facebook

சனி, நவம்பர் 26, 2011

ஹைப்பர் கொள்ளைகள்!!

பத்து நாள் வலைப்பூ பக்கம் வாராமல் போனால் "காணவில்லை" போர்டு 
மாட்டிடுராங்கைய்யா...!! மீ... நடந்தாலும் கடல் மேல் தான் நடந்துக் கொண்டிருப்பேன். அவ்வ்வ்வ்...


 
கல்யாணம் முடிந்தும் பேச்சிலர்ஸாக சமைத்துக் கொண்டிருந்த காலத்தில், இங்குள்ள மினி மார்கெட்களில் தான் பொருட்கள்களை வாங்குவோம். அப்பொழுதெல்லாம் குறைந்தபட்சமாக 25-லிருந்து 50- ரியால்கள் வரை வாங்கினால், ராஃபில் டிக்கட் ஒன்று தருவார்கள். மாதக் கடைசியில் பரிசு விழும் நம்பருக்கு, அவர்கள் பக்கத்திலேயே திறந்து வைத்திருக்கும் புடவைக் கடையில் ஒரு புடவை எடுத்துக் கொள்ளலாம். புடவையின் மதிப்பு சுமாராக ஐம்பது ரியாலுக்கு குறையாமல் இருக்கும். நல்ல டிசைனில், விலை அதிகமுள்ள புடவை வேணுமென்றால் நாம் மேற்கொண்டு பணம் கொடுக்க வேண்டும். மாதா மாதம் நண்பர்கள் நாங்கள் ஆளுக்கொன்று என்று கணக்கு வைத்து எடுத்துக் கொள்வோம்.

இது மாதம் முழுக்க (கிட்டத்தட்ட அறுநூறு ரியாலுக்கு மேல்) நாம் பணம் கொடுத்து வாங்கும் பொருட்களுக்கு, நம்மிடமே வாங்கிய பணத்தை, இப்படி புடவை என்ற பெயரில் அட்ராக்ஸனாக திருப்பி தந்து விடுவது. கஸ்டமர் களை கட்டிப் போடும் டெக்னிக்கும் இதுதான்! இதை எவ்வளவோ மேல் என்று இப்ப கூட ஒப்புக் கொள்ளலாம். ஆனால் -

இப்பொழுது புற்றீசல்கள் போல் தெருவுக்குத் தெரு பல ஹைப்பர் மார்க்கெட்கள் நம்மை எப்படி எல்லாம் கவர்ந்து கொள்ளையடிக்கின்றன என்றால் வாரா வாரம் ஆஃபர் மழை என்ற பெயரில் தான்.

கட்டுகட்டாய் புக்லெட்டுகளை எல்லா இடங்களிலும் கொண்டு வந்து வீசிவிட்டு போவார்கள். எப்படி என்றால் சாதரணமாக மினி மார்கெட்களில் வாங்கும் ஒரு பொருளின் விலையை ஐந்து ரியாலிலிருந்து பத்து ரியால்கள் வரை குறைத்துப் போட்டு நம் மனதில் சலனமேற்ப் படுத்து வார்கள். சரி, சலனமேற்ப்படுத்திய மனதை சமாதனப் படுத்தலாம் என்று நம் பர்சை தொட்டுப் பார்த்துக் கொண்டு அங்கே போனால், அந்த பிரமாண்டமான மார்க்கெட்களின் வாசல்களில் வகைக்கு ஒன்றாக அப்பொழுது தான் புதிதாக இறங்கிய கார்களின் அணிவகுப்பை நிறுத்தி வைத்து இருப்பார்கள். மனம் இப்ப ஒருவகை உவகைக் கொண்டு உள்ளே நுழைய அடியெடுத்து வைப்போம்.

சரி......

உள்ளே போயாச்சா?.....

போயாச்சு!!

இனிமேல் தான் நமக்கு கவனமோ கவனம் ரொம்ப தேவை. மறந்து விடாமல் அவர்கள் ஆஃபர் போட்டிருக்கும் ஒரு புக் லெட்டை நம் கையில் வைத்திருப்பது உத்தமம்.

நீங்கள் விருப்பப்பட்ட பொருட்களை எடுக்கும் போது செல்ஃபில் அதன் விலையையும், புக் லெட்டில் போட்டிருக்கும் விலையோடு ஒப்பிட்டு சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ஒவ்வொரு பொருளுக்கும் அதன் மேல் விலை குறிக்கப் பட்டு இருக்காது. தோராயமாக ஒரு பொருளுக்கும் இன்னொரு பொருளுக்கும் இடையே செல்ஃபிலேயே விலை குறிக்கப்பட்டு இருக்கும். இது தான் ஹைப்பர் மார்கெட்களின் ட்ரிக். ஆஃபரில் மதிமயங்கி எல்லா பொருட்களின் விலையுமே குறைவாகத் தானிருக்கும் அள்ளிக் கொண்டு போவர் பலர். அவர்களை உஷார் படுத்தவே இந்தப் பதிவு!!

