“எங்க ஊரு நல்ல ஊரு” தொடர் பதிவிற்கு என்னை அழைத்த அன்பின் சகோதரி ஸாதிக்கா அவர்களுக்கு நன்றி!!
திட்டச்சேரி..!!!
1.
நான் பிறந்த ஊர் நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் என்றாலும் பெரும்பாலான பிரபலஸ்தர்கள் பிறந்து வளர்ந்த ஊர் என்பதாலும்
நிறைய நண்பர்கள் எங்களூரைப் பற்றி எழுதி விட்டதாலும், நிறைய பேர்களுக்கு நாகூரைப் பற்றி தெரியும் என்பதாலும், நான் சற்றே
நகர்ந்து, "என் கைத்தளம் பற்றி மனம் கவர்ந்த துணையூர்"
'திட்டச்சேரி'யைப் பற்றி இங்கே எழுதுகிறேன்.
நகர்ந்து, "என் கைத்தளம் பற்றி மனம் கவர்ந்த துணையூர்"
'திட்டச்சேரி'யைப் பற்றி இங்கே எழுதுகிறேன்.
நாகூரைப் பற்றி நாலு வார்த்தையாவது சொல்லியாக வேண்டும்.
அறிவின் வல்லமையால் நகைச்சுவையாய் பேசக் கூடியவர்கள்
என்றும், உணவு விஷயத்திலும் வக்கணையாய் நாச்சுவை அறிந்து உண்பதிலும், இவர்களை மிஞ்ச ஆளில்லை என்பதனையே அழகாய்
'நாகூர்' என்று சுருக்கமாய் சொல்லி சிலாகிக்கிறார்கள் என்பது
என் எண்ணம்.
அறிவின் வல்லமையால் நகைச்சுவையாய் பேசக் கூடியவர்கள்
என்றும், உணவு விஷயத்திலும் வக்கணையாய் நாச்சுவை அறிந்து உண்பதிலும், இவர்களை மிஞ்ச ஆளில்லை என்பதனையே அழகாய்
'நாகூர்' என்று சுருக்கமாய் சொல்லி சிலாகிக்கிறார்கள் என்பது
என் எண்ணம்.
திட்டச்சேரி, நிரவி, புறாக்கிராமம், ஏனங்குடி, பாக்கம் கோட்டூர்,
போலகம், இல்லாமல் நாகூர் ஏது? சிக்கல், கீவளூர், கூத்தூர்,
பொரவாச்சேரி, மஞ்சக் கொல்லைக்காரர்கள் கோபிக்கவேண்டாம்;
அவர்களும் நாகூர் காரர்கள்தான்! அந்த வகையில் பார்த்தால்
அவர்களும் நாகூர் காரர்கள்தான்! அந்த வகையில் பார்த்தால்
திட்டச்சேரி, நாகூரில் இருந்து நீட்டிக்கப்பட்ட ஒரு கிளை நகரம்
என்றே கொள்ளலாம்.
நாகூரிலிருந்தும், காரைக்காலிலிருந்தும் கிட்டத்தட்ட எட்டு கிலோ
மீட்டர் தூரமே உள்ள ஊர் தான் இந்த திட்டச்சேரி, என்றாலும்
ஊரின் பெயரில் ‘சேரி’ என்ற சொல் ஒட்டியிருப்பதால் ஏதோ
குக்கிராமம் என்றும் நினைத்து விட வேண்டாம். நாகப்பட்டினம்
மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
மீட்டர் தூரமே உள்ள ஊர் தான் இந்த திட்டச்சேரி, என்றாலும்
ஊரின் பெயரில் ‘சேரி’ என்ற சொல் ஒட்டியிருப்பதால் ஏதோ
குக்கிராமம் என்றும் நினைத்து விட வேண்டாம். நாகப்பட்டினம்
மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
2001-ம் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8484 மக்கள்
இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள்
ஆவார்கள். திட்டச்சேரி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும்,
இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு
71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5%
விட கூடியதே. திட்டச்சேரி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்-
குட்பட்டோர் ஆவார்கள். இது "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்
தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". என்று விக்கிப்பீடியாவில்
தொகுக்கப் பட்டிருக்கிறது. பத்து வருடத்துக்குப் பிறகு இப்பொழுது
(2011-ல்) மக்கள் தொகையை டபுல் என்ன ட்ரிபுலாகக் கூட
கூட்டிக் கொள்ளலாம்.
இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள்
ஆவார்கள். திட்டச்சேரி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும்,
இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு
71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5%
விட கூடியதே. திட்டச்சேரி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்-
குட்பட்டோர் ஆவார்கள். இது "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்
தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". என்று விக்கிப்பீடியாவில்
தொகுக்கப் பட்டிருக்கிறது. பத்து வருடத்துக்குப் பிறகு இப்பொழுது
(2011-ல்) மக்கள் தொகையை டபுல் என்ன ட்ரிபுலாகக் கூட
கூட்டிக் கொள்ளலாம்.
இவ்வாறாக, மேற்படி கல்வியறிவு 77% என்பது இப்பொழுது சற்று கூடியிருக்கக் கூடும், என்றாலும் இது சற்றேறக்குறைய 70-80
ஆண்டுகளுக்கு முன்பே கல்வியைப் பற்றி விழிப்புணர்வோடு,
அடித்தளம் அமைக்கப்பட்டு இஸ்லாமிய பல்கலைக் கழகங்களில்
படித்தறிந்த கல்வியாளர்களால் வரையறுக்கப்பட்ட ஊர் திட்டச்சேரி. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் தலைமை நீதிபதிகள், வழக்கறிஞர்கள், டாக்டர்கள், வாழும் ஊர் இது.
ஆண்டுகளுக்கு முன்பே கல்வியைப் பற்றி விழிப்புணர்வோடு,
அடித்தளம் அமைக்கப்பட்டு இஸ்லாமிய பல்கலைக் கழகங்களில்
படித்தறிந்த கல்வியாளர்களால் வரையறுக்கப்பட்ட ஊர் திட்டச்சேரி. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் தலைமை நீதிபதிகள், வழக்கறிஞர்கள், டாக்டர்கள், வாழும் ஊர் இது.
உள்ளூரில் அரசினர் மேல்நிலைப் பள்ளி இருந்தாலும், இங்கிலீஷ்
மீடியம் பயிலும் கான்வென்ட் சம்சுன்நஹர், ஜேஸி பள்ளிகள் இருந்தபோதிலும், காலை நேரங்களில் இங்கிருந்து புறப்பட்டு நாகூர்
கிரசண்ட், காரைக்கால் காவேரி, நிர்மலா ராணி, செயிண்ட் மேரிஸ்
கிரசண்ட், காரைக்கால் காவேரி, நிர்மலா ராணி, செயிண்ட் மேரிஸ்
பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் பஸ்களும் வேன்களுமே இந்த
ஊர் மக்கள் எந்த அளவுக்கு கல்வியில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதற்கோர் அத்தாட்சி!!
ஒரு குத்து மதிப்பாகச் சொல்லப் போனால் மூன்று மாவட்டங்கள்
அருகருகே காணக்கிடைப்பது இந்த பகுதியில்தான் என்று நினைக்
ஊர் மக்கள் எந்த அளவுக்கு கல்வியில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதற்கோர் அத்தாட்சி!!
ஒரு குத்து மதிப்பாகச் சொல்லப் போனால் மூன்று மாவட்டங்கள்
அருகருகே காணக்கிடைப்பது இந்த பகுதியில்தான் என்று நினைக்
கிறேன். நாகை, திருவாரூர், காரைக்கால் (பாண்டிச்சேரி). காரைக்கால்
அருகே இருப்பதாலோ என்னவோ, பக்கத்தில் பனங்’குடி’, ஏனங்’குடி’
போன்ற ஊர்கள் சுற்றிலும் இருக்கின்றன. ஊர்காரர்கள் கோபிக்க
வேண்டாம்.
அருகே இருப்பதாலோ என்னவோ, பக்கத்தில் பனங்’குடி’, ஏனங்’குடி’
போன்ற ஊர்கள் சுற்றிலும் இருக்கின்றன. ஊர்காரர்கள் கோபிக்க
வேண்டாம்.
