சான்னு கூப்பிடுவேன்" என்று சொல்ல.. <br />
<br />
ஙே...!!<br />
<br />
"நல்ல ஓஹுத்திரியமா தாம்மா இக்கிது" (confusion) என்று இவங்க புலம்ப, ஒரே சிரிப்பு. (நோட் பண்ணிக்கோங்க இது புது வார்த்தை!!) <br />
<br />
கூடுதலாய் தகவலுக்காக, இந்த சகோதரர்கள் தற்சமயம் வியாபாரம் செய்து வரும் கடை, நகை கடைகளை ஒட்டிய ஏரியா. இவர்கள் வியாபாரம் செய்து வரும் கடையும் முன்பு நகை கடை இருந்த இடம் தான். இவர்களும் நகைக் கடை திறக்க முயற்சி செய்து வருவதாக, வாய் வழிச் செய்திகள் காதுவழியாக புகைகிறது.<br />
<br />
இப்பல்லாம் நான் அவர்கள் கடைக்குப் போனால் "பாட்சா..பாட்சா" என்று கூப்பிடுவதில்லை. "ராஸா, ராஸா" என்றே தான் கூப்பிடுறாங்க. ஏங்க...?? நல்லவேளை ஏதும் மொழிவாரியாக வேறு பெயர் சொல்லி கூப்பிடாமல் இருந்தால் சரிதான். அவ்வவ்வ்வ்வ்...<br />
<br />
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><br />
ஆஹா பக்கங்களின் இன்டலி பட்டையை யாரோ லூட்டடிச்சிகிட்டு போய்ட்டாங்க!! ஒரு மாசமா கவனிக்காட்டி இப்படியெல்லாம் கூட<br />
ஆகுமா??<br />
<br />
</div>எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com37tag:blogger.com,1999:blog-64303816644538849.post-20472314202552774862011-09-02T00:42:00.000+03:002011-09-02T00:42:52.513+03:00"ஆவு கெச்சேனு"<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div closure_uid_kw10mw="169"><br />
</div><div closure_uid_kw10mw="169"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0oAM1R108OAyBi_ZH0BetDVnS4zhITaIkhtDyAR0y3BDLQRLkLqFuyrOIM-2c0UfT6Fpkg0-iLrpC_QLo4YbTtpcbbpdEEjYF6vB061y_C32EV6eBnlakS3hfFM-eLjO9uMzWF3WNtA/s1600/imagesCA7F9L3O.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0oAM1R108OAyBi_ZH0BetDVnS4zhITaIkhtDyAR0y3BDLQRLkLqFuyrOIM-2c0UfT6Fpkg0-iLrpC_QLo4YbTtpcbbpdEEjYF6vB061y_C32EV6eBnlakS3hfFM-eLjO9uMzWF3WNtA/s1600/imagesCA7F9L3O.jpg" xaa="true" /></a></div><div closure_uid_kw10mw="169"><strong><span style="background-color: yellow; color: blue; font-size: large;"><u>ஆவு கெச்சேனு </u></span></strong></div><br />
<br />
மணி என்றால் பணமென்றும், நேரமென்றும், பெல் என்றும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் நம்ம நண்பர் மணியை, மணி என்றே எல்லோரும் அழைப்போம். இந்த மணிக்கு ஓர வஞ்சனை, நுனி வஞ்சனை ஏதும் தெரியாது. யார் எந்த வேலை சொன்னாலும் செய்து கொண்டே இருப்பார். அவர் இங்கே அமீர் ஆபீசில் ஏஸி ரெஃப்ரிஜிரேஷன் பணியில் இருக்கிறார் <br />
<br />
ஒருமுறை முறை டாய்லெட்டில் பிளஷ்அவுட் வேலை செய்யலை. மணியிடம் பேசிக் கொண்டிருந்த போது "யாரவது தெரிந்த ப்ளம்பர் இருந்தா அனுப்புங்க" என்று சொன்னேன். 'சரி' என்று சொன்னார். மறுநாள் டூட்டி முடிந்து வெளியே வரும்போது அவர் தான் நின்றுக் கொண்டிருந்தார். “என்ன மணி?” என்றேன். “வாங்க வீட்டுக்கு போகலாம்” என்றார். “அப்ப ப்ளம்பர்?? என்றேன். “வாங்க பார்த்துட்டு போய் கூட்டி வரலாம்” என்றார். “சரி” என்று கூட்டி போனேன். <br />
<br />
மணியை கூட்டிப் போய் டாய்லெட்டில் உள்ள பிரச்சினையை காட்டிவிட்டு, மணிக்கு டீ போடுங்க என்று சொல்லிவிட்டு, யாரோ போனில் கூப்பிட்டார்கள் அவர்களோடு பேசிக் கொண்டிருந்த போது, "இப்ப வர்றேன்" என்று சொல்லி வெளியே போனார். சரி ப்ளம்பரை கூப்பிடத் தான் போகிறார் என்று நினைத்துக் கொண்டேன். போய் விட்டு பையில் எதையோ வாங்கி வந்தார். "என்ன மணி ப்ளம்பர் எங்கே?" என்று கேட்டேன். <br />
<br />
"இதோ இப்ப வந்துடுவார்" என்றார். "சரி நீங்க இங்க வாங்க இந்த டீ யையும் பிஸ்கட்டையும் சாப்பிடுங்க" என்றேன். "இதோ ஒரு நிமிஷத்தில் வருகிறேன்" என்று டாய்லெட்டினுள் திரும்ப போய் விட்டார். <br />
<br />
அஞ்சு நிமிஷத்தில் "சார் இங்க வந்து பாருங்க!" என்றார். பிளஷ்அவுட்டை அழுத்திப் பார்க்கச் சொன்னார். அழுத்தினேன். தண்ணீர் சர்ர்ர் என்று பிய்த்துக் கொண்டு அடித்தது. பிரமிப்புடன் மணியைப் பார்த்து "இந்த வேலைய எப்ப கத்துக் கிட்டீங்க" என்று கேட்டேன். "நேரம் போகாத நேரத்தில் இந்த வேலையையும் கத்துக்கிட்டேன்" என்றார்.<br />
<br />
பெருநாள் நெருங்கி கொண்டிருந்த நேரம். வீட்டில், "புது பேண்ட் இன்னும் தைக்கக் கொடுக்கலியா" என்று தினம் கேட்டுக் கொண்டே இருந்தாங்க. இன்னும் பேண்ட் பிட்டே எடுத்தப் பாடில்லை. எப்ப நேரம் கிடைத்து எப்ப தைக்க கொடுக்கிறது. <br />
<br />
பிறகு தான் டைலர்ஸயே போய் பார்த்தேன். எல்லோரும் ரொம்ப பிஸியாய் இருந்தார்கள். பெருநாள் முடிந்து பார்க்கலாமே என்றார்கள். பேண்ட் தைக்க கொடுக்காமல் போனால் வீட்டில் லெப்ட் அண்ட் ரைட் தான். மணிக்கு தெரிந்த ஆட்கள் இருப்பார்களா?? எதுக்கும் தான் விசாரித்துப் பார்ப்போமே என்று, சொன்னேன். அப்படியா?? பார்க்கலாம் சார்,,, என்று வீட்டுக்கு வந்தார். பேண்ட் துணியையும் அளவையும் கொடுங்க என்று வாங்கிக் கொண்டு போனார். "பெருநாளைக்கு போட்ட மாதிரி தான்" என்று குரல் கேட்டது!! <br />
<div closure_uid_kw10mw="177"><br />
</div>மறு நாள் தைத்த பேண்ட்டை கொண்டு வந்து கொடுத்து "போட்டுப் பாருங்க சார் சரியா இருக்கான்னு பார்ப்போம்னு" ஆச்சர்யப் படுத்தினார். உடுத்தி வந்து "எப்படி... மணி" என்றேன். "எல்லாம் நாம தச்சது சரி இல்லாமலா போய்டும்" என்றார். "அட" பிரமிப்பாய் இருந்தது. <br />
<br />
"இத எப்படி கத்துக்கிட்டீங்க" என்றேன்.<br />
<br />
"டூட்டி முடிஞ்சு ரூமில் நேரம் போகல. ஒரு மெஷின் வாங்கி போட்டு கத்துக் கிட்டேன்" <br />
<br />
<div closure_uid_kw10mw="178">பின்னொரு தடவை வீட்டில் வாஷிங் மெஷின் ஓடவில்லை. மணியிடம் சொல்லலாம் என்று ஆளனுப்பி சொன்னேன். அந்த நேரம் அவருடைய செல் நம்பரை எங்கோ மறந்து வைத்து விட்டேன். வந்தார். அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துப் போட்டு விட்டார். ஆட்டோமேடிக் வாஷிங் மெஷின். இதன் பாகமொன்று வேலை செய்யவில்லை. இந்த பார்ட்ஸ் மார்கெட்டில் கிடைக்குமா என்று அவரே கேட்டுக் கொண்டு, எதுக்கும் போய் பார்க்கலாம் என்று அவரே புறப்பட்டுப் போய் மெனக்கெட்டு வாங்கியும் வந்து விட்டார். பிரித்துப் போட்ட பார்ட்ஸின் கிட்ட கூட சென்று நான் எட்டிப் பார்க்கவில்லை. ஆனால் </div><br />
என்னை அருகே கூப்பிட்டு காட்டினார். அதனுள்ளே வயர்கள் சுற்றி இருந்த பகுதியில் மிகப் பெரிய ஒரு வெயிட்டான கல் ஒன்று இருந்தது. "என்ன மணி இவ்வளவு பெரிய தபூக் கல் இருக்கு" என்று கேட்டேன். "அது தான் மெஷினை அங்கிட்டும் இங்கிட்டும் நகர்ந்து ஓடாமல் நின்ற இடத்திலேயே நின்று ஓட வைக்கும்" என்றார்.<br />
<div closure_uid_kw10mw="179"><br />
</div>"அப்படியா?"<br />
<br />
நான் மணியை கொஞ்சம் ஹாலில் இருக்கச் சொல்லிவிட்டு பெருமையாய் இவங்களை கூப்பிட்டு அந்த கல்லை காட்டினேன். "ஆவு கெச்சேனு எம்புட்டு பெரிய கல்லு உம்மாடி..." ன்னாங்க. போய்ட்டாங்க.<br />
<br />
எல்லாவற்றையும் இணைத்து ஓடவும் வைத்து விட்டார். மணியிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. நாம் என்ன வேலை சொன்னாலும் செய்துவிட்டு காசு கொடுத்தால் வாங்க மாட்டார். அதனாலேயே அவரை கூப்பிட்டு எந்த வேலை சொல்லவும் ஒரு சங்கோஜமாவே இருக்கும்.<br />
<br />
மணி போன பின் இவங்களிடம் <br />
<br />
"ஆவு கெச்சேனு, அப்படின்னா என்ன? ன்னு கேட்டேன்.<br />
<br />
"ம்ம்ம்ம்... அதுவா பொம்பளைங்க பாஷை" ன்னாங்க!<br />
<br />
ஒருவேளை 'வாவ்' என்பதை தான் இப்படி சொன்னாங்களோ, தெரியலை! ஆனா முன்பொருமுறை விமல் பெட்சீட் விளம்பரம் ஒன்றில், "பெண்கள் தங்கள் மனோபாவங்களை பல வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள் அவற்றில் இதுவும் ஒன்று" என்று ஒரு வரி எழுதி இருக்கும். அது போல் தான் இதுவும் என்று நினைத்துக் கொண்டேன்.<br />
<br />
எதையோ சொல்ல வந்து விட்டு நானும் வேறெதையோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆமா இந்த மணி இன்னும் எனென்ன வேலைகள் எல்லாம் கற்று வைத்திருக்கிறார் என்று நேரம் வரும்போது ஒன்னொன்னா கேட்கணும். இதுமாதிரி நண்பர்கள் அமைவது ரொம்ப அபூர்வம். <br />
<br />
இங்கே பிலிப்பைன்ஸ் நாட்டுகாரர்களைக் கூட பார்த்திருக்கிறேன். ஆபீசில் பெரிய போஸ்டிங்கில் இருப்பார்கள். ஆனால் தச்சு வேலை, பெய்ண்டிங் வேலை, ஏஸி மெக்கானிசம் எல்லாம் தெரிந்து வைத்திருப்பார்கள். எப்படி என்று கேட்டால், எங்களுக்கு தொழில் கல்வி கற்ற பிறகு தான், மற்ற படிப்புக்கு அலவ்ட் என்கிறார்கள். <br />
<br />
<div closure_uid_kw10mw="243">அந்த வகையில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதும் இப்போது புரிகிறது. 'மணி' போல் இன்னும் பலபேர் நமது நாட்டில் நிறைய வேலைகள் கற்றுக் கொண்டு உருவாக வேண்டும்.</div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8_99hrZn_jT0LM8ab3wNImp6IzWU-zqyLqOoJKIIrkOmk4p1JHxhthTC_w5BpkNoBChwjcSOcBaHRPXjJNn5fY5Azx0rnyp-a9hbUxzPuuvdWOi2o1V1b418ki1oNeH8v5i043O0kjw/s1600/imagesCA2RJ9PO.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8_99hrZn_jT0LM8ab3wNImp6IzWU-zqyLqOoJKIIrkOmk4p1JHxhthTC_w5BpkNoBChwjcSOcBaHRPXjJNn5fY5Azx0rnyp-a9hbUxzPuuvdWOi2o1V1b418ki1oNeH8v5i043O0kjw/s1600/imagesCA2RJ9PO.jpg" xaa="true" /></a></div></div>எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com53tag:blogger.com,1999:blog-64303816644538849.post-48656180746011397182011-07-05T01:03:00.010+03:002011-07-05T16:25:36.489+03:00சவுதியும் - முஸ்தாக்பாயும்!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><strong><u></u></strong><br />
<div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCBj07yP_EWiS9xZrb6rUCwJ7ISj5iT9JfbuqPuNzC9NBN6z7d4MpnSn2vq_1yZdhTUvVCPyoCP_jP4s5JaKVr9RBKXtxEseA2hC7JVJi09aR79EAp224cB9iBxLnpszf5DfgJndZREA/s1600/imagesCA3S0MLT.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" i$="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCBj07yP_EWiS9xZrb6rUCwJ7ISj5iT9JfbuqPuNzC9NBN6z7d4MpnSn2vq_1yZdhTUvVCPyoCP_jP4s5JaKVr9RBKXtxEseA2hC7JVJi09aR79EAp224cB9iBxLnpszf5DfgJndZREA/s1600/imagesCA3S0MLT.jpg" /></a></div><br />
<span style="background-color: yellow; color: blue; font-size: large;"><strong><u>சவுதியும் - முஸ்தாக்பாயும்!!</u></strong></span><br />
<br />
</div>வீட்டு வேலைக்காகவும், வாகன ஓட்டிகளாகவும் வரும் இந்தியா <br />
மற்றும் இதர நாட்டு நபர்களுக்கு ஓய்வு ஒழிச்சலற்ற வேலை <br />
என்று பரவலாக கேள்வி பட்டிருக்கிறேன். அவர்களின் புலம்பல்<br />
களை கேட்டுமிருக்கிறேன். இதில் ஒவ்வொருவரும் வந்து <br />
சொல்லும் கதைகளையும் கேட்க மிகவும் பரிதாபமாகவே இருக்கும். <br />
இப்படி எக்குதப்பாக வந்து மாட்டிகிட்டாங்களே என்று யோசிக்க <br />
வைக்கும்.<u><br />
</u><br />
<br />
எண்ணூறு ரியால்களில் ஆரம்பித்து ஆயிரத்தி ஐநூறு ரியால்கள் வரையிலும் சம்பளம் வாங்கிக் கொண்டு சிலர் சொகுசாகவும், சிலர் <br />
மிகுந்த கஷ்டங்களுடனும் வாழ்கிறார்கள். (ஒரு ரியால் என்பது <br />
சுமாராக இந்தியா ரூபாய் 12- க்கு சமம்) <br />
<br />
<div>இங்கே முஸ்தாக் பாய் என்று ஒரு நண்பர் இருக்கிறார். இவர் </div><div>ஒரு கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறார். எப்பொழுதும் </div>இவரோடு ஒரு நண்பர் கூடவே வருவார். அவர் இங்கே ஒரு <br />
அரபுகாரர் வீட்டில், வீட்டு பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார். அவர் <br />
<div>பெயர் ஷாஜஹான் பாய். இவர்கள் இருவரும் சென்னையை </div><div>பிறப்பிடமாக கொண்டவர்கள். </div><div></div><div><div><br />
மேற்படி ஷாஜஹான் பாய் இங்கே வேலைக்கு சேர்ந்து பல வருடங்களாச்சு. இவர் வழக்கமாகவே எங்கள் வங்கி வழியாகத்-</div><div>தான் ஊருக்கு பணம் அனுப்புகிறார். இவர் எங்களைப் பார்க்க </div><div>வரும் நேரமெல்லாம் மனம் விட்டு பேச முடியாத அளவுக்கு கூட்டமிருக்கும். ஆகவே பணத்தை அனுப்பிவிட்டு போய்க் </div><div>கொண்டே இருப்பார்கள். சென்ற வாரம் அவர் இங்கே வந்திருந்த </div><div>போது மாத கடைசியில் கூட்டம் அவ்வளவா இருக்காது. முஸ்தாக் </div><div>பாய் நல்ல பழக்கம் என்பதால், ஷாஜஹான் பாயிடம் மெல்ல </div><div>பேச்சுக் கொடுத்தேன். </div></div><br />
"சவுதியில் உங்களை ரொம்ப காலமாகப் பார்க்கிறேனே, எப்படி <br />
போகிறது உங்க வாழ்க்கை?"<br />
<br />
"நல்லா இருக்கேன் சார், பிள்ளைகளெல்லாம் உயர்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார்கள்"<br />
<br />
"அப்படியா!! சந்தோஷம். சொந்தமா வீடு கட்டியாச்சா?"<br />
<br />
"இல்ல சார். நான் சம்பாதித்து அனுப்புவது பிள்ளைகளின் படிப்பு செலவுக்கும், குடும்ப செலவுக்குமே சரியாக இருக்கின்றது. இதில் <br />
சேமிக்க எந்த வழியுமில்லை!" <br />
<br />
"நீங்கள் ஊரோடு போய் செட்டிலாகிவிடலாம் என்று சென்ற தடவை சொல்லிக் கொண்டு போனீர்களே, என்னாச்சு?"<br />
<br />
"அப்படிதான் நினைத்துக் கொண்டு போனேன் ஆனால் ஊரில் <br />
முரட்டுத் தனமாய் பெரியளவில் முதலீடு செய்து வியாபாரம் செய்பவர்களிடையே நாம் போட்டிப் போட முடியாதென்று <br />
தெரிந்து போனதால் திரும்பவும் இங்கேயே வேலைக்கு வந்து <br />
விட்டேன்"<br />
<br />
<u>(</u>இதுபோல் நிறையபேர் முடித்துக் கொண்டு ஊர் போவதும் <br />
திரும்பவும் வேறு கம்பெனிக்கு வந்து பழைய அளவுக்கு <br />
சம்பளம் கிடைக்காமல் அல்லாடுவதும் தொடர்கிறது. நல்ல<br />
வேளை இவரை திரும்பவும் பழைய கம்பெனியே விசா <br />
கொடுத்து அழைத்துக் கொண்டது)<br />
<br />
"நீங்கள் வேலைப் பார்த்த கம்பெனிக்கே திரும்பவும் வந்து <br />
விட்டதால் பழைய சம்பளமே தருகிறார்களா அல்லது குறைவாக ஏதும்....??"<br />
<br />
"அப்படியில்லை. நான் திரும்ப வரணும் என்று சொன்னதும் <br />
அவங்களே விருப்பப்பட்டு தான் என்னை அழைச்சிக்கிட்டாங்க. வருடாவருடம் சம்பளம் அதிகரித்தும் தர்றாங்க. அதைவிடவும் <br />
அவங்க இந்த தடவை ‘உம்ரா’ (மெக்கா-மதீனா) செல்லும்போது <br />
என்னையும் கூடவே அழைத்துப் போனாங்க!" <br />
<br />
"அப்படியா ரொம்ப நல்ல விஷயமாச்சே...!! உங்கமேல் அளவுகடந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்களில்லையா? "<br />
<br />
"ஆமா! ஆனா ஆரம்பத்தில் யாரையும் சட்டென்று நம்பிவிட <br />
மாட்டார்கள்!"<br />
<br />
"அது எல்லோருக்கும் உள்ள இயல்புதானே!"<br />
<br />
"இவர்கள் சற்றே வித்தியாசமானவர்கள்"<br />
<br />
"எப்படி ??"<br />
<br />
"ஆரம்பத்தில், நான் சமைத்துக் கொண்டிருக்கும் போதோ அல்லது <br />
வீட்டை சுத்தம் செய்துக் கொண்டிருக்கும் போதோ எனது கண் பார்வையில் படும்படி எதேச்சையாய் கிடப்பது போல் தங்கநகைகள்<br />
கிடக்கும். எனக்கு பகீரென்று இருக்கும். எடுத்து வைத்திருந்து <br />
அந்த வீட்டம்மாவிடம் கொடுப்பேன்!"<br />
<br />
"ஓ..."<br />
<br />
"சில நேரங்களில் அவர்கள் தரும் சம்பளத்தில் கூடுதலாய் <br />
நம்மிடம் 500 ரியால் அல்லது ரெண்டு 500 ரியால்கள் சேர்ந்தே <br />
வரும்."<br />
<br />
"அதை என்ன செய்வீர்கள்?"<br />
<br />
"உடனே அலறி அடித்துக் கொண்டு போய் கொடுத்து விடுவேன்"<br />
<br />
"அப்படியா!!??"<br />
<br />
"இப்படி சோதனை நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு<br />
தடவை சம்பளம்தரும் போது கூடுதலாய் இருந்த 500 ரியாலை <br />
திருப்பிக் கொண்டு அவர்களிடம் கொடுத்தபோது, அதை என்னிடமே <br />
தந்து வைத்துக் கொள்ள சொல்லிவிட்டார்கள்"<br />
<br />
"நிஜமாவா?"<br />
<br />
"உண்மையிலேயே எனக்கு மனம் நெகிழ்வான தருணம் அது"<br />
<br />
"ரொம்ப சரியாச் சொன்னீங்க" <br />
<br />
"அதன் பின்னர் கடைகளுக்கு சென்று வீட்டு உபயோக சாமான்கள் வாங்கிவர அவர்கள் தரும் டிப்ஸ்கள் அபரிமிதமாய் இருக்கும்" <br />
<br />
"ம்ம்ம் ...!!"<br />
<br />
"சிலநேரங்களில் பக்கத்து பார்மஸிகளில் கிடைக்காத மெடிஸின்-<br />
களை நான் அலைந்து திரிந்து எப்படியாவது எவ்வளவு தூரமாய் இருந்தாலும் சென்று வாங்கி வந்து விடுவேன். அதனால் அனைத்து மெடிசிலிப்ளும் என்னிடமே வரும்"<br />
<br />
"ரொம்ப நல்லாவே நடந்துக்கிறீங்கன்னு சொல்லுங்க"<br />
<br />
"அப்படியல்ல, அவர்கள் நம்மை வைத்து பேணுவதிலும் இருக்கு!"<br />
<br />
"என்னான்னு?"<br />
<br />
"ஒருதடவை ரொம்ப அத்தியாவசிய பணத் தேவை. பழகிய <br />
நண்பர்கள் மற்றும் வெளியார் யாரிடமும் கேட்க எனக்கு மிகுந்த <br />
தயக்கம். சட்டென்று இவர்களிடம் வாய் விட்டுக் கேட்டேன். <br />
"எனக்கு ஐயாயிரம் ரியால்கள் உடனடியாய் தேவை இருக்கு. மாதா <br />
மாதம் என் சம்பளத்தில் பிடித்துக் கொள்ளுங்கள்" என்றேன். உடனே <br />
