facebook

செவ்வாய், ஜனவரி 24, 2012

கடையில் அரைத்து பாக்கெட்டில் விற்கும் இட்லி, தோசை மாவு: ஒரு ஸ்லோ பாய்ஸன்??!!




என்ன தலைப்பை பார்த்து பயந்துவிட்டீர்களா, ஆம் இது
முற்றிலும்  உண்மை!!

மைதாவினால் செய்த பரோட்டா, அதில் உள்ள கெமிக்கல் உடம்புக்கு நல்லது அல்ல என கொஞ்ச நாளுக்கு முன் ஃபேஸ்புக்கில் பெரிதளவில் ஷேர் செய்யபட்ட பரபரப்பு அடங்கு முன்னர், இப்பொழுது இட்லி எனப்படும் வேகவைத்த "ரைஸ் பேன்கேக்" பற்றிய சிறு ஆய்வு.

பரோட்டாவாவது நமது பாரம்பரிய உணவு அல்ல, மற்றும் அதை இளைஞர்கள் தான் உண்ணுவார்கள், ஆனால் இப்பொழுது நமது ஒரு வயது குழந்தை முதல் வயாதனவர்கள் வரை உண்பது "இட்லி" எனப்படும் ஒரு தமிழனின் உணவு. இது போக பேஷண்ட்களும், அறுவை சிகிச்சை செய்தவர்களும் மற்றும் திட உணவு சாப்பிட ஆரம்பிக்கும் எந்த ஒரு பேஷண்டுக்கும் பரிந்துரைக்கும் முதல் உணவு இட்லி தான்.

இந்த கட்டுரையை நான் எழுதவேண்டும் என பல மாதங்கள் நினைத்தும் ஏனோ சில பல காரணங்களால் அது நடக்காமல் போனதற்கு ஒரு முக்கிய காரணம் அதற்கு தேவையான ஆராய்ச்சி விஷயங்கள் தான். அதற்குரிய பொறுமையான தேடல்களில் சமீபமாய் கிடைத்தவைகளை தான் உங்களுடன் பகிர்கிறேன்.

ஆம், நான் கூறும் இந்த விஷயங்கள் 100% சதவிகிதம் உண்மை. இட்லியை நீங்கள் வீட்டில் மாவரைத்து சாப்பிட்டால் பிரச்சினை கொஞ்சமும் இல்லை இதையே கடையில் வாங்கி சாப்பிட்டால் பல பேருக்கு ஒத்து வராது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்ப என்ன தான் பிரச்சினை என்கிறீர்களா?? அதற்கும் தேவையான் மாவு பற்றி தான் இந்த ஆய்வு கட்டுரை.

ஆம். ஒரு காலத்தில் நாம் ஆட்டுரலில் மாவு அரைத்தோம், பின்பு அது மிக்ஸி மற்றும் எலக்ட்ரானிக் கிரைண்டர்ஸ் வந்தது. அதுவும் பரவாயில்லை வாழ்க்கை மாற்றங்களின் காரணத்தால் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகி போனது. சமீப காலமாக இட்லி தோசை மாவு ‘ரெடிமேடாக’ பட்டிதொட்டி அண்ணாச்சி கடை முதல் பெரிய பெரிய  சூப்பர் மார்க்கெட் வரை எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. மக்களும் இட்லிக்கு மாவு அரைப்பதையே மெல்ல மறந்து வருகின்றனர்.

முன்பாவது திடீர் டிபன் ரவா உப்புமாதான். இப்பொழுது நம்ம வாண்டுகளிடம் "தம்பி முனை கடையில ஒடி போய் ஒரு பாக்கெட் இட்லி தோசை மாவு வாங்கி வா"ன்னு சொல்லி வந்த மாவை இட்லி தோசை ஊத்தி மிச்சத்தை ஃபிரிஜ்ஜில் வைத்து அது முடியும் வரை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். ஏனோ இதற்கு பேச்சிலர்சும்  விதிவிலக்கில்லை.

இந்த மாவு ஒரு உயிர்கொல்லி - ஸ்லோ பாய்ஸன் என்பது ஏனோ நிறைய பேருக்கு தெரிவதில்லை. இதன் பயங்கரத்தை இப்பொழுது கூறுகிறேன் கேளுங்கள்.




