facebook

செவ்வாய், மே 31, 2011

உங்களை நீங்களே தயார்ப் படுத்திக் கொள்ளுங்கள்!!







உங்களின் இலட்சியம் என்ன?

நீங்கள் எப்போது மரணிப்பீர்கள் என்று உங்களால் கூற முடியுமா? நிச்சயமாக உங்களால் முடியாது! அடுத்த ஆண்டு மரணிக்கலாம்;
அடுத்த மாதம் அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த நிமிடம்
கூட நீங்கள் மரணிக்கலாம். ஆகவே அதற்குமுன்...

உங்கள் வாழ்வில் நீங்கள் என்ன அடைந்தீர்கள்? உங்களின் கனவு
மற்றும் இலட்சியம் என்ன?

உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் போட்டுள்ள பெரிய பெரிய
திட்டங்கள் என்ன?

உங்கள் மரணத்துக்குப் பின் நீங்கள் எப்படி நினைவு கொள்ளப்
படுவீர்கள்? ஒரு மனிதனைப் பொருத்தவரை பிறந்தோம்;
வாழ்ந்தோம்; மரணித்தோம் என்ற வகையில் இவ்வுலகில் வாழ
முடியாது! அவ்வாறு எவ்வித இலட்சியமோ அதை அடைய
முயற்சியோ இல்லாத வாழ்க்கை என்பது வீணானதுதான்!

மரணத்துக்குப் பின் என்ன? என்பதைக் குறித்துத் திட்டமிட்ட
வாழ்வை எதிர்நோக்குவோர் மட்டுமே இவ்வுலகத்தின் முக்கியத்-
துவத்தை உணர முடியும். அவ்வாறான ஒரு திட்டமிடலோடு வாழ்பவர்களால் மட்டுமே இலட்சியத்தை அடைய முடியும்.

இவ்வுலகில் வாழ்பவர்கள், அவர்களின் இலட்சியமான
சுவர்க்கத்தை அடையவும் மரணத்திற்குப்பின் நினைவு
கூறப்படவும் எளிதான வழி உள்ளது. அதற்கு ஒவ்வொருவரும்
தம் மரணத்திற்கு முன் கீழ்க் காணும் 10 விஷயங்களைச் செய்து
முடித்து விட்டால் போதும். தயாரா நீங்கள் ??

1. கனவை நனவாக்குங்கள்

நல்லவற்றுள் எதையாவது நீங்கள் செய்ய விரும்புகின்றீர்கள்
எனில், அதனைப் பின்னர் என்று தள்ளிப்போடாமல் உடனே
செய்யத்துவங்குங்கள். சீனப்பெருஞ் சுவரை நடந்து கடக்க
வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?, பட்டதாரி ஆக வேண்டும்
என்று விரும்புகின்றீர்களா?, டாக்டரேட் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்பு-
கின்றீர்களா? கலெக்டராக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?
புத்தகம் ஒன்று எழுத வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? சீன, ஜப்பானிய, அரபி மொழிகளைக் கற்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? எதுவாக இருந்தாலும் உடன் செயல்பாட்டில் இறங்குங்கள். ஒருபோதும் வாழ்வில் செய்யத் துடிக்கும் நல்ல விஷயங்களைத் தள்ளிப் போடாதீர்கள். கனவை நனவாக்குங்கள்!

2. உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள்

படித்து முடித்ததும் வேலையில் சேர்ந்து சம்பாதிப்பதன் மூலம்
உங்கள் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறை
வேற்றுங்கள். அதுபோக உங்கள் சொந்தங்களில் உள்ள
ஏழ்மையான குடும்பத்தில் படிப்பதற்கு செலவழிக்க முடியாதவர்
களுக்கு உங்களால் ஆனா உதவிகளை செய்யுங்கள்.

3. பெற்றோர்களை மகிழ்வியுங்கள்!

நம் பெற்றோர்களே நமக்கு எல்லாம்! நமது மரியாதைக்கும்
அன்புக்கும் கீழ்படிதலுக்கும் அவர்கள் உரித்தானவர்கள்.
அவர்களுடன் தினசரி குறிப்பிட்ட நேரத்தைச் செலவழிக்க
முயலுங்கள். அவர்களுக்குப் பெருமை சேர்க்க முயலுங்கள்;
ஒருபோதும் அவர்களின் மனதை வேதனைப்படுத்தி விடாதீர்கள்.
ஒன்றை எப்போதும் நினைவில் வையுங்கள்: "பெற்றோர்களை
நாம் மகிழ்ச்சியாக வைத்திருந்தால் இறைவனும் நம்மை
மகிழ்ச்சியாக வைத்திருப்பான். பெற்றோர்கள் நம் மீது
கோபமாக இருந்தால், இறைவனும் நம் மீது கோபமாகவே
இருப்பான்" என்று என்று எல்லா மதங்களும் நமக்கு போதிக்கிறது.

ஆகவே, அவர்கள் மரணிக்கும்முன், அவர்களுக்குப் பெருமை
சேர்ப்பதோடு அவர்களை மகிழ்வாகவும் வைத்திருங்கள்.
அவர்களின் மரணத்திற்குப்பின் அவர்களை நினைவுகூருங்கள்; அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள்; அவர்களின் இலட்சியம்
அல்லது நிறைவேற்ற நினைத்து அவர்களால் முடியாமலாகி
விட்ட கடமைகள் ஏதாவது இருப்பின் அதனை நிறைவேற்றுங்கள்.

4. உலகைப் பாருங்கள்

நீங்கள் இருக்கும் இருப்பிடத்தில் மட்டுமே உலகைக் காண்பதாக
இதற்கு அர்த்தம் கொடுக்காதீர்கள். இறைவனின் அற்புதமான படைப்புகளைக் கூர்ந்து கவனியுங்கள். இயன்றால் உலகிலுள்ள
ஏழு அதிசயங்கள், இன்னும் காணக் கிடைக்காத அரியபல
விஷயங்கள் பொதிந்துள்ள வரலாற்றை எடுத்தியம்பும் நாடுகளை
வலம் வாருங்கள். குறைந்தபட்சம் உங்களைச் சுற்றியுள்ள கிராம, நகரங்களையாவது வலம் வாருங்கள். நிச்சயமாக, அது உங்களுக்கு
ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருப்பதோடு, இறைவனின் படைப்புகளையும் அதில் உங்களின் பங்கையும் குறித்து உங்களுக்கு விளக்கித் தரும்.

5 வாழ்க்கையைப் படியுங்கள்; அதற்கு உயிர் கொடுங்கள்!

