facebook

மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், பிப்ரவரி 17, 2011

சக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்!! (டயாபடீஸ்)

சென்ற பதிவில் (ஆசையில்லா மனிதர்கள்) சஹர் பக்கிர்
பாவாவின் மகனார், தற்சமயம் வாடகை ஆட்டோ ஒட்டி அன்றாட
பிழைப்பு நடத்தி வருகிறார். அவருக்கு சொந்தமாக ஒரு ஆட்டோ
வாங்கிக் கொடுப்பதாக, நகையை தொலைத்து திரும்ப பெற்றுக்
கொண்ட நமது சொந்தக்காரர்கள் மகிழ்ச்சியோடு இன்று
தெரிவித்தார்கள். அவர்கள் இருவருக்கும் நமது வாழ்த்துகளை சொல்லுவோம்!!!
**************************************************************************************
கக்கு மாணிக்கம் அண்ணன் எல்லோருக்கும் டாக்டர் பட்டம் கொடுத்தாலும் கொடுத்தார். அவரர்கள் ஒரிஜினல் டாக்டர்
ரேஞ்சுக்கு மருத்துவப் பதிவெல்லாம் எழுத ஆரம்பித்து
விட்டார்கள். நமக்கும் தானே அவர் டாக்டர் பட்டம் கொடுத்தார்.
நாமும் மருத்துவத்தைப் பற்றி எழுதலாம் என்று இங்கே ஒரு
பதிவை போடுகிறேன். டாக்டர்கள் வாழ்க!! ஹி..ஹி.. (நான் என்னை சொல்லிக் கொண்டேன்.)
                                                                                                                             

சக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்!! (டயாபடீஸ்)

சக்கரை வியாதி என்பது ஒரு கொடிய நோய் அல்ல. வாயைக்
கட்டி பேணினால் எல்லா நோயும் ஒரு அடி எட்டி நின்று
வேடிக்கைப் பார்த்து விட்டு எட்ட ஓடிப் போய் விடும்.

சரி இந்த சக்கரை நோய் எப்படி வருகிறது?

சாதரணமாக bp உள்ளவர்களுக்கு மன அழுத்தம் கூடும்போது சத்தமில்லாமல் இந்த நோய் இவர்களுக்கு  இலவச இணைப்பாய்
ஒட்டிக் கொள்கிறது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கும் பிரிஸ்கிரிப்ஷன்களை தவறாது பயன்படுத்தி,
சாதாரண நடையோ - வேக நடையோ நடந்து உடலை
கண்ட்ரோலில் வைத்துக் கொண்டாலே போதுமானது. அதை
விடுத்து bp வந்து விட்டதே என்று கவலைப்பட்டு, இன்னும்
பல கவலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டால் கேட்கவே
வேண்டாம். சர்வசாதரணமாக இந்த சுகர் நோய் அளவைக்
கடந்து விடும்.

ஆகவே எந்த கவலைகளும் இல்லாமல் மன சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தாலே பாதி நோயை நம்மை அண்ட
விடாமல், மற்றவை உண்ணும் உணவிலும், வாழும் பழக்க வழக்கங்களிலும் மனிதர்கள் திருப்திகரமாக வாழ்ந்து விடலாம். சுகாதாரமாக வாழ்வதற்கு சுற்று புற சூழ்நிலையும் காரணிகளாக அமைகின்றன.

ஒன்றுமே புரியாமல் bp உள்ள மனிதர்கள் உண்டு தின்று வாழும்
போது, திடுதிப்பென்று சுகர் 240 - 350 வந்துவிட நிலைகுலைந்து போகிறார்கள். அதை சாப்பிட வேண்டாம் இதை சாப்பிட
வேண்டாம் எனும் போது மேலும் வெறுத்துப் போகிறார்கள்.

