facebook

செவ்வாய், மே 31, 2011

உங்களை நீங்களே தயார்ப் படுத்திக் கொள்ளுங்கள்!!







உங்களின் இலட்சியம் என்ன?

நீங்கள் எப்போது மரணிப்பீர்கள் என்று உங்களால் கூற முடியுமா? நிச்சயமாக உங்களால் முடியாது! அடுத்த ஆண்டு மரணிக்கலாம்;
அடுத்த மாதம் அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த நிமிடம்
கூட நீங்கள் மரணிக்கலாம். ஆகவே அதற்குமுன்...

உங்கள் வாழ்வில் நீங்கள் என்ன அடைந்தீர்கள்? உங்களின் கனவு
மற்றும் இலட்சியம் என்ன?

உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் போட்டுள்ள பெரிய பெரிய
திட்டங்கள் என்ன?

உங்கள் மரணத்துக்குப் பின் நீங்கள் எப்படி நினைவு கொள்ளப்
படுவீர்கள்? ஒரு மனிதனைப் பொருத்தவரை பிறந்தோம்;
வாழ்ந்தோம்; மரணித்தோம் என்ற வகையில் இவ்வுலகில் வாழ
முடியாது! அவ்வாறு எவ்வித இலட்சியமோ அதை அடைய
முயற்சியோ இல்லாத வாழ்க்கை என்பது வீணானதுதான்!

மரணத்துக்குப் பின் என்ன? என்பதைக் குறித்துத் திட்டமிட்ட
வாழ்வை எதிர்நோக்குவோர் மட்டுமே இவ்வுலகத்தின் முக்கியத்-
துவத்தை உணர முடியும். அவ்வாறான ஒரு திட்டமிடலோடு வாழ்பவர்களால் மட்டுமே இலட்சியத்தை அடைய முடியும்.

இவ்வுலகில் வாழ்பவர்கள், அவர்களின் இலட்சியமான
சுவர்க்கத்தை அடையவும் மரணத்திற்குப்பின் நினைவு
கூறப்படவும் எளிதான வழி உள்ளது. அதற்கு ஒவ்வொருவரும்
தம் மரணத்திற்கு முன் கீழ்க் காணும் 10 விஷயங்களைச் செய்து
முடித்து விட்டால் போதும். தயாரா நீங்கள் ??

1. கனவை நனவாக்குங்கள்

நல்லவற்றுள் எதையாவது நீங்கள் செய்ய விரும்புகின்றீர்கள்
எனில், அதனைப் பின்னர் என்று தள்ளிப்போடாமல் உடனே
செய்யத்துவங்குங்கள். சீனப்பெருஞ் சுவரை நடந்து கடக்க
வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?, பட்டதாரி ஆக வேண்டும்
என்று விரும்புகின்றீர்களா?, டாக்டரேட் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்பு-
கின்றீர்களா? கலெக்டராக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?
புத்தகம் ஒன்று எழுத வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? சீன, ஜப்பானிய, அரபி மொழிகளைக் கற்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? எதுவாக இருந்தாலும் உடன் செயல்பாட்டில் இறங்குங்கள். ஒருபோதும் வாழ்வில் செய்யத் துடிக்கும் நல்ல விஷயங்களைத் தள்ளிப் போடாதீர்கள். கனவை நனவாக்குங்கள்!

2. உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள்

படித்து முடித்ததும் வேலையில் சேர்ந்து சம்பாதிப்பதன் மூலம்
உங்கள் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறை
வேற்றுங்கள். அதுபோக உங்கள் சொந்தங்களில் உள்ள
ஏழ்மையான குடும்பத்தில் படிப்பதற்கு செலவழிக்க முடியாதவர்
களுக்கு உங்களால் ஆனா உதவிகளை செய்யுங்கள்.

3. பெற்றோர்களை மகிழ்வியுங்கள்!