இந்த உலகில் நீங்கள் பிறந்ததற்கான காரணத்தையும் பிறப்பின்
பயனை அடைவதற்கான வழிகளையும் அறிந்து கொள்ளாமல்
நீங்கள் இந்த உலகத்தை விட்டுப் போய்விடக் கூடாது. அது பின்னர் உங்களுக்கே பேரிழப்பாக முடியும். ஆகவே வாழ்க்கையை
படியுங்கள். அதன் அடிப்படைகளை அர்த்தத்துடன் படியுங்கள்.
வாழ்ந்து மறைந்த பெரிய மனிதர்களின் வாழ்வைப் படியுங்கள்.
நாம் இந்த பூமியில் படைக்கப் பட்டிருப்பதற்கான அர்த்தம்
என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்களா?
என்பதை உறுதிப் படுத்துங்கள். அதனை உங்கள் தினசரி வாழ்வில் நடைமுறைப் படுத்துங்கள். இது ஒன்று மட்டுமே   உங்களுக்கு இவ்வுலகிலும் பாதுகாப்பாக இருக்கும்.

6. திருப்பிக் கொடுங்கள்

ஏதாவது வித்தியாசமானதாகவும் அற்புதமானதாகவும் செய்ய
முயற்சி செய்யுங்கள். ஒரு அனாதையின் வாழ்வாதாரத்துக்கு
உதவுதல், ஒரு மரத்தை நட்டு வளர்த்தல், ஏழைகளுக்கு உதவி
செய்ய ஃபண்ட் ஒன்று துவங்குதல், ஏழைகளுக்கு உணவளித்தல், தேவையில் இருப்போருக்கு இரத்தம் வழங்குதல், குழந்தை-
களுக்கும் முதியவர்களுக்கும் கற்றுக் கொடுத்தல், யாருடைய பிரச்சனைகளையாவது தீர்த்து வைத்தல், லைப்ரரி ஒன்று
உருவாக்குதல், வசதியற்ற மாணாக்கருக்குக் கல்வி கற்க
ஏற்பாடு செய்தல், வட்டியின்றித் தேவையுடையோருக்குக்
கடனுதவி செய்யக் குழு ஏற்படுத்துதல், சுற்றுப் புறத்தைத்
தூய்மையாக வைக்கப் பயிற்சியளித்தல், குடிநீர் இல்லாத
வீடுகளுக்குக் குடிநீர் கிடைக்க வசதி ஏற்படுத்துதல்.....

இப்படி எதையாவது நீங்கள் மரணிக்கும் முன்னர் இவ்வுலகுக்குத்
திருப்பிக் கொடுத்து விட்டுச் செல்லுங்கள். உங்களின் மரணத்துக்குப் பின்னர் நீங்கள் இவ்வுலகில் நேர்மறையாக நினைவு கூறப்
படுவதற்கு இது உதவும். உங்களின் நற்செயல்கள் இவ்வுலகில்
எத்தனை காலத்திற்கு நிலைநிற்கின்றதோ அத்தனை காலம்வரை
நினைவு கூறப்பட்டுக் கொண்டே இருக்கும். உங்களின் சுயநலமற்ற செயல்பாடுகள் நாளை வரும் தலைமுறையினருக்கு பயனுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும்.

7. திருமணம்

இது எல்லா மதங்களிலும் வரையறுத்து கூறப்பட்ட ஒரு
தீர்மானமாகும். உங்களின் கனவுகளையும் இலட்சியங்களையும் உயிர்கொடுக்க தோள்கொடுக்கத் தயாராகுபவரோடு அவற்றைப்
பகிர்ந்து கொள்ளுங்கள். அவரைத் திருமணம் புரிந்து குழந்தை-
களைப் பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுக்குப் பெருமை
சேர்ப்பதோடு, நல்ல குழந்தைகளாக வளர்த்தால் அதற்காகவும்
நீங்கள் நன்மை வழங்கப் படுவீர்கள். உங்களின் மரபுவழி
நன்மைகளை வாழ வைப்பவர்களாகவும் தங்கள் நம்பிக்கையைச் செயல்படுத்துபவர்- களாகவும் மனிதாபிமானத்தோடு இறைவனின் படைப்புகளைக்காணும் நல்ல மக்களாகவும் அவர்களை
வளர்த்தெடுப்பது உங்களின் இலட்சியமாக இருக்கட்டும்.

8. மன்னிப்பு கேளுங்கள்

உங்கள் வாழ்வில் நீங்கள் செய்த தவறுகளை நினைவு கூர்ந்து,
உங்களைப் படைத்தவன் முன்னிலையில் சிரம்பணியுங்கள்.
ஒவ்வொரு இரவிலும் படுக்கைக்குச் செல்லும் முன், உங்கள்
தவறுகளை நினைத்து மனம் வருந்தி மன்னிப்புக் கேளுங்கள்.
நீங்கள் யாருடைய மனதையாவது வேதனைப் படுத்தியுள்ளீர்களா? மக்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட நீங்கள் காரணமாக இருந்துள்ளீர்களா? யாருக்காவது தவறு இழைத்துள்ளீர்களா? இன்றே அதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்.

நினைவில் வையுங்கள்: நீங்கள் தவறிழைத்தவர்கள் உங்களை மன்னிக்கும்வரை, இறைவன் உங்களை மன்னிப்பதில்லை!
வருத்தங்களைப் பொறுத்துக் கொள்ளப் பழகுங்கள். முன்னர் உங்கள் வாழ்வில் மற்றவர்களால் உங்களுக்கு நடந்த  தவறுகளையும்
மீட்டிப் பார்த்து அவற்றைப் பொறுத்துக் கொள்ளுங்கள். இறைவன் உங்களின் பாவங்களை மன்னிக்க வேண்டுமெனில்,
நீங்கள் மற்றவர்களின் தவறுகளையும் மன்னிக்க வேண்டும்
என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

9. கடன்களை அடையுங்கள்

நீங்கள் கடனாளி எனில், அது எத்துணைப் பெரிதாக இருந்தாலும்
சிறிதாக இருந்தாலும் அவற்றைத் திருப்பிக் கொடுக்க இப்போதே திட்டமிடுங்கள். ஒரு நிமிடமும் இதற்காகத் தாமதிக்க வேண்டாம்!
கடன் என்பது ஒரு வலி; அது ஒரு சுமையும் கூட! அதனை நிறை- வேற்றவில்லையேல் அதற்காக மிகப்பெரிய பலனைத் திருப்பிக்
கொடுக்க வேண்டியிருக்கும்.

10. முன்னுதாரண மனிதராகுங்கள்

ஆமாம்! உங்கள் குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு, உறவினர்-
களுக்கு, என அனைவருக்குமாக நீங்கள் நல்ல குணங்களுக்குச் சொந்தகாரரான ஒரு முன்னுதாரண மனிதராகுங்கள். அனைவரும் மரியாதையுடன் பார்க்கும் படியான மனிதராகுங்கள். மனிதர்கள்
தங்களின் தேவைகளுக்காக உங்கள் பக்கம் திரும்ப வைக்கும்-
படியான நல்ல மனிதராகுங்கள். உங்கள் மரணத்துக்குப் பின்னரும்
நல்ல காரணத்திற்காக நீண்ட காலம் மக்கள் நினைவு
கூறும்படியான   நற்பண்புகளுக்குச் சொந்தக்காரராக மாறுங்கள்.