அதனால் நாம் எப்போதுமே வருடத்துக்கு ஒரு முறை மெடிக்கல்
செக் அப் செய்து வருவது தான் பாதுகாப்பான விஷயம். இங்கே
சவுதியில் பெரும்பாலான கம்பெனிகளில் மெடி-இன்சூரன்ஸ்
இருப்பதால் மூன்று மாததிற்கொருமுறை ஃபுல் செக்அப் செய்து
கொள்ள சொல்லி (இது உங்கள் காசல்லவே இன்சூரன்ஸ் தானே
தருகிறது என்று) டாக்டர்களே வற்புறுத்துகிறார்கள். அதுவும்
நல்லதுக்கு தானென்று நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

சக்கரையை உடனடியாய் கண்ட்ரோலுக்கு கொண்டுவர நாம்
அன்றாடம் காய்கறிகளில் சேர்த்துக் கொள்ள பயன்படுத்தும் வெண்டைக்காய் மிகப் பெறும் பயனைத் தருகிறது.


இந்த நோய் இருப்பவர்கள் கொஞ்சம் வெண்டைக்காயை வாங்கி
ஸ்டாக் வைத்துக் கொள்வது நல்லது. தினம்  இரண்டே இரண்டு
வெண்டைகாயை தலையையும் வாலையும் வெட்டிவிட்டு, இரவில் படுக்கப் போகுமுன், மேலே படத்தில் உள்ளது போல் ஸ்லைஸ் ஸ்லைசாக வெட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு கிளாஸ்
தண்ணீரில் அவைகளை  போட்டு ஊறவைத்து மூடிவிடவும்.

காலையில் எழுந்தவுடன் அந்த ஊறவைத்த தண்ணீரை எடுத்து,
ஸ்லைஸ் வெண்டைக்காய்களையும், கொட்டைகள் உதிர்ந்து
கிடந்தால் அவைகளையும் ஒரு ஸ்பூனால் எடுத்துப் போட்டு
விட்டு, அந்த தண்ணீரை மட்டும் பல்விளக்கியபிறகு வெறும்
வயிற்றில் அப்படியே குடித்து விடவும். இது போல் தொடர்ந்து
செய்துவர சுகர் அளவு சட்டென்று குறைந்து, கண்ட்ரோலில்
இருக்கும். இதை எனது நண்பர் கடை பிடித்து வந்ததால் தெரிந்து
கொண்ட பலன். உங்களில் யாருக்கேனும் இஷ்டமானவர்களுக்கு
சுகர் கட்டுக்கடங்காமல் இருந்தால் நீங்களும் இதை பரிட்சித்துப்
பாருங்கள். பிறகு சுகர் அளவையும் சோதித்துக் கொள்ளுங்கள்.

இருங்க!! இன்னொரு குறிப்பையும் சொல்லிவிட்டு போகிறேன்
யாரும் அடிக்க வராதீங்க!!

இரவில் கண்விழித்து நெடுந்தூரம் காரோட்டி பயணிப்பவர்களுக்கு,
வழியில் தூக்கம் வருவதைப் போல் கண்கள் செருகினால்,
எங்காவது ஓரிடத்தில் காரை நிறுத்தி சிறிது நேரம் கண்ணுறங்கி
விட்டு செல்வார்கள் பார்த்திருக்கிறோம். அப்படியல்லாது விரைந்து பயணிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு யோசனை!!

சிறிது நீரை உள்ளங்கையில் ஊற்றி மூக்கால் உறிஞ்சினால், சுரீர்
என்று புறை ஏறுவது போல் ஏறி உடல் சுறுசுறுப்பாகிவிடும்.
அப்பொழுது பழையபடி நெடுந்தூரம் பயணத்தை மேற்கொள்ளலாம்.

நடிகவேல் ‘எம் ஆர் ராதா’ சொல்லக் கேட்டு - அவர் மகன் நடிகர் ‘ராதாரவி’ (திரும்பிப் பார்க்கிறேன் - ஜெயா டிவி)

புதன், ஜனவரி 05, 2011

நண்பரைக் கண்டேன்..!!


நண்பரைக் கண்டேன்..!!

என் நண்பரில் ஒருவருக்கு உடல் நலமில்லை என்று தகவல்
வந்து போய் பார்க்க நேரமில்லை. எனக்கு சில நேரங்களில் மனதில் நோயாளி களை நாம் போய் டிஸ்டர்ப் செய்யக் கூடாது என்று
தோன்றும். ஆனால் நாம் போய்  பார்த்தால்  அவர்களுக்கு  மனதில்    ஆறுதலாக    இருக்கும்  என்று பெரியவர்கள்     சொன்னதை  மனதில்   கொண்டேன்.   இந்த     வாரம்   தான் அதற்குரிய  நேரம் கிடைத்தது.
கொஞ்சம் ஆப்பிள், கொஞ்சம் இதர பழங்கள், ஹார்லிக்ஸ் எல்லாம்
வாங்கி போட்டுக் கொண்டு போன போது வீட்டில் கச்சா முச்சா
வென்று அப்படி ஒரு கூட்டம்.