தென் தமிழகத்தில் முதன்முதலில் வெற்றிகரமாக பெட்ரோல் கிடைக்குமென்று அறியப்பட்டது இங்குள்ள பா.கொந்தகை
அருகே உள்ள பீமா தைக்கால் தான். அதுவே பின்னாளில்
அந்த பகுதிகளில் வளமிக்க பெட்ரோல் ஊற்றுகள் கண்டுபிடிக்க ஏதுவாக நரிமணம் - பனங்குடியில் ongc ப்ராஜெக்ட், சென்னை
பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (cpcl) துணையுடன், Rs.2800 கோடி
செலவில் நவீனப் படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப் பட்ட
ரிஃபைனரிஸ் உருவாக்கப்பட்டது.
அருகே உள்ள பீமா தைக்கால் தான். அதுவே பின்னாளில்
அந்த பகுதிகளில் வளமிக்க பெட்ரோல் ஊற்றுகள் கண்டுபிடிக்க ஏதுவாக நரிமணம் - பனங்குடியில் ongc ப்ராஜெக்ட், சென்னை
பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (cpcl) துணையுடன், Rs.2800 கோடி
செலவில் நவீனப் படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப் பட்ட
ரிஃபைனரிஸ் உருவாக்கப்பட்டது.
2.
இந்த ஊர் மக்களின் உபசரிப்பும் கனிவும் கரிசனமும் சொல்லில்
அடங்காது. யாரவது வீட்டிற்கு வந்து விட்டார்களென்றால் ஒரு
வாய் டீயோ, காபியோ, ஜூஸோ கொடுத்து சட்டென்று அவர்களை
அனுப்பி விடமாட்டர்கள். வீட்டில் செய்த பலகாரங்கள் தம்ரோட்,
நானஹத்தா, ஹஜூர் பணியாரம், முட்டைப் பணியாரம் போன்ற-
வைகளை Bபாஷன் என்று இங்கு அழைக்கப்படும் மரவைகளில்
வைத்து நம்மை சாப்பிடச் சொல்லி திக்கு முக்காட செய்து
விடுவார்கள். எதை சாப்பிடுவது எதை விடுவது என்று பல
சமயங்களில் இதுமாதிரி நிகழ்வுகள் அங்கே சகஜம்.
அடங்காது. யாரவது வீட்டிற்கு வந்து விட்டார்களென்றால் ஒரு
வாய் டீயோ, காபியோ, ஜூஸோ கொடுத்து சட்டென்று அவர்களை
அனுப்பி விடமாட்டர்கள். வீட்டில் செய்த பலகாரங்கள் தம்ரோட்,
நானஹத்தா, ஹஜூர் பணியாரம், முட்டைப் பணியாரம் போன்ற-
வைகளை Bபாஷன் என்று இங்கு அழைக்கப்படும் மரவைகளில்
வைத்து நம்மை சாப்பிடச் சொல்லி திக்கு முக்காட செய்து
விடுவார்கள். எதை சாப்பிடுவது எதை விடுவது என்று பல
சமயங்களில் இதுமாதிரி நிகழ்வுகள் அங்கே சகஜம்.
இங்கே மாலை நேரங்களில், நாகூரில் இருந்து வந்து அங்கேயே
உடனுக்குடன் தயார் செய்து சுடச்சுட சுட்டு விற்பனை செய்யும்
உடனுக்குடன் தயார் செய்து சுடச்சுட சுட்டு விற்பனை செய்யும்
"வாடா" என்ற திண்பண்டம் ரொம்ப ஃபேமஸ்; அதன்சுவை அலாதி
யானது. ஊறவைத்து அரைத்த அரிசி, அரைத்த சோறு ஆகிய
வற்றை சரியான விகிதத்தில் கலந்து, வடைபோல் தட்டி, நடுவில்
ஒரு ஓட்டையும் விட்டு, அதன் மேல் ‘இறாலை’ சரி பாதியாய்
பிய்த்து பொட்டு போல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வைத்து, எண்ணையில் போட்டு பதமாய் பொன்னிறமாய் பொறித்து எடுக்கப் படுவதற்குப் பெயர் 'வாடா'. இப்படி பொறித்த வாடாவையே திரும்ப
வும் மாவில் ஒரு புரட்டு புரட்டி எடுத்து பொறித்தால் அதற்கு
பெயர் "பொறிச்ச வாடா"வாம். இந்த இரண்டு வகை மொறுமொறு வாடாவின் சுவையும் மணமும் சிம்ப்லி டிலீஸியஸாக இருக்கும்.