இந்தப் பத்து விஷயங்களையும் உங்கள் மரணத்துக்கு முன் செயல்படுத்துங்கள். இவ்வுலக வாழ்க்கை என்பது மிகக் குறுகியது;
எனவே இவற்றை உடனடியாகச் செயல்படுத்த ஆரம்பியுங்கள்.
நேரத்தை ஒருபோதும் வீணாக்காதீர்கள். செய்யும் செயலை அர்த்தமுள்ளதாகவும் ஒருபோதும் வருத்தப்படுத்தாததாகவும்
செய்யுங்கள். மிக முக்கியமாக, உங்கள் செயல்களை இவ்வுலகிலும்
மறு உலகிலும் ஒன்று போல் வெற்றிக்குரியனவாகத் தேர்ந்து செய்யுங்கள்.

எனவே, வெற்றிக்கான இந்தப் படிகளை உங்கள் மரணத்துக்கு
முன்னர் செயல்படுத்த இப்போது உங்கள் முறை! இவற்றை
இன்றே, இப்போதே ஆரம்பித்து வெற்றியாளர்களாகத் திகழுங்கள்.

(நன்றி : Therevival.co.uk என்ற ஆங்கிலத் தளத்தில் வெளிவந்த
"Ten Things To Do Before You Die" என்ற கட்டுரையின் தமிழாக்கம்.)


திங்கள், மே 23, 2011

உணவில் கலக்கும் விஷ(ய)ம்..!!


வலைப்பூவில் படிப்பதற்க்கென்றே வலம் வரும் நமக்கு, நிறைய செய்திகளும், கட்டுரைகளும் படிக்கப் படாமலேயே போகின்றன.
 'சுஹைப்' உடைய இந்த பூச்சரத்தில் உங்களுக்கு  படிக்கப் பிடிக்காதது என்று எதுவுமே இல்லாமல் போகலாம்.

உணவில் கலக்கும் விஷ(ய)ம்..!!

பள்ளிகள் கல்லூரிகளில் உள்ள வேதியல் ஆய்வுக்கூடங்கள் பார்த்திருப்பீர்களே! அது போலத்தான் இன்றைய நவீன சமைய-
லறைகள் மாறி விட்டன. இயற்கை உணவுகளை கொஞ்சம்
கொஞ்சமாக மறந்து விட்டோம்.

சூப்பர் மார்கெட் ஷெல்ஃப்களில் குவிந்து கிடக்கும் உணவுப்
பொருட்கள் எல்லாவற்றிலும் சுவைக்காவும், நிறத்திற்காகவும்,
கெடாமல் வைத்திருக்கவும் பலவித ஆபத்தான இரசாயணப்
பொருட்கள் சேர்க்கப்படுகிறது.

இது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் விளம்பரங்கள்
சொல்லும் பச்சைப் பொய்களின் கவர்ச்சியில் மயங்கி வாய்க்குள்
அள்ளித் திணித்து கொள்கிறோம்.

உணவுப்பொருட்களில் உண்டான வியாபாரப் போட்டியின்
விளைவு இன்றைக்கு 100% தரமான இயற்கையான உணவு
உண்பது என்பது குதிரைக் கொம்பு தான்.

உணவில் சுவை கூட்டும் ரசாயனப்பொருட்களில் எந்த
விதமான ஊட்டசத்தும் இல்லை. இவைதேவையற்றது, ஊட்ட
சத்து சேர்க்கப்பட்டவை என கூறப்படும் உணவும் உண்மையில்
பல இயற்கையான ஊட்டச் சத்துகள் நீக்கப்பட்டு சில ரசாயணங்கள் சேர்க்கப்பட்டது தான். பல உணவுப்பொருட்களில் இயற்கையான பொருட்களுக்கு பதில் அது போன்ற சுவை தரும் செயற்கையான சுவையூட்டிகள் மட்டுமே உள்ளன.

வெனிலா கலக்கப்படும் உணவு வகைகளில் பேன்களைக் கொல்ல
பயன் படுத்தப்படும் 'பைப்பர் ஹோல்' என்ற இராசயனப் பொருள் சேர்க்கப்படுகிறது.

டின்களில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட பழங்களில்
துணிகளையும் தோல்களையும் கழுவப் பயன்படுத்தப்படும்
பென்சி அஸிடெட், எதில் அசிடெட், அமில் அசிடெட் முதலியன சேர்க்கப்படுகின்றன. இது உடலுக்கு அதிகம் கேடானது.

கடைகளில் கிடைக்கும் பலவகை ஆப்பிள் பழங்களின் தோலை
நகத்தால் சிறிது நெருடிப்பார்த்தால் அதிலிருந்து மெழுகு உதிர்ந்து
வரும். ஆப்பிள் கெடாமல் இருக்க தோலில் மெழுகு தடவி பேக் செய்கிறார்கள். நாம் அதை அப்படியே உண்கிறோம்.

கேக்குகளில் எண்ணெய் உறையவைக்க சோடியம் அலுமினியம் சேர்க்கப்படுகிறது. இந்த எண்ணெய் உண்பதற்கு ஏற்றது அல்ல.
மாவை வெண்மையாகவும் உப்ப வைக்கவும் பிளீச்சிங் பவுடரும்,
பிற பவுடர்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் உடல்
நலத்திற்குத் தீமையே!

வெண்ணெய் நீக்கப்பட்ட பால் அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக சில பால் நிறுவனங்கள் கலக்கும் ரசாயனப் பொருள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்க பல வித ஆபத்தான
ரசாயன பூச்சிக்கொல்லிகள் உபயோகிக்கிறார்கள். இதன் விளைவாக
நாம் உண்ணும் அரிசி, பருப்பு, காய்கறிகளிலும் கேன்சர், மலட்டுத்
தன்மை உருவாக்கும் பூச்சிமருந்து எச்சங்கள் இருக்கின்றன.
பழங்களை பழுக்க வைக்க கூட ரசாயனங்கள் உபயோகிக்கிறார்கள். இயற்கையான பூச்சி ஒழிப்பு முறையில் இயற்கையான உரம் இட்டு வளர்ந்த உணவுப்பொருளே சிறந்தது. இதற்கான திட்டங்களையும் ஊக்குவித்தல்களையும் பயிற்சியையும் அரசு விவசாயிகளுக்கு வழங்கி இயற்கையான உணவு எங்கும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஜெனெடிக் என்ஜினீயரிங் மூலம் பெறப்படும் புது விதமான உணவுப் பொருட்கள் மனித உடலில் உண்டாக்கும் பாதிப்புகளை
அறிய பல காலமாகலாம். சரியான ஆராய்ச்சி முடிவுகளை அறியாமலேயே அவற்றை சந்தைப் படுத்துவது காசு கொடுத்து
வாங்கி உண்ணும் மக்கள உடலிலேயே உணவுப் பொருள்
தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் சோதனைகளை நிகழ்த்துவதாகிறது.