தந்து, "மாதம் 500 சம்பளத்தில் பிடித்துக் கொள்வேன்" என்றார்கள். <br />
சரி என்று சொல்லிவிட்டேன். "அந்த நேரத்து பணத் தேவை மிகப் <br />
பெரிய பாரம் குறைந்து விட்டது போன்ற திருப்தி"<br />
<br />
"இருக்காதா பின்னே!"<br />
<br />
"பிள்ளைகளுக்கு காலேஜ் படிப்புக்கு பணம் கட்டியாகணுமே!" <br />
<br />
"அது அவசியான விஷயமாச்சே!" <br />
<br />
"அடுத்த மாதம் அதற்க்கடுத்த மாதம் 500 - 500 என்று பிடித்துக் கொள்ளப்பட்டது"<br />
<br />
"அப்புறம்"<br />
<br />
"மூன்றாவது மாதத்தில் பழையபடியே முழு சம்பளமும் தந்தார்கள். <br />
எனக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். கடன் வாங்கியிருக்கும் விவரம்<br />
சொன்னேன். "பரவாயில்லை. நீயே வைத்துக்கொள் என்றார்கள். <br />
"நாம் எல்லாம் வேலைக்காரர்கள் தான் என்றாலும் இதைவிட <br />
மனிதாபி மானமும், அங்கீகாரமும் வேறு எங்கிருந்து கிடைக்கும். <br />
நீங்களே சொல்லுங்க?"<br />
<br />
"அடடா ரொம்ப நல்ல செய்தி சொல்றீங்களே!"<br />
<br />
“இன்னும் இவர்களுடைய குணத்தைப் பற்றி எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். வீட்டில் வயதான பெரியவர்களும் குழந்தைகளும் என் மேல் காட்டும் பிரியம் அலாதி! இவைகள் என்னை மிகவும் கட்டிப் போடுகின்றன. ஊரில் எங்கள் குடும்பத்தினரோடு சேர்ந்து வாழும் உணர்வை ஏற்படுத்துகிறது”.<br />
<br />
"சரி உங்களுகென்று சாப்பாடெல்லாம் இங்கேயே சாப்பிட்டுக் கொள்வீர்களா? நீங்கள் ரூமில் போய் சொந்தமாய் சமைத்துக் கொள்வீர்களா? <br />
<br />
"இல்லை. இவர்களுக்கு என்ன வகையான உயர்ந்த உணவு <br />
வகைகள் சமைக்கிறோமோ அதுவே இங்கு வேலைப் பார்ப்பவர்-<br />
களுக்கும் சாப்பிட அனுமதி உண்டு. அவர்களும் நாங்களும் <br />
சாப்பிட்டது போக நிறைய உணவு வகைகள் மீதப்படும். அவை-<br />
களை எல்லாம் நான்தான் எடுத்து செல்வேன். பக்கத்தில் சில கம்பெனிகளில் வேலை செய்யும் நமது நாட்டை சேர்ந்த <br />
நண்பர்களுக்கு தினம் ஒரு கம்பெனி என்று கணக்கு வைத்து <br />
அதை கொடுத்து விடுவேன். எதுக்கு வேஸ்ட்டாக்கி ட்ராஷ் <br />
கூடையில் கொண்டு போய் கொட்டனும். ஏதோ நம்மாலும் ஆன உதவிகளை செய்யனுமில்லையா?<br />
<br />
"ஆஹா.. அவர்களுடைய பெருந்தன்மையும், ஈகை குணமும் <br />
உங்களையும் பற்றிக் கொண்டது அப்படி தானே?"<br />
<br />
"உண்மையை சொல்வதானால்... அப்படி தான்" என்றார் <br />
முத்தாய்ப்பாக!<br />
<br />
ஷாஜஹான் பாய் பற்றியும் அரபுகாரர்களின் குண<span id="6_TRN_h">நலன்கள் </span>பற்றியும் இங்கே ஓரளவு தெரிந்து கொண்டோம். ஆனால்... இந்த முஸ்தாக் <br />
<div>பாய் பற்றி சொல்லவில்லையே! </div><br />
சரி. யாரிந்த முஸ்தாக்! <br />
<br />
சிறிது காலத்திற்கு முன்பு திரு.பாக்கியராஜ் நடித்து "அந்த ஏழு <br />
நாட்கள்" என்று ஒரு படம் வந்தது ஞாபகமிருக்கா? (இல்லை <br />
யென்றால் பரவாயில்லை. ‘சன்’ டிவியில் இரண்டு மாதத்திற்கு <br />
ஒரு முறை போடுவார்கள். பார்த்துக் கொள்ளலாம்) அந்த <br />
பாக்யராஜோடு சரிக்கு சமமாய் 'வாத்யாரே'.. 'வாத்யாரே' என்று <br />
மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்லி நடித்தாரே ஒரு குட்டி <br />
நட்சத்திரம் அவர் பெயர் "ஹாஜா ஷரீப்". அந்த ஹாஜா ஷரீபின் <br />
அண்ணன் தான் இந்த முஷ்தாக் பாய். இவரும் ஒரு சில பாக்யராஜ் படங்களில் நடித்துமிருக்கிறார். முன்பு அந்த போட்டோவெல்லாம் <br />
என்னிடம் கொண்டு வந்து காட்டினார். <br />
<br />
இந்த கட்டுரையை எழுதி வைத்துக்கொண்டு, "அந்த போட்டோவை <br />
எடுத்து வாங்க. இங்கே பப்ளிஷ் பண்ணனும்" என்று அவரிடம் <br />
கேட்டேன். கொண்டு வந்து தந்தபாடில்லை! பிறகு அவர் தரும்<br />
போது வெளியிடுகிறேன்.<br />
<br />
</div>எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-64303816644538849.post-74545836666792136052011-07-02T22:35:00.000+03:002011-07-02T22:35:11.881+03:00வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் ரகசியம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-6rP5OUrpp0KfaTiZ44pZO89QjyfVj6IG0dWQ07TErYGPoZjQDI4O52ykb2iYJmKuBVYj72KJQEbLqgsvx0Sz_1vRVHjRHvys93GaTnz1SkuOy7_oOvE5L2OOX316qdT_65OFvp-fnw/s1600/NZ0CAF57C8GCAI1VN4UCAVTUJ09CA4ZYBU9CAY8ZT8JCA2LT4QYCAVBEM3CCAKFJE1UCAPWU3A3CAQTCNKSCAKT6MWXCA3ADVR5CA3BCAT2CAV1O89JCA5H6BW4CA8QPN59CAY33OLICAZT47E5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" i$="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-6rP5OUrpp0KfaTiZ44pZO89QjyfVj6IG0dWQ07TErYGPoZjQDI4O52ykb2iYJmKuBVYj72KJQEbLqgsvx0Sz_1vRVHjRHvys93GaTnz1SkuOy7_oOvE5L2OOX316qdT_65OFvp-fnw/s1600/NZ0CAF57C8GCAI1VN4UCAVTUJ09CA4ZYBU9CAY8ZT8JCA2LT4QYCAVBEM3CCAKFJE1UCAPWU3A3CAQTCNKSCAKT6MWXCA3ADVR5CA3BCAT2CAV1O89JCA5H6BW4CA8QPN59CAY33OLICAZT47E5.jpg" /></a></div><br />
<strong><u>வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் ரகசியம்!</u></strong><br />
<br />
திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த <br />
ஜோடிகள் தங்களது 25-வது திருமண நாளைக் கொண்டாடினார்கள்.<br />
<br />
ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது திருமணநாளைக் கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தி-<br />
யாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் <br />
பிரசுரிக்க விரும்பினார்.<br />
<br />
நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, 25-ஆம் திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம். இது <br />
உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண வாழ்வின் <br />
வெற்றி ரகசியம் என்ன என்று கேட்டார்.<br />
<br />
இந்த கேள்வியை கேட்டதும், அந்த கணவருக்கு தனது பழைய <br />
தேனிலவு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது.<br />
<br />
"நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்காக சிம்லா<br />
சென்றோம். அங்கு எங்களது பயணம் சிறப்பாக அமைந்தது. <br />
அப்பகுதியை சுற்றிப் பார்க்க நாங்கள் குதிரை ஏற்றம் செல்வது <br />
என்று தீர்மானித்தோம்.<br />
<br />
அதற்காக இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் <br />
ஆளுக்கொரு குதிரையில் ஏறிக் கொண்டோம். எனது குதிரை <br />
மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது. ஆனால் என் <br />
மனைவி சென்ற குதிரை மிகவும் குறும்புத்தனமானதாக <br />
இருந்தது. திடீரென ஒரு துள்ளலில் என் மனைவியை அது <br />
கீழேத் தள்ளியது. அவள் கீழே இருந்து எழுந்து சுதாரித்துக் <br />
கொண்டு அந்த குதிரையின் மீது மீண்டும் ஏறி அமர்ந்து <br />
கொண்டு, "இதுதான் உனக்கு முதல் முறை" என்று அமைதி-<br />
யாகக் கூறினாள்..<br />
<br />
சிறிது தூரம் சென்றதும் அந்த குதிரை மீண்டும் அவ்வாறே <br />
செய்தது. அப்போதும் என் மனைவி மிக அமைதியாக எழுந்து <br />
குதிரையின் மீது அமர்ந்து கொண்டு "இதுதான் உனக்கு இரண்டாம் <br />
முறை" என்று கூறியவாறு பயணிக்கத் தொடங்கினாள்.<br />
<br />
மூன்றாம் முறையும் குதிரை அவ்வாறே செய்ததும், அவள் <br />
வேகமாக அவளது கைத்துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை <br />
சுட்டுக் கொன்றுவிட்டாள்!!!<br />
<br />
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நான் அவளை திட்டினேன். <br />
"ஏன் இப்படி செய்தாய்? நீ என்ன முட்டாளா? ஒரு விலங்கைக் கொன்றுவிட்டாயே? அறிவில்லையா?" என்று கேட்டேன்.<br />
<br />
அவள் மிகவும் அமையாக என்னைப் பார்த்து, "இதுதான் <br />
உங்களுக்கு முதல் முறை" என்றாள்.<br />
<br />
“பிறகென்ன... இப்பொழுதெல்லாம் எங்களது வாழ்க்கை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது” என்றார் கணவர்.<br />
<br />
---------------------------------------------------------------------------------------------------------<br />
<br />
<span style="background-color: #fff2cc; color: blue; font-size: large;"><strong><u>AMAZING FACTS :</u></strong></span><br />
<br />
<br />
<span style="font-size: large;"><span style="background-color: white;"><span style="color: blue;"><strong>MASJID</strong></span> </span>= is a 6 letters word</span><br />
<span style="font-size: large;"><br />
</span><br />
<span style="font-size: large;"><strong><span style="background-color: white; color: blue;">TEMPLE</span> </strong>= is a 6 letters word</span><br />
<span style="font-size: large;"><br />
</span><br />
<span style="font-size: large;"><span style="background-color: white; color: blue;"><strong>CHURCH</strong></span> = is a 6 letters word</span><br />
<br />
<span style="font-size: large;">Also...</span><br />
<br />
<br />
<span style="font-size: large;"><span style="color: blue;"><strong>QURAN</strong></span> = is a 5 letters word </span><br />
<span style="font-size: large;"><br />
</span><br />
<span style="font-size: large;"><span style="color: blue;"><strong>GEETA</strong></span> = is a 5 letters word</span><br />
<span style="font-size: large;"><br />
</span><br />
<span style="font-size: large;"><span style="color: blue;"><strong>BIBLE</strong></span> = is a 5 letters word</span><br />
<br />
<br />
NAMES ARE DIFFERENT, BUT THEY ALL ARE TEACHES THE SAME....<br />
<br />
<span style="font-size: large;"><strong>(1) “HUMANITY”, </strong></span><br />
<br />
<span style="font-size: large;"><strong>(2) “PEACE”, </strong></span><br />
<br />
<span style="font-size: large;"><strong>(3) “UNITY”</strong> </span><br />
<br />
பஸ்(buzz)ஸில் அனுப்பியது “சித்ரா” (வெட்டிப் பேச்சு சித்ரா அல்ல!! <br />
இவங்க வேற சித்ரா.S!!) <br />
<br />
நல்ல விஷயம் தானே!! <br />
<br />
மேற்படி “ஆர-ஞ்சை” பெற்று விட்டாலும், கீழுள்ள “முக்கனி”<br />
களை எப்பொழுது கைவர பெறப்போகிறோம். அனைவரும் <br />
சற்றே சிந்திப்போம்!! <br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrSPL0-KPvSOrjeXi7O2zONI5E7tES7HJHXalEYtqDBaU8_9ZpQw03MmURQpHMMqP6K8xztPp6earSPWt1baQz2VS2p5YFqMUooVtWzPiibF3KZhb5BAPLHNOqOwsrg7KsPvl7woxafw/s1600/L8VCAD4MSH0CALR00DTCA1Z88MICAG43WI0CAYH97MJCA4GW0LQCA7G16FQCA6DZVU3CAZRDH3YCAC08844CA8A1H8RCAZH2394CAGXD11NCAW0NYS1CAM08E51CAHGUKMJCA38YCXTCASJV4F1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" i$="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrSPL0-KPvSOrjeXi7O2zONI5E7tES7HJHXalEYtqDBaU8_9ZpQw03MmURQpHMMqP6K8xztPp6earSPWt1baQz2VS2p5YFqMUooVtWzPiibF3KZhb5BAPLHNOqOwsrg7KsPvl7woxafw/s1600/L8VCAD4MSH0CALR00DTCA1Z88MICAG43WI0CAYH97MJCA4GW0LQCA7G16FQCA6DZVU3CAZRDH3YCAC08844CA8A1H8RCAZH2394CAGXD11NCAW0NYS1CAM08E51CAHGUKMJCA38YCXTCASJV4F1.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"></div></div>எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-64303816644538849.post-32845986453223165282011-06-27T00:53:00.003+03:002011-06-29T11:08:05.018+03:00கமெண்ட்ஸ் போடாத வாசகி!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div>பஸ்ஸுக்கு காத்திருந்தபோது இரு அம்மணிகள் அளவலாவிக் கொண்டிருந்தாங்க!! அதை நான் உங்களுக்காக 'லாவிக்' கொண்டு <br />
வந்து விட்டேன் !! <br />
<br />
"என்னடி இவளே ஒரு மாதிரி இருக்கே, முழுகாம இருக்கியா?" <br />
<br />
"இல்லக்கா இப்பல்லாம் அவரு டூட்டி முடிஞ்சு வந்ததுமே வெடு<br />
வெடுன்னு விழுறாரு!"<br />
<br />
"சரி இப்ப அதுக்கென்ன?"<br />
<br />
"முந்திய மாதிரி என் மேல் அவருக்கு பிரியமில்லையோன்னு <br />
மனசுக்கு தோணுதுக்கா?"<br />
<br />
"இவ பெரிய இவ! கல்யாணமாகி வருஷம் ஒன்னு இன்னும் <br />
முடியல! பிரியத்தைப் பத்தி ரொம்பதான் கண்டுட்டாளாக்கும்"<br />
<br />
"அது வந்துக்கா...!!"<br />
<br />
"அடியே இவளே..!! நாமெல்லாம் நடந்துக்குற முறையில தாண்டி <br />
பிரியமும், பாசமும் நம் மேல வரும். நான் சொல்றேன் நல்லா <br />
கேட்டுக்க!!<br />
<br />
(பஸ்கள் நிற்பதும் போவதுமாய் இருக்க, நான் போக வேண்டிய <br />
பஸ் இன்னும் வந்தபாடில்லை!!) <br />
<br />
"சொல்லுங்கக்கா"<br />
<br />
“காலையில் எழுந்ததிலிருந்து அவங்க ‘ஆப்பீஸ்’ போற<br />
வரைக்கும் அந்த ஹரிபரி நேரத்தில் உன் மூஞ்சியையும் <br />
(அது வேறு) முகத்தையும் (இது வேறு) காட்டிட்டீன்னா, இவங்க <br />
'ஆப்பீஸ்' போய் நீ காட்டிய மூஞ்சியை நினைவில் வச்சிருந்-<br />
தாங்கன்னு வச்சுக்கோ, ஆணி புடுங்க வேண்டிய இவரை, டேமேஜர் <br />
பீஸ புடிங்கிடுவார். பொளப்பு என்னாகும். டப்பா டான்ஸ் ஆடிடும். <br />
புரியுதா?" <br />
<br />
"புரியுதுக்கா!"<br />
<br />
"அதனால எப்பவும் கொஞ்சம் சிரிச்ச மாதிரியே இரி! வேல <br />
பாட்டுக்கும் வேல, கையும் கண்ணும் பார்த்துக்கிட்டிருக்க, <br />
என்ன சங்கடமிருந்தாலும் கடையில் சேல்ஸ்மேன்கள் <br />
மெல்லிதாய் சிரிச்சிக்கிட்டிருப்பாங்களே அதுமாதிரி!” <br />
<br />
"அடடா விளக்கமெல்லாம் அழகா சொல்றீங்களேக்கா!"<br />
<br />
"சரிடி பினாத்தாதே, கவனமா கேட்டுக்கோ!'<br />
<br />
"ம்ம்ம்..."<br />
<br />
"வாய்க்கு சுவையா ஆக்கிப் போடு!! எல்லாரும் ருசிக்கி <br />
வயப்படுபவர்கள் தாம் புள்ள!" <br />
<br />
"எனக்கு அத்தன வகையா சமைக்கத் தெரியாதேக்கா!"<br />
<br />
"விடிஞ்சது போ! ஒன்னச் சொல்லியும் ஏதும் ஆகுறதில்ல. நம்மட அம்மாக்கள்ஸும் நமக்கு கல்யாணம் முடியுற வரைக்கும் <br />
செல்லம் கொடுத்தே அடுப்படி பக்கம் போக விட மாட்டாங்க. <br />
அதனால டீ, காபி தவிர்த்து சுடுதண்ணி மட்டும் தான் நமக்கு <br />
போட வரும். என்னா நா சொல்றது சரிதானா?". <br />
<br />
"உண்மைதாக்கா"<br />
<br />
"சரி அதனால ஒன்றும் பிரச்சின இல்ல! இந்த பக்கம் நிறைய <br />
தோழிகள், ப்ளாக்ஸ்பாட்டுல வகை வகையான சமையலைப் <br />
பத்தியும், அவைகளை சமைக்கும் முறைப்பத்தியும் வண்ண<br />
வண்ணமா படங்களைப் போட்டு அசத்துறாங்க!! அவைகளையும் <br />
ஒரு முறைக்கு ரெண்டு முறை போயி படிச்சுப் பாரு. சந்தேக-<br />
மிருந்தா அவங்களுக்கே கமெண்ட்ஸ் போட்டு விளக்கம் கேளு. <br />
அழகா பதில் தருவாங்க! சும்மா லேப்டாப்பை தலகாணிக்கி <br />
கீழே வச்சுக்கிட்டு தூங்காதே! சரியா?<br />
<br />
"எல்லாம் சரீக்கா...ஆனா..க்கா ?"<br />
<br />
"என்னடி ஆனாக்கா ஆவன்னாக்கா.. ?"<br />
<br />
"அவரு டூட்டி முடிஞ்சு வந்த உடனே வெடுவெடுன்னு விழுறாரு! <br />
அதுக்கு நீங்க எதுவுமே சொல்லலையே. அதாங்... க்கா!!” <br />
<br />
"இரிடி...பறக்காதே! ஒன்னு ஒண்ணாத்தானே சொல்லணும். அவங்க <br />
டூட்டி முடிஞ்சு சோர்ந்து போய் தான் வீட்டுக்கு வருவாங்க!<br />
அப்பவும் கூட, உன்னோடு செல்லில் பேசி, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டுதானே வராங்க!! அப்ப செல்லில் உன்னோடு பேசிய பிறகு, அவங்க வீட்டுக்கு வரும் நேரத்தை <br />
கால்குலேட் செய்து மனதுக்குள் வச்சுக்க. இதுக்கு கம்ப்யுட்டர் <br />
எல்லாம் தேவையில்லை!! (ஏஏஏ..யப்பா ரொம்ப படிச்சவங்களா <br />
இருப்பாங்க போலிருக்கே!!) அதற்குள் காபியோ, டீயோ, டிஃபனோ, <br />
அல்லது ஸ்ட்ரைட்டா சாப்பாடோ சாப்பிடுபவர்கள் என்றால் <br />
அவைகளை ரெடி செய்து வைத்து விடு. குளித்து விட்டு சாப்பிட, <br />
அவங்க மனசு சந்தோஷமா இருந்தா எவ்வளவு எலக்ட்ரிசிட்டி <br />
ஷேவ் ஆகுதுன்னு நீயே பாரு!! சரியா?? <br />
<br />
"ஹி.. ஹி...சரீக்கா??" <br />
<br />
"நா என்னத்த சொல்லிப்புட்டேன்னு இப்படி ஹி..ஹி..ன்னு <br />
இளிக்கிரே! கவனமா கேளு புள்ளோய்!"<br />
<br />
"சரீக்கா..சரீக்கா..!!"<br />
<br />
"அத விட்டுபுட்டு அவங்க வர்ற வரைக்கும், டிவி தொடர், காமெடி <br />
ஷோ பார்க்கலாம்னு உட்கார்ந்துட்டீன்னு வச்சுக்கோ, பிறகு நாம <br />
காமெடிபீஸாகி விடுவோம். தெரிஞ்சுதா??" <br />
<br />
"ஆமாக்கா, அதான் அவரு வெடுவெடுன்னு விழறாரா..!! இப்ப<br />
தானே புரியுது. நீங்க மேலே சொல்லுங்கக்கா!"<br />
<br />
“ஒன்னு மட்டும் மனசுல வச்சுக்கோ. புருஷா எல்லோரும் <br />
குழந்தைங்க மாதிரி. நாம சிரிச்சா அவங்களும் சிரிப்பாங்க. <br />
அவங்க சிரிச்சா நம்ம மனசும் வீடும் நிறைஞ்ச மாதிரி. அவங்க வரும்போது அழகா டிரஸ் பண்ணி கொஞ்சம் சிரிச்ச மாதிரி<br />
முகத்த வச்சுக்கோ! வந்த உடனே எந்த கவலைப்படும் விஷயத்-<br />
தையும் சொல்லிடாதே! நீ வாங்கி வரச் சொன்னதில் ஏதும் <br />