ஒரு தடவை சாப்பிட்டு பார்த்தீர்களென்றால் தான் நான் சொல்வ-
தன் அர்த்தம் புரியும். இதற்கு உலகம் முழுக்க ரசனையுள்ள
ரசிகர்கள் கூட்டம் [என்னையும் சேர்த்து] ஏராளம்!
அதற்கு தொட்டுக் கொள்ள, 'உள்ளடம்' என்கிற வெங்காயமும்,
யானது. ஊறவைத்து அரைத்த அரிசி, அரைத்த சோறு ஆகிய
வற்றை சரியான விகிதத்தில் கலந்து, வடைபோல் தட்டி, நடுவில்
ஒரு ஓட்டையும் விட்டு, அதன் மேல் ‘இறாலை’ சரி பாதியாய்
பிய்த்து பொட்டு போல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வைத்து, எண்ணையில் போட்டு பதமாய் பொன்னிறமாய் பொறித்து எடுக்கப் படுவதற்குப் பெயர் 'வாடா'. இப்படி பொறித்த வாடாவையே திரும்ப
வும் மாவில் ஒரு புரட்டு புரட்டி எடுத்து பொறித்தால் அதற்கு
பெயர் "பொறிச்ச வாடா"வாம். இந்த இரண்டு வகை மொறுமொறு வாடாவின் சுவையும் மணமும் சிம்ப்லி டிலீஸியஸாக இருக்கும்.
ஒரு தடவை சாப்பிட்டு பார்த்தீர்களென்றால் தான் நான் சொல்வ-
தன் அர்த்தம் புரியும். இதற்கு உலகம் முழுக்க ரசனையுள்ள
ரசிகர்கள் கூட்டம் [என்னையும் சேர்த்து] ஏராளம்!
அதற்கு தொட்டுக் கொள்ள, 'உள்ளடம்' என்கிற வெங்காயமும்,
மஞ்சளும், தேங்காய்ப்பூவும், உப்பும் போட்டு பிரட்டி, அவைகளை எண்ணையில் போட்டு வதக்கிய கலவையோடு சேர்த்து சாப்பிடும்
வாடாவின் டேஸ்ட் உன்னைப் பிடி என்னைப்பிடி என்று அள்ளிக்
கொண்டு போகும். இது கிடைக்காத (மழை) காலங்களில் இருக்கவே
இருக்கு ஸ்பெஷல் கொத்துப் பரோட்டா. அவர்களின் கனிவான
பேச்சாலும், உபசரிப்பாலும் இதுமாதிரி வகையான சாப்பாடு
களாலும் மனம் நிறைந்தது போல், வயிறும் நிறைந்து போவது
திண்ணம்.
வாடாவின் டேஸ்ட் உன்னைப் பிடி என்னைப்பிடி என்று அள்ளிக்
கொண்டு போகும். இது கிடைக்காத (மழை) காலங்களில் இருக்கவே
இருக்கு ஸ்பெஷல் கொத்துப் பரோட்டா. அவர்களின் கனிவான
பேச்சாலும், உபசரிப்பாலும் இதுமாதிரி வகையான சாப்பாடு
களாலும் மனம் நிறைந்தது போல், வயிறும் நிறைந்து போவது
திண்ணம்.
இந்த ஊரின் ஸ்பெஷல் என்று சொல்லப் போனால் குவளைகேக்,
பகோடா பிஸ்கட், பொட்டி பணியம், ஈச்சகொட்டை பணியம்,
முட்டைப் பணியம், தம்ரோட், இஞ்சி கொத்து பணியம், முர்த்தபா
எனும் லாப்பை, ஜாலர் பாராட்டா + வட்டலாப்பம், ஜாலர் சமுசா
ஆகியவைகள் அடங்கும்.
முட்டைப் பணியம், தம்ரோட், இஞ்சி கொத்து பணியம், முர்த்தபா
எனும் லாப்பை, ஜாலர் பாராட்டா + வட்டலாப்பம், ஜாலர் சமுசா
ஆகியவைகள் அடங்கும்.