பொதுவாக உணவுப்பொருளில் சேர்க்கப்படும் மோசமான
பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய சில பொருட்கள்:

330 and E330 Citric Acid: இயற்கையான சிட்ரிக் ஆசிட் கெடுதல்
இல்லை. ஆனால் செயற்கையாக தயாரிக்கப்படும் சிட்ரிக் ஆசிடில்
அதன் தயாரிப்பு முறையின் போது அதிலிருந்து Sulfur மற்றும்
Sulfites முழுமையாக நீக்கப்படா விட்டால் ஆஸ்த்மா, அலர்ஜி
உண்டாக வாய்ப்புள்ளது. சிட்ரிக் ஆசிட் கலந்த பானம் அதிகம்
அருந்துவது பற்களுக்கு கேடு. 924 & E924 Potassium Bromate (Agent used
 in Bleaching Flour): நரம்பு மண்டலம், சிறுநீரகம், அஜீரணம், மற்றும்
புற்றுநோய்க் காரணி.

407 & E407 Carrageenan (Thickening & Stabilizing Agent) : இவை ஆஸ்த்மா,
அல்சர், கேன்சர் போன்றவற்றை உருவாக்ககூடும்.

Sucralose (Splenda): 40%thymus gland ஐ சுருங்கச்செய்வதாக சோதனை
முடிவுகள் சொல்கின்றன. சிறுநீரகம் மற்றும் ஈரல் வீக்கம், மற்றும்
ஈரலில் சுண்ணாம்பு சத்தை படியச்செய்கிறது. உண்ணத்தகுந்ததல்ல.

கேசரிப் பவுடர் உடல் நலத்திற்கு நல்லதல்ல. வீட்டில் செய்யும்
எந்த உணவிலும் நிறத்திற்காக கேசரிப்பவுடர் அல்லது புஷ் பவுடர் சேர்க்காதீர்கள்.

குளிர் பானங்கள் மிட்டாய்களில் சேர்க்கப்படும் பல வித
கவர்ச்சியான வண்ணங்கள் புற்று நோய், மூளைக்கட்டி, தைராய்ட், அட்ரீனல் மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.

சாயங்கள்: 104 & E104 Quinoline Yellow, 107 & E107 Yellow 2G, 110 &
E110 Sunset Yellow, 122 & E122 Azorubine, Carmoisine, 123 & E123 Amaranth,
124 & E124 Ponceau, Brilliant Scarlet, 127 & E127 Erythrosine, E128 Red 2G,
129 & E129 Allura Red AC, E131 Patent Blue, 132 & E132 Indigotine,
இண்டிகோ கார்மினே 133 & E133 ப்ரில்லியன்ட் ப்ளூ 151 &
E151 Activated Vegetable Carbons, Brilliant Black154 Food Brown, Kipper Brown,
Brown FK155 & E155 Chocolate Brown HT, Brown HT போன்ற சாயப்
பொருட்கள் ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆஸ்த்மா, புற்று நோய் உருவாக்ககூடும்.

120 & E120 Carmines, Cochineal, 142 & E142 Acid Brilliant Green, Green S,,
160b & E160b Bixin, Norbixin, Annatto Extracts 143 Fast Green போன்ற சாயப்
பொருட்கள் ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆஸ்த்மா போன்றவற்றை உருவாக்ககூடும்.

150 & E150 Caramel இது ஹைப்பர் ஆக்டிவிட்டி உருவாக்கும்.

பென்சோயேட்ஸ் (Benzoates) : பதனீட்டுப் பொருள். ஆஸ்துமா நோய் உள்ளவர்களிடையே நெஞ்சில் இறுக்கமான உணர்வை ஏற்படுத்தும். தொண்டையில் அரிப்பு அல்லது புண் ஏற்படலாம். Butylated
Hydroxyanisole (BHA), Butylated Hydroxytoluene (BHT) : காற்று புகாமலிருக்க பயன்படுத்தப்படும் பொருள்-பொதுவாக குழந்தை உணவுகள்
சுவிங்கம், தாவர எண்ணெய் ஆகியவற்றை கெடாமல் வைத்திருக்-
கிறது். இது கான்சர் காரணி மற்றும் சிலரிடையே தோல் எரிச்சலை ஏற்படுத்தலாம்.

எப்.டி. & சி (FD & C dyes) : வர்ணங்கள்-இது சிலரிடையே அரிப்பை ஏற்படுத்தலாம். குழந்தைகளின் நடத்தையில் மாற்றத்தை
ஏற்படுத்தலாம்.

Monosodium Glutamate (MSG) : தலைவலி, குமட்டல், வயிற்றுப்போக்கு,
வியர்வை, நெஞ்சில் இறுக்கம், கழுத்துக்குப் பின்னால் எரிச்சல்,
ஆஸ்துமா நோயாளிகளிடையே அதிக ஆஸ்துமாவை
ஏற்படுத்தும். குறிப்பாக விளையாட்டு வீரர்கள் திடீரெனெ இதய
நோய் தாக்குதலுக்குள்ளாவதில் இதன் பங்கு இருப்பதாக கூறப்
படுகிறது. நைட்ரேட் (Nitrates) : பதனீட்டுப் பொருள்-தலைவலி.
பாராபென் (Parabents) : பதனீட்டுப் பொருள்-கடுமையான தோல்
நோய், வீக்கம் அரிப்பு.

சல்பைட் (Sulfites) : பதனீட்டுப் பொருள்-வைட்டமின் B1 ஐ
அழிக்கிறது. நெஞ்சில் இறுக்கம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு,
குறைந்த இரத்த அழுத்தம், பலஹீனம், சிறு அளவு கூட சிலரி-
டையே ஆஸ்துமா நோயை ஏற்படுத்தும், மோசமாக்கும்.

Propyl Gallate: இது எண்ணெய் மற்றும் கொழுப்புப் பொருட்கள்
கெடாமல் வைத்திருக்க உதவும். தாவர எண்ணெய், பதப்படுத்தப் பட்டஇறைச்சி, உருளைக்கிழங்கு சிப்ஸ், சிக்கன் சூப்பேஸ் மற்றும்
சுவிங்கம் ஆகியவற்றில் பயன் படுத்துகிறார்கள். இது புற்று நோய் உருவாக்ககூடும்.