மறந்து வந்துட்டாங்கன்னாலும், "போய் வாங்கிட்டு வாங்கன்னு <br />
விரட்டாதே!", "பரவாயில்லிங்க, சமாளிச்சுக்கலாம்" என்று சொல்லி அட்ஜஸ்ட் பண்ணு" , புரியுதா? <br />
<br />
"அச்சச்சோ... எம்பூட்டு விஷயம் அழகழகா சொல்றீங்க!"<br />
<br />
“சரி சரி...மற்றதெல்லாம் ஒன்னற தோழிகளும் அம்மாவும் <br />
சொல்லிக் கொடுத்திருப்பாங்க அதுபடி மனசில வாங்கி நடந்துக்க, <br />
எல்லாம் சரியா வரும். என்னா புரியுதா..!!"<br />
<br />
சிரித்துக் கொண்டே தலையை ஆட்டினாள்.<br />
<br />
“சும்மா தலைய தலைய ஆட்டாதே!! காலையில் 'அவங்க' ஆப்பீஸ் போறதுக்கும், 'ஆணி' புடுங்கிட்டு வர்றதுக்கும், வாழ்க்கையின் அந்திம<br />
நாள் வரைக்கும் அவங்களுக்கு உதவும்கரங்கள், என்றால் அது நாம<br />
தான், இதில் எந்தவித மூன்றாம் நாலாம் கருத்துக்கும் இடமில்லை. <br />
இப்ப நீ ஜாக்கெட்டில் காலர் வச்சிருந்தீன்னா ஒருதடவை தூக்கி <br />
விட்டுக்கோ. தப்பே இல்ல!!” <br />
<br />
அம்மாடி... கொஞ்ச நேரத்துக்குள்ளார அவங்க பாட்டுக்கும் எவ்வளவு சொல்லிக்கிட்டே போய்ட்டாய்ங்க!!<br />
<br />
<div><span id="6_TRN_0"><span id="6_TRN_4">அதற்</span>குள் </span> நான் புறப்படவேண்டிய நாலாம் நம்பர் பஸ் வந்துடுச்சு. ஏறிட்டேன்.!! கண்டக்டர், “ரைட்.. ரைட்” விசில் கொடுத்தார். </div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><br />
</div>எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com25tag:blogger.com,1999:blog-64303816644538849.post-50908662581235584052011-06-19T14:11:00.012+03:002015-12-23T13:37:05.464+03:00திட்டச்சேரி [[தொடர் பதிவு]]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
</div>
<div style="text-align: left;">
</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkqexw9PTWkXJHWz4Ic8D_0rROu13RsZ9fA3ocYC4LaWjgSumOds5a6Yp1zK0nvOrO9ZrEj94R_x7Hoe1MpHVr5kgcJkrUSerJqP2y0FRO6-qd4JwNSwpscLpGxo0RAQSzilUvUkIwMQ/s1600/imagesCAMXNC9I.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="133" i="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkqexw9PTWkXJHWz4Ic8D_0rROu13RsZ9fA3ocYC4LaWjgSumOds5a6Yp1zK0nvOrO9ZrEj94R_x7Hoe1MpHVr5kgcJkrUSerJqP2y0FRO6-qd4JwNSwpscLpGxo0RAQSzilUvUkIwMQ/s200/imagesCAMXNC9I.jpg" true="" width="200" /></a></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<a href="http://shadiqah.blogspot.com/2011/06/blog-post_08.html"><span style="color: #274e13;"><strong>“எங்க ஊரு நல்ல ஊரு”</strong></span></a> தொடர் பதிவிற்கு என்னை அழைத்த அன்பின் சகோதரி <a href="http://shadiqah.blogspot.com/2011/06/blog-post_08.html"><span style="color: red;">ஸாதிக்கா</span></a> அவர்களுக்கு நன்றி!! </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="background-color: yellow; color: blue; font-size: x-large;"><strong><u>திட்டச்சேரி..!!!</u></strong></span></div>
<br />
<br />
<span style="font-size: large;"><strong>1.</strong></span><br />
<div style="text-align: left;">
நான் பிறந்த ஊர் நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் என்றாலும் பெரும்பாலான பிரபலஸ்தர்கள் பிறந்து வளர்ந்த ஊர் என்பதாலும் </div>
<div style="text-align: left;">
நிறைய நண்பர்கள் எங்களூரைப் பற்றி எழுதி விட்டதாலும், நிறைய பேர்களுக்கு நாகூரைப் பற்றி தெரியும் என்பதாலும், நான் சற்றே <br />
நகர்ந்து, <span style="color: black;">"என் கைத்தளம் பற்றி மனம் கவர்ந்த துணையூர்"</span><span style="color: magenta;"> </span><br />
'திட்டச்சேரி'யைப் பற்றி இங்கே எழுதுகிறேன்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
நாகூரைப் பற்றி நாலு வார்த்தையாவது சொல்லியாக வேண்டும்.<br />
அறிவின் வல்லமையால் நகைச்சுவையாய் பேசக் கூடியவர்கள்<br />
என்றும், உணவு விஷயத்திலும் வக்கணையாய் நாச்சுவை அறிந்து உண்பதிலும், இவர்களை மிஞ்ச ஆளில்லை என்பதனையே அழகாய்<br />
'நாகூர்' என்று சுருக்கமாய் சொல்லி சிலாகிக்கிறார்கள் என்பது<br />
என் எண்ணம்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
திட்டச்சேரி, நிரவி, புறாக்கிராமம், ஏனங்குடி, பாக்கம் கோட்டூர், </div>
<div style="text-align: left;">
போலகம், இல்லாமல் நாகூர் ஏது? சிக்கல், கீவளூர், கூத்தூர், </div>
<div style="text-align: left;">
பொரவாச்சேரி, மஞ்சக் கொல்லைக்காரர்கள் கோபிக்கவேண்டாம்;<br />
அவர்களும் நாகூர் காரர்கள்தான்! அந்த வகையில் பார்த்தால் </div>
<div style="text-align: left;">
திட்டச்சேரி, நாகூரில் இருந்து நீட்டிக்கப்பட்ட ஒரு கிளை நகரம் </div>
<div style="text-align: left;">
என்றே கொள்ளலாம்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
நாகூரிலிருந்தும், காரைக்காலிலிருந்தும் கிட்டத்தட்ட எட்டு கிலோ <br />
மீட்டர் தூரமே உள்ள ஊர் தான் இந்த திட்டச்சேரி, என்றாலும் <br />
ஊரின் பெயரில் ‘சேரி’ என்ற சொல் ஒட்டியிருப்பதால் ஏதோ <br />
குக்கிராமம் என்றும் நினைத்து விட வேண்டாம். நாகப்பட்டினம்<br />
மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
2001-ம் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8484 மக்கள் <br />
இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் <br />
ஆவார்கள். <span style="color: red;">திட்டச்சேரி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், </span><br />
<span style="color: red;">இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு </span><br />
<span style="color: red;">71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% </span><br />
<span style="color: red;">விட கூடியதே.</span> திட்டச்சேரி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்-<br />
குட்பட்டோர் ஆவார்கள். இது "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்<br />
தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". என்று <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF"><span style="color: #783f04;">விக்கிப்பீடியாவில் </span></a><br />
தொகுக்கப் பட்டிருக்கிறது. பத்து வருடத்துக்குப் பிறகு இப்பொழுது<br />
(2011-ல்) மக்கள் தொகையை டபுல் என்ன ட்ரிபுலாகக் கூட <br />
கூட்டிக் கொள்ளலாம்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
இவ்வாறாக, மேற்படி கல்வியறிவு 77% என்பது இப்பொழுது சற்று கூடியிருக்கக் கூடும், என்றாலும் இது சற்றேறக்குறைய 70-80 <br />
ஆண்டுகளுக்கு முன்பே கல்வியைப் பற்றி விழிப்புணர்வோடு, <br />
அடித்தளம் அமைக்கப்பட்டு இஸ்லாமிய பல்கலைக் கழகங்களில்<br />
படித்தறிந்த கல்வியாளர்களால் வரையறுக்கப்பட்ட ஊர் திட்டச்சேரி. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் தலைமை நீதிபதிகள், வழக்கறிஞர்கள், டாக்டர்கள், வாழும் ஊர் இது.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
உள்ளூரில் அரசினர் மேல்நிலைப் பள்ளி இருந்தாலும், இங்கிலீஷ் </div>
<div style="text-align: left;">
மீடியம் பயிலும் கான்வென்ட் சம்சுன்நஹர், ஜேஸி பள்ளிகள் இருந்தபோதிலும், காலை நேரங்களில் இங்கிருந்து புறப்பட்டு நாகூர்<br />
கிரசண்ட், காரைக்கால் காவேரி, நிர்மலா ராணி, செயிண்ட் மேரிஸ் </div>
<div style="text-align: left;">
பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் பஸ்களும் வேன்களுமே இந்த <br />
ஊர் மக்கள் எந்த அளவுக்கு கல்வியில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதற்கோர் அத்தாட்சி!!<br />
<br />
ஒரு குத்து மதிப்பாகச் சொல்லப் போனால் மூன்று மாவட்டங்கள்<br />
அருகருகே காணக்கிடைப்பது இந்த பகுதியில்தான் என்று நினைக் </div>
<div style="text-align: left;">
கிறேன். நாகை, திருவாரூர், காரைக்கால் (பாண்டிச்சேரி). காரைக்கால்<br />
அருகே இருப்பதாலோ என்னவோ, பக்கத்தில் பனங்’குடி’, ஏனங்’குடி’<br />
போன்ற ஊர்கள் சுற்றிலும் இருக்கின்றன. ஊர்காரர்கள் கோபிக்க<br />
வேண்டாம்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
தென் தமிழகத்தில் முதன்முதலில் வெற்றிகரமாக பெட்ரோல் கிடைக்குமென்று அறியப்பட்டது இங்குள்ள பா.கொந்தகை <br />
அருகே உள்ள பீமா தைக்கால் தான். அதுவே பின்னாளில் <br />
அந்த பகுதிகளில் வளமிக்க பெட்ரோல் ஊற்றுகள் கண்டுபிடிக்க ஏதுவாக நரிமணம் - பனங்குடியில் ongc ப்ராஜெக்ட், சென்னை <br />
பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (cpcl) துணையுடன், Rs.2800 கோடி <br />
செலவில் நவீனப் படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப் பட்ட <br />
ரிஃபைனரிஸ் உருவாக்கப்பட்டது.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="font-size: large;"><strong>2</strong>.</span></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
இந்த ஊர் மக்களின் உபசரிப்பும் கனிவும் கரிசனமும் சொல்லில்<br />
அடங்காது. யாரவது வீட்டிற்கு வந்து விட்டார்களென்றால் ஒரு <br />
வாய் டீயோ, காபியோ, ஜூஸோ கொடுத்து சட்டென்று அவர்களை<br />
அனுப்பி விடமாட்டர்கள். வீட்டில் செய்த பலகாரங்கள் தம்ரோட்,<br />
நானஹத்தா, ஹஜூர் பணியாரம், முட்டைப் பணியாரம் போன்ற-<br />
வைகளை Bபாஷன் என்று இங்கு அழைக்கப்படும் மரவைகளில் <br />
வைத்து நம்மை சாப்பிடச் சொல்லி திக்கு முக்காட செய்து <br />
விடுவார்கள். எதை சாப்பிடுவது எதை விடுவது என்று பல <br />
சமயங்களில் இதுமாதிரி நிகழ்வுகள் அங்கே சகஜம்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
இங்கே மாலை நேரங்களில், நாகூரில் இருந்து வந்து அங்கேயே<br />
உடனுக்குடன் தயார் செய்து சுடச்சுட சுட்டு விற்பனை செய்யும் </div>
<div style="text-align: left;">
"வாடா" என்ற திண்பண்டம் ரொம்ப ஃபேமஸ்; அதன்சுவை அலாதி<br />
யானது. ஊறவைத்து அரைத்த அரிசி, அரைத்த சோறு ஆகிய <br />
வற்றை சரியான விகிதத்தில் கலந்து, வடைபோல் தட்டி, நடுவில் <br />
ஒரு ஓட்டையும் விட்டு, அதன் மேல் ‘இறாலை’ சரி பாதியாய் <br />
பிய்த்து பொட்டு போல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வைத்து, எண்ணையில் போட்டு பதமாய் பொன்னிறமாய் பொறித்து எடுக்கப் படுவதற்குப் பெயர் 'வாடா'. இப்படி பொறித்த வாடாவையே திரும்ப<br />
வும் மாவில் ஒரு புரட்டு புரட்டி எடுத்து பொறித்தால் அதற்கு <br />
பெயர் "பொறிச்ச வாடா"வாம். இந்த இரண்டு வகை மொறுமொறு வாடாவின் சுவையும் மணமும் சிம்ப்லி டிலீஸியஸாக இருக்கும்.<br />
ஒரு தடவை சாப்பிட்டு பார்த்தீர்களென்றால் தான் நான் சொல்வ-<br />
தன் அர்த்தம் புரியும். இதற்கு உலகம் முழுக்க ரசனையுள்ள<br />
ரசிகர்கள் கூட்டம் [என்னையும் சேர்த்து] ஏராளம்!<br />
<br />
அதற்கு தொட்டுக் கொள்ள, 'உள்ளடம்' என்கிற வெங்காயமும், </div>
<div style="text-align: left;">
மஞ்சளும், தேங்காய்ப்பூவும், உப்பும் போட்டு பிரட்டி, அவைகளை எண்ணையில் போட்டு வதக்கிய கலவையோடு சேர்த்து சாப்பிடும்<br />
வாடாவின் டேஸ்ட் உன்னைப் பிடி என்னைப்பிடி என்று அள்ளிக் <br />
கொண்டு போகும். இது கிடைக்காத (மழை) காலங்களில் இருக்கவே<br />
இருக்கு ஸ்பெஷல் கொத்துப் பரோட்டா. அவர்களின் கனிவான <br />
பேச்சாலும், உபசரிப்பாலும் இதுமாதிரி வகையான சாப்பாடு <br />
களாலும் மனம் நிறைந்தது போல், வயிறும் நிறைந்து போவது <br />
திண்ணம்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
இந்த ஊரின் ஸ்பெஷல் என்று சொல்லப் போனால் குவளைகேக், </div>
<div style="text-align: left;">
பகோடா பிஸ்கட், பொட்டி பணியம், ஈச்சகொட்டை பணியம், <br />
முட்டைப் பணியம், தம்ரோட், இஞ்சி கொத்து பணியம், முர்த்தபா <br />
எனும் லாப்பை, ஜாலர் பாராட்டா + வட்டலாப்பம், ஜாலர் சமுசா<br />
ஆகியவைகள் அடங்கும்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
பிரியாணி வகைகளில் மட்டன், சிக்கன், இறால், மீன், போன்றவை-</div>
<div style="text-align: left;">
களும், *அஞ்சுவகைக்கறி நெய்ச்சோறு, குஸ்கா, போன்றவைகளும், <br />
சமீபத்தில் பிரபலமாயுள்ள சைனீஸ் ரைஸ், மீங்கோரி போன்ற </div>
<div style="text-align: left;">
வையும் சுவையாய் இருக்கும். அந்தந்த வீட்டு மாப்பிள்ளை </div>
<div style="text-align: left;">
மார்களின் உடலளவை வைத்து, வீட்டின் கைமணத்தை அறிந்துக் கொள்ளலாம் என்று சொல்வார்கள். (நீங்கள் குண்டா ஒல்லியா <br />
என்று என்னை கேட்டு விடாதீர்கள். உடலவை குறைக்க (படாதபாடு படுபவர்களுக்காக) இரண்டு மூன்று பதிவு போட்ட என்னை குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம்!! :-)) </div>
<div style="text-align: left;">
<br />
*மேற்படி அஞ்சுவகைக்கறி நெய்ச்சோறு என்பது நான்கு பேர் </div>
<div style="text-align: left;">
உட்கார்ந்து சாப்பிடும் இந்த Bபாசன் சாப்பாடு, சாப்பிட்டு முடியும்<br />
தருவாயில் சும்மா செறிமானத்திற்காக சாப்பிடும் சாப்பாடு தான் </div>
<div style="text-align: left;">
இந்த 'சீனித்தொவை' சோறு. அதற்குரிய பக்குவத்தைப் பாருங்கள் </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
இந்த நெய்சோற்றுடன், தக்காளி பச்சடி, சீனித்தொவை, வாழைப்-</div>
<div style="text-align: left;">
பழம், ஃபிரிணி ஆகியவற்றை (இதற்காக சிலர் பால்கோவாவை </div>
<div style="text-align: left;">
பொட்டலம் போட்டு மடியில் கட்டிக் கொண்டும் வருவார்கள்!!) </div>
<div style="text-align: left;">
போட்டு கஞ்சி மாதிரி பிசைந்து சாப்பிடும் சாப்பாட்டுக்கு பெயர் </div>
<div style="text-align: left;">
தான் பால்சோறு. ஜெதப்பான சாப்பாடு இந்த ஏரியாக்களில் ரொம்ப<br />
ஸ்பெஷல்! இப்பொழுது அதெல்லாம் வீட்டில் செய்து சாப்பிட்டா-</div>
<div style="text-align: left;">
லன்றி கலரிகளில் அரிதாகிப் போச்சு. இந்த அவசர உலகில் </div>
<div style="text-align: left;">
கல்யாணம், மற்ற விஷேஷங்களில் கூட ப்ளேட் சாப்படாகி, </div>
<div style="text-align: left;">
மெடிக்கல் சாப்பாடென்ரெல்லாம் ஆகிப்போச்சு! </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
மாலை நேரங்களில் ஆட்டுதலை சூப் விற்பனை அமோகமாய் </div>
<div style="text-align: left;">
இருக்கும். தலையிலுள்ள கண், நாக்கு, மூளை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விலை! தலைகறிகள் விற்று தீர்ந்து போனாலும், சூப்பு<br />
தண்ணியில் அவித்த முட்டையைப் போட்டு நடக்கும் வியாபாரம்<br />
ஒரு சில கடைகளில் சூடு பறக்கும். </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
அரபு நாடுகளில் மிகவும் விரும்பி சாப்பிடப்படும் புரோஸ்டட் </div>
<div style="text-align: left;">
சிக்கன், ஷவர்மா போன்ற பிரசித்தி பெற்ற ஐட்டங்கள் தற்சமயம் காரைக்காலிலும் கிடைக்கிறது. டேஸ்ட் ....?? கொஞ்சம் முன்னபின்ன இருக்கலாம்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
அலியதரம், ஆட்டுக்கால் பணியாரம், 'போனவம்', போன்ற தீண்<br />
பதார்த்தங்கள் போன இடம் தெரியவில்லை. இப்பொழுதெல்லாம்<br />
இவைகளை வீடுகளில் செய்ய அலுப்புப்பட்டுக் கொண்டு கடை-</div>
<div style="text-align: left;">
களில் ஆர்டர் செய்தே தருவிக்கிறோம். ஒரு காலத்தில் பாட்டி</div>
<div style="text-align: left;">
மார்களும், வீட்டின் பெண்மணிகளும், சின்னச்சின்ன பெண் <br />
குழந்தைகளும் வீடு முழுக்க விரவி உட்கார்ந்து பணியாரங்கள்<br />
செய்கிறேன் என்று அடிக்கும் லூட்டிகள் பார்க்கவே கண்கொள்ளா<br />
காட்சியாக இருக்கும். கூட்டுக்குடும்பங்கள் அரிதாகிப்போன </div>
<div style="text-align: left;">
நிலையில், விசேஷ நாட்களுக்கு முன்கூட்டியே கடைகளில் <br />
ஆர்டர் செய்து தருவித்து எல்லா விஷேசங்களையும், பண்டிகை நாட்களையும் கொண்டாடி திருப்திபட்டுக் கொள்கிறோம்.நாகூரில்<br />
ஹாரிஸ் கடையிலும், திட்டச்சேரியில் செல்லம்மா, மெஹர் <br />
ஆகியோர் வீடுகளிலும் செய்து தருகிறார்கள். </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<strong><span style="font-size: large;">3.</span></strong></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
பிரசித்திப் பெற்ற தற்காப்பு கலையை சீனாவுக்கே சென்று </div>
<div style="text-align: left;">
கற்றவர்கள் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள். "சைனீஸ் டிஸாஸ்டர்" </div>
<div style="text-align: left;">
என்ற அறியவகை கலையை கற்றவர்களில் முக்கியமானவர்கள் </div>
<div style="text-align: left;">
'எல்லைக்கல்' யூசுப் மரைக்காயர், 'பூரான்' ஷரீப் ஆகியோர்களாவர்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
நண்பர் ஒருவரை வேலை நிமித்தம் ஓரிடத்திற்கு போகச் சொல்லி </div>