அப்படி உடம்புக்கு என்ன?

வயிற்று வலியாம்!

சரி   அதிலென்ன   பிரச்சினை?  வயிற்று   வலி   என்பது 
எல்லோருக்கும் வரக்  கூடிய   பொதுவான   பிரச்சினைதானே? 
இவருக்கு  மட்டும்   என்ன புதுசா என்று நான் நினைத்தது
அவருக்கு கேட்டிருக்க வேண்டும்.

அதை   டெலிபதி   என்பார்களே.   அப்படிஎன்றால்   நமக்கு   டெலிபதி
உணர்வு   ஏற்படுவதற்கு   பலகோடி   வாய்ப்புகள்   இருக்கு.  "சபாஷ்டா
தம்பி"  என்று என்னை நானே மனதிற்குள் பாராட்டிக்கொண்டு, அவர் சொல்லப் போகும் செய்தியை கேட்க உட்கார்ந்தேன். கச்சா முச்சா வெல்லாம் விலகி வீடு அமைதியானது.

“எனக்கு ஆரம்பத்தில் வாரம் ஒருமுறை தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து  குளிக்கும் பழக்கம் இருந்தது. அது ஒரு நல்லப் பழக்கம் தான் உடம்பு இலேசாகும். கண்கள் குளிர்ச்சியாகும். தூங்கனும் என்று மனசு நினைத்தவுடன் படுத்தோம்னா தூக்கம் வந்துடும்”

"சரி இப்ப என்ன??"

“சவுதி போன பிறகு அந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போய் மாதம் ஒரு முறையாகிப் போனது”

“ம்ம்ம்”

"ஆனாக்கா பாருங்க, கல்யாணம் முடிஞ்ச பிறகு அந்த பழக்கமே நின்னு சுத்தமா போச்சு"

சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க நினைத்து, பல்லு வரை வந்ததை, உதட்டால் மூடி தடுத்துக் கொண்டேன்.

பிறகு அதை அவரே சொன்னார். அது தாம்பத்தியத்தில் ஏதோ
பிரைச்சினை வரும் என்று யாரோ சொன்னார்களாம்.

சரி நாம அதைப் பற்றி இப்ப பேச வரவில்லை. அவரின் உடல்
நலம் பற்றி விசாரித்து விட்டு எழுந்து விடலாம் என்று நினைத்த
எனக்கு அவர் ஒரு தியரியே நடத்தினார்.

“சவுதி வந்த பிறகு எண்ணெய் தேய்த்து குளிப்பதை எப்ப நிறுத்தி
னேனோ அப்பவே எனக்கு வயிற்று வலி தலைக் காட்ட
ஆரம்பித்தது. இது இந்த சூடான பூமியின் தட்பவெப்ப நிலையால் நிகழ்கிறதென்றே கருதினேன். குடும்பம் எந்தவிதத்திலும் கஷ்டப்
பட்டுவிடக் கூடாதென்பதற்காக, நேரத்திற்கு கூட சாப்பிடாமல்
சுழல ஆரம்பித்திருந்தேன்.

வயிற்றில் வலி வரும்போது ஆபீஸ் வேலை எதிலும் நாட்டம்
வராது. புரட்டி எடுக்கும். உட்கார விடாது. படுத்தால் தூக்கம் வராது. சாப்பிட்ட சாப்பாட்டை வாந்தி எடுத்து வயிறு காலியான பின்னரே
அந்த வலி விடும். அப்படியாப்பட்ட ஒரு அவஸ்தையை தந்துக் கொண்டிருந்தது. இதனால் எதையும் விரும்பி சாப்பிடும் எண்ணம்
குறைய ஆரம்பித்தது. வலி வரும் போது ஆலிவ் எண்ணையை
கொஞ்சம் எடுத்து தொப்புளைச் சுற்றி வயிற்றில், தடவினால்,
அல்லது தலையில் தடவினால் அந்த வலி நின்று போய்விடும்.
ஆனால் உடம்பு பலஹீனப்பட்டுப் போன மாதிரி ஃபீலிங்க்ஸ் வரும்.

