facebook

நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, செப்டம்பர் 24, 2010

"ரங்ஸ்"களின் ஆ‘தங்ஸ்’!!!

                                                                  
"ரங்ஸ்"களின் ஆ‘தங்ஸ்’!!!


என் நண்பர் ஒருவர் தன் மனசில் உள்ள ஆ'தங்ஸ' ...ச்சே.. ஆ'ரங்கஸ' சொல்லிக் காட்டிக் கொண்டிருந்தார்.

..........என்னன்னு

“எம் பொண்டாட்டி என்ன ஒரு பைசாவுக்கு மதிக்க மாட்டேங்குறா?

"நீதான் சொல்லுவியே அவங்க உன்ன ஆஹா ஓஹோ ன்னு வச்சுக்குராங்கன்னு"

"அதெல்லாம் அப்ப"

" இப்ப என்னா"

"பையன் கால் மேல கால் போட்டுக்கிட்டு படிச்சிக்கிட்டிருந்தாம்பா
அதுக்கு அடிக்கிறாப்பா"

"பையனைத் தானே"

"என்னை"

"என்னது..தூ..தூ?"

"ஆமாப்பா ஆமா"

"விளக்கமாச் சொல்லு?"

""முன்பெல்லாம் பையன் அது மாதிரி செஞ்சா, "அப்பா மாதிரியே புள்ள கால் மேல கால் போட்டுக்கிட்டு படிக்கிறான்னு" பெருமையா சொல்லுவா."

"சரி இப்ப?"

"பயபுள்ள கால் மேல கால் போட்டுக் கிட்டு படிக்கிது
வெளங்குமான்னு,, கால்லேயே அடிக்கிறாப்பா"

"சரி விடுப்பா குழந்தைகள கொஞ்சம் அடிச்சு வளத்தா தப்பில்ல"

"அட நீ வேற,, அவன் எந்த கால மேல தூக்கிப் போட்டு படிச்சானோ, அதே மாதிரி எனது வலது கால்லேயே அடிக்கிறாப்பா....!! அப்ப தான் அவன் திருந்துவானாம்"

ஙே..?

சரி அதெல்லாம் விடு...

"பொம்புள புள்ளப்பா தூங்கிக்கிட்டிருந்தா அதுக்கு அடிக்கிறாப்பா"

"என்னா...தூ தூங்குற புள்ளைய அடிக்கிறாங்களா??

"இல்ல ... என்னைப்பா..."

“இல்ல இப்பவும் வெளங்கல..விளக்கமாச் சொல்லு..!!”

"ஏண்டா நான் சொல்றத புஞ்சிக்கவே மாட்டேங்கிறீங்க..ஆஆஆஆ ஆஆஆஆஆ?"

"சரி.. சரி.. கூல் டவுன் சொல்லு "

""முன்னெல்லாம் கொழந்த தூங்கிக் கிட்டிருந்தா, "பாரு அப்பா மாதிரி என்னா ஸ்டைலா, படா ஜோரா நெத்தியில கைய வச்சுக்கிட்டு தூங்குறா"...ம்பா""

"சரி"

"கேட்க கேட்க ஜிவ்வுன்னு இருக்கும்"

"பின்ன இப்ப என்ன?"

"அன்னிக்கி அது மாதிரி தாம்பா புள்ள எங்கிட்ட படுத்து தூங்கிக் கிட்டிருந்தா, “பொளேர்” ன்னு என்ன அரஞ்சுப்புட்டு, நெத்தியில இருந்த புள்ளைடா கைய்ய எடுத்துப் போட்டுட்டு, "என்னா நெனப்புல தூங்குதோ" ன்னு சொல்லிக்கிட்டே தூக்கிட்டு போறா.. பதறிடுச்சு புள்ள "

"புள்ள பதறுனுச்சா... நீ பதறுனியா....??"

"நண்பனாடா நீ?"

"அப்ப எங்கிட்ட வந்து ஏன் சொல்றே?"

"பின்னே பான்-கீ-மூன் கிட்டயா போய் சொல்ல முடியும்?"

போய்ட்டான்.....

நான் : கிர்ர்ரர்ர்ர்ர்ர்ர்ர்

கிஸ்கி : இதெல்லாம் ‘என்னை’ நானே நண்பனாய் கற்பனை
செஞ்சுகிட்டு எழுதினதான்னு யாரும் எதிர் கேள்வி கேட்கப் படாது??

கேட்டா... (அசரீரீ)

பிச்சுப்ப்.. புடுவேன்.. பிச்ச்ச்சு..... ஆமாஆஆஆஅ ....!!