<div style="text-align: left;">
விட்டு, திரும்பி வந்து பார்க்கும் சமயம் இருட்டிவிட்டதாகவும், அவர் போகாமல் இருட்டில் உட்கார்ந்திருக்கக் கண்டு எட்டி உதைத்ததாகவும், பிறகுதான் அவர் உதைத்தது ஊரின் எல்லைக்கல் என்றும், உதைத்ததில் அந்தக்கல் இரண்டு துண்டாய் உடைந்து போனதாகவும், அதனால் அவர்<br />
பெயர் எல்லைக்கல் யூசுப் என்று பெயர் விளங்கக் காரணமாகியது என்கிறார்கள்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
இரண்டாமவர் குஸ்தி, கம்பு சுழற்றுதல், மற்றும் வீர விளையாட்டு </div>
<div style="text-align: left;">
களில் படுசமத்தர். இவர் கம்பு சுழற்றும் போது பத்து பேர் எதிர் </div>
<div style="text-align: left;">
நின்று எலுமிச்சை பழத்தை வீசினாலும் லாவகமாக தன்மேல் </div>
<div style="text-align: left;">
படாமல் விர்ர்.. விர்ர்.. என்று கம்பு சுழற்றி அசத்துவார் என்று </div>
<div style="text-align: left;">
அந்தக் கால பெரியவர்கள் சிலாகிக்கின்றனர்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
கவிஞர்கள் வரிசையில் வடக்குதெரு மர்ஹூம் ஆபிதீன், அதே </div>
<div style="text-align: left;">
தெருவை சேர்ந்த இந்நாள் கவிஞர் அன்வர் மற்றும் அலிஹுசைன், முருகேசன் ஆகியோர்கள் அடங்குவர். இன்னும் அரசியல், </div>
<div style="text-align: left;">
இலக்கியம், இசை சார்ந்தவர்களும் நிறைய பேர் இருந்தாலும், </div>
<div style="text-align: left;">
தன்னடக்கம் காரணமாகவும், எனக்கு அவர்களின் பெயர்கள்<br />
தெரியாததாலும், வாளா விடுகிறேன். </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
கந்தூரி கொடியேற்றம், சந்தனக் கூடு, கச்சேரிகள் எந்த ஊரில் </div>
<div style="text-align: left;">
நடந்தாலும் இவர்கள் கூடினால் தான் கலைக்கட்டும் என்று </div>
<div style="text-align: left;">
சொல்வார்கள். அந்தக் காலத்தில் வில்வண்டியைக் கட்டிக் கொண்டு, கழுத்தில் மப்ளரை சுற்றிக் கொண்டு, டார்ச் லைட் சகிதம் ஒரு </div>
<div style="text-align: left;">
குரூப்பே செல்வார்களாம். சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்ப கார், </div>
<div style="text-align: left;">
பைக் எடுத்துக் கொண்டு போய் அதகளம் பண்ணுகிறார்கள் போல!</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
பேச்சு வழக்கு என்று எடுத்துக் கொண்டால், வாலே, போலே, </div>
<div style="text-align: left;">
சொல்லுதியலா, போனியலா போன்றவை நம் திருநெல்வேலி<br />
சொல்லாடலை நினைவு படுத்தும். மற்றபடி நாகூரின் வாங்கனி, <br />
போங்கனி, இக்கிது, பிக்கிது பாஷையை இவை அடிச்சுக்க முடியா-<br />
தென்பேன்!</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
முன்பு இங்கிருந்த கீற்று சினிமா தியேட்டரை ஊரின் நிர்வாகம் </div>
<div style="text-align: left;">
அப்புறப் படுத்திவிட்டது. கடைசி படம் நாடோடிமன்னன் என்கிறார்-</div>
<div style="text-align: left;">
கள். மற்றபடி பொழுதுபோக்கு என்று எடுத்துக் கொண்டால் பக்கத்தி-</div>
<div style="text-align: left;">
லுள்ள நாகூர் காரைக்கால் தான் சென்றாகணும். இங்கே தான் </div>
<div style="text-align: left;">
சினிமா தியேட்டர், காலார நடக்க கடற்கரை இன்னபிற உயர்வகை ஹோட்டல்கள் அமைந்திருக்கின்றன. கடற்கரைகளில் வியாழன், </div>
<div style="text-align: left;">
வெள்ளிக் கிழமைகளில் நாகூரிலும், ஞாயிற்றுக் கிழமையில் காரைக்காலிலும் கூட்டம் அலையோடு அலைமோதும். </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
மனதுக்கு நிறைவான அமைதி தரும் இந்த ஊரைப் பற்றி </div>
<div style="text-align: left;">
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். பதிவின் விரிவஞ்சி </div>
<div style="text-align: left;">
இத்தோடு முடிக்கிறேன். பிறகு வேறொருப் பதிவில் மற்றவை<br />
களை பதிவிடுகிறேன். </div>
<div style="text-align: left;">
<br /></div>
</div>
எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com57tag:blogger.com,1999:blog-64303816644538849.post-56649385151771968682011-06-07T10:42:00.005+03:002012-02-06T16:38:29.557+03:00உடல் பருமனை குறைக்க என்ன செய்யலாம்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
</div>
<div style="text-align: left;">
</div>
<div style="text-align: left;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgScBYF3rKAOXmMfxI8jhi8xyOhHxc4SGM0_Qe0CyZWtYEAA9ujLaOd1zPxwm2tb0CIsGemb5eLQU7Vh35YfH7wO4rNAdtGO9Vxru_bGuqrt4iC5ZUUzPurb6wLVt-3VUsOy4uvIJelgg/s1600/400441_288616434520389_100001161044568_777808_951898679_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" sda="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgScBYF3rKAOXmMfxI8jhi8xyOhHxc4SGM0_Qe0CyZWtYEAA9ujLaOd1zPxwm2tb0CIsGemb5eLQU7Vh35YfH7wO4rNAdtGO9Vxru_bGuqrt4iC5ZUUzPurb6wLVt-3VUsOy4uvIJelgg/s320/400441_288616434520389_100001161044568_777808_951898679_n.jpg" width="320" /></a></div>
<br />
<span style="background-color: yellow; color: blue;"><u><strong><span style="background-color: yellow; color: blue;">உடல் பருமனை குறைக்க என்ன செய்யலாம்</span></strong><strong>?</strong></u> </span></div>
<div style="text-align: left;">
</div>
<div style="text-align: left;">
<br />
எப்படி எல்லாம் பாடுபட்டு வளர்த்த உடம்பை இப்படி பாடுபட்டு <br />
எழுதி குறைக்க வழி சொல்லவேண்டியதா இருக்கு!! அவ்வ்வ்வ்.!!! </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
நாம் பயன்படுத்தும் துணிகளின் அளவு ஆண்களின் இடுப்பளவு </div>
<div style="text-align: left;">
முப்பத்தி எட்டு இன்சுக்குக் குறைவாகவும், பெண்களின் இடுப்பளவு முப்பத்தி ரெண்டு இன்சுக்குக் குறைவாகவும் இருக்க வேண்டும். </div>
<div style="text-align: left;">
அந்த அளவுக்குள் இருந்தால் தான் ஆரோக்கியம். ஆனால் <br />
இன்றைக்கு எக்ஸ்ட்ரா லார்ஜ், டபுள் எக்ஸ்ட்ரா லார்ஜ், ட்ரிபிள் <br />
எக்ஸ்ட்ரா லார்ஜ் என கணக்கில்லாமல் போய்க் கொண்டிருக்கி-<br />
றோம். இதெல்லாம் நோயில் கொண்டு போய்தான் முடியும். உடல் <br />
எடை அதிகரிப்பால் மூட்டுவலி, இடுப்பு வலி இன்னபிற வியாதிகள் <br />
நம் சொந்தமாகிப் போகும். </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
நம்மில் பெரும்பாலானவர்கள் திருமணம் ஆகும் வரை ஒல்லியாக இருப்பார்கள். திருமணம் முடிந்ததும் குண்டாகி விடுவார்கள். </div>
<div style="text-align: left;">
இதற்கு 'மனைவி வந்த பூரிப்பு!'. 'வீட்டு சாப்பாடு' என்றெல்லாம் </div>
<div style="text-align: left;">
நமக்கு நாமே சொல்லும் சமாதான காரணங்கள். வயிறு கெட்டு</div>
<div style="text-align: left;">
விடும் என்று பார்த்துப் பார்த்து சாப்பிட்டவர்கள் அதிக அளவு </div>
<div style="text-align: left;">
உண்பார்கள். இது தான் உடல் பருமனுக்கு முக்கிய காரணம். </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<span style="color: #45818e;"><strong><u>சென்டர் ஒபிசிட்டி: </u></strong></span></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
கால்கள் கைகள் மார்பு பகுதி எல்லாம் சின்னதாக இருக்கும். வயிறும் பின்பக்கமும் வீங்கி பெருத்திருக்கும். இதற்கு ‘சென்டர் ஒபிசிட்டி’ என்று பெயர். நம் ஊரில் இப்படிப் பட்டவர்கள் எக்கச்சக்கமாக இருக்கிறார்கள். சமையல் எண்ணெய் ஒருமுறைக்கு மேல் பயன்படுத்துவது. அளவில்- லாமல் கண்டபடி சாப்பிடுவது, ஸ்டைலுக்காக சிகரெட், நண்பர்களோடு பார்டி என்கிற பெயரில் பீர் என்கிற பழக்கத்தை எல்லாம் விட்டுவிட வேண்டும். </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<u><strong><span style="color: #cc0000;">உணவுக் கட்டுப்பாடென்பது:</span></strong></u> </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
அறவே சாப்பிடாமல் வயிற்றை/வாயைக் கட்டுவதென்பதல்ல. மூன்றுவேளை சாப்பாட்டை ஐந்து வேலையாகப் பிரித்து மூன்று மணி நேரத்திற்க்கொரு முறை அளவோடு நம் உடலுக்கு ஜீரணமாகக் கூடிய உணவுகளை சாப்பிடனும். நான் ஆபீஸ் போறேன், வெளியே போறேன் அப்படி இப்படி என்ற காரண மெல்லாம் ரிஜெக்டெட். நம் உடம்புக்குத் தானே நாம் செய்கிறோம் என்ற அக்கறை மனசில் வேணும். சாப்பிடும் ஒவ்வொரு பொருளிலும் கலோரி, புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு எல்லாம் எவ்வளவு இருக்கு என்று கால்குலேட் பண்ணியே சாப்பிடுங்க. ஒருதடவை உங்கள் அருகிலுள்ள டயடீசியனை அவசியம் கன்சல்ட் செய்துக் கொள்ளுங்க! பிரச்சினைகள் ஏதுமிருக்காது. </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
உடலுக்கு எல்லாவித சத்துக்களும் பேலன்ஸ்டா சேர்வது மாதிரி சாப்பிடுவது தான் நல்ல வழி. அதனால் சத்தான சாப்பாட்டை <br />
எப்பவுமே மிஸ் பண்ணிடாதீங்க. சாப்பாட்டு நேரத்தை அடிக்கடி <br />
மாற்றிக் கொண்டே இருப்பது நம் உடம்பை ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணும். எந்த நேரத்துக்கு என்ன சாப்பாடுன்னு பட்டியல் போட்டு <br />
வெச்சு அதை ஸ்ட்ரிக்ட்டா கடைப் பிடிக்கணும். சத்தான உணவு <br />
சரியான நேரம் இது தான் டயட் சீக்ரட். </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<u><span style="color: #741b47;">நாம் வாழும் முறை உண்மையிலேயே சரியானதாக ஆரோக்கிய </span></u></div>
<div style="text-align: left;">
<u><span style="color: #741b47;">மானதாக இருக்கிறதா? </span></u></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
இது நம்மை நாமே கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி. இதயம் </div>
<div style="text-align: left;">
சம்பத்தப் பட்ட நோய்களுக்கு பிளட் பிரஷர் + டயாபடிஸ் முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. சுகர் நோய் பரம்பரையாகத் <br />
தொடரக் கூடியது என்றாலும் பலபேர் இந்த வகை நோய்களை <br />
கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளாமல் கடைசிவரை <br />
அலட்சியமாகவே இருக்கிறோம். (ஏதோ சொந்த பந்ததை விட்டுப் <br />
பிரிந்து விடுவோமோ என்ற ஏக்கம் போல!)</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
அதே சமயம் டீன் ஏஜில் இருந்தே நம் லைஃப் ஸ்டைலை <br />
முறைப் படுத்திக் கொள்ளவேண்டும். </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
எப்படி? இது நல்ல கேள்வி? </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
ஆண்டுக்கு ஒருமுறை இதய நோய்களுக்குக் காரணமான BP + சுகர் பரிசோதனைகளைச் செய்து விடுங்கள். ஆறுமணி நேரமோ எட்டு </div>
<div style="text-align: left;">
மணி நேரத்திற்கு மிகாமலோ தூக்கமும், நாற்பது நிமிடத்திலிருந்து அறுபதே அறுபது நிமிடநேர உடற்பயிற்சியுடன் கூடிய நடை<br />
பயிற்சி அயற்ச்சியில்லா தேக ஆரோக்கியத்தைத் தந்து உடல் <br />
எடையை கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்கும். "இதற்கெல்லாம் <br />
எங்கே சார் நேரம் இருக்கு?" என்று டேக்கா கொடுக்க <br />
நினைக்காதீங்க!! </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
நீங்கள் நிச்சயமாய் ஆபீசுக்கோ மற்ற எந்த வேலைகளுக்காகவோ வெளியே தெருவே சென்று வருபவர்களாகத் தானிருப்பீர்கள். பஸ் </div>
<div style="text-align: left;">
வேன் ஆட்டோவில் செல்பவர்களானால் இறங்க வேண்டிய </div>
<div style="text-align: left;">
இடத்துக்கு இரண்டு கிலோ மீட்டரோ, அல்லது ஒரு கிலோ </div>
<div style="text-align: left;">
மீட்டருக்கு (உங்களால் நடந்து வரக் கூடிய அளவுள்ள தூரத்துக்கு) முன்பாகவே இறங்கி நடந்தே ஆபீசுக்கோ மற்ற எந்த வேலை களுக்காகவோ போங்களேன். டூ வீலர் வைத்திருப்பவர்கள் நடந்து </div>
<div style="text-align: left;">
போகிற தூரத்திற்கு நடந்தே போகலாமே! </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
ஆபீஸ் ரெண்டாவது மூன்றாவது மாடியிலோ இருக்கிறதா? அதற்காக பெருமூச்சு விடாதீர்கள்.மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு படிகளில் ஏறி இறங்குங்கள். டயர்டாக இருக்கிறதா? அதற்காகத் தான் மேலே சொன்ன சத்தான சாப்பாடு. இப்போது புரிந்திருக்குமே! </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
சார் உங்களால் மேலே சொன்ன எதையுமே செய்ய முடியா <br />
விட்டால் தினமும் இருபது நிமிடம் நீச்சல், அல்லது முப்பது <br />
நிமிட சைக்கிளிங் அல்லது நாற்பது நிமிட வாக்கிங்...இதில் ஏதாவதொன்றை வாரத்தில் ஐந்து நாட்கள் செய்யப் பழகினாலே <br />
போதும். </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
ரிமோட் உங்களின் எதிரி! எழுந்து போய் சேனலை மாற்றப் <br />
பழகுங்கள். ரிமோட் பேட்டரியை கழற்றி விட்டால் உங்கள் <br />
குடும்பத்துக்கே நல்லது செய்தவர்கள் ஆவீர்கள்!</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
இறுதியாக-</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
இதய நோய்கள் காஸ்ட்லி நோய்கள். இவற்றுக்கு அளிக்கப்படுகின்ற சிகிச்சைகளும் காஸ்ட்லி வைத்தியம் தான். இவற்றை அருகிலேயே சேர்க்காமல் தடுக்கின்ற இலவச மருந்துகள் தான் மேலே சொன்ன </div>
<div style="text-align: left;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;">
பழக்க வழக்கங்கள். இதை புரிந்துகொண்டாலே போதும்! நஹீன்னா, </div>
</div>
<div style="text-align: left;">
<div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;">
போங்க சார் உங்க கூட டூ... !!</div>
<div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;">
<br /></div>
</div>
<div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidTMiSchqbwc9iDTFRFKML-256Gm1dszl-4IqjBohyZffdtSsPUK5ZISeNE-aqWtanGlroNsk-j8NxygLJYMhqZmQ4AHlc2MgxsKwLLZDtFcZnkKsTMyHweRX2PRKqWH5DNGrbV3jLHQ/s1600/6ANCASH8UKHCAH7OUIJCAPRE7B6CAKV36MXCAAEPM7ECA3TMIFQCA5UH8WNCA8GC1LZCAYJDT4FCARHNPT0CAF0R18ZCAP0T5L5CAAA0CM5CA6VGOBLCAX55RXJCAPK421YCA3JX1JKCACHIT1D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidTMiSchqbwc9iDTFRFKML-256Gm1dszl-4IqjBohyZffdtSsPUK5ZISeNE-aqWtanGlroNsk-j8NxygLJYMhqZmQ4AHlc2MgxsKwLLZDtFcZnkKsTMyHweRX2PRKqWH5DNGrbV3jLHQ/s1600/6ANCASH8UKHCAH7OUIJCAPRE7B6CAKV36MXCAAEPM7ECA3TMIFQCA5UH8WNCA8GC1LZCAYJDT4FCARHNPT0CAF0R18ZCAP0T5L5CAAA0CM5CA6VGOBLCAX55RXJCAPK421YCA3JX1JKCACHIT1D.jpg" t8="true" /></a></div>
<div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; text-align: left;">
<br /></div>