நம் பெற்றோர்களே நமக்கு எல்லாம்! நமது மரியாதைக்கும்
அன்புக்கும் கீழ்படிதலுக்கும் அவர்கள் உரித்தானவர்கள்.
அவர்களுடன் தினசரி குறிப்பிட்ட நேரத்தைச் செலவழிக்க
முயலுங்கள். அவர்களுக்குப் பெருமை சேர்க்க முயலுங்கள்;
ஒருபோதும் அவர்களின் மனதை வேதனைப்படுத்தி விடாதீர்கள்.
ஒன்றை எப்போதும் நினைவில் வையுங்கள்: "பெற்றோர்களை
நாம் மகிழ்ச்சியாக வைத்திருந்தால் இறைவனும் நம்மை
மகிழ்ச்சியாக வைத்திருப்பான். பெற்றோர்கள் நம் மீது
கோபமாக இருந்தால், இறைவனும் நம் மீது கோபமாகவே
இருப்பான்" என்று என்று எல்லா மதங்களும் நமக்கு போதிக்கிறது.

ஆகவே, அவர்கள் மரணிக்கும்முன், அவர்களுக்குப் பெருமை
சேர்ப்பதோடு அவர்களை மகிழ்வாகவும் வைத்திருங்கள்.
அவர்களின் மரணத்திற்குப்பின் அவர்களை நினைவுகூருங்கள்; அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள்; அவர்களின் இலட்சியம்
அல்லது நிறைவேற்ற நினைத்து அவர்களால் முடியாமலாகி
விட்ட கடமைகள் ஏதாவது இருப்பின் அதனை நிறைவேற்றுங்கள்.

4. உலகைப் பாருங்கள்

நீங்கள் இருக்கும் இருப்பிடத்தில் மட்டுமே உலகைக் காண்பதாக
இதற்கு அர்த்தம் கொடுக்காதீர்கள். இறைவனின் அற்புதமான படைப்புகளைக் கூர்ந்து கவனியுங்கள். இயன்றால் உலகிலுள்ள
ஏழு அதிசயங்கள், இன்னும் காணக் கிடைக்காத அரியபல
விஷயங்கள் பொதிந்துள்ள வரலாற்றை எடுத்தியம்பும் நாடுகளை
வலம் வாருங்கள். குறைந்தபட்சம் உங்களைச் சுற்றியுள்ள கிராம, நகரங்களையாவது வலம் வாருங்கள். நிச்சயமாக, அது உங்களுக்கு
ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருப்பதோடு, இறைவனின் படைப்புகளையும் அதில் உங்களின் பங்கையும் குறித்து உங்களுக்கு விளக்கித் தரும்.

5 வாழ்க்கையைப் படியுங்கள்; அதற்கு உயிர் கொடுங்கள்!

இந்த உலகில் நீங்கள் பிறந்ததற்கான காரணத்தையும் பிறப்பின்
பயனை அடைவதற்கான வழிகளையும் அறிந்து கொள்ளாமல்
நீங்கள் இந்த உலகத்தை விட்டுப் போய்விடக் கூடாது. அது பின்னர் உங்களுக்கே பேரிழப்பாக முடியும். ஆகவே வாழ்க்கையை
படியுங்கள். அதன் அடிப்படைகளை அர்த்தத்துடன் படியுங்கள்.
வாழ்ந்து மறைந்த பெரிய மனிதர்களின் வாழ்வைப் படியுங்கள்.
நாம் இந்த பூமியில் படைக்கப் பட்டிருப்பதற்கான அர்த்தம்
என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்களா?
என்பதை உறுதிப் படுத்துங்கள். அதனை உங்கள் தினசரி வாழ்வில் நடைமுறைப் படுத்துங்கள். இது ஒன்று மட்டுமே   உங்களுக்கு இவ்வுலகிலும் பாதுகாப்பாக இருக்கும்.