1. நீங்கள் வாங்கும் எந்த ஒரு வெட் ஃப்ளோர்-Wet Flour (ஈர பத தோசை மாவிற்கும்) ஐ எஸ் ஐ-ISI சான்றிதல் கிடையாது. அதனால் இது எந்த ஒரு ஆராய்ச்சி கூடத்திலும் சோதனை செய்யபடவில்லை.

2. இந்த மாவு சில மட்டமான அரிசியும் உளுந்தும் அத்துடன்,
புண்ணுக்கு பயன்படும் போரிங் பவுடர் மற்றும் ஆரோட் மாவு போடுவதால் மாவில் புளிப்பு வாசனை கண்டிப்பாக வராது. அது போக, மாவும் பொங்கி நிறைய வரும் என்பதால் இதை செய்கின்றனர். இதே மாதிரி வீட்டில் அரைத்த மாவை ரெண்டு நாள் வைத்து மூன்றாவது நாள் முகர்ந்து பாருங்கள் புளிப்பு வாசனையும் வரும் தோசையும் புளிக்கும். ஏனென்றால் மாவு பக்குவமாவதும் தயிர் உறைவதும் ஒரு நல்ல பேக்டீரியாவின் செயலாகும். இதை தவிர்க்க தான் கடையில் வாங்கும் மாவுக்கு 6 நாள் கியாரண்டி அளித்தும் ஒரு வாசனையும் வராமல் இருக்கக் காரணம்.

3. முக்கியமாக இந்த கிரைண்டர்கள் கமர்ஷியல் ரகம் இல்லை. அதாவது, ஒரு நாளைக்கு 3 - 6 மணி நேரம் அரைக்க முடியும். ஆனால் இவர்கள் 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து பல சமயம் இந்த சிறு கருங்கல் துகள்களால் சிறு நீரகத்தில் கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஒரு நல்ல கல்லின் ஆயுள் 12 மணி நேரம் அரைத்தால் வெறும் 6 மாதம் தான். கொத்தி திரும்ப போட்டாலும் அடுத்த மூன்று மாதம் தான் மேக்ஸிமம்.

4. உங்களுக்கு நன்கு தெரியும். சமையல் செய்யும் ஆட்கள் கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மற்றும் நகங்கள் வளர்க்கவே கூடாது. ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு சுத்ததையும் இவர்கள் பேணுவது இல்லை. ஒவ்வொரு நகத்தின் இடுக்கிலும் உள்ள கிருமிகள் இந்த மாவில் கெட்ட பேக்டிரியாக்கள் மற்றும் கிருமிகள் ஈஸியாக உருவாகி எதிர்ப்பு சக்தி குறைந்து வாந்தி, பேதி மற்றும் அடிக்கடி உடம்பு முடியாமல் போவதற்கும் இது தான் காரணம்.

5. கிரைண்டர்களை எனக்கு தெரிந்து தாய்மார்கள் பயன்படுத்த
தயங்கும் இரண்டு காரணங்கள்

i. கிரைண்டரை சுத்தம் செய்யும் கஷ்டம்.

ii. ஒவ்வொரு முறையும் கழுவிய கல்லை தூக்கி மாட்ட வேண்டும். பெரிய குடும்பமென்றால் இது சாத்தியம். சிறுகுடும்பம் என்பதால் கடையில் மாவு வாங்குவது அவசியமாகிறது. ஆனால் அரைத்து விற்பவர்களோ, அல்லது கடையிலோ, கிரைண்டரை ஒவ்வொரு முறையும் அரைத்து முடிந்து கழுவுவதில்லை. அதனால் அந்த கிரைண்டரில் கிருமி அதிகரித்து கொண்டே செல்கிறது. இவர்கள் கமர்ஷியலாக பயன்படுத்த ஒவ்வொரு முறையும் வென்னீர் (Hot Water) உற்றி தான் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் ஒரு வாரத்திற்கு ஒரு முறை கழுவினாலே அதிகம், மாவு பொருட்களினாலும், எலிகள் மற்றும் பூச்சிகள் அந்த மிச்ச மாவை ருசித்து அந்த மெஷினின் சுத்ததன்மை அறவே
போய்விடுகிறது.