</div>எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com25tag:blogger.com,1999:blog-64303816644538849.post-82332220630141973682011-05-31T13:10:00.000+03:002011-05-31T13:10:39.717+03:00உங்களை நீங்களே தயார்ப் படுத்திக் கொள்ளுங்கள்!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: left;"></div><div style="text-align: left;"></div><div style="text-align: left;"></div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><span style="background-color: yellow; color: blue; font-size: large;"><u>உங்களின் இலட்சியம் என்ன?</u></span></div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">நீங்கள் எப்போது மரணிப்பீர்கள் என்று உங்களால் கூற முடியுமா? நிச்சயமாக உங்களால் முடியாது! அடுத்த ஆண்டு மரணிக்கலாம்; </div><div style="text-align: left;">அடுத்த மாதம் அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த நிமிடம்</div><div style="text-align: left;">கூட நீங்கள் மரணிக்கலாம். ஆகவே அதற்குமுன்...</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">உங்கள் வாழ்வில் நீங்கள் என்ன அடைந்தீர்கள்? உங்களின் கனவு </div><div style="text-align: left;">மற்றும் இலட்சியம் என்ன?</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் போட்டுள்ள பெரிய பெரிய </div><div style="text-align: left;">திட்டங்கள் என்ன? </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">உங்கள் மரணத்துக்குப் பின் நீங்கள் எப்படி நினைவு கொள்ளப் </div><div style="text-align: left;">படுவீர்கள்? ஒரு மனிதனைப் பொருத்தவரை பிறந்தோம்; </div><div style="text-align: left;">வாழ்ந்தோம்; மரணித்தோம் என்ற வகையில் இவ்வுலகில் வாழ </div><div style="text-align: left;">முடியாது! அவ்வாறு எவ்வித இலட்சியமோ அதை அடைய </div><div style="text-align: left;">முயற்சியோ இல்லாத வாழ்க்கை என்பது வீணானதுதான்! </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">மரணத்துக்குப் பின் என்ன? என்பதைக் குறித்துத் திட்டமிட்ட </div><div style="text-align: left;">வாழ்வை எதிர்நோக்குவோர் மட்டுமே இவ்வுலகத்தின் முக்கியத்-</div><div style="text-align: left;">துவத்தை உணர முடியும். அவ்வாறான ஒரு திட்டமிடலோடு வாழ்பவர்களால் மட்டுமே இலட்சியத்தை அடைய முடியும். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">இவ்வுலகில் வாழ்பவர்கள், அவர்களின் இலட்சியமான </div><div style="text-align: left;">சுவர்க்கத்தை அடையவும் மரணத்திற்குப்பின் நினைவு </div><div style="text-align: left;">கூறப்படவும் எளிதான வழி உள்ளது. அதற்கு ஒவ்வொருவரும் </div><div style="text-align: left;">தம் மரணத்திற்கு முன் கீழ்க் காணும் 10 விஷயங்களைச் செய்து </div><div style="text-align: left;">முடித்து விட்டால் போதும். தயாரா நீங்கள் ??</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><span style="color: blue;"><strong><u>1. கனவை நனவாக்குங்கள்</u></strong></span> </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">நல்லவற்றுள் எதையாவது நீங்கள் செய்ய விரும்புகின்றீர்கள் </div><div style="text-align: left;">எனில், அதனைப் பின்னர் என்று தள்ளிப்போடாமல் உடனே </div><div style="text-align: left;">செய்யத்துவங்குங்கள். சீனப்பெருஞ் சுவரை நடந்து கடக்க </div><div style="text-align: left;">வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?, பட்டதாரி ஆக வேண்டும் </div><div style="text-align: left;">என்று விரும்புகின்றீர்களா?, டாக்டரேட் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்பு-</div><div style="text-align: left;">கின்றீர்களா? கலெக்டராக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? </div><div style="text-align: left;">புத்தகம் ஒன்று எழுத வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? சீன, ஜப்பானிய, அரபி மொழிகளைக் கற்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? எதுவாக இருந்தாலும் உடன் செயல்பாட்டில் இறங்குங்கள். ஒருபோதும் வாழ்வில் செய்யத் துடிக்கும் நல்ல விஷயங்களைத் தள்ளிப் போடாதீர்கள். கனவை நனவாக்குங்கள்! </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><span style="color: #274e13;"><strong><u>2. உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள்</u></strong></span> </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">படித்து முடித்ததும் வேலையில் சேர்ந்து சம்பாதிப்பதன் மூலம் </div><div style="text-align: left;">உங்கள் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறை</div><div style="text-align: left;">வேற்றுங்கள். அதுபோக உங்கள் சொந்தங்களில் உள்ள </div><div style="text-align: left;">ஏழ்மையான குடும்பத்தில் படிப்பதற்கு செலவழிக்க முடியாதவர்</div><div style="text-align: left;">களுக்கு உங்களால் ஆனா உதவிகளை செய்யுங்கள். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><span style="color: purple;"><u><strong>3. பெற்றோர்களை மகிழ்வியுங்கள்!</strong></u></span> </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">நம் பெற்றோர்களே நமக்கு எல்லாம்! நமது மரியாதைக்கும் </div><div style="text-align: left;">அன்புக்கும் கீழ்படிதலுக்கும் அவர்கள் உரித்தானவர்கள். </div><div style="text-align: left;">அவர்களுடன் தினசரி குறிப்பிட்ட நேரத்தைச் செலவழிக்க </div><div style="text-align: left;">முயலுங்கள். அவர்களுக்குப் பெருமை சேர்க்க முயலுங்கள்; </div><div style="text-align: left;">ஒருபோதும் அவர்களின் மனதை வேதனைப்படுத்தி விடாதீர்கள். </div><div style="text-align: left;">ஒன்றை எப்போதும் நினைவில் வையுங்கள்: "பெற்றோர்களை </div><div style="text-align: left;">நாம் மகிழ்ச்சியாக வைத்திருந்தால் இறைவனும் நம்மை </div><div style="text-align: left;">மகிழ்ச்சியாக வைத்திருப்பான். பெற்றோர்கள் நம் மீது </div><div style="text-align: left;">கோபமாக இருந்தால், இறைவனும் நம் மீது கோபமாகவே </div><div style="text-align: left;">இருப்பான்" என்று என்று எல்லா மதங்களும் நமக்கு போதிக்கிறது. </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">ஆகவே, அவர்கள் மரணிக்கும்முன், அவர்களுக்குப் பெருமை </div><div style="text-align: left;">சேர்ப்பதோடு அவர்களை மகிழ்வாகவும் வைத்திருங்கள். </div><div style="text-align: left;">அவர்களின் மரணத்திற்குப்பின் அவர்களை நினைவுகூருங்கள்; அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள்; அவர்களின் இலட்சியம் </div><div style="text-align: left;">அல்லது நிறைவேற்ற நினைத்து அவர்களால் முடியாமலாகி </div><div style="text-align: left;">விட்ட கடமைகள் ஏதாவது இருப்பின் அதனை நிறைவேற்றுங்கள். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><u><span style="background-color: white; color: red;"><strong>4. உலகைப் பாருங்கள்</strong></span></u> </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">நீங்கள் இருக்கும் இருப்பிடத்தில் மட்டுமே உலகைக் காண்பதாக </div><div style="text-align: left;">இதற்கு அர்த்தம் கொடுக்காதீர்கள். இறைவனின் அற்புதமான படைப்புகளைக் கூர்ந்து கவனியுங்கள். இயன்றால் உலகிலுள்ள </div><div style="text-align: left;">ஏழு அதிசயங்கள், இன்னும் காணக் கிடைக்காத அரியபல </div><div style="text-align: left;">விஷயங்கள் பொதிந்துள்ள வரலாற்றை எடுத்தியம்பும் நாடுகளை </div><div style="text-align: left;">வலம் வாருங்கள். குறைந்தபட்சம் உங்களைச் சுற்றியுள்ள கிராம, நகரங்களையாவது வலம் வாருங்கள். நிச்சயமாக, அது உங்களுக்கு </div><div style="text-align: left;">ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருப்பதோடு, இறைவனின் படைப்புகளையும் அதில் உங்களின் பங்கையும் குறித்து உங்களுக்கு விளக்கித் தரும். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><span style="color: magenta;"><strong><u>5 வாழ்க்கையைப் படியுங்கள்; அதற்கு உயிர் கொடுங்கள்! </u></strong></span></div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">இந்த உலகில் நீங்கள் பிறந்ததற்கான காரணத்தையும் பிறப்பின் </div><div style="text-align: left;">பயனை அடைவதற்கான வழிகளையும் அறிந்து கொள்ளாமல் </div><div style="text-align: left;">நீங்கள் இந்த உலகத்தை விட்டுப் போய்விடக் கூடாது. அது பின்னர் உங்களுக்கே பேரிழப்பாக முடியும். ஆகவே வாழ்க்கையை </div><div style="text-align: left;">படியுங்கள். அதன் அடிப்படைகளை அர்த்தத்துடன் படியுங்கள். </div><div style="text-align: left;">வாழ்ந்து மறைந்த பெரிய மனிதர்களின் வாழ்வைப் படியுங்கள். </div><div style="text-align: left;">நாம் இந்த பூமியில் படைக்கப் பட்டிருப்பதற்கான அர்த்தம் </div><div style="text-align: left;">என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்களா? </div><div style="text-align: left;">என்பதை உறுதிப் படுத்துங்கள். அதனை உங்கள் தினசரி வாழ்வில் நடைமுறைப் படுத்துங்கள். இது ஒன்று மட்டுமே உங்களுக்கு இவ்வுலகிலும் பாதுகாப்பாக இருக்கும். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><u><span style="color: blue;"><strong>6. திருப்பிக் கொடுங்கள்</strong></span></u> </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">ஏதாவது வித்தியாசமானதாகவும் அற்புதமானதாகவும் செய்ய </div><div style="text-align: left;">முயற்சி செய்யுங்கள். ஒரு அனாதையின் வாழ்வாதாரத்துக்கு </div><div style="text-align: left;">உதவுதல், ஒரு மரத்தை நட்டு வளர்த்தல், ஏழைகளுக்கு உதவி </div><div style="text-align: left;">செய்ய ஃபண்ட் ஒன்று துவங்குதல், ஏழைகளுக்கு உணவளித்தல், தேவையில் இருப்போருக்கு இரத்தம் வழங்குதல், குழந்தை-</div><div style="text-align: left;">களுக்கும் முதியவர்களுக்கும் கற்றுக் கொடுத்தல், யாருடைய பிரச்சனைகளையாவது தீர்த்து வைத்தல், லைப்ரரி ஒன்று </div><div style="text-align: left;">உருவாக்குதல், வசதியற்ற மாணாக்கருக்குக் கல்வி கற்க </div><div style="text-align: left;">ஏற்பாடு செய்தல், வட்டியின்றித் தேவையுடையோருக்குக் </div><div style="text-align: left;">கடனுதவி செய்யக் குழு ஏற்படுத்துதல், சுற்றுப் புறத்தைத் </div><div style="text-align: left;">தூய்மையாக வைக்கப் பயிற்சியளித்தல், குடிநீர் இல்லாத </div><div style="text-align: left;">வீடுகளுக்குக் குடிநீர் கிடைக்க வசதி ஏற்படுத்துதல்..... </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">இப்படி எதையாவது நீங்கள் மரணிக்கும் முன்னர் இவ்வுலகுக்குத் </div><div style="text-align: left;">திருப்பிக் கொடுத்து விட்டுச் செல்லுங்கள். உங்களின் மரணத்துக்குப் பின்னர் நீங்கள் இவ்வுலகில் நேர்மறையாக நினைவு கூறப் </div><div style="text-align: left;">படுவதற்கு இது உதவும். உங்களின் நற்செயல்கள் இவ்வுலகில் </div><div style="text-align: left;">எத்தனை காலத்திற்கு நிலைநிற்கின்றதோ அத்தனை காலம்வரை </div><div style="text-align: left;">நினைவு கூறப்பட்டுக் கொண்டே இருக்கும். உங்களின் சுயநலமற்ற செயல்பாடுகள் நாளை வரும் தலைமுறையினருக்கு பயனுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><span style="color: orange;"><strong><u>7. திருமணம்</u></strong></span> </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">இது எல்லா மதங்களிலும் வரையறுத்து கூறப்பட்ட ஒரு </div><div style="text-align: left;">தீர்மானமாகும். உங்களின் கனவுகளையும் இலட்சியங்களையும் உயிர்கொடுக்க தோள்கொடுக்கத் தயாராகுபவரோடு அவற்றைப் </div><div style="text-align: left;">பகிர்ந்து கொள்ளுங்கள். அவரைத் திருமணம் புரிந்து குழந்தை-</div><div style="text-align: left;">களைப் பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுக்குப் பெருமை </div><div style="text-align: left;">சேர்ப்பதோடு, நல்ல குழந்தைகளாக வளர்த்தால் அதற்காகவும் </div><div style="text-align: left;">நீங்கள் நன்மை வழங்கப் படுவீர்கள். உங்களின் மரபுவழி </div><div style="text-align: left;">நன்மைகளை வாழ வைப்பவர்களாகவும் தங்கள் நம்பிக்கையைச் செயல்படுத்துபவர்- களாகவும் மனிதாபிமானத்தோடு இறைவனின் படைப்புகளைக்காணும் நல்ல மக்களாகவும் அவர்களை </div><div style="text-align: left;">வளர்த்தெடுப்பது உங்களின் இலட்சியமாக இருக்கட்டும். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><span style="color: purple;"><u><strong>8. மன்னிப்பு கேளுங்கள்</strong></u></span> </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">உங்கள் வாழ்வில் நீங்கள் செய்த தவறுகளை நினைவு கூர்ந்து, </div><div style="text-align: left;">உங்களைப் படைத்தவன் முன்னிலையில் சிரம்பணியுங்கள். </div><div style="text-align: left;">ஒவ்வொரு இரவிலும் படுக்கைக்குச் செல்லும் முன், உங்கள் </div><div style="text-align: left;">தவறுகளை நினைத்து மனம் வருந்தி மன்னிப்புக் கேளுங்கள். </div><div style="text-align: left;">நீங்கள் யாருடைய மனதையாவது வேதனைப் படுத்தியுள்ளீர்களா? மக்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட நீங்கள் காரணமாக இருந்துள்ளீர்களா? யாருக்காவது தவறு இழைத்துள்ளீர்களா? இன்றே அதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">நினைவில் வையுங்கள்: நீங்கள் தவறிழைத்தவர்கள் உங்களை மன்னிக்கும்வரை, இறைவன் உங்களை மன்னிப்பதில்லை! </div><div style="text-align: left;">வருத்தங்களைப் பொறுத்துக் கொள்ளப் பழகுங்கள். முன்னர் உங்கள் வாழ்வில் மற்றவர்களால் உங்களுக்கு நடந்த தவறுகளையும் </div><div style="text-align: left;">மீட்டிப் பார்த்து அவற்றைப் பொறுத்துக் கொள்ளுங்கள். இறைவன் உங்களின் பாவங்களை மன்னிக்க வேண்டுமெனில், </div><div style="text-align: left;">நீங்கள் மற்றவர்களின் தவறுகளையும் மன்னிக்க வேண்டும் </div><div style="text-align: left;">என்பதை நினைவில் நிறுத்துங்கள். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><span style="color: red;"><strong><u>9. கடன்களை அடையுங்கள்</u></strong></span> </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">நீங்கள் கடனாளி எனில், அது எத்துணைப் பெரிதாக இருந்தாலும் </div><div style="text-align: left;">சிறிதாக இருந்தாலும் அவற்றைத் திருப்பிக் கொடுக்க இப்போதே திட்டமிடுங்கள். ஒரு நிமிடமும் இதற்காகத் தாமதிக்க வேண்டாம்! </div><div style="text-align: left;">கடன் என்பது ஒரு வலி; அது ஒரு சுமையும் கூட! அதனை நிறை- வேற்றவில்லையேல் அதற்காக மிகப்பெரிய பலனைத் திருப்பிக் </div><div style="text-align: left;">கொடுக்க வேண்டியிருக்கும். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><span style="color: magenta;"><u><strong>10. முன்னுதாரண மனிதராகுங்கள்</strong></u></span> </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">ஆமாம்! உங்கள் குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு, உறவினர்-</div><div style="text-align: left;">களுக்கு, என அனைவருக்குமாக நீங்கள் நல்ல குணங்களுக்குச் சொந்தகாரரான ஒரு முன்னுதாரண மனிதராகுங்கள். அனைவரும் மரியாதையுடன் பார்க்கும் படியான மனிதராகுங்கள். மனிதர்கள் </div><div style="text-align: left;">தங்களின் தேவைகளுக்காக உங்கள் பக்கம் திரும்ப வைக்கும்-</div><div style="text-align: left;">படியான நல்ல மனிதராகுங்கள். உங்கள் மரணத்துக்குப் பின்னரும் </div><div style="text-align: left;">நல்ல காரணத்திற்காக நீண்ட காலம் மக்கள் நினைவு</div><div>கூறும்படியான நற்பண்புகளுக்குச் சொந்தக்காரராக மாறுங்கள். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">இந்தப் பத்து விஷயங்களையும் உங்கள் மரணத்துக்கு முன் செயல்படுத்துங்கள். இவ்வுலக வாழ்க்கை என்பது மிகக் குறுகியது; </div><div style="text-align: left;">எனவே இவற்றை உடனடியாகச் செயல்படுத்த ஆரம்பியுங்கள். </div><div style="text-align: left;">நேரத்தை ஒருபோதும் வீணாக்காதீர்கள். செய்யும் செயலை அர்த்தமுள்ளதாகவும் ஒருபோதும் வருத்தப்படுத்தாததாகவும் </div><div style="text-align: left;">செய்யுங்கள். மிக முக்கியமாக, உங்கள் செயல்களை இவ்வுலகிலும் </div><div style="text-align: left;">மறு உலகிலும் ஒன்று போல் வெற்றிக்குரியனவாகத் தேர்ந்து செய்யுங்கள். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">எனவே, வெற்றிக்கான இந்தப் படிகளை உங்கள் மரணத்துக்கு </div><div style="text-align: left;">முன்னர் செயல்படுத்த இப்போது உங்கள் முறை! இவற்றை </div><div style="text-align: left;">இன்றே, இப்போதே ஆரம்பித்து வெற்றியாளர்களாகத் திகழுங்கள். </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">(நன்றி : Therevival.co.uk என்ற ஆங்கிலத் தளத்தில் வெளிவந்த </div><div style="text-align: left;">"Ten Things To Do Before You Die" என்ற கட்டுரையின் தமிழாக்கம்.) </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"></div></div>எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-64303816644538849.post-64468798866442251182011-05-23T18:21:00.003+03:002011-05-23T23:10:17.088+03:00உணவில் கலக்கும் விஷ(ய)ம்..!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsWFcBenPlKi1vJqplVnTisZENwQdL0zOfW_bQ7JNYROQhH9FoeNu_Qzgr5wxe2CuAyAE5rFkNTxyLQ_l2X46CD_Z45TsQWD_1p1YjIz2isCkYMHiQ1P_liw2BHtSgg88zTIfwIyit9g/s1600/shuhaib-metal.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" l6="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsWFcBenPlKi1vJqplVnTisZENwQdL0zOfW_bQ7JNYROQhH9FoeNu_Qzgr5wxe2CuAyAE5rFkNTxyLQ_l2X46CD_Z45TsQWD_1p1YjIz2isCkYMHiQ1P_liw2BHtSgg88zTIfwIyit9g/s1600/shuhaib-metal.jpg" /></a></div>வலைப்பூவில் படிப்பதற்க்கென்றே வலம் வரும் நமக்கு, நிறைய செய்திகளும், கட்டுரைகளும் படிக்கப் படாமலேயே போகின்றன. <br />
'சுஹைப்' உடைய இந்த பூச்சரத்தில் உங்களுக்கு படிக்கப் பிடிக்காதது என்று எதுவுமே இல்லாமல் போகலாம். <br />
<br />
<span style="background-color: yellow; color: blue;"><span style="font-size: large;"><u>உணவில் கலக்கும் <span style="background-color: yellow; color: blue;"><strong>விஷ(ய)ம்</strong></span>..!!</u></span></span><br />
<br />
பள்ளிகள் கல்லூரிகளில் உள்ள வேதியல் ஆய்வுக்கூடங்கள் பார்த்திருப்பீர்களே! அது போலத்தான் இன்றைய நவீன சமைய-<br />