6. திருப்பிக் கொடுங்கள்

ஏதாவது வித்தியாசமானதாகவும் அற்புதமானதாகவும் செய்ய
முயற்சி செய்யுங்கள். ஒரு அனாதையின் வாழ்வாதாரத்துக்கு
உதவுதல், ஒரு மரத்தை நட்டு வளர்த்தல், ஏழைகளுக்கு உதவி
செய்ய ஃபண்ட் ஒன்று துவங்குதல், ஏழைகளுக்கு உணவளித்தல், தேவையில் இருப்போருக்கு இரத்தம் வழங்குதல், குழந்தை-
களுக்கும் முதியவர்களுக்கும் கற்றுக் கொடுத்தல், யாருடைய பிரச்சனைகளையாவது தீர்த்து வைத்தல், லைப்ரரி ஒன்று
உருவாக்குதல், வசதியற்ற மாணாக்கருக்குக் கல்வி கற்க
ஏற்பாடு செய்தல், வட்டியின்றித் தேவையுடையோருக்குக்
கடனுதவி செய்யக் குழு ஏற்படுத்துதல், சுற்றுப் புறத்தைத்
தூய்மையாக வைக்கப் பயிற்சியளித்தல், குடிநீர் இல்லாத
வீடுகளுக்குக் குடிநீர் கிடைக்க வசதி ஏற்படுத்துதல்.....

இப்படி எதையாவது நீங்கள் மரணிக்கும் முன்னர் இவ்வுலகுக்குத்
திருப்பிக் கொடுத்து விட்டுச் செல்லுங்கள். உங்களின் மரணத்துக்குப் பின்னர் நீங்கள் இவ்வுலகில் நேர்மறையாக நினைவு கூறப்
படுவதற்கு இது உதவும். உங்களின் நற்செயல்கள் இவ்வுலகில்
எத்தனை காலத்திற்கு நிலைநிற்கின்றதோ அத்தனை காலம்வரை
நினைவு கூறப்பட்டுக் கொண்டே இருக்கும். உங்களின் சுயநலமற்ற செயல்பாடுகள் நாளை வரும் தலைமுறையினருக்கு பயனுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும்.

7. திருமணம்

இது எல்லா மதங்களிலும் வரையறுத்து கூறப்பட்ட ஒரு
தீர்மானமாகும். உங்களின் கனவுகளையும் இலட்சியங்களையும் உயிர்கொடுக்க தோள்கொடுக்கத் தயாராகுபவரோடு அவற்றைப்
பகிர்ந்து கொள்ளுங்கள். அவரைத் திருமணம் புரிந்து குழந்தை-
களைப் பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுக்குப் பெருமை
சேர்ப்பதோடு, நல்ல குழந்தைகளாக வளர்த்தால் அதற்காகவும்
நீங்கள் நன்மை வழங்கப் படுவீர்கள். உங்களின் மரபுவழி
நன்மைகளை வாழ வைப்பவர்களாகவும் தங்கள் நம்பிக்கையைச் செயல்படுத்துபவர்- களாகவும் மனிதாபிமானத்தோடு இறைவனின் படைப்புகளைக்காணும் நல்ல மக்களாகவும் அவர்களை
வளர்த்தெடுப்பது உங்களின் இலட்சியமாக இருக்கட்டும்.

8. மன்னிப்பு கேளுங்கள்

உங்கள் வாழ்வில் நீங்கள் செய்த தவறுகளை நினைவு கூர்ந்து,
உங்களைப் படைத்தவன் முன்னிலையில் சிரம்பணியுங்கள்.
ஒவ்வொரு இரவிலும் படுக்கைக்குச் செல்லும் முன், உங்கள்
தவறுகளை நினைத்து மனம் வருந்தி மன்னிப்புக் கேளுங்கள்.
நீங்கள் யாருடைய மனதையாவது வேதனைப் படுத்தியுள்ளீர்களா? மக்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட நீங்கள் காரணமாக இருந்துள்ளீர்களா? யாருக்காவது தவறு இழைத்துள்ளீர்களா? இன்றே அதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்.

நினைவில் வையுங்கள்: நீங்கள் தவறிழைத்தவர்கள் உங்களை மன்னிக்கும்வரை, இறைவன் உங்களை மன்னிப்பதில்லை!
வருத்தங்களைப் பொறுத்துக் கொள்ளப் பழகுங்கள். முன்னர் உங்கள் வாழ்வில் மற்றவர்களால் உங்களுக்கு நடந்த  தவறுகளையும்
மீட்டிப் பார்த்து அவற்றைப் பொறுத்துக் கொள்ளுங்கள். இறைவன் உங்களின் பாவங்களை மன்னிக்க வேண்டுமெனில்,
நீங்கள் மற்றவர்களின் தவறுகளையும் மன்னிக்க வேண்டும்
என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