பிரியாணி வகைகளில் மட்டன், சிக்கன், இறால், மீன், போன்றவை-
களும், *அஞ்சுவகைக்கறி நெய்ச்சோறு, குஸ்கா, போன்றவைகளும்,
சமீபத்தில் பிரபலமாயுள்ள சைனீஸ் ரைஸ், மீங்கோரி போன்ற
சமீபத்தில் பிரபலமாயுள்ள சைனீஸ் ரைஸ், மீங்கோரி போன்ற
வையும் சுவையாய் இருக்கும். அந்தந்த வீட்டு மாப்பிள்ளை
மார்களின் உடலளவை வைத்து, வீட்டின் கைமணத்தை அறிந்துக் கொள்ளலாம் என்று சொல்வார்கள். (நீங்கள் குண்டா ஒல்லியா
என்று என்னை கேட்டு விடாதீர்கள். உடலவை குறைக்க (படாதபாடு படுபவர்களுக்காக) இரண்டு மூன்று பதிவு போட்ட என்னை குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம்!! :-))
என்று என்னை கேட்டு விடாதீர்கள். உடலவை குறைக்க (படாதபாடு படுபவர்களுக்காக) இரண்டு மூன்று பதிவு போட்ட என்னை குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம்!! :-))
*மேற்படி அஞ்சுவகைக்கறி நெய்ச்சோறு என்பது நான்கு பேர்
உட்கார்ந்து சாப்பிடும் இந்த Bபாசன் சாப்பாடு, சாப்பிட்டு முடியும்
தருவாயில் சும்மா செறிமானத்திற்காக சாப்பிடும் சாப்பாடு தான்
தருவாயில் சும்மா செறிமானத்திற்காக சாப்பிடும் சாப்பாடு தான்
இந்த 'சீனித்தொவை' சோறு. அதற்குரிய பக்குவத்தைப் பாருங்கள்
இந்த நெய்சோற்றுடன், தக்காளி பச்சடி, சீனித்தொவை, வாழைப்-
பழம், ஃபிரிணி ஆகியவற்றை (இதற்காக சிலர் பால்கோவாவை
பொட்டலம் போட்டு மடியில் கட்டிக் கொண்டும் வருவார்கள்!!)
போட்டு கஞ்சி மாதிரி பிசைந்து சாப்பிடும் சாப்பாட்டுக்கு பெயர்
தான் பால்சோறு. ஜெதப்பான சாப்பாடு இந்த ஏரியாக்களில் ரொம்ப
ஸ்பெஷல்! இப்பொழுது அதெல்லாம் வீட்டில் செய்து சாப்பிட்டா-
ஸ்பெஷல்! இப்பொழுது அதெல்லாம் வீட்டில் செய்து சாப்பிட்டா-
லன்றி கலரிகளில் அரிதாகிப் போச்சு. இந்த அவசர உலகில்
கல்யாணம், மற்ற விஷேஷங்களில் கூட ப்ளேட் சாப்படாகி,
மெடிக்கல் சாப்பாடென்ரெல்லாம் ஆகிப்போச்சு!
மாலை நேரங்களில் ஆட்டுதலை சூப் விற்பனை அமோகமாய்
இருக்கும். தலையிலுள்ள கண், நாக்கு, மூளை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விலை! தலைகறிகள் விற்று தீர்ந்து போனாலும், சூப்பு
தண்ணியில் அவித்த முட்டையைப் போட்டு நடக்கும் வியாபாரம்
ஒரு சில கடைகளில் சூடு பறக்கும்.
தண்ணியில் அவித்த முட்டையைப் போட்டு நடக்கும் வியாபாரம்
ஒரு சில கடைகளில் சூடு பறக்கும்.
அரபு நாடுகளில் மிகவும் விரும்பி சாப்பிடப்படும் புரோஸ்டட்
சிக்கன், ஷவர்மா போன்ற பிரசித்தி பெற்ற ஐட்டங்கள் தற்சமயம் காரைக்காலிலும் கிடைக்கிறது. டேஸ்ட் ....?? கொஞ்சம் முன்னபின்ன இருக்கலாம்.