லறைகள் மாறி விட்டன. இயற்கை உணவுகளை கொஞ்சம் <br />
கொஞ்சமாக மறந்து விட்டோம். <br />
<br />
சூப்பர் மார்கெட் ஷெல்ஃப்களில் குவிந்து கிடக்கும் உணவுப்<br />
பொருட்கள் எல்லாவற்றிலும் சுவைக்காவும், நிறத்திற்காகவும், <br />
கெடாமல் வைத்திருக்கவும் பலவித ஆபத்தான இரசாயணப் <br />
பொருட்கள் சேர்க்கப்படுகிறது. <br />
<br />
இது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் விளம்பரங்கள் <br />
சொல்லும் பச்சைப் பொய்களின் கவர்ச்சியில் மயங்கி வாய்க்குள் <br />
அள்ளித் திணித்து கொள்கிறோம். <br />
<br />
உணவுப்பொருட்களில் உண்டான வியாபாரப் போட்டியின் <br />
விளைவு இன்றைக்கு 100% தரமான இயற்கையான உணவு <br />
உண்பது என்பது குதிரைக் கொம்பு தான்.<br />
<br />
உணவில் சுவை கூட்டும் ரசாயனப்பொருட்களில் எந்த <br />
விதமான ஊட்டசத்தும் இல்லை. இவைதேவையற்றது, ஊட்ட <br />
சத்து சேர்க்கப்பட்டவை என கூறப்படும் உணவும் உண்மையில் <br />
பல இயற்கையான ஊட்டச் சத்துகள் நீக்கப்பட்டு சில ரசாயணங்கள் சேர்க்கப்பட்டது தான். பல உணவுப்பொருட்களில் இயற்கையான பொருட்களுக்கு பதில் அது போன்ற சுவை தரும் செயற்கையான சுவையூட்டிகள் மட்டுமே உள்ளன.<br />
<br />
வெனிலா கலக்கப்படும் உணவு வகைகளில் பேன்களைக் கொல்ல <br />
பயன் படுத்தப்படும் 'பைப்பர் ஹோல்' என்ற இராசயனப் பொருள் சேர்க்கப்படுகிறது.<br />
<br />
டின்களில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட பழங்களில் <br />
துணிகளையும் தோல்களையும் கழுவப் பயன்படுத்தப்படும் <br />
பென்சி அஸிடெட், எதில் அசிடெட், அமில் அசிடெட் முதலியன சேர்க்கப்படுகின்றன. இது உடலுக்கு அதிகம் கேடானது.<br />
<br />
கடைகளில் கிடைக்கும் பலவகை ஆப்பிள் பழங்களின் தோலை <br />
நகத்தால் சிறிது நெருடிப்பார்த்தால் அதிலிருந்து மெழுகு உதிர்ந்து <br />
வரும். ஆப்பிள் கெடாமல் இருக்க தோலில் மெழுகு தடவி பேக் செய்கிறார்கள். நாம் அதை அப்படியே உண்கிறோம்.<br />
<br />
கேக்குகளில் எண்ணெய் உறையவைக்க சோடியம் அலுமினியம் சேர்க்கப்படுகிறது. இந்த எண்ணெய் உண்பதற்கு ஏற்றது அல்ல. <br />
மாவை வெண்மையாகவும் உப்ப வைக்கவும் பிளீச்சிங் பவுடரும், <br />
பிற பவுடர்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் உடல் <br />
நலத்திற்குத் தீமையே!<br />
<br />
வெண்ணெய் நீக்கப்பட்ட பால் அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக சில பால் நிறுவனங்கள் கலக்கும் ரசாயனப் பொருள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.<br />
<br />
விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்க பல வித ஆபத்தான <br />
ரசாயன பூச்சிக்கொல்லிகள் உபயோகிக்கிறார்கள். இதன் விளைவாக <br />
நாம் உண்ணும் அரிசி, பருப்பு, காய்கறிகளிலும் கேன்சர், மலட்டுத்<br />
தன்மை உருவாக்கும் பூச்சிமருந்து எச்சங்கள் இருக்கின்றன. <br />
பழங்களை பழுக்க வைக்க கூட ரசாயனங்கள் உபயோகிக்கிறார்கள். இயற்கையான பூச்சி ஒழிப்பு முறையில் இயற்கையான உரம் இட்டு வளர்ந்த உணவுப்பொருளே சிறந்தது. இதற்கான திட்டங்களையும் ஊக்குவித்தல்களையும் பயிற்சியையும் அரசு விவசாயிகளுக்கு வழங்கி இயற்கையான உணவு எங்கும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.<br />
<br />
ஜெனெடிக் என்ஜினீயரிங் மூலம் பெறப்படும் புது விதமான உணவுப் பொருட்கள் மனித உடலில் உண்டாக்கும் பாதிப்புகளை <br />
அறிய பல காலமாகலாம். சரியான ஆராய்ச்சி முடிவுகளை அறியாமலேயே அவற்றை சந்தைப் படுத்துவது காசு கொடுத்து <br />
வாங்கி உண்ணும் மக்கள உடலிலேயே உணவுப் பொருள் <br />
தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் சோதனைகளை நிகழ்த்துவதாகிறது.<br />
<br />
பொதுவாக உணவுப்பொருளில் சேர்க்கப்படும் மோசமான <br />
பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய சில பொருட்கள்:<br />
<br />
330 and E330 Citric Acid: இயற்கையான சிட்ரிக் ஆசிட் கெடுதல் <br />
இல்லை. ஆனால் செயற்கையாக தயாரிக்கப்படும் சிட்ரிக் ஆசிடில் <br />
அதன் தயாரிப்பு முறையின் போது அதிலிருந்து Sulfur மற்றும் <br />
Sulfites முழுமையாக நீக்கப்படா விட்டால் ஆஸ்த்மா, அலர்ஜி <br />
உண்டாக வாய்ப்புள்ளது. சிட்ரிக் ஆசிட் கலந்த பானம் அதிகம் <br />
அருந்துவது பற்களுக்கு கேடு. 924 & E924 Potassium Bromate (Agent used<br />
in Bleaching Flour): நரம்பு மண்டலம், சிறுநீரகம், அஜீரணம், மற்றும் <br />
புற்றுநோய்க் காரணி. <br />
<br />
407 & E407 Carrageenan (Thickening & Stabilizing Agent) : இவை ஆஸ்த்மா, <br />
அல்சர், கேன்சர் போன்றவற்றை உருவாக்ககூடும்.<br />
<br />
Sucralose (Splenda): 40%thymus gland ஐ சுருங்கச்செய்வதாக சோதனை <br />
முடிவுகள் சொல்கின்றன. சிறுநீரகம் மற்றும் ஈரல் வீக்கம், மற்றும் <br />
ஈரலில் சுண்ணாம்பு சத்தை படியச்செய்கிறது. உண்ணத்தகுந்ததல்ல. <br />
<br />
கேசரிப் பவுடர் உடல் நலத்திற்கு நல்லதல்ல. வீட்டில் செய்யும் <br />
எந்த உணவிலும் நிறத்திற்காக கேசரிப்பவுடர் அல்லது புஷ் பவுடர் சேர்க்காதீர்கள்.<br />
<br />
குளிர் பானங்கள் மிட்டாய்களில் சேர்க்கப்படும் பல வித <br />
கவர்ச்சியான வண்ணங்கள் புற்று நோய், மூளைக்கட்டி, தைராய்ட், அட்ரீனல் மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.<br />
<br />
சாயங்கள்: 104 & E104 Quinoline Yellow, 107 & E107 Yellow 2G, 110 & <br />
E110 Sunset Yellow, 122 & E122 Azorubine, Carmoisine, 123 & E123 Amaranth, <br />
124 & E124 Ponceau, Brilliant Scarlet, 127 & E127 Erythrosine, E128 Red 2G, <br />
129 & E129 Allura Red AC, E131 Patent Blue, 132 & E132 Indigotine, <br />
இண்டிகோ கார்மினே 133 & E133 ப்ரில்லியன்ட் ப்ளூ 151 & <br />
E151 Activated Vegetable Carbons, Brilliant Black154 Food Brown, Kipper Brown, <br />
Brown FK155 & E155 Chocolate Brown HT, Brown HT போன்ற சாயப் <br />
பொருட்கள் ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆஸ்த்மா, புற்று நோய் உருவாக்ககூடும்.<br />
<br />
120 & E120 Carmines, Cochineal, 142 & E142 Acid Brilliant Green, Green S,, <br />
160b & E160b Bixin, Norbixin, Annatto Extracts 143 Fast Green போன்ற சாயப் <br />
பொருட்கள் ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆஸ்த்மா போன்றவற்றை உருவாக்ககூடும். <br />
<br />
150 & E150 Caramel இது ஹைப்பர் ஆக்டிவிட்டி உருவாக்கும்.<br />
<br />
பென்சோயேட்ஸ் (Benzoates) : பதனீட்டுப் பொருள். ஆஸ்துமா நோய் உள்ளவர்களிடையே நெஞ்சில் இறுக்கமான உணர்வை ஏற்படுத்தும். தொண்டையில் அரிப்பு அல்லது புண் ஏற்படலாம். Butylated <br />
Hydroxyanisole (BHA), Butylated Hydroxytoluene (BHT) : காற்று புகாமலிருக்க பயன்படுத்தப்படும் பொருள்-பொதுவாக குழந்தை உணவுகள் <br />
சுவிங்கம், தாவர எண்ணெய் ஆகியவற்றை கெடாமல் வைத்திருக்-<br />
கிறது். இது கான்சர் காரணி மற்றும் சிலரிடையே தோல் எரிச்சலை ஏற்படுத்தலாம். <br />
<br />
எப்.டி. & சி (FD & C dyes) : வர்ணங்கள்-இது சிலரிடையே அரிப்பை ஏற்படுத்தலாம். குழந்தைகளின் நடத்தையில் மாற்றத்தை <br />
ஏற்படுத்தலாம்.<br />
<br />
Monosodium Glutamate (MSG) : தலைவலி, குமட்டல், வயிற்றுப்போக்கு, <br />
வியர்வை, நெஞ்சில் இறுக்கம், கழுத்துக்குப் பின்னால் எரிச்சல், <br />
ஆஸ்துமா நோயாளிகளிடையே அதிக ஆஸ்துமாவை <br />
ஏற்படுத்தும். குறிப்பாக விளையாட்டு வீரர்கள் திடீரெனெ இதய <br />
நோய் தாக்குதலுக்குள்ளாவதில் இதன் பங்கு இருப்பதாக கூறப்<br />
படுகிறது. நைட்ரேட் (Nitrates) : பதனீட்டுப் பொருள்-தலைவலி.<br />
பாராபென் (Parabents) : பதனீட்டுப் பொருள்-கடுமையான தோல் <br />
நோய், வீக்கம் அரிப்பு. <br />
<br />
சல்பைட் (Sulfites) : பதனீட்டுப் பொருள்-வைட்டமின் B1 ஐ <br />
அழிக்கிறது. நெஞ்சில் இறுக்கம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, <br />
குறைந்த இரத்த அழுத்தம், பலஹீனம், சிறு அளவு கூட சிலரி-<br />
டையே ஆஸ்துமா நோயை ஏற்படுத்தும், மோசமாக்கும்.<br />
<br />
Propyl Gallate: இது எண்ணெய் மற்றும் கொழுப்புப் பொருட்கள் <br />
கெடாமல் வைத்திருக்க உதவும். தாவர எண்ணெய், பதப்படுத்தப் பட்டஇறைச்சி, உருளைக்கிழங்கு சிப்ஸ், சிக்கன் சூப்பேஸ் மற்றும் <br />
சுவிங்கம் ஆகியவற்றில் பயன் படுத்துகிறார்கள். இது புற்று நோய் உருவாக்ககூடும்.<br />
<br />
Potassium Bromate: ரொட்டிகளில் சேர்க்கப்படும் இந்தப்பொருள் புற்று <br />
நோய் ஏற்படுத்தலாம்.<br />
<br />
Aspartame (Equal, Nutra Sweet): இது டயட் சோடா மற்றும் டயட் <br />
உணவுகளில் சர்க்கரைக்குப்பதில் பயன்படுத்தப்படும் செயற்கை <br />
இனிப்பு. இது மூளையில் டியூமர் கட்டியை உருவாக்கும் என அறியப்பட்டது. மிக குறைந்த அள்வு உட்கொள்ளுவது கூட <br />
Lymphomas மற்றும் Leukemi நோயை உருவாக்ககூடும். சிலருக்கு <br />
தலைவலி, மந்தம், மனக்குழப்பம், மத்திய நரம்பு மண்டல பாதிப்பு, மாதவிடாய் பாதிப்பு, கருவில் மூளைப்பாதிப்பு உருவாக்கக்கூடும்.<br />
<br />
Neotame: இது Aspartame போன்றது ஆனால் அதை விட அதிக <br />
நச்சுடையது.<br />
<br />
Acesulfame-K: சர்க்கரையை விட 200 மடங்கு இனிப்பான இப்-<br />
பொருள். கேக்குகள், சுவிங்கம், ஜெல்லி, மற்றும் குளிர் பானங்-<br />
களில் சேர்க்கப்படுகிறது. இது கேன்சர், தைராய்ட் பாதிப்பு <br />
உண்டாக்கலாம்.<br />
<br />
Olestra: இது ஒரு செயற்க்கைக் கொழுப்பு. உடலால் உறிஞ்சப்-<br />
படாதது, வயிற்றோட்டம், வயிற்று வலி போன்ற பல <br />
பாதிப்புகளை உண்டாக்கும்.<br />
<br />
Sodium Nitrite (Sodium Nitrate): இறைச்சி பதப்படுத்தவதில் உபயோகப்-<br />
படுகிறது. இது கான்சர் காரணியான Nitrosamine ஐ உருவாக்குகிறது.<br />
<br />
Hydrogenated Vegetable Oil: இவ்வாறு பதப்படுத்தப்பட்ட தாவர <br />
எண்ணெய்கள் Trans Fat ஐ உருவாக்குகிறது. இது இதய நோய் <br />
மற்றும் நீரிழிவுக்கு வழி வகுக்கும்.<br />
<br />
Brominated Vegetable Oil : பிறவிக்குறைபாடு, உடல் உறுப்பு வளர்ச்சி-<br />
யின்மைக்கு காரணமாகும்.<br />
<br />
Blue 1 and Blue 2: குளிர்பானங்கள் மற்றும் மிட்டாய்களில் உபயோகப்-<br />
படும் சாயப்பொருள். இது கான்சர் மற்றும் ட்யூமர் உருவாக்-<br />
கூடும்.<br />
<br />
Red 3: மிட்டாய் மற்றும் செர்ரியில் பயன்படும் வண்ணப்பொருள் <br />
இது தைராய்ட் மற்றும் ட்யூமர் உருவாக்கக்கூடும்.<br />
<br />
Yellow 6: கேக்குகள், மிட்டாய்கள், ஜெல்லிக்கள், சாசேஜ் ஆகியவற்றில் <br />
பயன் படுத்தப்படுகிறது. அட்ரீனல், சிறுநீரகக்கட்டி, மற்றும் கான்சர் உருவாக்கக் கூடியது.<br />
<br />
அப்பப்பா …பயங்கரம் ..சில கம்பனிகளின் பொருளாசைக்கு <br />
பலியாகி எத்தனை விதமான வடிவத்தில் ரசாயனபொருட்களை <br />
நமது உணவில் கலந்து உள்ளே தள்ளுகிறோம். இனியாவது எந்த<br />
உணவுப் பொருள் வாங்கினாலும் அதன் “INGREDIENTS” அல்லது <br />
“CONTENTS” என்று இட்டிருப்பதை ஒருமுறை வாசித்துப் <br />
பார்த்துவிட்டு புற்றுநோய் போன்ற பேராபத்துகளை விலை<br />
கொடுத்து வாங்க வேண்டுமா? பிள்ளைகளுக்கு தரலாமா? <br />
என்றெல்லாம் ஒன்றுக்கு இரண்டு யோசித்து வாங்குங்கள். <br />
<br />
பெரியவர்களைப்போல் குழந்தைகள் உடல் உணவில் கலந்துள்ள <br />
இந்த விஷப் பொருட்களை விரைந்து வெளியேற்ற இயலாது. <br />
ஆனால் துரதிஸ்ட வசமாக அனேக குழந்தை உணவுகளே<br />
விஷம் மலிந்து கிடக்கிறது.<br />
<br />
சர்க்கரை, உப்பு, எண்ணெய் அதிக அளவு உட்கொள்வது <br />
உண்ணும் மூளையின் இயற்கையான ரசாயன சமநிலையை <br />
பாதித்து, உணவில் அதிக ஆர்வம் உண்டாக்கி அத்தகைய <br />
உணவுகளுக்கு அடிமையாக்கிவிடும்.<br />
<br />
ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்ட்களில் சாப்பிடுவதை அடியோடு தவிர்க்கவும். முடிந்தவரை உணவுப்பொருட்களை அதன் <br />
அடிப்படை பொருளாகவே அவ்வப்போது வாங்கி ஃப்ரெஷ் <br />
ஆகவே உண்ணுங்கள். அதற்கேற்ப உணவுப் பழக்கத்திலும் <br />
மாற்றம் செய்து கொள்ளுங்கள். பணத்தையும் மிச்சப்படுத்துங்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"></div>நன்றி : <u><a href="http://shuhaibmh.wordpress.com/2010/07/14/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/">சுஹைப் (கடலோரம்)</a></u> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><br />
</div>எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com25tag:blogger.com,1999:blog-64303816644538849.post-41951759728905418622011-05-17T13:52:00.003+03:002011-05-17T16:35:40.833+03:00நானறியாமல் என்னோடு வளர்ந்த நட்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTqhyphenhyphenh7PHT-kNcOIN7KLrDh_z9PtlEiJe7FiI6428hrBJIWnItQqixo3f437bRRiC4GJXeh4jPiY2rWF_FXdNLL6bLq5OJGn-6N3qgWDv7bWs87AFPf9MblNitiCPhVL97uDxKkC4y8g/s1600/imagesCA1OFWGK.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" j8="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTqhyphenhyphenh7PHT-kNcOIN7KLrDh_z9PtlEiJe7FiI6428hrBJIWnItQqixo3f437bRRiC4GJXeh4jPiY2rWF_FXdNLL6bLq5OJGn-6N3qgWDv7bWs87AFPf9MblNitiCPhVL97uDxKkC4y8g/s1600/imagesCA1OFWGK.jpg" /></a></div><br />
<br />
<span style="background-color: yellow; color: blue; font-size: large;"><u><strong>நானறியாமல் என்னோடு வளர்ந்த நட்பு!! </strong></u></span><br />
<br />
நம்ம ஃபிரிக்வென்சியோடு ஒத்துப்போகிற உண்மையான நண்பர்கள் <br />
ஒரு சிலரே நமக்கு அமைவார்கள். அவர்களை நம் உள்ளங்கையில் வைத்துக் கொண்டாடனும். <br />
<br />
<u><strong>ஜெகத்...</strong></u><br />
<br />
நான் அல்கோபரில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம், MIDDLE <br />
EAST AIRLINES -இல் (MEA-வில்) அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். <br />
இது சவுதியில் இருந்து லெபனானுக்கு செல்லும் air lines நிறுவனம். <br />
ரொம்ப சகஜமான பேர்வழி. நட்புக்களை கொண்டாடுவார்.<br />
'தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் (‘ஜெகத்’தினை) <br />
ஏன் என்னை அழிக்கணும்' என்று பாரதியாரை நகைச்சுவையாய் வம்புக்கிழுப்பார். <br />
<br />
பெங்களுரு HMT-வாட்ச் கம்பெனியில் வேலை பார்த்த இவரது <br />
மனைவி கூட ஐந்து வருட விடுமுறை எழுதிக் கொடுத்து விட்டு இவரோடு வந்து குடும்பம் நடத்திக் கொண்டிருந்தது. இரண்டும் <br />
பையன்கள். இங்கே இந்தியன் எம்பஸி ஸ்கூலில் தான் படித்துக் கொண்டிருந்தார்கள் <br />
<br />
அதிகாலையில் பூஜை அறையில் கிணுகிணு வென மணியடித்து <br />
சாமி கும்பிடும் மனைவியிடம், "ஏம்பா இப்படி காலையிலேயே <br />
தூங்குற சாமிய மணியடித்து எழுப்புறியே, ஒரு நா அந்த சாமி படத்துலேந்து இறங்கி வந்து அந்த மணியாலேயே ஒந் தலையில <br />
அடிக்கப் போகுது" என்பாராம். அவரோடு சமயங்களில் வரும் அவர் மனைவி என்னிடம் சொல்லி சிரிக்கும். ஏனென்றால் அந்நேரத்தில் <br />
இவர் தூங்கிக் கொண்டிருப்பாராம். <br />
<br />
இப்படியாக நமது காலங்கள் ஓடிக் கொண்டிருக்கிற வேகத்தில், <br />
அவர் என்னை வந்து பார்த்துப் போவது அரிதாகிப் போனது. <br />
ஏனென்று விசாரித்த போது, "கிட்னி ஸ்டார்டிங் டிரபுலாம்" என்று <br />
அவரே வந்து கமெண்ட்டும் அடித்து விட்டுப் போனார். <br />
<br />
நாளாக நாளாக நூலாகிக் கொண்டிருந்தார். வாரத்திற்க்கொரு <br />
முறையோ, இரண்டு வாரம் கூடியோ டயாலிசிஸ் என்று <br />
சொல்லக் கூடிய ரத்த புத்துயிரூட்டளுக்கு சென்று வந்துக் <br />
கொண்டிருந்தபோது "உள்ளங் காலில் குத்தி குத்தி உயிர் <br />
போகுதப்பா, கிட்னிய மாத்தனுமாம், செலவு ரொம்ப ஆகும் போல" <br />
என்று மருட்சி இல்லாமல் தெளிவாய் பேசினார். <br />
<br />
கிட்னி மாற்று சிகிச்சைக்கு சென்னையில் ஒரு பிரபல <br />
ஹாஸ்பிடலில் (பெயர் வேண்டாமே!) அப்பாயின்மெண்ட் வாங்கி,<br />
ஒரு மாத ட்ரீட் மெண்டுக்குக்காகப் போனவர், பதினைந்து இருபது நாளிலேயே திரும்பி வந்து விட்டார். அன்று நான் ஆபீசில் வேளை விஷயமாய் யாருடனோ தொலைபேசிக் கொண்டிருந்த போது, <br />
சேரில் வந்து உட்கார்ந்த மனிதரை கண்டு ஒரு கணம் ஸ்தம்பித்து போனேன். முகம் கை கால்களெல்லாம் சிகரெட் நெருப்பால் சுட்ட <br />
மாதிரி அட நம்ம ஜெகத் தான்.“என்ன சார் என்னாச்சு" பதைப் <br />
பதைத்துக் கேட்டேன். <br />
<br />
"மூன்றரையிலிருந்து நாலு லட்சம் வரை செலவாச்சுப்பா. அது <br />
ஒரு பெரிய மேட்டர் கிடையாது. ரத்தத்தை ஒழுங்கா டெஸ்ட் <br />
செய்யாமல் யாருடையோ hiv aids உள்ள ரத்தத்தை எனக்கு <br />
ஏத்திட்டம்ப்பா. இன்னும் பத்தோ பதினைந்தோ நாள் தான் <br />
