நெருங்கிய நண்பரின் குழந்தைகளுக்கு பர்த்டேயாம். ரொம்ம்ம்ம்ப.... வற்புறுத்தினார். சாதரணமா இதுமாதிரி விழாக்களில் எல்லாம்
நாம் எப்பவுமே கவனம் செலுத்துவதில்லை. ஆனால் பிரியாணியாம்... அதுவும் இறால் பிரியாணி!! இன்னும் ஏதேதோ அய்ட்டங்களை எல்லாம் சொல்லிக் கொண்டே போனார். அதெல்லாம் காதில் விழவில்லை. விடுவமா ?? சாப்பாடு என்றால் தான் எங்க வேணும்னாலும் போவோமே! ஹி..ஹி. (ஆனா புளிய மர உச்சிக்கி மட்டும் போக மாட்டோம். அவ்வ்வ்வ்.... அங்கே.. அங்கே.. நா சொல்லமாட்டேம்பா!!!!)
பாருங்க நாம எவ்வளவு பொறுப்போடு வளர்ந்திருக்கிறோம்.
சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். பேச்சு சுவாரஸ்யத்தில் நான் கொஞ்சம் நிறையவே சாப்பிட்டு விட்டேன். (ஹா.. இது எப்போதும் நடக்கிற கதை தானே என்று நீங்க கேட்பதெல்லாம் இப்ப காதில் விழாது!) ஆச்சு முடிஞ்சுச்சு...!! கல்லா கட்டியாச்சு.
அவருடைய மகள் பாயாசத்தை ஸ்பூன் ஸ்பூனாய் குடித்துக் கொண்டிருக்கும் போது 'கடக்'கென்று சப்தம் (கல்). அப்படியே வாயில் தண்ணீரை கட கடவென்று சப்தமிட்டு பக்கத்திலிருந்த குண்டானில் துப்ப..
"ஏன்?? என்னாச்சு??" (கேட்கனும்ல!)..கேட்டேன்.
"சாப்பிட்ட பாயாசத்தில் கல் இருந்துச்சு uncle..."
சொல்லி முடிக்கலை..
"கல் சாப்பிட்டா, கல் செறிக்கிற வயசு உனக்கு"- இது அவருடைய மகன்.
"அப்ப ஏன் சோறு சாப்பிடுறீங்க?" இது அவர் மகள்.
அறிவு.. அறிவு.. அவங்க வாப்பா மாதிரியே! (ஹி..ஹி..!!)
இவர்கள் பேச்சைக் கேட்டு நண்பர் நெளிந்தார்!!
இந்தக் காலத்து பிள்ளைகள் எப்படி எல்லாம் பேசிக்கிறார்கள், யோசிக்கிறார்கள். நாமும் தான் இக்கிறோமே!!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
" பாட்சா"
இங்கே மங்களூரைச் சேர்ந்த மூன்று அண்ணன் தம்பிகள் இருக்கிறார்கள். அவர்களில் இருவர் மூத்தவர்கள். கடைசிப் பையன் இளையவன் (இதுக்கு மேலே நான் விவரிச்சா நீங்க அழுதுடுவீங்க!! ஹி..ஹி.!!) இவர்கள் என் கண் பார்க்க படிப்படியாய் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்
எப்படி என்றால், இவர்கள் வேறு கம்பெனிகளிலோ, கடைகளிலோ வேலை செய்யவில்லை. மீன்களை குறைந்த விலைக்கு வாங்கி நல்ல விலைக்கு விற்பது. அதாவது சொந்தமாய் கடை ஏதும் வைக்காமல், வாங்கி வந்த வேனிலேயே ஒரு முட்டு சந்தில் வைத்து மீன்களை விற்று விடுவது. மூன்று பேரில் ஒருவர் விலை பேசி எடை போட்டு தந்துவிடுவார்.
மற்ற இருவரும் அதை வெட்டி சுத்தம் செய்து தந்துக் கொண்டி ருப்பார்கள். கடையில் வாங்குவதை விட, விலை மலிவாக இருப்பதால், இவர்களுக்கு நிறைய கஸ்டமர்கள். இரவில் ஒன்பது பத்து மணிக்கு மேல்தான் நிறைய பேருக்கு டூட்டி முடிந்து வருவதாலும், முனிசிபாலிட்டி (பலதியா) செக்கிங் இல்லாததாலும் இவர்கள் வியாபாரம் அமோகம்.
இப்படி சம்பாதித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து கண் படுமா இல்லையா? பட்டது!! யாராவது முனிசிபாலிட்டிக்கு போட்டுக் கொடுப்பது போல் போட்டு மாட்டிவிடுவது. முனிசிபாலிட்டிகாரன் வந்து இவர்களையும், மீன்களையும் அள்ளிக் கொண்டு போய் விடுவான்கள். அப்படி மாட்டி ரெண்டு மூணு தடவை கப்பம் கட்டியும் வெளியே வந்திருக்கிறார்கள். முன்னேறுவதற்கு இந்த ஒரு அடையாளம் போதாதா??