Potassium Bromate: ரொட்டிகளில் சேர்க்கப்படும் இந்தப்பொருள் புற்று
நோய் ஏற்படுத்தலாம்.

Aspartame (Equal, Nutra Sweet): இது டயட் சோடா மற்றும் டயட்
உணவுகளில் சர்க்கரைக்குப்பதில் பயன்படுத்தப்படும் செயற்கை
இனிப்பு. இது மூளையில் டியூமர் கட்டியை உருவாக்கும் என அறியப்பட்டது. மிக குறைந்த அள்வு உட்கொள்ளுவது கூட
Lymphomas மற்றும் Leukemi நோயை உருவாக்ககூடும். சிலருக்கு
தலைவலி, மந்தம், மனக்குழப்பம், மத்திய நரம்பு மண்டல பாதிப்பு, மாதவிடாய் பாதிப்பு, கருவில் மூளைப்பாதிப்பு உருவாக்கக்கூடும்.

Neotame: இது Aspartame போன்றது ஆனால் அதை விட அதிக
நச்சுடையது.

Acesulfame-K: சர்க்கரையை விட 200 மடங்கு இனிப்பான இப்-
பொருள். கேக்குகள், சுவிங்கம், ஜெல்லி, மற்றும் குளிர் பானங்-
களில் சேர்க்கப்படுகிறது. இது கேன்சர், தைராய்ட் பாதிப்பு
உண்டாக்கலாம்.

Olestra: இது ஒரு செயற்க்கைக் கொழுப்பு. உடலால் உறிஞ்சப்-
படாதது, வயிற்றோட்டம், வயிற்று வலி போன்ற பல
பாதிப்புகளை உண்டாக்கும்.

Sodium Nitrite (Sodium Nitrate): இறைச்சி பதப்படுத்தவதில் உபயோகப்-
படுகிறது. இது கான்சர் காரணியான Nitrosamine ஐ உருவாக்குகிறது.

Hydrogenated Vegetable Oil: இவ்வாறு பதப்படுத்தப்பட்ட தாவர
எண்ணெய்கள் Trans Fat ஐ உருவாக்குகிறது. இது இதய நோய்
மற்றும் நீரிழிவுக்கு வழி வகுக்கும்.

Brominated Vegetable Oil : பிறவிக்குறைபாடு, உடல் உறுப்பு வளர்ச்சி-
யின்மைக்கு காரணமாகும்.

Blue 1 and Blue 2: குளிர்பானங்கள் மற்றும் மிட்டாய்களில் உபயோகப்-
படும் சாயப்பொருள். இது கான்சர் மற்றும் ட்யூமர் உருவாக்-
கூடும்.

Red 3: மிட்டாய் மற்றும் செர்ரியில் பயன்படும் வண்ணப்பொருள்
இது தைராய்ட் மற்றும் ட்யூமர் உருவாக்கக்கூடும்.

Yellow 6: கேக்குகள், மிட்டாய்கள், ஜெல்லிக்கள், சாசேஜ் ஆகியவற்றில்
பயன் படுத்தப்படுகிறது. அட்ரீனல், சிறுநீரகக்கட்டி, மற்றும் கான்சர் உருவாக்கக் கூடியது.

அப்பப்பா …பயங்கரம் ..சில கம்பனிகளின் பொருளாசைக்கு
பலியாகி எத்தனை விதமான வடிவத்தில் ரசாயனபொருட்களை
நமது உணவில் கலந்து உள்ளே தள்ளுகிறோம். இனியாவது எந்த
உணவுப் பொருள் வாங்கினாலும் அதன் “INGREDIENTS” அல்லது
“CONTENTS” என்று இட்டிருப்பதை ஒருமுறை வாசித்துப்
பார்த்துவிட்டு புற்றுநோய் போன்ற பேராபத்துகளை விலை
கொடுத்து வாங்க வேண்டுமா? பிள்ளைகளுக்கு தரலாமா?
என்றெல்லாம் ஒன்றுக்கு இரண்டு யோசித்து வாங்குங்கள்.

பெரியவர்களைப்போல் குழந்தைகள் உடல் உணவில் கலந்துள்ள
இந்த விஷப் பொருட்களை விரைந்து வெளியேற்ற இயலாது.
ஆனால் துரதிஸ்ட வசமாக அனேக குழந்தை உணவுகளே
விஷம் மலிந்து கிடக்கிறது.

சர்க்கரை, உப்பு, எண்ணெய் அதிக அளவு உட்கொள்வது
உண்ணும் மூளையின் இயற்கையான ரசாயன சமநிலையை
பாதித்து, உணவில் அதிக ஆர்வம் உண்டாக்கி அத்தகைய
உணவுகளுக்கு அடிமையாக்கிவிடும்.

ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்ட்களில் சாப்பிடுவதை அடியோடு தவிர்க்கவும். முடிந்தவரை உணவுப்பொருட்களை அதன்
அடிப்படை பொருளாகவே அவ்வப்போது வாங்கி ஃப்ரெஷ்
ஆகவே உண்ணுங்கள். அதற்கேற்ப உணவுப் பழக்கத்திலும்
மாற்றம் செய்து கொள்ளுங்கள். பணத்தையும் மிச்சப்படுத்துங்கள்.

நன்றி : சுஹைப் (கடலோரம்)


செவ்வாய், மே 17, 2011

நானறியாமல் என்னோடு வளர்ந்த நட்பு




நானறியாமல் என்னோடு வளர்ந்த நட்பு!!

நம்ம ஃபிரிக்வென்சியோடு ஒத்துப்போகிற உண்மையான நண்பர்கள்
ஒரு சிலரே நமக்கு அமைவார்கள். அவர்களை நம் உள்ளங்கையில் வைத்துக் கொண்டாடனும்.

ஜெகத்...

நான் அல்கோபரில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம், MIDDLE
EAST AIRLINES -இல் (MEA-வில்) அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இது சவுதியில் இருந்து லெபனானுக்கு செல்லும் air lines நிறுவனம்.
ரொம்ப சகஜமான பேர்வழி. நட்புக்களை கொண்டாடுவார்.
'தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் (‘ஜெகத்’தினை)
ஏன் என்னை அழிக்கணும்' என்று பாரதியாரை நகைச்சுவையாய் வம்புக்கிழுப்பார்.

