facebook

திங்கள், செப்டம்பர் 26, 2011

"நல்ல ஓஹுத்திரியமா தாம்மா இக்கிது....!!!"


நெருங்கிய நண்பரின் குழந்தைகளுக்கு பர்த்டேயாம்ரொம்ம்ம்ம்ப....  வற்புறுத்தினார்.   சாதரணமா இதுமாதிரி விழாக்களில் எல்லாம்
நாம் எப்பவுமே கவனம் செலுத்துவதில்லை. ஆனால் பிரியாணியாம்... அதுவும் இறால் பிரியாணி!! இன்னும் ஏதேதோ அய்ட்டங்களை எல்லாம் சொல்லிக் கொண்டே போனார். அதெல்லாம் காதில் விழவில்லை. விடுவமா ?? சாப்பாடு என்றால் தான்  எங்க வேணும்னாலும்  போவோமேஹி..ஹி. (ஆனா புளிய மர  உச்சிக்கி மட்டும் போக மாட்டோம்அவ்வ்வ்வ்.... அங்கே.. அங்கே.. நா சொல்லமாட்டேம்பா!!!!)  

பாருங்க நாம எவ்வளவு பொறுப்போடு  வளர்ந்திருக்கிறோம்.  

சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். பேச்சு சுவாரஸ்யத்தில் நான் கொஞ்சம் நிறையவே சாப்பிட்டு விட்டேன். (ஹா.. இது எப்போதும் நடக்கிற கதை தானே என்று நீங்க கேட்பதெல்லாம் இப்ப காதில் விழாது!) ஆச்சு முடிஞ்சுச்சு...!!  கல்லா கட்டியாச்சு.


அவருடைய மகள் பாயாசத்தை ஸ்பூன் ஸ்பூனாய் குடித்துக் கொண்டிருக்கும் போது 'கடக்'கென்று சப்தம் (கல்). அப்படியே வாயில் தண்ணீரை கட கடவென்று சப்தமிட்டு பக்கத்திலிருந்த குண்டானில் துப்ப..

"ஏன்?? என்னாச்சு??" (கேட்கனும்ல!)..கேட்டேன்.

"சாப்பிட்ட பாயாசத்தில் கல் இருந்துச்சு uncle..."

சொல்லி முடிக்கலை..

"கல் சாப்பிட்டா, கல் செறிக்கிற வயசு உனக்கு"- இது அவருடைய மகன்.

"அப்ப ஏன் சோறு சாப்பிடுறீங்க?" இது அவர் மகள்.

அறிவு.. அறிவு.. அவங்க வாப்பா மாதிரியே! (ஹி..ஹி..!!)

இவர்கள் பேச்சைக் கேட்டு நண்பர் நெளிந்தார்!!

இந்தக் காலத்து பிள்ளைகள் எப்படி எல்லாம் பேசிக்கிறார்கள், யோசிக்கிறார்கள். நாமும் தான் இக்கிறோமே!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
" பாட்சா"

இங்கே மங்களூரைச் சேர்ந்த மூன்று அண்ணன் தம்பிகள் இருக்கிறார்கள். அவர்களில் இருவர் மூத்தவர்கள். கடைசிப் பையன் இளையவன் (இதுக்கு மேலே நான் விவரிச்சா நீங்க அழுதுடுவீங்க!! ஹி..ஹி.!!) இவர்கள் என் கண் பார்க்க படிப்படியாய் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்

எப்படி என்றால், இவர்கள் வேறு கம்பெனிகளிலோ, கடைகளிலோ வேலை செய்யவில்லை. மீன்களை குறைந்த விலைக்கு வாங்கி நல்ல விலைக்கு விற்பது. அதாவது சொந்தமாய் கடை ஏதும் வைக்காமல், வாங்கி வந்த வேனிலேயே ஒரு முட்டு சந்தில் வைத்து மீன்களை விற்று விடுவது. மூன்று பேரில் ஒருவர் விலை பேசி எடை போட்டு தந்துவிடுவார்.