கண் சிமிட்டும் நேரம் போல் ஒரு நல்ல நாளில், ஒரு இடத்தைப் பிடித்து, நட்ஸ் கடை திறந்து விட்டார்கள். நட்ஸ் என்றால் போல்ட் நட்ஸ் இல்லை. பாதாம் பிஸ்தா கடை. இன்ன பிற அரைத்த கிச்சன் மசாலா சாமான்கள் சில்லறையில் விற்பனை மற்றும் டெலிபோன் கார்ட்கள் மொத்தமாய் கொள்முதல் செய்து wholesale/ retail-லில் விற்பது. அச்சா பஹூத் அச்சா.
இப்பல்லாம் பிற மாநிலத்துக்காரர்களிடம் ‘மெட்ராஸ்காரங்க’ என்று சொல்லிப் பாருங்க!! அப்படி ஒரு படுகேவலமான பார்வையைப் பார்ப்பார்கள் பாமரர்கள் கூட. ஆனால் இவர்கள் அப்படியல்ல!!!
நான் எப்ப கடைக்கு போனாலும் "பாட்ஷா" படத்தை பற்றி ரொம்ப சிலாகித்துப் பேசுவார்கள். "ஏய் நீ என்ன பெரிய பாஷாவா? ஒரு ஆளை அடிச்சா நூறு பேரு செத்து போய்டுவாங்கலாமே? அப்படிம்பாங்க. தமாஷுக்கு தான். அவர்கள் பேச்சு (ததிங்கினத்தோம் தமிழில்) ஒரே சிரிப்பாய் இருக்கும். அப்பத்திலிருந்து அவர்களை நான் பாட்சா என்று அழைப்பதும் , அவர்கள் என்னை பாட்சா என்று அழைப்பதுமாய் போய்க் கொண்டிருந்தது. ஆனா என்பெயர் அவர்களுக்கு தெரியாது. அவர்கள் பெயரும் எனக்கு தெரியாது. மொத்தத்தில் பாட்சா.. பாட்சா.. தான்.
ஃபேமிலி வந்த பிறகு இவர்களையும் அழைத்துப் போய் எல்லாப் பொருட்களும் வாங்குவோம். அப்பவெல்லாம் மூத்தவர்கள் இரண்டு பேர் கடையில் எப்போதும் இருப்பார்கள். இளையவன் கடையில் எப்போதாவது தான் இருப்பான்.
ஒரு நாள் என்னிடம் ‘இவங்க’ ஏதோ வாங்கச் சொன்னங்க. நான் வேலை விஷயமாய் எங்கோ போவதாய் சொல்லி, பாட்சா கடையில் வாங்கிக்க சொல்லிவிட்டு போய் விட்டேன்.
இவங்க போயிருந்த சமயம் கடைசி தம்பி தான் இருந்திருக்கான். "பாட்சா இல்லையா" என்று இவங்க கேட்க, அவன் "பாட்சா என்று யாரும் இங்க இல்லையேக்கா" என்று சொல்லி இருக்கான். இவங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு வந்துட்டாங்க! என் கிட்டேயும் அதைப் பற்றி கேட்கலை!!
பிறகொரு நாள் அந்தக் கடைக்கு போகும் போது, அந்த நேரத்தில் மூன்று பேருமே இருந்தாங்க. போன உடனேயே இவங்க கேட்டக் கேள்வி "உங்க மூணு பேர்ல யார் பாட்சான்னாங்க? ", அவர்கள் எல்லோருமே சிரிக்க, நானும் சிரித்தேன்.
நடுவன், "யக்கா இங்கே யாருமே பாட்சா கிடையாது. என் பெயர் சௌகத், அண்ணன் பெயர் அப்துல் ரஹ்மான், இளையவன் பெயர் நூருல்லாஹ்" என்று சொல்ல,
நானும் "என்னை அவங்க பாட்சான்னு கூப்பிடுவாங்க, நான் அவங்களை பாட்சான்னு கூப்பிடுவேன்" என்று சொல்ல..
ஙே...!!
"நல்ல ஓஹுத்திரியமா தாம்மா இக்கிது" (confusion) என்று இவங்க புலம்ப, ஒரே சிரிப்பு. (நோட் பண்ணிக்கோங்க இது புது வார்த்தை!!)
கூடுதலாய் தகவலுக்காக, இந்த சகோதரர்கள் தற்சமயம் வியாபாரம் செய்து வரும் கடை, நகை கடைகளை ஒட்டிய ஏரியா. இவர்கள் வியாபாரம் செய்து வரும் கடையும் முன்பு நகை கடை இருந்த இடம் தான். இவர்களும் நகைக் கடை திறக்க முயற்சி செய்து வருவதாக, வாய் வழிச் செய்திகள் காதுவழியாக புகைகிறது.
இப்பல்லாம் நான் அவர்கள் கடைக்குப் போனால் "பாட்சா..பாட்சா" என்று கூப்பிடுவதில்லை. "ராஸா, ராஸா" என்றே தான் கூப்பிடுறாங்க. ஏங்க...?? நல்லவேளை ஏதும் மொழிவாரியாக வேறு பெயர் சொல்லி கூப்பிடாமல் இருந்தால் சரிதான். அவ்வவ்வ்வ்வ்...
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
ஆஹா பக்கங்களின் இன்டலி பட்டையை யாரோ லூட்டடிச்சிகிட்டு போய்ட்டாங்க!! ஒரு மாசமா கவனிக்காட்டி இப்படியெல்லாம் கூட
ஆகுமா??