பெங்களுரு HMT-வாட்ச் கம்பெனியில் வேலை பார்த்த இவரது
மனைவி கூட ஐந்து வருட விடுமுறை எழுதிக் கொடுத்து விட்டு இவரோடு வந்து குடும்பம் நடத்திக் கொண்டிருந்தது. இரண்டும்
பையன்கள். இங்கே இந்தியன் எம்பஸி ஸ்கூலில் தான் படித்துக் கொண்டிருந்தார்கள்

அதிகாலையில் பூஜை அறையில் கிணுகிணு வென மணியடித்து
சாமி கும்பிடும் மனைவியிடம், "ஏம்பா இப்படி காலையிலேயே
தூங்குற சாமிய மணியடித்து எழுப்புறியே, ஒரு நா அந்த சாமி படத்துலேந்து இறங்கி வந்து அந்த மணியாலேயே ஒந் தலையில
அடிக்கப் போகுது" என்பாராம். அவரோடு சமயங்களில் வரும் அவர் மனைவி என்னிடம் சொல்லி சிரிக்கும். ஏனென்றால் அந்நேரத்தில்
இவர் தூங்கிக் கொண்டிருப்பாராம்.

இப்படியாக நமது காலங்கள் ஓடிக் கொண்டிருக்கிற வேகத்தில்,
அவர் என்னை வந்து பார்த்துப் போவது அரிதாகிப் போனது.
ஏனென்று விசாரித்த போது, "கிட்னி ஸ்டார்டிங் டிரபுலாம்" என்று
அவரே வந்து கமெண்ட்டும் அடித்து விட்டுப் போனார்.

நாளாக நாளாக நூலாகிக் கொண்டிருந்தார். வாரத்திற்க்கொரு
முறையோ, இரண்டு வாரம் கூடியோ டயாலிசிஸ் என்று
சொல்லக் கூடிய ரத்த புத்துயிரூட்டளுக்கு சென்று வந்துக்
கொண்டிருந்தபோது "உள்ளங் காலில் குத்தி குத்தி உயிர்
போகுதப்பா, கிட்னிய மாத்தனுமாம், செலவு ரொம்ப ஆகும் போல"
என்று மருட்சி இல்லாமல் தெளிவாய் பேசினார்.

கிட்னி மாற்று சிகிச்சைக்கு சென்னையில் ஒரு பிரபல
ஹாஸ்பிடலில் (பெயர் வேண்டாமே!) அப்பாயின்மெண்ட் வாங்கி,
ஒரு மாத ட்ரீட் மெண்டுக்குக்காகப் போனவர், பதினைந்து இருபது நாளிலேயே திரும்பி வந்து விட்டார். அன்று நான் ஆபீசில் வேளை விஷயமாய் யாருடனோ தொலைபேசிக் கொண்டிருந்த போது,
சேரில் வந்து உட்கார்ந்த மனிதரை கண்டு ஒரு கணம் ஸ்தம்பித்து போனேன். முகம் கை கால்களெல்லாம் சிகரெட் நெருப்பால் சுட்ட
மாதிரி அட நம்ம ஜெகத் தான்.“என்ன சார் என்னாச்சு" பதைப்
பதைத்துக் கேட்டேன்.

"மூன்றரையிலிருந்து நாலு லட்சம் வரை செலவாச்சுப்பா. அது
ஒரு பெரிய மேட்டர் கிடையாது. ரத்தத்தை ஒழுங்கா டெஸ்ட்
செய்யாமல் யாருடையோ hiv aids உள்ள ரத்தத்தை எனக்கு
ஏத்திட்டம்ப்பா. இன்னும் பத்தோ பதினைந்தோ நாள் தான்
இங்கே இருப்பேன். கம்பெனியில் நான் வந்த உடனே exit அடித்து விட்டார்கள்" என்று மூச்சு விடாமல் பேசினார் (இங்கே சவுதியில்
அப்படி தான். இது மாதிரியாகிவிட்டால் govt இருக்கவும் விடாது.

அதன் பின்னர் தான் அவரோடு வந்த அவர் மனைவியை
பார்த்தேன். அழுத கண்கள் அழுதபடியே இருந்தது. “எனக்காக pray
பண்ணு” என்று சொல்லி விட்டு போய் விட்டார். அவர் பத்து
பதினைந்து நாள் என்று சொன்னது, தான் உயிரோடு இருப்பேன்
என்பதை தானோ என்பது அவர் இறந்த செய்தி கிடைத்த பின்
புரிந்தது.

நிறைய நேரம் லெபனானுக்கு டிக்கட் கிடைக்காமல் எங்கள்
மேனேஜரின் நண்பர்கள், என்னிடம் சொல்லி டிக்கெட் புக்
பண்ணச் சொல்வார்கள். நான் இவரை அணுகும் போதெல்லாம்
"உன்னை வந்து ஏம்பா இவங்க தொல்லை பண்றாங்க எங்கிட்ட
அனுப்பு" என்பார். "இல்ல சார் டிக்கெட் ஃபுல் என்று நீங்க
சொல்லிட்டீங்கலாமே" என்றால், "சரி பெயரைச் சொல்லு" என்று
கடகடவென்று நோட் செய்துக் கொண்டு PNR ஐக் கொடுத்து
விடுவார். புக் பண்ணச் சொன்னவங்களுக்கு ஏக குஷியாகிவிடும். மேனேஜருக்கு ரொம்ப பெருமையாய் இருக்கும்.

அந்த நாட்கள் இனி இல்லை!! அவர் நினைவுகள் மட்டும்!!

பின்னர் இவரது மனைவி HMT வேலையை ரிசைன் பண்ணிவிட்டு
டிராவல் ஏஜென்சி ஒன்று தனியாய் துவங்கி தன்னுடைய இரண்டு மகன்களையும் நல்லவிதமாக படிக்க வைத்து துணிச்சலாய்
வாழ்க்கையை எதிர் கொள்கிறார் என்று அறிகிறேன்

ஜெகத் இன்று எங்கள் மனதில் நிறைந்து போன நாள்!!

முன்பு இதை படிக்காதவர்களுக்காக மீள்  பதிவு!!


சனி, மே 14, 2011

வாழ்க்கைப் பாடம்‏



வாழ்க்கைப் பாடம்‏

அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள்.

அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.

அவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார். அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார். ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதங்களும், ஈ மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன.

மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார். பெரிய பெரிய சாதனைகள் புரிய ஓடிக் கொண்டிருந்த ஓட்டத்தில் மகிழ்ச்சியை அவருடைய மாணவர்கள் தொலைத்திருந்தார்கள்.

அவருடைய மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள். அவருக்கு அது போன்ற பிறந்த நாள் விழாக்களில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அவர்கள் அன்பை மறுக்க முடியாததால் அதற்கு சம்மதித்தார். பெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேனீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார்.

உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள். அவரைக் கண்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடினார். பின் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேனீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார்.

மிக அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன. விலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள்.

அந்தத் தம்ளர்களில் தேனீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேனீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள். அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலை உபயோகித்து அந்தத் தேனீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார்.

