facebook

நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

மனதோடு மட்டும்..!!

                                                                           


                                                           




மனதோடு மட்டும்..!!


ன்று இங்கே (சவுதி-தம்மாம்) வெயிலின் தாக்கம் ரொம்ப அதிகமாக இருக்கிறது. 108 டிகிரி . (Feels like 118 F என்கிறார்கள்) ஹியூமிடிட்டி என்கிற தகிப்பு தாங்க முடியலங்க. குளித்து விட்டு டீக்காக டிரஸ் பண்ணிக் கொண்டு வெளியில் நடந்து வரும் போதே இன்னொரு முறை குளித்துக் கொண்டே வருவது போல் ஒரு ஃ பீலிங்கா இருக்கு.

ஆபீஸ் வந்து பார்த்தால் டிரஸ் எல்லாம் தொப்பலாக நனைந்து உடம்போடு ஒட்டி, ஏசியின் குளிரில் திரும்பவும் உடம்பு  குளிராகி விடுகிறது. இப்படியானால் உடம்புக்கு என்னாகும். நமது உடம்பை
விட்டுத் தள்ளுங்கள். வயதானவர்கள்??

பில்டிங் வேலைகள் பெரும்பாலானவைகள் பெரிய பெரிய விளக்குகளை எரிய விட்டுக் கொண்டு இரவில் நடைபெறுகின்றன. என்றாலும்  என்னா ஒரு கிளைமேட். இந்த நோன்பு நாளின் அவஸ்தை சொல்லி மாளலை.

இது இவ்வாறிருக்க இதே வெப்பத்தினால் நேற்றும் அதற்கு முந்திய தினமும் இங்கே எங்கள் வங்கியில் நடந்த சம்பவத்தை பகிர்கிறேன்.

முந்திய தினம் நல்லக் கூட்டம். அவ்வளவு கூட்டம் உள்ளே
புகுந்தால் ஏசி உருப்படியாய் வேலை செய்யாது. மக்கள் வியர்வையால் வழிகிறார்கள். என்ன வென்று சொல்வது. அந்த சமயம் ஒருவர் மயக்கம் போட்டு விழுந்து விட்டார். பதட்டத்தில் எல்லோரும் கூட்டமாய் அவரை சுற்றி நின்றுக் கொண்டு காற்று கூட அவர் மேல் பட விடாமல். (என்னா ஒரு அக்கறை??) எல்லாரையும் சத்தம் போட்டு நகற்றி விட்டு அவர் முகத்தில் நீர் தெளித்து, சேரில் தூக்கி உட்கார வைத்து (தாகத்துக்கு நீர் கொடுக்கலாம் என்றால் (பகலில்) நோன்பா இருப்பாரோ என்ற ஒரு அச்சம் வேறு)

அங்கு நின்ற ஒரு அரபுக்காரர் சக்கரையை நீரில் கரைத்து வாயில் ஊற்று என்றார். நாங்கள் நோன்பு காரணத்தை சொன்னவுடன் அவர் அமைதியானாலும், மயக்கமுற்றவரை கேட்டு பார்ப்போமே என்று கேட்டோம். அவர் வேண்டாமென்று மறுத்து விட்டார். அப்படியே அவர் நோன்பில்லாவிட்டாலும், அவர் டயாபெடிஸ் பேஷண்டாக இருந்தால் என்ற கேள்வியும் எழுந்தது.

ஹாஸ்பிடலுக்கு அழைத்து அல்லது ஆம்புலன்ஸ் சொல்லலாம் என்றவுடன் அதையும் அவர் மறுத்து விட்டார். நெடுநேரம் உழற்றியபடியே உட்கார்ந்திருந்தார். பாவமாக இருந்தது. அவர் நம் இந்திய தேசத்துக் காரார்.

நேற்று இரவு இது மாதிரி ஒரு சம்பவம் வேறு மாதிரியாக. வங்கியில் கூட்டம் அலைமோதிய நேரம். கூட்டத்தை கடந்து கவுண்டரில் பணம் கட்டிவிட்டு வெளியே போக முனைந்த பிலிப்பைனி நாட்டை சேர்ந்த ஒருவர், சரேலென்று குப்புற விழுந்தார். நச்சென்று முகம் தரையில் அடித்து, மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் ரத்தம் சிதறியது. பதறி விட்டோம். (என்ன இது பழம் பழுத்து விழுவது போல் மனிதர்கள் விழ ஆரம்பித்து விட்டார்கள் என்று மனதில் நினைவு ஓடுகிறது)

அதற்குள் துள்ளி வெளியே ஓடிவந்த எங்கள் வங்கி கேஷியர் (ஏமன் தேசத்து அரபுக்காரர்) அந்த நபரை ஆதரவா தூக்கி, அவர் வாயிலும் முகத்திலும் வழியும் ரத்தத்தை துடைத்து அவரை புத்துணர்ச்சி யாக்கி, தரையில் வழிந்திருந்த ரத்தத்தை துடைத்து, சிறிது நேரத்தில் அவ்வளவும் கண் முன்னே நடக்கிறது. மனிதர்களில் பலர் ரமளானின் நன்மைகளை எப்படியெல்லாம் சம்பாதித்துக் கொள்கிறார்கள்.