9. கடன்களை அடையுங்கள்

நீங்கள் கடனாளி எனில், அது எத்துணைப் பெரிதாக இருந்தாலும்
சிறிதாக இருந்தாலும் அவற்றைத் திருப்பிக் கொடுக்க இப்போதே திட்டமிடுங்கள். ஒரு நிமிடமும் இதற்காகத் தாமதிக்க வேண்டாம்!
கடன் என்பது ஒரு வலி; அது ஒரு சுமையும் கூட! அதனை நிறை- வேற்றவில்லையேல் அதற்காக மிகப்பெரிய பலனைத் திருப்பிக்
கொடுக்க வேண்டியிருக்கும்.

10. முன்னுதாரண மனிதராகுங்கள்

ஆமாம்! உங்கள் குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு, உறவினர்-
களுக்கு, என அனைவருக்குமாக நீங்கள் நல்ல குணங்களுக்குச் சொந்தகாரரான ஒரு முன்னுதாரண மனிதராகுங்கள். அனைவரும் மரியாதையுடன் பார்க்கும் படியான மனிதராகுங்கள். மனிதர்கள்
தங்களின் தேவைகளுக்காக உங்கள் பக்கம் திரும்ப வைக்கும்-
படியான நல்ல மனிதராகுங்கள். உங்கள் மரணத்துக்குப் பின்னரும்
நல்ல காரணத்திற்காக நீண்ட காலம் மக்கள் நினைவு
கூறும்படியான   நற்பண்புகளுக்குச் சொந்தக்காரராக மாறுங்கள்.

இந்தப் பத்து விஷயங்களையும் உங்கள் மரணத்துக்கு முன் செயல்படுத்துங்கள். இவ்வுலக வாழ்க்கை என்பது மிகக் குறுகியது;
எனவே இவற்றை உடனடியாகச் செயல்படுத்த ஆரம்பியுங்கள்.
நேரத்தை ஒருபோதும் வீணாக்காதீர்கள். செய்யும் செயலை அர்த்தமுள்ளதாகவும் ஒருபோதும் வருத்தப்படுத்தாததாகவும்
செய்யுங்கள். மிக முக்கியமாக, உங்கள் செயல்களை இவ்வுலகிலும்
மறு உலகிலும் ஒன்று போல் வெற்றிக்குரியனவாகத் தேர்ந்து செய்யுங்கள்.

எனவே, வெற்றிக்கான இந்தப் படிகளை உங்கள் மரணத்துக்கு
முன்னர் செயல்படுத்த இப்போது உங்கள் முறை! இவற்றை
இன்றே, இப்போதே ஆரம்பித்து வெற்றியாளர்களாகத் திகழுங்கள்.

(நன்றி : Therevival.co.uk என்ற ஆங்கிலத் தளத்தில் வெளிவந்த
"Ten Things To Do Before You Die" என்ற கட்டுரையின் தமிழாக்கம்.)


16 கருத்துகள்:

ப.கந்தசாமி சொன்னது…

நல்ல கருத்துக்கள் நண்பரே.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

மிக அருமையான கருத்துக்கள் பாஸ்.

வாழ்க்கையில் இவற்றை பின்பற்ற காசு பணம் தேவையில்லை மனம் இருந்தால் போதும்.

அனைவரும் அறிய வேண்டிய பகிர்வு

மோகன்ஜி சொன்னது…

அற்புதமான கட்டளைகள்...இவைகள் கடைபிடிக்க வேண்டியவை.. கடைபிடிக்கக் கூடியவை

நாடோடி சொன்னது…

என்ன‌ த‌ல‌ மொழி பெய‌ர்ப்பு க‌ட்டுரை ரெம்ப‌ போடுறீங்க‌.. :))

athira சொன்னது…

உஸ்... அப்பா.. என்னால முடியல்ல... வாசிக்கவே களைப்புவருதே.... எப்பூடி அனைத்தையும் நிலைநாட்டுவேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:).

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Dr.PKandaswamy PhD சொன்னது…

// நல்ல கருத்துக்கள் நண்பரே. ///


வாங்க டாக்டர் சார், நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...