இங்கே இருப்பேன். கம்பெனியில் நான் வந்த உடனே exit அடித்து விட்டார்கள்" என்று மூச்சு விடாமல் பேசினார் (இங்கே சவுதியில் <br />
அப்படி தான். இது மாதிரியாகிவிட்டால் govt இருக்கவும் விடாது.<br />
<br />
அதன் பின்னர் தான் அவரோடு வந்த அவர் மனைவியை <br />
பார்த்தேன். அழுத கண்கள் அழுதபடியே இருந்தது. “எனக்காக pray <br />
பண்ணு” என்று சொல்லி விட்டு போய் விட்டார். அவர் பத்து <br />
பதினைந்து நாள் என்று சொன்னது, தான் உயிரோடு இருப்பேன் <br />
என்பதை தானோ என்பது அவர் இறந்த செய்தி கிடைத்த பின் <br />
புரிந்தது.<br />
<br />
நிறைய நேரம் லெபனானுக்கு டிக்கட் கிடைக்காமல் எங்கள் <br />
மேனேஜரின் நண்பர்கள், என்னிடம் சொல்லி டிக்கெட் புக் <br />
பண்ணச் சொல்வார்கள். நான் இவரை அணுகும் போதெல்லாம் <br />
"உன்னை வந்து ஏம்பா இவங்க தொல்லை பண்றாங்க எங்கிட்ட <br />
அனுப்பு" என்பார். "இல்ல சார் டிக்கெட் ஃபுல் என்று நீங்க <br />
சொல்லிட்டீங்கலாமே" என்றால், "சரி பெயரைச் சொல்லு" என்று <br />
கடகடவென்று நோட் செய்துக் கொண்டு PNR ஐக் கொடுத்து <br />
விடுவார். புக் பண்ணச் சொன்னவங்களுக்கு ஏக குஷியாகிவிடும். மேனேஜருக்கு ரொம்ப பெருமையாய் இருக்கும். <br />
<br />
அந்த நாட்கள் இனி இல்லை!! அவர் நினைவுகள் மட்டும்!! <br />
<br />
பின்னர் இவரது மனைவி HMT வேலையை ரிசைன் பண்ணிவிட்டு <br />
டிராவல் ஏஜென்சி ஒன்று தனியாய் துவங்கி தன்னுடைய இரண்டு மகன்களையும் நல்லவிதமாக படிக்க வைத்து துணிச்சலாய் <br />
வாழ்க்கையை எதிர் கொள்கிறார் என்று அறிகிறேன் <br />
<br />
ஜெகத் இன்று எங்கள் மனதில் நிறைந்து போன நாள்!! <br />
<br />
<div>முன்பு இதை படிக்காதவர்களுக்காக மீள் பதிவு!! <br />
<br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8aW64Z-2Ez5Q1uxhyphenhyphenlbDrkakTGOSCa8P2S1uqBRy18EgvfGax9kfRe2ouUp7adHcinOAqaE12OWvQciuaWXHviedXdOW6wRsJsA8QCnt6U6-WZDC97yhs_762q2Bn_0F9NjCfegoVBQ/s1600/imagesCAAB1E45.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" j8="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8aW64Z-2Ez5Q1uxhyphenhyphenlbDrkakTGOSCa8P2S1uqBRy18EgvfGax9kfRe2ouUp7adHcinOAqaE12OWvQciuaWXHviedXdOW6wRsJsA8QCnt6U6-WZDC97yhs_762q2Bn_0F9NjCfegoVBQ/s1600/imagesCAAB1E45.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"></div></div>எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com36tag:blogger.com,1999:blog-64303816644538849.post-91816624744971303272011-05-14T00:55:00.000+03:002011-05-14T00:55:18.431+03:00வாழ்க்கைப் பாடம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWbOKIkll2Bvgg_aI0UV4RsEX45N4ogT_p4LxZV4gaMrmcUJNdY9jVNuojdIPwye9VwwyUvXMkmk5HSvm05JFlzbV5FLzvnd14JoiDhD1tEG7cMZXagCyOeXxpRf9DSuA-l6EjHMGTnA/s1600/dam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" j8="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWbOKIkll2Bvgg_aI0UV4RsEX45N4ogT_p4LxZV4gaMrmcUJNdY9jVNuojdIPwye9VwwyUvXMkmk5HSvm05JFlzbV5FLzvnd14JoiDhD1tEG7cMZXagCyOeXxpRf9DSuA-l6EjHMGTnA/s1600/dam.jpg" /></a></div><br />
<br />
<span style="background-color: yellow; color: blue;"><u><strong>வாழ்க்கைப் பாடம்</strong></u></span><br />
<br />
அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். <br />
<br />
அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.<br />
<br />
அவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார். அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார். ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதங்களும், ஈ மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன. <br />
<br />
மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார். பெரிய பெரிய சாதனைகள் புரிய ஓடிக் கொண்டிருந்த ஓட்டத்தில் மகிழ்ச்சியை அவருடைய மாணவர்கள் தொலைத்திருந்தார்கள்.<br />
<br />
அவருடைய மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள். அவருக்கு அது போன்ற பிறந்த நாள் விழாக்களில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அவர்கள் அன்பை மறுக்க முடியாததால் அதற்கு சம்மதித்தார். பெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேனீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார். <br />
<br />
உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள். அவரைக் கண்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடினார். பின் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேனீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார். <br />
<br />
மிக அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன. விலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள். <br />
<br />
அந்தத் தம்ளர்களில் தேனீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேனீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள். அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலை உபயோகித்து அந்தத் தேனீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார்.<br />
<br />
பின் கேட்டார். ”எத்தனையோ பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன். இப்போது ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் உங்களுக்கு சொல்லட்டுமா?”அவர்கள் ஏகோபித்த குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். “தயவு செய்து சொல்லுங்கள்”<br />
<br />
”எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான். ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள் <br />
குடித்த தேனீர் தான். அதன் சுவையும் தரமும் மட்டுமே நீங்கள் <br />
ருசிக்கப் பயன்படுகிறது. உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து <br />
எல்லாம் அந்தத் தம்ளர்களைப் போல. வாழ்க்கை தேனீர் போல. தம்ளர்களின் தரம் தேனீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்ப-<br />
தில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி, <br />
அந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் <br />
தீர்மானிப்பதில்லை.”<br />
<br />
“அதை மறந்து இப்போது அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டதைப் போல வாழ்க்கையிலும் மிக உயர்ந்த வேலை, மிக அதிகமான பணம், மிக உயர்ந்த பதவி, பலர் மெச்சும் அந்தஸ்து ஆகியவற்றைப் பெற போட்டி போட்டுக் கொண்டு வாழ்வதால் தான் நீங்கள் மன உளைச்சலாலும், பிரச்சனைகளாலும் அவதிப் படுகிறார்கள். வாழ்க்கை என்ற தேனீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்”<br />
<br />
“தோற்றங்களில் அதிகக் கவனத்தைத் தரும் போது உண்மையான வாழ்க்கையை நாம் கோட்டை விட்டு விடுகிறோம். வாழ்க்கையை ருசிக்கத் தவறி விடுகிறோம். எத்தனை தான் பெற்றாலும் உள் மனம் அந்த உண்மையை உணர்ந்திருப்பதால் அது என்றும் அதிருப்தியாகவே இருக்கிறது.”<br />
<br />
அவர் சொல்லி முடித்த போது அந்த மாணவர்களிடையே பேரமைதி நிலவியது. சிலர் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தார்கள். சிலர் கண்களில் நீர் தேங்கி நின்றது. இருட்டில் இருந்ததால் தெரியாமல் போன பலதையும் வெளிச்சம் வந்தவுடன் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல அனைவரும் உணர்ந்தார்கள். இத்தனை நாள்கள் அவர் சொல்லித் தந்த பாடங்களை விட இப்போது சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை இவ்வளவு எளிமையாக மனதில் பதியும் படி வேறு யாரும் சொல்லித் தர முடியாது என்று நினைத்த அவர்கள் மனதில் அவர் இமயமாக உயர்ந்து போனார். <br />
<br />
ஒருவன் கண்ணீருடன் கை தட்ட ஆரம்பிக்க அவர் வீடு அடுத்த நிமிடத்தில் கை தட்டல்களால் அதிர்ந்தது. <br />
<br />
நன்றி <br />
Nizam Deen A.H<br />
Sr. Software Programmer<br />
<a href="http://www.nellaieruvadi.com/">http://www.nellaieruvadi.com/</a><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEim_bDbqkMfySSxSceD7ElubEgOvLeos9cVGrkHQb-AeSx6Fs4ETN2ELRfatU85MS5pBIF9tX8Z5A7czpM7PDhTF9SlX82Xpz-yeUQqx1JaxZ12z9kIEcTOx7D81ONoO6tsxA9d8vSJRQ/s1600/CPUCAZ3PK8VCAB1DKFGCAV2FLO0CABTVWC4CAXCP8I9CAE47I3ECAS6F9SKCATUF327CACKLWF0CAWHYPFGCAUFYMCBCASW14SICAT8IA3LCAW14AF2CAE6R3DPCASXHLIKCAC9Q70DCAO3ZP53.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" j8="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEim_bDbqkMfySSxSceD7ElubEgOvLeos9cVGrkHQb-AeSx6Fs4ETN2ELRfatU85MS5pBIF9tX8Z5A7czpM7PDhTF9SlX82Xpz-yeUQqx1JaxZ12z9kIEcTOx7D81ONoO6tsxA9d8vSJRQ/s1600/CPUCAZ3PK8VCAB1DKFGCAV2FLO0CABTVWC4CAXCP8I9CAE47I3ECAS6F9SKCATUF327CACKLWF0CAWHYPFGCAUFYMCBCASW14SICAT8IA3LCAW14AF2CAE6R3DPCASXHLIKCAC9Q70DCAO3ZP53.jpg" /></a></div><br />
</div>எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com33tag:blogger.com,1999:blog-64303816644538849.post-1475260331727838572011-05-02T11:49:00.004+03:002011-05-03T11:50:56.482+03:00ஃபியூஸ் போன பல்புகளை எரிய வைப்பது எப்படி??<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgApvRPEpgwPHwARkp_B7Wgn_iRBU415Nl5dnSuO-58qmnYBniO5g4KW8BG_txIZdUt-ElrEm08vt7RUWDGe5aCZoc_mvMRj7mlYhTIs6UWH-6_w_pfDxwZTRfWxzJfMx58aed75VVsCw/s1600/7MACASPEXZVCAAF1YGNCA8Q3ROBCARY58OACAF4Q5P3CAWUPWSNCA0HK1QJCA4XIZDJCAASDV3PCAGHO2CNCAKBS07LCAVRC6M1CAKTHQFRCA1VNN3ACAXQAKUKCAVUEKF9CAE1I1GSCAN6UAE2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" j8="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgApvRPEpgwPHwARkp_B7Wgn_iRBU415Nl5dnSuO-58qmnYBniO5g4KW8BG_txIZdUt-ElrEm08vt7RUWDGe5aCZoc_mvMRj7mlYhTIs6UWH-6_w_pfDxwZTRfWxzJfMx58aed75VVsCw/s1600/7MACASPEXZVCAAF1YGNCA8Q3ROBCARY58OACAF4Q5P3CAWUPWSNCA0HK1QJCA4XIZDJCAASDV3PCAGHO2CNCAKBS07LCAVRC6M1CAKTHQFRCA1VNN3ACAXQAKUKCAVUEKF9CAE1I1GSCAN6UAE2.jpg" /></a></div><br />
<u><span style="background-color: yellow; color: blue; font-size: large;">ஃபியூஸ் போன பல்புகளை </span></u><br />
<u><span style="background-color: yellow; color: blue; font-size: large;">எரிய </span></u><u><span style="background-color: yellow; color: blue; font-size: large;">வைப்பது எப்படி?? </span></u><br />
<br />
ஐந்தாவதோ ஆறாவதோ படித்துக் கொண்டிருந்த பள்ளிப் பருவம் <br />
அது. அப்பொழுது எங்களுக்கு பெரிய கடைத் தெருவில் சின்ன <br />
எலெக்ட்ரிக் கடை ஒன்று இருந்தது. அதை எங்க அப்பா தான் <br />
வைத்து நிர்வகித்து வந்தாங்க. அப்பாவுக்கு ஒயரிங் வேலைகள் <br />
முதல் எல்லா எலெக்ட்ரிக் வேலைகளும் அத்துப்படி. ஆனா <br />
கடைக்கும், எங்க வீட்டுக்கு மட்டுமே தான் எல்லா எலெக்ட்ரிக் வேலைகளும் அவங்களே செய்வாங்க. வெளியிடங்களுக்கு <br />
காண்ட்ராக்ட் ஆட்களை தான் அனுப்புவாங்க. சொந்த வீட்டுக்கு <br />
மட்டும் அவங்க ஏன் அப்படி செய்றாங்க என்றால் நாங்கள் <br />
எல்லோரும் அதை கத்துக்கணும் என்ற பேரார்வம் தான். <br />
ஆனாலும் நாங்க கற்றுக் கொண்டோமா என்றால்? தொடர்ந்து <br />
படிங்க !! <br />
<br />
ஒவ்வொரு நாளும் ஸ்கூல் முடிந்து வந்து கடையில் தான் <br />
உட்கார்ந்து கொள்வேன். நான் வந்தவுடன் எவ்வளவு பிஸியான <br />
கஸ்டமர் கூட்டமிருந்தாலும், எனக்கு டீயோ அல்லது காபியோ <br />
அதனுடன் வடை பஜ்ஜி ஆர்டர் செய்து தனக்கும் அப்பா எடுத்துக் கொள்வாங்க.<br />
<br />
கடையில் உள்ள அலங்கார விளக்குகள் சின்ன சின்ன மேஜிக் <br />
விளக்குகள், சீரியல் செட்டுகள் இன்னும் விதவிதமான அலங்கார <br />
பல்புகள், சுவிட்சுகள் எல்லாம் அந்த சின்ன வயசில் பார்க்கப் <br />
பார்க்க பிரமிப்பாய் இருக்கும். கடையில் உட்கார்ந்துக் கொண்டு <br />
ரோட்டில் போவோர் வருவோரை பார்க்க ஆர்வமாய் இருக்கும்<br />
<br />
கடையில் கஸ்டமர்கள் வந்து கேட்கும் சோக்கு, சுவிட்ச் பாக்ஸ் <br />
வண்ண வண்ண பின்னல் ஒயர்கள் இன்னும் நிறைய வகையான பெயர்கள் எல்லாம் எனக்கு அப்ப புதுசு. <br />
<br />
சரவிளக்குகள், குலோபர்ஸ், சாண்ட்லியர்ஸ் இன்ன பிறவைகள் <br />
ஏதாவது புதுமாதிரி எங்க கடைக்கு வந்தாலும், முதல் முதலில் முன்னோட்டம் பார்ப்பது எங்கள் வீட்டில் தான்! <br />
<br />
வீட்டின் ஹோவென்று அகன்ற கூடத்தின் ஸீலிங்கில் வித <br />
விதமான விளக்குகள் அழகழகாய் தொங்கிக் கொண்டிருக்கும். <br />
வருகிற போகிற சொந்த பந்தங்களிடமெல்லாம் இது இப்ப வந்த <br />
புது மாடல், விலை ரொம்ப கம்மி என்றெல்லாம் சொல்வாங்க. <br />
"அட அழகா இருக்கே எங்க வீட்டுக்கொன்று வேண்டும்" என்று <br />
சொல்லி நிறைய பேர் வாங்கி போவாங்க.அப்ப அந்த டெக்னிக் என்னவென்று எனக்கு விளங்கவில்லை. இப்ப நினைத்துப் <br />
பார்த்தால் அது பக்கா மார்க்கெட்டிங் யுக்தி என்பது மட்டும் <br />
புரிகிறது! <br />
<br />
எல்லோருமே அந்த கூடத்தில் தான் படுத்துறங்குவோம். இரவில் <br />
படுத்துக் கொண்டு அவைகளை பார்க்கும் போது, மிக பாந்தமாய் <br />
ஒரு மிகப் பெரிய டெக்கோரேட் செய்த அரண்மனையில் படுத்து<br />
உறங்குவது போல் நினைப்பு வரும். அதற்கு தகுந்தாற்போல் அந்த ஸீலிங்கும் மிக ரசனையாய் வடிவமைக்கப் பட்டிருக்கும். அதைப் <br />
பார்க்கும் போது அப்பவே நிறைய கற்பனைகளாய் வரும். ஆனால் அவைகள் என்னவென்று இப்ப கேட்டால் எனக்கு சொல்ல<br />
தெரியாது.<br />
<br />
ஒரு பல்பு பியூஸ் போய்விட்டால் அதை தூர வீசியெறிய <br />
மாட்டாங்க. அதன் இழைகள் உள்ளே கழன்று விழுந்து கிடப்பதை திரும்பவும் ஒட்டவைத்து எரிய விடுவார்கள். அந்த சின்ன வயசில் <br />
எனக்கு ரொம்ப ஆச்சரிய மாயிருக்கும்!! இதை என் சகோதரிகளுக்கு <br />
அப்பா சொல்லிக் கொடுத்தாங்க. <br />
<br />
ஆர்வத்தில் நானும் கற்றுக் கொள்ளனும் என்று அக்காவிடம் <br />
அடம்பிடித்து, பல்பை தூக்கிப் பிடித்து அந்த இழையை சரியாய் <br />
கொண்டு வந்து அதனோடு ஒட்டவைக்க படாதபாடு பட்டு, <br />
தலையை இப்படி அப்படி சாய்த்து, பல்பை போட்டு உடைத்து <br />
கடைசியில் அக்கா கையால் ‘ணங்’ என்று தலையில் குட்டு <br />
வாங்கியது தான் மிச்சம் ஆனா வலிக்காது. அவ்வ்வ்வ்..!!<br />
(என்னா பெருந்தன்மை) (:-)))<br />
<br />
அப்பா யார்கிட்டயாவது பேசிக் கொண்டிருக்கும் போது, அடிக்கடி <br />
என் காதில் விழுகிற மாதிரி, "இந்த வேலை தான் என்றில்லை. <br />
எல்லா வேலைகளையும் நாம கத்து வச்சுக்கணும். அப்பதான் <br />
ஏதாவது ஒன்னு நமக்கு கைகொடுக்கும்" என்று சொல்வாங்க. <br />
விளையாட்டு தனமான வயசு. அப்ப அதை நான் பெரிதாக <br />
எடுத்துக் கொண்டதில்லை. பின்னர் உணர்ந்ததுண்டு !! <br />
<br />
ஆனா இப்ப வரைக்கும் “ஃபியூஸ் போன பல்புகளை எப்படி <br />
ஒட்ட வைத்து எரிய வைப்பது” என்பதை நானும் கற்றுக் <br />
கொள்ளவே இல்லை. தெரிந்திருந்தால் உங்களுக்காவது <br />
சொல்லிக் கொடுக்கலாம். ஹி..ஹி… சரி விடுங்க! இப்ப என்ன <br />
போச்சு! இப்பல்லாம் அதிகமாய் அதை உபயோகப் படுத்துவ-<br />
தில்லை என்பது ஆறுதலான விஷயம் தானே! நாம் தான் <br />
அதிகமாய் ‘குழல்’ விளக்குகள் யூஸ் பண்ண ஆரம்பித்து <br />
விட்டோமே!<br />
<br />
ஒரு அனுபவம் என்பதை நாம் கற்றுக்கொள்ள பலபடிகள் <br />
ஏறி இறங்க வேண்டியிருக்கும். நாம் கற்ற அனுபவங்களை <br />
<div>மற்றவர்களிடம் சொன்னால் அது அவர்களுக்கு ரொம்ப சீப்பாய் </div>தோன்றலாம்! ஏனெனில் அது இலவசமாய் கிடைக்கிறதே! அதுவே. <br />
சில விஷயங்கள் அவர்கள் அனுபவப்பட்டு, பணம் செலவழித்து <br />
பெற்றால் தான் அதன் தனித்துவமும் மகத்துவமும் புரியவரும்.<br />
<br />
ஒரு ஊரில் பெரிய மனிதர் ஒருவர் இருந்தார். அவர் தன்னிடம் முக்கியமான 'அட்வைஸ்' ஒன்று இருக்கு என்று விளம்பரப் <br />
படுத்தினார். அது என்னவென்று கற்றுக் கொள்ளும் ஆர்வம் <br />
பலருக்கு இருந்தாலும், "ஒரு அட்வைஸுக்கு ஆயிரம் ரூபாய் <br />
கட்டணமாய் தரனும்" கறாராய் சொன்னதால் இது கேட்டு மிரண்ட <br />
பலரும் அவரிடம் போகவே இல்லை. <br />
<br />
ஒரே ஒரு மனிதர் மட்டும் அவரிடம் சென்று ஆயிரம் ரூபாயைக் கொடுத்து, "நீங்கள் சொல்லும் அட்வைஸ் என்ன?" என்று கேட்டார்.<br />
"எந்த வேலையையும் அந்தந்த குறித்த நேரத்தில் செய்திடணும், <br />
தாமதிக்கக் கூடாது" என்று பதில் வந்தது. <br />
<br />
"ச்சே" ஆயிரம் ரூபாய்க்கு இது தானா அட்வைஸ் என்று மனம் நினைத்தாலும், சரி அவர் சொன்ன அறிவுரைப் படி செய்துப் <br />
பார்க்கலாமே என்றெண்ணி, அன்றிரவு வந்திறங்கிய சரக்கு <br />