நமக்கு தெரிந்தே இவைகள் நடக்கும் போது, நமக்கு தெரியாமல் என்னென்ன நடந்திருக்கும். நினைக்கவே பயமா இருக்கு.  இந்த
global warming ஐ நினைத்தால்....!!

இவ்வளவு கூட்டத்துக்கும் அலைமோதலுக்கும் நடுவேயும் பழகிய தெரிந்த முகங்கள் யாரவது வந்து விட்டால் பேசக் கூட வாய்ப்பில்லாது போகும் தருணம் உண்டு. அதுவும் நேற்றே நடந்தது. தல செ.சரவணக்குமார் வந்து தலை காட்டினார். (உண்மையான தலையை தான்!! தொப்பி போட்டு மறைக்காமல்!) நெடுநேரம் அவரோடு கனிவாய் பல விஷயங்கள் பேச நினைத்தாலும், இது மாதிரி சூழ்நிலைகள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதை புரிந்து கொண்ட அந்த நல்ல உள்ளம் பிறிதொரு நாள் வருவதாக சொன்னது. இந்த ஆற்றாமையை அன்பு நண்பர்கள் ஸ்டார்ஜன், "சிநேகிதன்" அக்பரிடமும் தான் சொல்லி ஆற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

எத்தனையோ hyper market கள் இருந்தும் நோன்பு நாளில் பொருட்களின் விலை இங்கே சற்றே கூடுதலாகி விடுகிறது. அதில் பழங்கள் முதலிடத்தை வகிக்கிறது. எல்லாமே இரண்டு மடங்கு மூன்று மடங்கு. ஸீசன் பிசினெஸ் என்பது இது தானோ??
                                        
                                      
                                 
                   
 
                       

புதன், ஆகஸ்ட் 04, 2010

மாநகரக் காவல்..!

                                                                              



மாநகரக் காவல்



எங்களூர் மெட்ரோ பாலிட்டன் சிட்டி. நான் வாக்கப்பட்டு போன ஊர் காஸ்மோ பாலிட்டன் சிட்டி. ஊர் பேர சொன்னா எங்கே கண்டுபிடிச்சுடு வீங்களோன்னு இந்த ஏற்பாடு. அதனால அது ஒரு அழகிய சிற்றூர்ன்னு வச்சுக்குவோமே!

இந்த ஊரை காவல் காப்பதற்காக நேபாளில் இருந்து ஒரு கூர்க்கா பிரெஷ் ஆகா இறக்குமதி செய்யப் பட்டிருந்தார். பேரென்ன?? பகதூர்.

அவருக்கு சம்பளம் + அலவன்ஸ் + இதெல்லாம் எப்படி?

சம்பளம் = வீட்டுக்கு இவ்வளவு என்று தொகை நிர்ணயிக்கப் பட்டிருந்தது.

அலவன்ஸ் = வீட்டுக்கு வீடு அலைந்து அவரே அதை வசூல் செய்துக் கொள்வது.

நிர்வாகம் கொடுத்த தென்னவோ ரெண்டு செட் டிரஸ்ஸும், மூன்றடி நீளமுள்ள ஒரு குச்சியும் (அதன் நுனியில் ஒரு துளை யிட்டு கயிறு கட்டி, அவர் தோளில் மாட்டி தொங்க விட்டுக் கொள்வதற்கு வசதியாக) + டார்ச்சும் தான் போலும்.

அப்ப நான் இங்கிருந்து ஒரு VACATION போய் இருந்த சமயம்.. ஊரில் தான் ரோடு லைடெல்லாம் பளீரென்று எரியுமே! நானும் என் மைத்துனரும், இன்னுமிரு நண்பர்களும் வெளியூர் போய் விட்டு கொஞ்ச நேரம் மிச்ச மிருந்ததால், செகண்ட் ஷோ சினிமாவையும் பார்த்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தோம். நாங்கள் லேட் நைட் பஸ்ஸை விட்டு இறங்கி கொஞ்ச தூரம் நடந்து போகையில் பின்னாடியே "பீங் பீங்” என்று விசில் சத்தம்.