மற்ற இருவரும் அதை வெட்டி சுத்தம் செய்து தந்துக் கொண்டி ருப்பார்கள். கடையில் வாங்குவதை விட, விலை மலிவாக இருப்பதால், இவர்களுக்கு நிறைய கஸ்டமர்கள். இரவில் ஒன்பது பத்து மணிக்கு மேல்தான் நிறைய பேருக்கு டூட்டி முடிந்து வருவதாலும், முனிசிபாலிட்டி (பலதியா) செக்கிங் இல்லாததாலும் இவர்கள் வியாபாரம் அமோகம்.

இப்படி சம்பாதித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து கண் படுமா இல்லையா? பட்டது!! யாராவது முனிசிபாலிட்டிக்கு போட்டுக் கொடுப்பது போல் போட்டு மாட்டிவிடுவது. முனிசிபாலிட்டிகாரன் வந்து இவர்களையும், மீன்களையும் அள்ளிக் கொண்டு போய் விடுவான்கள். அப்படி மாட்டி ரெண்டு மூணு தடவை கப்பம் கட்டியும் வெளியே வந்திருக்கிறார்கள். முன்னேறுவதற்கு இந்த ஒரு அடையாளம் போதாதா??

கண் சிமிட்டும் நேரம் போல் ஒரு நல்ல நாளில், ஒரு இடத்தைப் பிடித்து, நட்ஸ் கடை திறந்து விட்டார்கள். நட்ஸ் என்றால் போல்ட் நட்ஸ் இல்லை. பாதாம் பிஸ்தா கடை. இன்ன பிற அரைத்த கிச்சன் மசாலா சாமான்கள் சில்லறையில் விற்பனை மற்றும் டெலிபோன் கார்ட்கள் மொத்தமாய் கொள்முதல் செய்து wholesale/ retail-லில் விற்பது. அச்சா பஹூத் அச்சா.

இப்பல்லாம் பிற மாநிலத்துக்காரர்களிடம் ‘மெட்ராஸ்காரங்க’ என்று சொல்லிப் பாருங்க!! அப்படி ஒரு படுகேவலமான பார்வையைப் பார்ப்பார்கள் பாமரர்கள் கூட. ஆனால் இவர்கள் அப்படியல்ல!!!

நான் எப்ப கடைக்கு போனாலும் "பாட்ஷா" படத்தை பற்றி ரொம்ப சிலாகித்துப் பேசுவார்கள். "ஏய் நீ என்ன பெரிய பாஷாவா? ஒரு ஆளை அடிச்சா நூறு பேரு செத்து போய்டுவாங்கலாமே? அப்படிம்பாங்க. தமாஷுக்கு தான். அவர்கள் பேச்சு (ததிங்கினத்தோம் தமிழில்) ஒரே சிரிப்பாய் இருக்கும். அப்பத்திலிருந்து அவர்களை நான் பாட்சா என்று அழைப்பதும் , அவர்கள் என்னை பாட்சா என்று அழைப்பதுமாய் போய்க் கொண்டிருந்தது. ஆனா என்பெயர் அவர்களுக்கு தெரியாது. அவர்கள் பெயரும் எனக்கு தெரியாது. மொத்தத்தில் பாட்சா.. பாட்சா.. தான்.

ஃபேமிலி வந்த பிறகு இவர்களையும் அழைத்துப் போய் எல்லாப் பொருட்களும் வாங்குவோம். அப்பவெல்லாம் மூத்தவர்கள் இரண்டு பேர் கடையில் எப்போதும் இருப்பார்கள். இளையவன் கடையில் எப்போதாவது தான் இருப்பான்.

ஒரு நாள் என்னிடம் ‘இவங்க’ ஏதோ வாங்கச் சொன்னங்க. நான் வேலை விஷயமாய் எங்கோ போவதாய் சொல்லி, பாட்சா கடையில் வாங்கிக்க சொல்லிவிட்டு போய் விட்டேன்.

இவங்க போயிருந்த சமயம் கடைசி தம்பி தான் இருந்திருக்கான். "பாட்சா இல்லையா" என்று இவங்க கேட்க, அவன் "பாட்சா என்று யாரும் இங்க இல்லையேக்கா" என்று சொல்லி இருக்கான். இவங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு வந்துட்டாங்க! என் கிட்டேயும் அதைப் பற்றி கேட்கலை!!