மூட்டைகளை, பின்னேரம் ஆயிடினும், உடல் அசதி வருத்திய <br />
போதும், ஆட்களை முன்னிறுத்தி அவைகள் எல்லாவற்றையும் <br />
ஸ்டாக் ரூமில் கொண்டு போய் அடுக்கிய பின்பே படுத்துறங்கப் <br />
போனார். <br />
<br />
பொழுது விடிந்து பார்த்தபோது ஊரே காற்றிலும் மழையிலும் <br />
அல்லோலப் பட்டுப் போய் கிடந்தது. பல வியாபாரிகளின் மதிப்பு <br />
மிக்க பொருட்கள் நீரில் மூழ்கி பல லட்சம் நஷ்டமாகிப் <br />
போயிருந்தது. தான் பணம் கொடுத்து கற்ற அட்வைஸ் அந்த <br />
நொடியில் மதிப்பு மிக்கதாய் தெரிந்தது. தனது பொருட்களும் <br />
வீணாகாமல் போனதில் அந்த வியாபாரிக்கு மிக்க மகிழ்ச்சி!! <br />
அந்த வியாபாரி உப்பு ஏற்றுமதி வியாபாரம் செய்து வந்தார் <br />
என்பது இங்கே ஞாபகம் கொள்ளவேண்டிய ஒரு விஷயம்!! <br />
<br />
ஆகவே நல்ல அறிவுரைகள் எங்கு கிடைத்தாலும் அள்ளிக் <br />
கொள்ளனும். அதை நாமும் பின்பற்றனும்!! <br />
<br />
<div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtiohLqplDBnhJPqtBIVk4q7irJV-FckS71YjOzZO2UwAlGt5pIk-B8TPsWXkfGaMXq_CcCfjciUZVFKU2PJgke92hhjChDhhhV_JueeJ0sKGY4V9zkgKjSmy9WA33BFRzDwtroW2q2g/s1600/JVKCA3THYQ2CAE7RQEVCAZ3TRPZCAAFVB7ZCALTYAX1CAMU8033CACAB3PZCAS0Q03DCAX75OLSCAUDX6I6CAKDYROSCABY8PT3CA6TWE6ECAAA3CR8CA078XK7CA73C0QNCA8GQKTXCAL86JR2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" j8="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtiohLqplDBnhJPqtBIVk4q7irJV-FckS71YjOzZO2UwAlGt5pIk-B8TPsWXkfGaMXq_CcCfjciUZVFKU2PJgke92hhjChDhhhV_JueeJ0sKGY4V9zkgKjSmy9WA33BFRzDwtroW2q2g/s1600/JVKCA3THYQ2CAE7RQEVCAZ3TRPZCAAFVB7ZCALTYAX1CAMU8033CACAB3PZCAS0Q03DCAX75OLSCAUDX6I6CAKDYROSCABY8PT3CA6TWE6ECAAA3CR8CA078XK7CA73C0QNCA8GQKTXCAL86JR2.jpg" /></a></div> </div><br />
</div>எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com26tag:blogger.com,1999:blog-64303816644538849.post-90544772312280220352011-04-28T11:32:00.004+03:002011-04-28T17:42:42.619+03:00இருபத்தியோராம் நூற்றாண்டில் இன்னுமொரு பெண்!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzGNkJPeOUHzcH6IO0cto3CHHOnIJI6oePY8HLg4EBHUcSS-m2iXjsTG5nMFu0iWXZO0_nQ3oaPTqVKViJ1kKQyJ-VnxTL-l-PM6dRL8B8AovWAoM7ktAP6ARa3VoplcJDx0PXsJqD7g/s1600/ATT00013_.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" j8="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzGNkJPeOUHzcH6IO0cto3CHHOnIJI6oePY8HLg4EBHUcSS-m2iXjsTG5nMFu0iWXZO0_nQ3oaPTqVKViJ1kKQyJ-VnxTL-l-PM6dRL8B8AovWAoM7ktAP6ARa3VoplcJDx0PXsJqD7g/s1600/ATT00013_.png" /></a></div>உண்மையை உரக்க சொல்கிறது இக்கவிதை… பெண்ணுக்கு <br />
எதிரான குற்றங்களில் இந்தியாவிற்கு முதல் இடமாம், புள்ளி <br />
விவரம் சொல்கிறது.<br />
<br />
<span style="background-color: yellow; color: blue;"><strong><u>இருபத்தியோராம் நூற்றாண்டில் இன்னுமொரு பெண் </u></strong></span><br />
<br />
<u><span style="color: #cc0000;">(கவிதை- முடவன்குட்டி</span></u>)<br />
<br />
<span style="color: blue;">இருட்குவியலாய்</span><br />
<span style="color: blue;">கக்கூசில்</span><br />
<span style="color: blue;">விழுந்து கிடப்பான் புருஷன்-</span><br />
<span style="color: blue;">இன்னும் தெளியாத குடிபோதையில்.</span><br />
<span style="color: blue;">அவனை அள்ளி</span><br />
<span style="color: blue;">குளியறை போகையில்</span><br />
<span style="color: blue;">“குழம்பா இது..தூ..”</span><br />
<span style="color: blue;">எங்கோ பார்த்து காறித் துப்புவான்</span><br />
<span style="color: blue;">நாலாவது முறையாய்</span><br />
<span style="color: blue;">எஸ் எஸ் எல் சி எழுதிய கொழுந்தன்.</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">“உடுத்தி…. மினுக்கி ..ஆபீஸ் போறாளோ..</span><br />
<span style="color: blue;">வேற எங்காச்சும் போறாளோ..”-</span><br />
<span style="color: blue;">வீட்டோடு இருக்கும் நாத்தனார்</span><br />
<span style="color: blue;">வெறுப்பு உமிழ்வாள்.</span><br />
<br />
<span style="color: blue;">சன்னல் கம்பிகளூடே -பூட்டிய அறைக்குள்</span><br />
<span style="color: blue;">எட்டிப்பார்ப்பாள்-குழந்தையை:</span><br />
<span style="color: blue;">“பளா”-ரென சன்னல் கதவை</span><br />
<span style="color: blue;">அறைந்து மூடி</span><br />
<span style="color: blue;">“ஐயாயிரம்-ஆபீஸ் லோன் போடு”-</span><br />
<span style="color: blue;">மாமியார் குரலில்</span><br />
<span style="color: blue;">இரை தேடியலையும் மிருகமொன்று உறுமும்:</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">ஆபீஸ் லோனுக்குப் “பிணை”யாக</span><br />
<span style="color: blue;">பூட்டிய அறைக்குள்</span><br />
<span style="color: blue;">கைதியாய்க் கிடக்கும்</span><br />
<span style="color: blue;">தன் கதி அறியாப் பேதைமகள்</span><br />
<span style="color: blue;">அன்னைமுகம் பாராமலே</span><br />
<span style="color: blue;">அன்றும் உறங்கிப் போவாள். </span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அழுதழுது ஓய்ந்த</span><br />
<span style="color: blue;">பிஞ்சுமகள் துயர முகம்</span><br />
<span style="color: blue;">மறுபடி- மறுபடி</span><br />
<span style="color: blue;">உயிரில் இடற-</span><br />
<span style="color: blue;">இரு பஸ் மாறி</span><br />
<span style="color: blue;">அடிவயிறு கனக்க-</span><br />
<span style="color: blue;">மூச்சுத் தெவங்க -</span><br />
<span style="color: blue;">அலுவலகம் சேர்வாள்-</span><br />
<span style="color: blue;">அன்றும் தாமதமாய்:</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">“இ<span lang="AR-SA" style="color: #232323; font-family: Latha; mso-ansi-language: EN-US; mso-ascii-font-family: Arial; mso-bidi-language: AR-SA; mso-fareast-font-family: 'Times New Roman'; mso-fareast-language: EN-US; mso-hansi-font-family: Arial;"><span style="color: blue;">ன்னை</span></span>க்காவது குழந்தையைப்</span><br />
<span style="color: blue;">பாத்தியாடி…….”</span><br />
<span style="color: blue;">“மாமியாரா…..அவ…ராட்சசி….”</span><br />
<span style="color: blue;">“டைவர்ஸ் வாங்கு….”</span><br />
<span style="color: blue;">“பாவம் பெண் குழந்தை இருக்கே….”</span><br />
<span style="color: blue;">- கண்முன் உருகும்</span><br />
<span style="color: blue;">சக ஊழியர் நேயம்</span><br />
<span style="color: blue;">மெல்ல ஒதுங்கி</span><br />
<span style="color: blue;">வம்பு பேச வாய் திறக்கும்:</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">“லோன் பணம் எங்க ஒளிச்சு வச்சிருக்க”</span><br />
<span style="color: blue;">சேலை உரித்து..ப்ளவுஸ் கிழித்து…..</span><br />
<span style="color: blue;">தாண்டவம் ஆடும்-</span><br />
<span style="color: blue;">மாமியார் ரௌத்ரம் :</span><br />
<span style="color: blue;">அப்பன் பாட்டனின் ஆதார குணமாய்</span><br />
<span style="color: blue;">ஆழ்மனதில் பதுங்கிய பயமோ</span><br />
<span style="color: blue;">சட்டென விழித்து – உயிர் கவ்வும்:</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">பாலுடன் விஷமுண்ட குழந்தை</span><br />
<span style="color: blue;">வாய்நுரை தள்ளி விரைத்துக்கிடக்க-</span><br />
<span style="color: blue;">கூரை மின்விசிறியில் முடிந்த சேலை</span><br />
<span style="color: blue;">கழுத்தில் இறுகி</span><br />
<span style="color: blue;">வெறும் உடலாய்த்தொங்குவாள்-</span><br />
<span style="color: blue;">இவள்!</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">மகளிர் இடஒதுக்கீடு….</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">நகம் பேணுவது எப்படி..?</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">கட்டழகி நயன்தாரா அழகுக்குறிப்புகள்…</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">என…….</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அதுபோக்கில் இயங்கும்</span><br />
<span style="color: blue;"><br />
</span><br />
<span style="color: blue;">அன்றும் உலகம்..!</span><br />
<br />
++++++ …………+++++++………+++++++………+++++++<br />
<br />
<a href="http://kadayanallur.org/category/mudavan-kutty-pages/"><span style="background-color: cyan; color: black;">"முடவன் குட்டி"</span></a> <br />
<br />
<a href="http://kadayanallur.org/">நன்றி: கடையநல்லூர்.org</a> <br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMHGtQu41CtzUS805WIQhEMiZ37g1VNAIPDxTcm-hieYTSbXdpCBFM93668kS9KiIZqKpdMLTEAVTyjKfVNT20bfBdyPr0vQqEXvyR7U8TwD0DKVjJUoUBWuOMgpzEQLW1FQCuYmZv7g/s1600/animated_candle1.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" j8="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMHGtQu41CtzUS805WIQhEMiZ37g1VNAIPDxTcm-hieYTSbXdpCBFM93668kS9KiIZqKpdMLTEAVTyjKfVNT20bfBdyPr0vQqEXvyR7U8TwD0DKVjJUoUBWuOMgpzEQLW1FQCuYmZv7g/s1600/animated_candle1.gif" /></a></div><br />
<div><u>நன்றி : கூகிள்</u> </div></div>எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-64303816644538849.post-6467419537411555722011-04-27T11:06:00.002+03:002012-02-06T16:40:00.166+03:00"வைரஸ் போயிடுச்சா?"<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEK4X5P-EuZVRLj8et_kwOv4i73ATBQcWpTcC2VeanghF6kkN994wRa1z2l2RaVblYGFEqzFNrtVjtMa_H9_j76Er1x-af1KU6caN5Pf2uS_lFw3sy5WtCDD7uS4q-M3MjVMXNOQ-FFw/s1600/IMG_3959%252B%252B2020_%252B06_%252B20%252B%2525D0%25259A%2525D0%2525B8%2525D0%2525B5%2525D0%2525B2%2525D0%2525BE-%252B%2525D0%25259F%2525D0%2525B5%2525D1%252587%2525D0%2525B5%2525D1%252580%2525D1%252581%2525D0%2525BA%2525D0%2525B0%2525D1%25258F%252B%2525D0%25259B%2525D0%2525B0%2525D0%2525B2%2525D1%252580%2525D0%2525B0%252B%2528104%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" j8="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEK4X5P-EuZVRLj8et_kwOv4i73ATBQcWpTcC2VeanghF6kkN994wRa1z2l2RaVblYGFEqzFNrtVjtMa_H9_j76Er1x-af1KU6caN5Pf2uS_lFw3sy5WtCDD7uS4q-M3MjVMXNOQ-FFw/s1600/IMG_3959%252B%252B2020_%252B06_%252B20%252B%2525D0%25259A%2525D0%2525B8%2525D0%2525B5%2525D0%2525B2%2525D0%2525BE-%252B%2525D0%25259F%2525D0%2525B5%2525D1%252587%2525D0%2525B5%2525D1%252580%2525D1%252581%2525D0%2525BA%2525D0%2525B0%2525D1%25258F%252B%2525D0%25259B%2525D0%2525B0%2525D0%2525B2%2525D1%252580%2525D0%2525B0%252B%2528104%2529.jpg" /></a></div>
<br />
<br />
<span style="background-color: yellow; color: blue; font-size: large;"><u>"வைரஸ் போயிடுச்சா..??" </u></span><br />
<br />
“SUN LIKES THE SUNDAY<br />
MOON LIKES THE MONDAY<br />
BUT I LIKE ONEDAY<br />
THATS YOUR BIRTHDAY”<br />
<br />
இதை காதலிகளுக்கு அனுப்பினாலாவது சந்தோஷப் பட்டிருப்-<br />
பார்கள். என் நண்பரின் பர்த்டேக்கு வந்த மெயிலை என்னிடம் <br />
காட்டி புளங்காகித மடைந்துக் கொண்டிருந்தார். இது ரொம்ப பழசு <br />
என்று சொன்னால் எங்கே மனசொடிந்து விடுவாரோ என்றெண்ணி, <br />
<br />
"இது உங்க கேர்ள் ஃபிரெண்ட் அனுப்பியதா?" என்றேன்.<br />
<br />
"ஹி.. ஹி.." <br />
<br />
"இல்ல குளோஸ் ஃபிரெண்ட் அனுப்பியதா?" <br />
<br />
"இது என் வீட்டுக்காரங்க அனுப்பியது" என்று மரியாதையாக <br />
சொன்னார். (மறுபடியும்) ஹி.. ஹி...!! அப்பாடா என்ன ஒரு <br />
மரியாதை!! என்ன ஒரு மரியாதை!! அப்படி தான் இருக்கணும். <br />
அவ்வ்வ்வ்....!!<br />
<br />
கஸ்டமர் கேர் கவுண்டரில் உட்கார்ந்திருந்த எனக்கு இந்த கொசுத் தொல்லையில் இருந்து தப்பிக்க, யாரும் கிடைத்தால் போட்டு <br />
கும்மலாம் என்று தோன்றியது.<br />
<br />
அப்போது வெளியில் நின்றிருந்த செக்யூரிட்டி(அரபி) பணம் <br />
அனுப்ப வந்த ஒரு "சிரியா" கஸ்டமரை அழைத்து வந்து, அவர் <br />
பணம் அனுப்ப வழிமுறைகளை சொல்லும்படி கேட்டுக் கொண்டார். <br />
அந்த நேரம் உண்மையிலேயே 'சர்வர் ப்ராப்ளம்'. என்றாலும் அதை <br />
எப்படி அவருக்கு சொல்லி விளங்க வைப்பது?? சும்மா "வைரஸ் <br />
ப்ராப்ளம்" என்று சொல்லி வைத்தேன். "அப்படியா?" என்று கேட்டுக் <br />
கொண்டு போய் விட்டார். பிறகு நான் அதை மறந்தும் விட்டேன்.<br />
<br />
அரைமணி நேரம் சென்றிருக்கும். திரும்பி வந்த அவர், <br />
"முஹம்மது ஃபைரூஸ் போயிடுச்சா?" என்று கேட்டார். எனக்கு <br />
சட்டென்று விளங்கவில்லை. நான் வைரஸ் என்று சொன்னதை <br />
தான் அவர் 'ஃபைரூஸ்' என்று புரிந்துக் கொண்டார் என்று அறிந்த <br />
நான்.. கிர்ர்ர்ர்ர்… ஆனேன்.<br />
<br />
+++++++++++++++………………………+++++++++++++++++…………………….<br />
<br />
<span style="background-color: cyan; color: black; font-size: large;"><strong><u>தகவலோ தகவல்:</u></strong></span><br />
<br />
இச்செய்தியினை மற்றவர்களோடும் பகிர்ந்து கொண்டால் பயன் பெற ஏதுவாயிருக்குமென நம்புகின்றேன்.<br />
<br />
1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.<br />
<br />
2) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://www.campuscouncil.com/ என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும்.<br />
<br />
3) மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.<br />
<br />
4) தீ விபத்துக்களினாலோ அல்லது பிறக்கும் போதே வாய், காது , மூக்கு போன்ற உறுப்புக்களின் வளர்ச்சி குறைந்த நிலையில் இருந்தாலோஇலவசமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள முடியும். PASAM Hospital , Kodaikanal மேலும் தகவல்களைப் பெற PASAM மருத்துவமனைக்கு 045420 240668,245732 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.<br />
<br />
5) வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.<br />
<br />
6) அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே!<br />
<br />
அதனால் நம்மால் முடிந்த வரை<br />
<br />
*மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம்.<br />
<br />
**நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்<br />
<br />
***ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.<br />
<br />
7) இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராணவாயு அளிக்கும் மரங்களை நட்டு அவற்றிற்கும் மரியாதை செய்வோமே!!<br />
<br />
8) கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 <br />
மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும். <a href="http://ruraleye.org/">http://ruraleye.org/</a> <br />
<br />
9) பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471<br />
<br />
<span style="background-color: #fff2cc; color: red;"><u>10) இரத்தப் புற்று நோய்:</u></span><br />
<br />
"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.<br />
<br />
மேலும் விபரங்களுக்கு<br />
<br />
East Canal Bank Road, Gandhi Nagar,<br />
Adyar Chennai - 600020<br />
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்<br />
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241<br />
<br />
* <br />
நன்றி : பண்புடன் குழுமம் ஜீவா.K.S + ஷாஜஹான் <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSR63c973M9QG8r7egVIOGVQxggC4ALlFllT94e_gi1gV_sXUax9S4hqoSPnkpTRESL_jT-tHtULPPJyWWL64TIm_DrjV8hFITJbi91UIcWROfbGsQM_j3F_ASMTWySli5lMf9HboSQQ/s1600/ATT00012_.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" j8="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSR63c973M9QG8r7egVIOGVQxggC4ALlFllT94e_gi1gV_sXUax9S4hqoSPnkpTRESL_jT-tHtULPPJyWWL64TIm_DrjV8hFITJbi91UIcWROfbGsQM_j3F_ASMTWySli5lMf9HboSQQ/s1600/ATT00012_.png" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
</div>எம் அப்துல் காதர்http://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.com24