யாராய் இருக்கும்... ஒருவேளை போலீஸோ?? அதுவும் இந்த ஊருக்கா..? ச்சே..கற்பனையை முடிக்கு முன்னே,

சைக்கிளில் வந்த பகதூர், எங்கள் கிட்ட வந்தவுடன் தொபீரென்று குதித்தான்...

அந்த நேரம் ரோட்டில் யார் நடந்தாலும் விசாரிக்கணும் என்று கூர்க்காவுக்கு உத்தரவு போலும். எங்கள் எதிரில் வந்தவன் எங்கள் மூஞ்சி மேல் டார்ச்சடித்தான்.

என் மச்சினரைப் கண்டவுடன் ஒரு சல்யூட் அடிச்சான் (நாட்டமையோட மச்சினராச்சே) மற்ற மூவரும் ஏற்கனவே அவனுக்கு அறிமுகமானவர்கள், நான் அவனுக்கு புதிது போல. என் மேலும் டார்ச்சடித்தான். உடனே மச்சினர் "அவர் என் மச்சான்டா" என்று சொல்லவும், பகதூர் விளங்கிக் கொண்டான்.

ரோடெல்லாம் திட்டுத் திட்டாய் இருட்டு. அவன் சைக்கிளில் ஏறி கொஞ்ச தூரம் போய்க் கொண்டிருக்கும் போது, என் நண்பனில் ஒருவன், "டேய் இவன் வீர பகதூரா, இல்ல டுபாகூரா இப்ப செக் பண்றேன் பாரு" என்று சொல்லி, ரோட்டில் கிடந்த உடைந்த ஓட்டை எடுத்து, நாம் குளத்துத் தண்ணீரில் தத்தி தத்தி போவது போல் கல்லெறிவோமே, அது மாதிரி ரெண்டு மூணு உடைந்த கல்லோட்டை தட்ட...ட்ட்ட்....டென்று, தரையோடு தரையாக உரசிக் கொண்டு போகும்படி வீசினான்.

அது அந்த அமானுஷ்யமான இரவில், இருட்டில் ஏதோ வரக்கூடாத ஜந்து ஒன்று சத்தத்தோடு அவனை பின் தொடர்வதைப் போன்ற பிரமையை அவனுக்கு ஏற்படுத்தி இருக்க வேண்டும். “அய்யய்யோ... வென” அலறிய பகதூர், சைக்கிளிலிருந்து துள்ளிக் குதித்து கீழே சரிந்து விழுந்தான். சைக்கிளும் அவன் மேல் புரண்டு விழுந்தது.

"டேய் என்னடா இப்படி பண்ணிப் புட்டே" என்று நாங்கள் சற்றும் தாமதிக்காமல் அவனை தூக்கலாம் என்று ஓடினோம். அதைவிட நாங்கள்  “திமு திமு” வென ஓடிய சத்தமும், அவனை இன்னும் உலுக்கி இருக்க வேண்டும். அவன் மேலும் அரண்டு விட்டானோ என்னமோ தெரியலை. விழுந்துக் கிடந்த அவன் திரும்பவும் எழுந்து சைக்கிளைத் தள்ளிக் கொண்டே ஓட ஆரம்பித்து விட்டான்.

அப்படியே பேசிக் கொண்டு தத்தமது வீட்டுக்குப் போனவுடன், அந்த விஷயத்தை நாங்கள் சுத்தமாக மறந்தும் விட்டோம். ரெண்டு மூணு நாள் சென்று ஊரிலுள்ள குளத்தில் மீன்ப் பிடி ஏல குத்தகை விடும் செய்தி கேள்விப் பட்டு அங்கே போனோம்.

போகிற வழியில் தான் அந்த பகதூரின் வீடு இருக்கிறது. அந்த வீட்டைக் கடந்து போகும் போது, அவருடைய மனைவி வாசலில் நிற்பது கண்டு சும்மா விசாரித்து விட்டுப் போகலாமென்று, அவரையும் பகதூரையும் நலம் விசாரித்தோம். அந்த அம்மணிக்கு கொஞ்சம் தமிழ் தெரியும்.

"அவருக்கு ஜுரமா இருக்குங்க. எதுவுமே பேச மாட்டேங்கிறார். என்னன்னே தெரியல". என்றார். "எப்பத்திலிருந்து" என்று கல் வீசிய நண்பன் கேட்டான். "முந்தா நாள் நைட்லேந்து" என்றார்.