6. என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீர்  ஊற்றி தான் மாவு அரைக்க வேண்டும். இவர்கள் எந்த தண்ணீரை உபயோகப்டுத்துகின்றனர் என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம். எனக்கு தெரிந்த தகவல் படி இவர்கள் போரிங் தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரை ஊற்றும் காரணம் உப்பு போட வேண்டிய வேலை இல்லை.

7. அந்த கால ஃபார்முலா படி நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கை ஆண்டிபயாடிக், உடம்பு உஷ்ணம், வாய் நாற்றம், அல்சருக்கு கைகண்ட மருந்து. ஆனால் இவர்கள் யாரும் வெந்தயத்தை உபயோகிப்பதில்லை.

8. கிரைண்டரில் மாவு தள்ளிவிடும் அந்த ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆறு மாதத்திற்கு அல்லது வருடத்திற்க்கு ஒரு முறை மாற்ற வேண்டும். ஆனால் இவர்கள் அதை மாற்றவே மாட்டார்கள். அதனால் அந்த பிளாஸ்டிக்கும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து இந்த மாவில்தான் கலக்கும்.

9. கிரைண்டர் ஓட அதன் மத்திய குளவியை இணைக்கும் செயினை இவர்கள் கழட்டி ஒரு கார்பன்டம் பெல்ட்டை மாட்டி இருப்பர்கள். ஒன்று சத்தம் வராமல் இருப்பதற்கும் மற்றும் மாவை கையால் தள்ளி விடாமல் அரைக்கும் டெக்னிக்குககாக. தண்ணீர் பட்டு பட்டு அந்த பெல்ட் துகள்களும் நமது மாவில்தான் கலக்கும்.

10. இந்த மாவை இவர்கள் அரைத்து கடைக்கு பிளாஸ்டிக் பேக் மூலம் சப்ளை செய்கின்றனர். நமது தமிழ் நாட்டு கிளைமேட் படி இதை ஃப்ரீஜரில் தான் வைக்க வேண்டும். அப்பொழுது தன் இந்த மாவில் பாக்டீரியாவின் உற்பத்தியை கட்டுப்படுத்த முடியும், ஆனால் நம்மூரில் பாதி கடைகளில் ஃப்ரிட்ஜில் தான் இதை வைக்கிறார்கள். இப்ப இருக்கிற கரெண்டு ‘கட்’ பிரச்சனையில் இந்த மாவு கண்டிப்பாக பாய்ஸனாகிறது.

இந்த மாவில் இப்பொழுது நிறைய இடங்களில்  பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டு இறைச்சிகளில் காணப்படும் ஈகோலி (E-COLI) எனும் பேக்டீரியா பரவி சிலருக்கு உடனே பிரச்சினையும் சிலருக்கு இந்த மாவுகள் ஸ்லோ பாய்ஸனாக உருவாகிறது. இந்த ஈகோலி மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும். அதனால் தயவு செய்து இவர்கள் கொடுக்கும் 6 நாள் கியாரண்டியில் ஈரமான இட்லி தோசை மாவை கண்டிப்பாக வாங்குவதை தவிருங்கள்.

உலர்ந்த மாவு ஓரளவு பரவாயில்லை. ஆனால் இதே மாதிரி சில தாய்மார்களும் மாவரைத்து நான்கு அல்லது ஐந்து பேர் ஷேர் செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கும் இதில் கண்டிப்பாக கவனம் தேவை.

இப்பொழுது இது ஒரு அங்கிகரிக்கபட்ட தொழில் அல்ல. அதனால் சென்னை மாநகராட்சி ரெய்டு நடத்தி, பல இடங்களில் சுகாதாரமற்ற, தரமற்ற முறைகளில் தயார் செய்யும் இதுபோன்ற பொருட்களை கைப்பற்றி பெனால்டியும் விதிக்கிறது.

ஆகவே,  இந்த விழிப்புணர்வை உங்களால் முடிந்த அளவு
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மாற்று கருத்து இருப்பினும் அதையும் இங்கே பகிருங்கள்.

ஃபேஸ் புக்கில் (பகிரச்சொல்லி) பகிர்ந்தவர்:
எஸ் எம் ஆரீப் மரைக்காயர்
காரைக்கால்