எல்லாமே கணக்கு தான்!!
எங்க மேனேஜர் இன்றைக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.
'எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரித்துக் கொள்ள சொன்ன மாதிரி',
“ஒரு நாளைக்கு (உள்ள இருபத்தி நாலு மணி நேரத்தை) எட்டு
எட்டா பிரிச்சுக்க” என்றார்.
எப்படி??
“எட்டு மணி நேரம் டூட்டி என்றால், முடிந்த உடனே ஒரு நிமிஷம்
கூட சீட்டில் உட்கார்ந்திருக்காதே. (ஓவர் டைம் இருந்தா மட்டும்
அட்ஜஸ்ட் பண்ணிக்க!!) அடுத்த எட்டு மணி நேரத்தை, உனது
மனைவி, பிள்ளைகளுடன் ‘கொஞ்சி’ கும்மாளமடிக்க, சொந்தங்கள், நண்பர்களுடன், தொழுகை, பிரார்த்தனை, உடற்பயிற்சி இன்ன பிற
என்று நேரம் வகுத்துக் கொள்.
ப்ளாக் எழுதினால் மனைவி குழந்தைகளுக்கு உள்ள நேரத்தை ஒரு போதும் விட்டுக் கொடுக்காதே! (அவ்வ்வ்வ்… ஆமாங்க ஆமாம்!!) மீதி
உள்ள எட்டு மணி நேரம் கண்டிப்பாய் உறக்கம்”. (வராவிட்டால் கனவு காண். உபயம் : அப்துல் கலாம்) என்றார் நல்லது தானே சொல்கிறார்.
-----------------------
இங்கு (சவுதி – அமீரகம் - வளைகுடா முழுதும்) தட்ப வெப்ப நிலை
மாறிக் கொண்டு, ‘வெப்பத்துக்கும் குளிருக்கும் இடைப்பட்ட
மிதமான நிலையில்’ மனிதர்களை உடல்வலி, குளிர்ஜுரம்,
சல்லகடுப்பு (ஹி ஹி இப்படி தான் எங்க பாட்டி சொல்லும்)
ஜலுப்பு என்று ஆரம்பித்து, போட்டு வாட்டி எடுத்துக் கொண்டி
ருக்கிறது. குழந்தைகளையும் (உங்களையும் தான்) கொஞ்சம்
கவனமா கவனிச்சிக்கணும்.
யாரை நலம் விசாரித்தாலும் மூக்கு உரிதலோடு, ‘பொக்கு
பொக்கு’ என்று இருமிக் கொண்டு தான் பதில் வருகிறது.
பெரும்பாலான ஹாஸ்பிடல்களில் கூட்டமாவே இருக்கு.
இன்ஜெக்சன் போட வேண்டியவர்களுக்கு போட்டு, ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகள் எடுத்துக் கொள்ள சொல்லியும் சொல்கிறார்கள்.
இந்த சீசனில் மட்டுமல்லாமல் எந்த சீசனிலும் வெந்நீர்
போட்டு வைத்துக் கொண்டு பருகுங்கள். குழந்தைகளையும்
வெந்நீரையே எப்பொழுதும் குடிக்கச் சொல்லி வற்புறுத்துங்கள்.
சாப்பிடும் முன் கை கழுவி துடைத்து விட்டு சாப்பிடும்
பழக்கத்தை கை கொள்ளுங்கள்.
பழக்கத்தை கை கொள்ளுங்கள்.
-------------------------------------------------------------------------------------------
நிறைய படிக்க வேண்டும் என்ற ஆர்வலர்களுக்காக!
ஓர் அறிமுகம்
நாங்கள் படித்த திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில்
தற்போது தமிழ்த் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும்
பேராசிரியர் ரமீஸ் பிலாலி.
ஆழமாக, எந்த இட்த்திலும் நிதானம் தவறாமல், உணர்ச்சி
வசப்பட்டு விடாமல், தர்க்கம், கிண்டல், அழகான தமிழ் இப்படி எல்லாவற்றையும் வாரி வாரி வழங்கி எழுதுகிறார் இவர். யார்
மனமும் புண்படாமல், அதே சமயம் உண்மையை உண்மையாக
கூடுதல் குறைவு இல்லாமல் உரைக்கும் இவர் பாணி என்னை பரவசப்படுத்துகிறது.
“பிரபஞ்சக் குடில்” என்ற பெயரில் ஒரு வலைத்தளம் / பக்கம் வைத்துள்ளார். அவ்வப்போது இவர் உதிர்க்கும் ஆங்கிலச்
சொற்களின் மூலமாக இவரது ஆழமான ஆங்கில அறிவையும்,
ஆழ்ந்த படிப்பறிவையும் நாம் அனுமானிக்க முடிகிறது. எல்லா மதங்களையும் சேர்ந்த முக்கியமான எழுத்தாளர்களும் விரும்பிப்
படிக்கும் ஒரு ஆளாக இவர் இருக்கிறார். உண்மை அழகாகச் சொல்லப்படுவதை விரும்பும் யாரும் இவர் கட்டுரைகளை
ரசிக்காமலும் விரும்பாமலும் இருக்க முடியாது. நீங்களே படித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். http://www.pirapanjakkudil.blogspot.com/
நன்றி: பறவையின் தடங்கள்.