// வாழ்க்கையில் இவற்றை பின்பற்ற காசு பணம் தேவையில்லை மனம் இருந்தால் போதும்.//

ஆமா தல காசில்லாமல் இலவசமாக கிடைப்பது அறிவுரை மட்டுமே, மற்றவைகளைப் போல், ஏனோ நமக்கு இன்னும் அவைகளை கைப்பற்றிக் கொள்ள வரமாட்டே- னென்கிறது மனசு!!

வாங்க அக்பர் சார், நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ மோகன்ஜி கூறியது...

// அற்புதமான கட்டளைகள்... இவைகள் கடைபிடிக்க வேண்டியவை .. கடைபிடிக்கக் கூடியவை//

முடிந்தவரை கைகொள்கிறேன்! நீங்களும் தொடருங்கள் கூடவே .......!!

வாங்க மோகன்ஜி, நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ நாடோடி கூறியது...

// என்ன‌ த‌ல‌ மொழி பெய‌ர்ப்பு க‌ட்டுரை ரெம்ப‌ போடுறீங்க‌.. :))//

நாமளும் அதுகள கண்டுக்காம விட்டுட்டா எப்படி?? :-))

வாங்க ஸ்டீபன், நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ athira கூறியது...

// உஸ்... அப்பா.. என்னால முடியல்ல... வாசிக்கவே களைப்புவருதே.... எப்பூடி அனைத்தையும் நிலைநாட்டுவேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:). //

வாங்க பூஸ்...!! இந்த வயசில் உங்களுக்கு என்ன? கொஞ்சம் நடை பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் மிக அவசியம் தேவைப் படும்போல .... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... அப்படீன்னு நான் சொல்ல மாட்டேன்னு சொல்ல மாட்டேன். அவ்வ்வ்வ். :)))

பூஸார் மியாவ்!!!,நன்றி!!

ஸாதிகா சொன்னது…

அருமையான கருத்துக்களை அள்ளித்தெளித்து இருக்கீங்க சகோ.

Unknown சொன்னது…

கண்டிப்பாக மனதிற்கொள்ள வேண்டிய கருத்துக்கள்.. முயற்சிக்கிறேன் பாஸ்.. நன்றி..

ஷர்புதீன் சொன்னது…

இந்த இடுக்கைகாக சொல்லவில்லை, கடந்த இரண்டு வருடமாக ஒரு சமூகத்திருக்கு நல்ல மனிதனாக மாற வேண்டும் என்ற ஆசை நிறையவே இருக்கிறது., பெரிய பெரிய பேச்செலாம் பேசுவதற்கு முன் ஐந்து வருடங்களாக சரியான பேச்சு வார்த்தைகள் இல்லாத எனது பெற்றோர்களிடம் பேசி அவர்களை மகிழ்விப்பதிளிருந்து தொடங்கபோகிறேன். ( அவர்களே தங்கள் மீதுதான் தப்பு என்பதை உணர்ந்து கூப்பிட்டபோதும் எனது ஈகோ இடம் கொடுக்கவில்லை. )இதோ இந்த மாதம் நெல்லை பதிவர்களின் சந்திப்புக்கு போகும் பொழுது செய்துவிடவேண்டியதுதான்., இன்சா அல்லாஹ்

எம் அப்துல் காதர் சொன்னது…

ஸாதிகா கூறியது...

// அருமையான கருத்துக்களை அள்ளித் தெளித்து இருக்கீங்க//

வாங்க ஸாதிகாக்கா

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

பதிவுலகில் பாபு கூறியது...

// கண்டிப்பாக மனதிற்கொள்ள வேண்டிய கருத்துக்கள்.. முயற்சிக் கிறேன் பாஸ்.. நன்றி..//

வாங்க A.அப்துல் காதர்..

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

ஷர்புதீன்..

பதிவின் நாலு விஷயங்கள் உங்களின் மனதினில் பதிந்து அதுவே உங்களை மாற்றுகிறது என்றால்.... சுப்ஹானல்லா. அவனே மிகவும் அறிந்தவன். ஜசாக் கைரன்!!

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!