பின் கேட்டார். ”எத்தனையோ பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன். இப்போது ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் உங்களுக்கு சொல்லட்டுமா?”அவர்கள் ஏகோபித்த குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். “தயவு செய்து சொல்லுங்கள்”

”எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான். ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள்
குடித்த தேனீர் தான். அதன் சுவையும் தரமும் மட்டுமே நீங்கள்
ருசிக்கப் பயன்படுகிறது. உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து
எல்லாம் அந்தத் தம்ளர்களைப் போல. வாழ்க்கை தேனீர் போல. தம்ளர்களின் தரம் தேனீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்ப-
தில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி,
அந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத்
தீர்மானிப்பதில்லை.”

“அதை மறந்து இப்போது அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டதைப் போல வாழ்க்கையிலும் மிக உயர்ந்த வேலை, மிக அதிகமான பணம், மிக உயர்ந்த பதவி, பலர் மெச்சும் அந்தஸ்து ஆகியவற்றைப் பெற போட்டி போட்டுக் கொண்டு வாழ்வதால் தான் நீங்கள் மன உளைச்சலாலும், பிரச்சனைகளாலும் அவதிப் படுகிறார்கள். வாழ்க்கை என்ற தேனீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்”

“தோற்றங்களில் அதிகக் கவனத்தைத் தரும் போது உண்மையான வாழ்க்கையை நாம் கோட்டை விட்டு விடுகிறோம். வாழ்க்கையை ருசிக்கத் தவறி விடுகிறோம். எத்தனை தான் பெற்றாலும் உள் மனம் அந்த உண்மையை உணர்ந்திருப்பதால் அது என்றும் அதிருப்தியாகவே இருக்கிறது.”

அவர் சொல்லி முடித்த போது அந்த மாணவர்களிடையே பேரமைதி நிலவியது. சிலர் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தார்கள். சிலர் கண்களில் நீர் தேங்கி நின்றது. இருட்டில் இருந்ததால் தெரியாமல் போன பலதையும் வெளிச்சம் வந்தவுடன் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல அனைவரும் உணர்ந்தார்கள். இத்தனை நாள்கள் அவர் சொல்லித் தந்த பாடங்களை விட இப்போது சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை இவ்வளவு எளிமையாக மனதில் பதியும் படி வேறு யாரும் சொல்லித் தர முடியாது என்று நினைத்த அவர்கள் மனதில் அவர் இமயமாக உயர்ந்து போனார்.

ஒருவன் கண்ணீருடன் கை தட்ட ஆரம்பிக்க அவர் வீடு அடுத்த நிமிடத்தில் கை தட்டல்களால் அதிர்ந்தது.

நன்றி 
Nizam Deen A.H
Sr. Software Programmer
http://www.nellaieruvadi.com/

திங்கள், மே 02, 2011

ஃபியூஸ் போன பல்புகளை எரிய வைப்பது எப்படி??


ஃபியூஸ் போன பல்புகளை
எரிய வைப்பது எப்படி??

ஐந்தாவதோ ஆறாவதோ படித்துக் கொண்டிருந்த பள்ளிப் பருவம்
அது. அப்பொழுது எங்களுக்கு பெரிய கடைத் தெருவில் சின்ன
எலெக்ட்ரிக் கடை ஒன்று இருந்தது. அதை எங்க அப்பா தான்
வைத்து நிர்வகித்து வந்தாங்க. அப்பாவுக்கு ஒயரிங் வேலைகள்
முதல் எல்லா எலெக்ட்ரிக் வேலைகளும் அத்துப்படி. ஆனா
கடைக்கும், எங்க வீட்டுக்கு மட்டுமே தான் எல்லா எலெக்ட்ரிக் வேலைகளும் அவங்களே செய்வாங்க. வெளியிடங்களுக்கு
காண்ட்ராக்ட் ஆட்களை தான் அனுப்புவாங்க. சொந்த வீட்டுக்கு
மட்டும் அவங்க ஏன் அப்படி செய்றாங்க என்றால் நாங்கள்
எல்லோரும் அதை கத்துக்கணும் என்ற பேரார்வம் தான்.
ஆனாலும் நாங்க கற்றுக் கொண்டோமா என்றால்? தொடர்ந்து
படிங்க !!

ஒவ்வொரு நாளும் ஸ்கூல் முடிந்து வந்து கடையில் தான்
உட்கார்ந்து கொள்வேன். நான் வந்தவுடன் எவ்வளவு பிஸியான
கஸ்டமர் கூட்டமிருந்தாலும், எனக்கு டீயோ அல்லது காபியோ
அதனுடன் வடை பஜ்ஜி ஆர்டர் செய்து தனக்கும் அப்பா எடுத்துக் கொள்வாங்க.

கடையில் உள்ள அலங்கார விளக்குகள் சின்ன சின்ன மேஜிக்
விளக்குகள், சீரியல் செட்டுகள் இன்னும் விதவிதமான அலங்கார
பல்புகள், சுவிட்சுகள் எல்லாம் அந்த சின்ன வயசில் பார்க்கப்
பார்க்க பிரமிப்பாய் இருக்கும். கடையில் உட்கார்ந்துக் கொண்டு
ரோட்டில் போவோர் வருவோரை பார்க்க ஆர்வமாய் இருக்கும்

கடையில் கஸ்டமர்கள் வந்து கேட்கும் சோக்கு, சுவிட்ச் பாக்ஸ்
வண்ண வண்ண பின்னல் ஒயர்கள் இன்னும் நிறைய வகையான பெயர்கள் எல்லாம் எனக்கு அப்ப புதுசு.

சரவிளக்குகள், குலோபர்ஸ், சாண்ட்லியர்ஸ் இன்ன பிறவைகள்
ஏதாவது புதுமாதிரி எங்க கடைக்கு வந்தாலும், முதல் முதலில் முன்னோட்டம் பார்ப்பது எங்கள் வீட்டில் தான்!

வீட்டின் ஹோவென்று அகன்ற கூடத்தின் ஸீலிங்கில் வித
விதமான விளக்குகள் அழகழகாய் தொங்கிக் கொண்டிருக்கும்.
வருகிற போகிற சொந்த பந்தங்களிடமெல்லாம் இது இப்ப வந்த
புது மாடல், விலை ரொம்ப கம்மி என்றெல்லாம் சொல்வாங்க.
"அட அழகா இருக்கே எங்க வீட்டுக்கொன்று வேண்டும்" என்று
சொல்லி நிறைய பேர் வாங்கி போவாங்க.அப்ப அந்த டெக்னிக் என்னவென்று எனக்கு விளங்கவில்லை. இப்ப நினைத்துப்
பார்த்தால் அது பக்கா மார்க்கெட்டிங் யுக்தி என்பது மட்டும்
புரிகிறது!