பிறகொரு நாள் அந்தக் கடைக்கு போகும் போது, அந்த நேரத்தில் மூன்று பேருமே இருந்தாங்க. போன உடனேயே இவங்க கேட்டக் கேள்வி "உங்க மூணு பேர்ல யார் பாட்சான்னாங்க? ", அவர்கள் எல்லோருமே சிரிக்க, நானும் சிரித்தேன்.

நடுவன், "யக்கா இங்கே யாருமே பாட்சா கிடையாது. என் பெயர் சௌகத், அண்ணன் பெயர் அப்துல் ரஹ்மான், இளையவன் பெயர் நூருல்லாஹ்" என்று சொல்ல,

நானும் "என்னை அவங்க பாட்சான்னு கூப்பிடுவாங்க, நான் அவங்களை பாட்சான்னு கூப்பிடுவேன்" என்று சொல்ல..

ஙே...!!

"நல்ல ஓஹுத்திரியமா தாம்மா இக்கிது" (confusion) என்று இவங்க புலம்ப, ஒரே சிரிப்பு. (நோட் பண்ணிக்கோங்க இது புது வார்த்தை!!)

கூடுதலாய் தகவலுக்காக, இந்த சகோதரர்கள் தற்சமயம் வியாபாரம் செய்து வரும் கடை, நகை கடைகளை ஒட்டிய ஏரியா. இவர்கள் வியாபாரம் செய்து வரும் கடையும் முன்பு நகை கடை இருந்த இடம் தான். இவர்களும் நகைக் கடை திறக்க முயற்சி செய்து வருவதாக, வாய் வழிச் செய்திகள் காதுவழியாக புகைகிறது.

இப்பல்லாம் நான் அவர்கள் கடைக்குப் போனால் "பாட்சா..பாட்சா" என்று கூப்பிடுவதில்லை. "ராஸா, ராஸா" என்றே தான் கூப்பிடுறாங்க. ஏங்க...?? நல்லவேளை ஏதும் மொழிவாரியாக வேறு பெயர் சொல்லி கூப்பிடாமல் இருந்தால் சரிதான். அவ்வவ்வ்வ்வ்...

<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
ஆஹா பக்கங்களின் இன்டலி பட்டையை யாரோ லூட்டடிச்சிகிட்டு போய்ட்டாங்க!! ஒரு மாசமா கவனிக்காட்டி இப்படியெல்லாம் கூட
ஆகுமா??

வெள்ளி, செப்டம்பர் 02, 2011

"ஆவு கெச்சேனு"



ஆவு கெச்சேனு


மணி என்றால் பணமென்றும், நேரமென்றும், பெல் என்றும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் நம்ம நண்பர் மணியை, மணி என்றே எல்லோரும் அழைப்போம். இந்த மணிக்கு ஓர வஞ்சனை, நுனி வஞ்சனை ஏதும் தெரியாது. யார் எந்த வேலை சொன்னாலும் செய்து கொண்டே இருப்பார். அவர் இங்கே அமீர் ஆபீசில் ஏஸி ரெஃப்ரிஜிரேஷன் பணியில் இருக்கிறார்

ஒருமுறை முறை டாய்லெட்டில் பிளஷ்அவுட் வேலை செய்யலை. மணியிடம் பேசிக் கொண்டிருந்த போது "யாரவது தெரிந்த ப்ளம்பர் இருந்தா அனுப்புங்க" என்று சொன்னேன். 'சரி' என்று சொன்னார். மறுநாள் டூட்டி முடிந்து வெளியே வரும்போது அவர் தான் நின்றுக் கொண்டிருந்தார். “என்ன மணி?” என்றேன். “வாங்க வீட்டுக்கு போகலாம்” என்றார். “அப்ப ப்ளம்பர்?? என்றேன். “வாங்க பார்த்துட்டு போய் கூட்டி வரலாம்” என்றார். “சரி” என்று கூட்டி போனேன்.