விலை குறைக்கப்பட்ட ஒரு பொருளை வைத்துக் கொண்டு, பத்துப் பொருட்களில் பலமடங்கு விலை ஏற்றி வைத்திருப்பார்கள். மனதில் பட்டதை எல்லாம் ட்ராலியில் அள்ளிப் போட்டுக் கொண்டு, கவுண்டரில் போய் நின்றால், பார்கோடு நம்பரை வைத்து க்ளிக்கி கிடுகிடுவென்று சிலிப்பை கிழித்து கையில் கொடுத்து, பணத்தை வாங்கிக் கொண்டு நம்மை அங்கிருத்து நகர்த்தத்தான் பார்ப்பார்கள். அங்கே நின்று கொண்டு நாம் எடுத்த பொருளையும் விலையையும் சரி பார்த்துக் கொண்டிக்க முடியாது. கூட்டம் முட்டித் தள்ளும்.

கவனமாய் பொருட்களை தேடி எடுத்தாலும், இந்த கேஷியர் கவுண்டரில் பணம் கொடுக்கும் போது தான் ரொம்ப உஷாராய் இருக்கணும்.

சில நேரங்களில் சில ஹைப்பர் மார்க்கெட்களில் ஆஃபர் போட்ட விலையை கேஷியர் டேட்டாவில் என்ட்ரி செய்யாமல் வைத்திருப் பார்கள். நீங்கள் எடுத்த (ஆஃபர்) பொருளின் விலையை பார்கோடை வைத்து அடிக்கும் போது பழைய கூடுதல் விலையே பிரிண்ட் ஆகும் அபாயமும் இருக்கு! இப்படி தான் சென்ற வாரம் நான் வாங்கிய ஷாம்பூவில் கேஷியர் கவுண்டரில் விலை அதிகமாக ப்ரிண்டாகி வந்தது. கேட்டால் "அது வேறு நமுனா- (BRAND), இது வேறு நமுனா" என்கிறான். ரெண்டும் ஒன்று தான் என்று ஆஃபர் லீப்லெட்டை காட்டிய போது, ஏதேதோ சொல்லி நம்மை சமாளிக்கப் பார்க்கிறான். (நம்ம கிட்டேயேவா??) வேணாம் என்று அதை கேன்சல் செய்வதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

இதெல்லாம் ஒரு கண்கட்டு வித்தை மாதிரியே இப்பல்லாம் எல்லா இடங்களிலும் நடக்கிறது. கேட்பதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு சிலபேரும், மொழி தெரியாமல் எப்படி கேட்பது என்று பலபேரும், வாய் பேசாமல் அப்படியே வாங்கிச் செல்வதை பார்க்க முடிகிறது.

இறுதியாக -

இந்த மாதிரி ஹைப்பர்களில் இரண்டு வாரத்திற்க்கு ஒருமுறை ஆஃபர் போடுவதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் போகும் போது ஆஃபர் போட்டிருக்கும் பாதி பொருட்களுக்கு மேல் அங்கே இருக்காது. கேட்டால் "விற்று தீர்ந்து போச்சு" என்பார்கள். ஆஃபர் போட்ட அன்றே போனால் கூட இதே கதை தான். ஏனெனில்  நீங்கள் விரும்பி வாங்கும் அந்த பொருட்களை அவர்கள் அங்கே வைப்பதே இல்லை. வெறுமனே புக்லெட்டில் மட்டும் தான் ஆஃபர் என்று பெயருக்கு இருக்கும். காரணம் உங்களை மால்களுக்கு வரவழைக்கவே! வந்தது தான் வந்தோம் வெறுமனே கைவீசிக் கொண்டு போக வேணாம் வேறு ஏதாவது வாங்கிக் கொண்டு போவோம்  என்ற உங்களின் நாடி துடிப்பு தான் அவர்கள் கையில்!

முடிவாக –

பணத்தை கொடுத்துக் கொண்டிருக்கும்போது, நாம் வாங்கிய பொருளை பையில் எடுத்துப் போட்டு, நம் கையில் கொடுக்கும் இந்தியர் ஒருவர் சொல்கிறார். "இங்கே எல்லாமே கோல்மால் வேலை தான் நடக்கிறது பய்யா(சகோதரா), நேற்று பம்பர் பரிசுக்காக பெட்டியில் போட்ட சீட்டுக் களை, நேற்றிரவே குப்பையில் தூக்கி கொட்டச் சொல்லி விட்டார்கள்" என்று ஹஸ்கியாய் என்னிடம் சொல்கிறார். அடப்பாவிகளா?? இந்தக் கொடுமையை நான் எங்கே போய் சொல்வது... உங்களைத் தவிர!!

அப்ப தினம்தினம் இப்படித் தானா??

கடைசி கடைசியாக -

நாம் சம்பாதித்த பணத்துக்கு, பணமும்   போய், கடைசியில்  'பல்பு' வாங்காமல் இருந்தால் சரி!! இதற்குமேல் ஒன்றும் சொல்வதிற்கில்லை!!