எல்லோருமே அந்த கூடத்தில் தான் படுத்துறங்குவோம். இரவில்
படுத்துக் கொண்டு அவைகளை பார்க்கும் போது, மிக பாந்தமாய்
ஒரு மிகப் பெரிய டெக்கோரேட் செய்த அரண்மனையில் படுத்து
உறங்குவது போல் நினைப்பு வரும். அதற்கு தகுந்தாற்போல் அந்த ஸீலிங்கும் மிக ரசனையாய் வடிவமைக்கப் பட்டிருக்கும். அதைப்
பார்க்கும் போது அப்பவே நிறைய கற்பனைகளாய் வரும். ஆனால் அவைகள் என்னவென்று இப்ப கேட்டால் எனக்கு சொல்ல
தெரியாது.

ஒரு பல்பு பியூஸ் போய்விட்டால் அதை தூர வீசியெறிய
மாட்டாங்க. அதன் இழைகள் உள்ளே கழன்று விழுந்து கிடப்பதை திரும்பவும் ஒட்டவைத்து எரிய விடுவார்கள். அந்த சின்ன வயசில்
எனக்கு ரொம்ப ஆச்சரிய மாயிருக்கும்!! இதை என் சகோதரிகளுக்கு
அப்பா சொல்லிக் கொடுத்தாங்க.

ஆர்வத்தில் நானும் கற்றுக் கொள்ளனும் என்று அக்காவிடம்
அடம்பிடித்து, பல்பை தூக்கிப் பிடித்து அந்த இழையை சரியாய்
கொண்டு வந்து அதனோடு ஒட்டவைக்க படாதபாடு பட்டு,
தலையை இப்படி அப்படி சாய்த்து, பல்பை போட்டு உடைத்து
கடைசியில் அக்கா கையால் ‘ணங்’ என்று தலையில் குட்டு
வாங்கியது தான் மிச்சம் ஆனா வலிக்காது. அவ்வ்வ்வ்..!!
(என்னா பெருந்தன்மை) (:-)))

அப்பா யார்கிட்டயாவது பேசிக் கொண்டிருக்கும் போது, அடிக்கடி
என் காதில் விழுகிற மாதிரி, "இந்த வேலை தான் என்றில்லை.
எல்லா வேலைகளையும் நாம கத்து வச்சுக்கணும். அப்பதான்
ஏதாவது ஒன்னு நமக்கு கைகொடுக்கும்" என்று சொல்வாங்க.
விளையாட்டு தனமான வயசு. அப்ப அதை நான் பெரிதாக
எடுத்துக் கொண்டதில்லை. பின்னர் உணர்ந்ததுண்டு !!

ஆனா இப்ப வரைக்கும் “ஃபியூஸ் போன பல்புகளை எப்படி
ஒட்ட வைத்து எரிய வைப்பது” என்பதை நானும் கற்றுக்
கொள்ளவே இல்லை. தெரிந்திருந்தால் உங்களுக்காவது
சொல்லிக் கொடுக்கலாம். ஹி..ஹி… சரி விடுங்க! இப்ப என்ன
போச்சு! இப்பல்லாம் அதிகமாய் அதை உபயோகப் படுத்துவ-
தில்லை என்பது ஆறுதலான விஷயம் தானே! நாம் தான்
அதிகமாய் ‘குழல்’ விளக்குகள் யூஸ் பண்ண ஆரம்பித்து
விட்டோமே!

ஒரு அனுபவம் என்பதை நாம் கற்றுக்கொள்ள பலபடிகள்
ஏறி இறங்க வேண்டியிருக்கும். நாம் கற்ற அனுபவங்களை
மற்றவர்களிடம் சொன்னால் அது அவர்களுக்கு ரொம்ப சீப்பாய்
தோன்றலாம்! ஏனெனில் அது இலவசமாய் கிடைக்கிறதே! அதுவே.
சில விஷயங்கள் அவர்கள் அனுபவப்பட்டு, பணம் செலவழித்து
பெற்றால் தான் அதன் தனித்துவமும் மகத்துவமும் புரியவரும்.

ஒரு ஊரில் பெரிய மனிதர் ஒருவர் இருந்தார். அவர் தன்னிடம் முக்கியமான 'அட்வைஸ்' ஒன்று இருக்கு என்று விளம்பரப்
படுத்தினார். அது என்னவென்று கற்றுக் கொள்ளும் ஆர்வம்
பலருக்கு இருந்தாலும், "ஒரு அட்வைஸுக்கு ஆயிரம் ரூபாய்
கட்டணமாய் தரனும்" கறாராய் சொன்னதால் இது கேட்டு மிரண்ட
பலரும் அவரிடம் போகவே இல்லை.

ஒரே ஒரு மனிதர் மட்டும் அவரிடம் சென்று ஆயிரம் ரூபாயைக் கொடுத்து, "நீங்கள் சொல்லும் அட்வைஸ் என்ன?" என்று கேட்டார்.
"எந்த வேலையையும் அந்தந்த குறித்த நேரத்தில் செய்திடணும்,
தாமதிக்கக் கூடாது" என்று பதில் வந்தது.

"ச்சே" ஆயிரம் ரூபாய்க்கு இது தானா அட்வைஸ் என்று மனம் நினைத்தாலும், சரி அவர் சொன்ன அறிவுரைப் படி செய்துப்
பார்க்கலாமே என்றெண்ணி, அன்றிரவு வந்திறங்கிய சரக்கு
மூட்டைகளை, பின்னேரம் ஆயிடினும், உடல் அசதி வருத்திய
போதும், ஆட்களை முன்னிறுத்தி அவைகள் எல்லாவற்றையும்
ஸ்டாக் ரூமில் கொண்டு போய் அடுக்கிய பின்பே படுத்துறங்கப்
போனார்.

பொழுது விடிந்து பார்த்தபோது ஊரே காற்றிலும் மழையிலும்
அல்லோலப் பட்டுப் போய் கிடந்தது. பல வியாபாரிகளின் மதிப்பு
மிக்க பொருட்கள் நீரில் மூழ்கி பல லட்சம் நஷ்டமாகிப்
போயிருந்தது. தான் பணம் கொடுத்து கற்ற அட்வைஸ் அந்த
நொடியில் மதிப்பு மிக்கதாய் தெரிந்தது. தனது பொருட்களும்
வீணாகாமல் போனதில் அந்த வியாபாரிக்கு மிக்க மகிழ்ச்சி!!
அந்த வியாபாரி உப்பு ஏற்றுமதி வியாபாரம் செய்து வந்தார்
என்பது இங்கே ஞாபகம் கொள்ளவேண்டிய ஒரு விஷயம்!!

ஆகவே நல்ல அறிவுரைகள் எங்கு கிடைத்தாலும் அள்ளிக்
கொள்ளனும். அதை நாமும் பின்பற்றனும்!!