இந்த நிலையில் ஒரு தடவை ஊருக்கு வந்தபோது தான்
அம்மா, "இப்படியே வலிவருது வலிவருதுன்னு வச்சுக்கிட்டே இருக்கீங்களே ஒரு எட்டு டாக்டரை போய் பார்த்து என்ன ஏது
என்று கேட்கலாம்ல" என்று சொன்னங்க.அவர்கள் சொல்வதும்
ஒரு விதத்தில் சரியானதாகவேப் பட்டது.

டாக்டரை கன்சல்ட் செய்த போது, ஆபரேஷன் செய்யணும்
வயிற்றை ஸ்கேன் எடுத்து வாங்க என்று எழுதிக் கொடுத்தார்.
ஸ்கேன் எடுக்க சென்ற போது, “எதற்கு இது?” என்று அந்த டாக்டர்
கேட்க, விவரம் சொன்னேன். “வயிற்று வலிக்கு எதற்கு ஆபரேஷன்”
என்று வினா எழுப்பினார். அப்ப மனசில் பொறி தட்டியது. இரண்டு டாக்டர்களுக்குள் ஏன் இந்த முரண்பாடு? ரிசல்டை வாங்கிக் கொண்டு வந்து விட்டேன்.

எனக்கு எப்பவுமே ஒரு குணம் உண்டு தம்பி. என் மனசுக்கு ஒத்து
போகிற விஷயங்களோடு தான் நானும் இயயைந்து போவேன். இல்லையேல் அது என்மனசோடு ஒட்டாது.

எங்களுடைய ஃபேமிலி டாக்டரிடம் கன்சல்ட் செய்யலாமென்றால் அப்பொழுது அவர் ஊருக்கு போயிருந்ததாலேயே மேற்படி
டாக்டர்களை பார்க்க வேண்டி இருந்தது. அவருடைய போன்
நம்பரை மறுநாள் தேடி எடுப்பதற்குள், தெய்வாதீனமாய் அவர்
ஊரிலிருந்து திரும்ப வந்து விட்டார்.

ரிசல்டை வாங்கி பார்த்து விட்டு "ஆபரேஷன் செய்து வலியை
எப்படி வெளியே எடுப்பாங்களாம். அந்த டாக்டரிடம் கேட்டீங்களா?"
என்றார். பின்னர்  "உடம்பில் எந்த காரணத்தைக் கொண்டும்
'கத்தி'யை வைக்காதீர்கள். அப்புறம் எல்லா காலத்திலும் நோய்
நோய் என்றே உங்கள் வாழ்க்கை ஆகிவிடும். இதை நான்
உங்களுக்கு முன்பே சொல்லியிருக்கிறேனே மறந்துட்டீங்களா?"
என்றார் கூலாக.

இந்த டாக்டரைப் பற்றி நிறைய சொல்லணும். ஆனா பதிவு
நீள்கிறது. இப்ப ரெண்டு வரியாவது சொல்லிவிடுகிறேன். பக்கா
டீசன்ட். நிறைய பணம் பண்ணனும் என்றெல்லாம் யோசிக்க
மாட்டார். சமயங்களில் நான் காசு கொடுத்தாக் கூட வாங்கவே
மாட்டார். போய் உடம்ப கவனிச்சிங்க என்பார்.அதனாலேயே சவூதியிலிருந்து வரும்போது ஒவ்வொரு தடவையாய் ஒரு
ஸ்டெத், ஒரு BP செக்கப் காம்போனன்ட் என்று அவருக்கு
தேவைப்படும் விஷயமாய் வாங்கி கொண்டு வந்து அவர்
மறுத்தாலும் வைத்து விட்டு போய் விடுவேன்.

'குலாம்அலி' அப்படி இப்படி என்று ரசனையாய் பாட்டு கேட்பார்.
“ரிடயர்ட் ஆர்மி கேம்பில்” காலை டூட்டி. மாலை கிளினிக் என்று
நூல் பிடித்த மாதிரி வாழ்க்கை. பிள்ளைகள் காலேஜில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

"சரி, நான் ஒரு ஹாஸ்பிடலுக்கு லெட்டர் தருகிறேன். அங்கே
போய் உங்களை ஒரு ஃபுல் உடல் செக்அப் செய்து கொண்டு
வாங்க. அப்பத்தான் உங்களுக்கும் மனசுக்கு திருப்தியாய் இருக்கும்". என்றார்.