மணியை கூட்டிப் போய் டாய்லெட்டில் உள்ள பிரச்சினையை காட்டிவிட்டு, மணிக்கு டீ போடுங்க என்று சொல்லிவிட்டு, யாரோ போனில் கூப்பிட்டார்கள் அவர்களோடு பேசிக் கொண்டிருந்த போது, "இப்ப வர்றேன்" என்று சொல்லி வெளியே போனார். சரி ப்ளம்பரை கூப்பிடத் தான் போகிறார் என்று நினைத்துக் கொண்டேன். போய் விட்டு பையில் எதையோ வாங்கி வந்தார். "என்ன மணி ப்ளம்பர் எங்கே?" என்று கேட்டேன்.

"இதோ இப்ப வந்துடுவார்" என்றார். "சரி நீங்க இங்க வாங்க இந்த டீ யையும் பிஸ்கட்டையும் சாப்பிடுங்க" என்றேன். "இதோ ஒரு நிமிஷத்தில் வருகிறேன்" என்று டாய்லெட்டினுள் திரும்ப போய் விட்டார்.

அஞ்சு நிமிஷத்தில் "சார் இங்க வந்து பாருங்க!" என்றார். பிளஷ்அவுட்டை அழுத்திப் பார்க்கச் சொன்னார். அழுத்தினேன். தண்ணீர் சர்ர்ர் என்று பிய்த்துக் கொண்டு அடித்தது. பிரமிப்புடன் மணியைப் பார்த்து "இந்த வேலைய எப்ப கத்துக் கிட்டீங்க" என்று கேட்டேன். "நேரம் போகாத நேரத்தில் இந்த வேலையையும் கத்துக்கிட்டேன்" என்றார்.

பெருநாள் நெருங்கி கொண்டிருந்த நேரம். வீட்டில், "புது பேண்ட் இன்னும் தைக்கக் கொடுக்கலியா" என்று தினம் கேட்டுக் கொண்டே இருந்தாங்க. இன்னும் பேண்ட் பிட்டே எடுத்தப் பாடில்லை. எப்ப நேரம் கிடைத்து எப்ப தைக்க கொடுக்கிறது.

பிறகு தான் டைலர்ஸயே போய் பார்த்தேன். எல்லோரும் ரொம்ப பிஸியாய் இருந்தார்கள். பெருநாள் முடிந்து பார்க்கலாமே என்றார்கள். பேண்ட் தைக்க கொடுக்காமல் போனால் வீட்டில் லெப்ட் அண்ட் ரைட் தான். மணிக்கு தெரிந்த ஆட்கள் இருப்பார்களா?? எதுக்கும் தான் விசாரித்துப் பார்ப்போமே என்று, சொன்னேன். அப்படியா?? பார்க்கலாம் சார்,,, என்று வீட்டுக்கு வந்தார். பேண்ட் துணியையும் அளவையும் கொடுங்க என்று வாங்கிக் கொண்டு போனார். "பெருநாளைக்கு போட்ட மாதிரி தான்" என்று குரல் கேட்டது!!

மறு நாள் தைத்த பேண்ட்டை கொண்டு வந்து கொடுத்து "போட்டுப் பாருங்க சார் சரியா இருக்கான்னு பார்ப்போம்னு" ஆச்சர்யப் படுத்தினார். உடுத்தி வந்து "எப்படி... மணி" என்றேன். "எல்லாம் நாம தச்சது சரி இல்லாமலா போய்டும்" என்றார். "அட" பிரமிப்பாய் இருந்தது.

"இத எப்படி கத்துக்கிட்டீங்க" என்றேன்.