நான் "ஆபரேஷன் ஏதும் ...!!" என்று வாய் திறந்தபோது,

"அப்படி அவசியம் என்றால் எனக்கு போன் பண்ணுங்கள் நான்
பேசிக்கிறேன்" என்று முடித்து விட்டு கிளம்பி விட்டார்.

சென்னைக்கு கிளம்பிவிட்டேன். அது ஒரு ஸ்டார் ஹாஸ்பிடல்.
வயிற்ரை காலியாக வைத்து எல்லா டெஸ்டும் முடிந்து ரிசல்ட்  
நார்மல் என்றாலும், OGD என்று சொல்லக் கூடிய (Oesophago Gastro
Duodenoscopy) டெஸ்டில் உங்களுக்கு வாய்வழி சென்று குடலை
அடையும் ட்யூபில் லேசான வளைவு இருப்பதால் நீங்கள்
சாப்பிடும் சாப்பாடு சீக்கிரம் ஜீரணமாகாமலும், அதே சமயம்
உணவு செரித்தாலும் கேஸ் ஏதும் உருவானால் முன் வழியாக
வோ பின்வழியாகவோ வெளியேற வாய்ப்பு மிகக் குறைவாக
இருப்பதால், அதுவே அங்கே தங்கி உங்களுக்கு வயிற்றில்
வலியைக் கொடுக்கிறது என்றார்கள். ஆகவே படுத்துறங்கும்
போது தலைப்பக்கம் சற்று உயரத்தை அதிகப்படுத்தி சற்றே
சரிவாகப் படுக்கச் சொன்னார்கள். தொடர்ச்சியாய் டெய்லி OMEZ
மாத்திரை எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள்.

அது உடம்புக்கும் மனதுக்கும் நல்லாவே இருந்தது. பின்னர்
அதுவே தொடர்ச்சியாய் மாத்திரை சாப்பிடுகிறோமே என்று
நிறுத்திப் பார்த்தேன். அதனால் தான் இப்ப வலி விட்டது" என்றார்.

கண்சிமிட்டாமல் அவர் சொல்வதையே பார்த்துக் கொண்டிருந்து
விட்டு "அப்புறம்..." என்றேன்.

"அப்புறமென்ன அதுவே Pantoprazole என்கிற (pantop -40) Tablet டாக
 மாற்றி தரப்பட்டது. சாப்பிடுகிறேன். அதிலும் குழப்பம் வந்து
திரும்ப வலி வந்தது".

"எப்படி??"

"சாப்பாட்டுக்கு முன் மாத்திரை சாப்பிடச் சொல்கிறார்களே என்று சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்துக் கொண்டு,அந்த மாத்திரையை பிய்த்துப் போட்டுக் கொண்டு உடனே சாப்பிடுவேன். அப்பவும் அடுத்த அரை மணி நேரத்தில் வலி வர ஆரம்பித்தது"

"பிறகு என்னாச்சு ...??"

பின்னர் டாக்டரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது தான்,
"சாப்பாட்டுக்கு முன் என்பது, சாப்பிடும் ஒரு மணி நேரத்திற்கு
முன் அல்லது அரைமணி நேரத்திற்கு முன்னர் என்று கொள்ள
வேண்டும்" என்று முடித்தார்.உடம்பை கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு விடைப்பெற்று கிளம்பி வந்தேன்.

டிஸ்கி :  அனுபவம்  என்பது   நம்மை   தேடிவரும்.   அல்லது   நாம்   
தேடி போகணும்.  அவரிடம்   பேசிக்   கொண்டிருந்த போது நமக்கு
ஒரு அனுபவம் கிடைத்தது.எவ்வளவு தான் குடும்பத்துக்காக
உழைத்தாலும் நேரத்துக்கு சாப்பிடனும், எந்த நோய் வந்தாலும்
நாமே ஒரு முடிவுக்கு வாராமல், அனுபவ டாக்டர்களை சந்தித்து கலந்தாலோசிக்கணும்!!