"டூட்டி முடிஞ்சு ரூமில் நேரம் போகல. ஒரு மெஷின் வாங்கி போட்டு கத்துக் கிட்டேன்"

பின்னொரு தடவை வீட்டில் வாஷிங் மெஷின் ஓடவில்லை. மணியிடம் சொல்லலாம் என்று ஆளனுப்பி சொன்னேன். அந்த நேரம் அவருடைய செல் நம்பரை எங்கோ மறந்து வைத்து விட்டேன். வந்தார். அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துப் போட்டு விட்டார். ஆட்டோமேடிக் வாஷிங் மெஷின். இதன் பாகமொன்று வேலை செய்யவில்லை. இந்த பார்ட்ஸ் மார்கெட்டில் கிடைக்குமா என்று அவரே கேட்டுக் கொண்டு, எதுக்கும் போய் பார்க்கலாம் என்று அவரே புறப்பட்டுப் போய் மெனக்கெட்டு வாங்கியும் வந்து விட்டார். பிரித்துப் போட்ட பார்ட்ஸின் கிட்ட கூட சென்று நான் எட்டிப் பார்க்கவில்லை. ஆனால்

என்னை அருகே கூப்பிட்டு காட்டினார். அதனுள்ளே வயர்கள் சுற்றி இருந்த பகுதியில் மிகப் பெரிய ஒரு வெயிட்டான கல் ஒன்று இருந்தது. "என்ன மணி இவ்வளவு பெரிய தபூக் கல் இருக்கு" என்று கேட்டேன். "அது தான் மெஷினை அங்கிட்டும் இங்கிட்டும் நகர்ந்து ஓடாமல் நின்ற இடத்திலேயே நின்று ஓட வைக்கும்" என்றார்.

"அப்படியா?"

நான் மணியை கொஞ்சம் ஹாலில் இருக்கச் சொல்லிவிட்டு பெருமையாய் இவங்களை கூப்பிட்டு அந்த கல்லை காட்டினேன். "ஆவு கெச்சேனு எம்புட்டு பெரிய கல்லு உம்மாடி..." ன்னாங்க. போய்ட்டாங்க.

எல்லாவற்றையும் இணைத்து ஓடவும் வைத்து விட்டார். மணியிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. நாம் என்ன வேலை சொன்னாலும் செய்துவிட்டு காசு கொடுத்தால் வாங்க மாட்டார். அதனாலேயே அவரை கூப்பிட்டு எந்த வேலை சொல்லவும் ஒரு சங்கோஜமாவே இருக்கும்.

மணி போன பின் இவங்களிடம்

"ஆவு கெச்சேனு, அப்படின்னா என்ன? ன்னு கேட்டேன்.

"ம்ம்ம்ம்... அதுவா பொம்பளைங்க பாஷை" ன்னாங்க!

ஒருவேளை 'வாவ்' என்பதை தான் இப்படி சொன்னாங்களோ, தெரியலை! ஆனா முன்பொருமுறை விமல் பெட்சீட் விளம்பரம் ஒன்றில், "பெண்கள் தங்கள் மனோபாவங்களை பல வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள் அவற்றில் இதுவும் ஒன்று" என்று ஒரு வரி எழுதி இருக்கும். அது போல் தான் இதுவும் என்று நினைத்துக் கொண்டேன்.

எதையோ சொல்ல வந்து விட்டு நானும் வேறெதையோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆமா இந்த மணி இன்னும் எனென்ன வேலைகள் எல்லாம் கற்று வைத்திருக்கிறார் என்று நேரம் வரும்போது ஒன்னொன்னா கேட்கணும். இதுமாதிரி நண்பர்கள் அமைவது ரொம்ப அபூர்வம்.

இங்கே பிலிப்பைன்ஸ் நாட்டுகாரர்களைக் கூட பார்த்திருக்கிறேன். ஆபீசில் பெரிய போஸ்டிங்கில் இருப்பார்கள். ஆனால் தச்சு வேலை, பெய்ண்டிங் வேலை, ஏஸி மெக்கானிசம் எல்லாம் தெரிந்து வைத்திருப்பார்கள். எப்படி என்று கேட்டால், எங்களுக்கு தொழில் கல்வி கற்ற பிறகு தான், மற்ற படிப்புக்கு அலவ்ட் என்கிறார்கள்.

அந்த வகையில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதும் இப்போது புரிகிறது. 'மணி' போல் இன்னும் பலபேர் நமது நாட்டில் நிறைய வேலைகள் கற்றுக் கொண்டு உருவாக வேண்டும்.