அலியதரம், ஆட்டுக்கால் பணியாரம், 'போனவம்', போன்ற தீண்
பதார்த்தங்கள் போன இடம் தெரியவில்லை. இப்பொழுதெல்லாம்
இவைகளை வீடுகளில் செய்ய அலுப்புப்பட்டுக் கொண்டு கடை-
பதார்த்தங்கள் போன இடம் தெரியவில்லை. இப்பொழுதெல்லாம்
இவைகளை வீடுகளில் செய்ய அலுப்புப்பட்டுக் கொண்டு கடை-
களில் ஆர்டர் செய்தே தருவிக்கிறோம். ஒரு காலத்தில் பாட்டி
மார்களும், வீட்டின் பெண்மணிகளும், சின்னச்சின்ன பெண்
குழந்தைகளும் வீடு முழுக்க விரவி உட்கார்ந்து பணியாரங்கள்
செய்கிறேன் என்று அடிக்கும் லூட்டிகள் பார்க்கவே கண்கொள்ளா
காட்சியாக இருக்கும். கூட்டுக்குடும்பங்கள் அரிதாகிப்போன
குழந்தைகளும் வீடு முழுக்க விரவி உட்கார்ந்து பணியாரங்கள்
செய்கிறேன் என்று அடிக்கும் லூட்டிகள் பார்க்கவே கண்கொள்ளா
காட்சியாக இருக்கும். கூட்டுக்குடும்பங்கள் அரிதாகிப்போன
நிலையில், விசேஷ நாட்களுக்கு முன்கூட்டியே கடைகளில்
ஆர்டர் செய்து தருவித்து எல்லா விஷேசங்களையும், பண்டிகை நாட்களையும் கொண்டாடி திருப்திபட்டுக் கொள்கிறோம்.நாகூரில்
ஹாரிஸ் கடையிலும், திட்டச்சேரியில் செல்லம்மா, மெஹர்
ஆகியோர் வீடுகளிலும் செய்து தருகிறார்கள்.
ஆர்டர் செய்து தருவித்து எல்லா விஷேசங்களையும், பண்டிகை நாட்களையும் கொண்டாடி திருப்திபட்டுக் கொள்கிறோம்.நாகூரில்
ஹாரிஸ் கடையிலும், திட்டச்சேரியில் செல்லம்மா, மெஹர்
ஆகியோர் வீடுகளிலும் செய்து தருகிறார்கள்.
3.
பிரசித்திப் பெற்ற தற்காப்பு கலையை சீனாவுக்கே சென்று
கற்றவர்கள் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள். "சைனீஸ் டிஸாஸ்டர்"
என்ற அறியவகை கலையை கற்றவர்களில் முக்கியமானவர்கள்
'எல்லைக்கல்' யூசுப் மரைக்காயர், 'பூரான்' ஷரீப் ஆகியோர்களாவர்.
நண்பர் ஒருவரை வேலை நிமித்தம் ஓரிடத்திற்கு போகச் சொல்லி
விட்டு, திரும்பி வந்து பார்க்கும் சமயம் இருட்டிவிட்டதாகவும், அவர் போகாமல் இருட்டில் உட்கார்ந்திருக்கக் கண்டு எட்டி உதைத்ததாகவும், பிறகுதான் அவர் உதைத்தது ஊரின் எல்லைக்கல் என்றும், உதைத்ததில் அந்தக்கல் இரண்டு துண்டாய் உடைந்து போனதாகவும், அதனால் அவர்
பெயர் எல்லைக்கல் யூசுப் என்று பெயர் விளங்கக் காரணமாகியது என்கிறார்கள்.
பெயர் எல்லைக்கல் யூசுப் என்று பெயர் விளங்கக் காரணமாகியது என்கிறார்கள்.
இரண்டாமவர் குஸ்தி, கம்பு சுழற்றுதல், மற்றும் வீர விளையாட்டு
களில் படுசமத்தர். இவர் கம்பு சுழற்றும் போது பத்து பேர் எதிர்
நின்று எலுமிச்சை பழத்தை வீசினாலும் லாவகமாக தன்மேல்
படாமல் விர்ர்.. விர்ர்.. என்று கம்பு சுழற்றி அசத்துவார் என்று
அந்தக் கால பெரியவர்கள் சிலாகிக்கின்றனர்.
கவிஞர்கள் வரிசையில் வடக்குதெரு மர்ஹூம் ஆபிதீன், அதே
தெருவை சேர்ந்த இந்நாள் கவிஞர் அன்வர் மற்றும் அலிஹுசைன், முருகேசன் ஆகியோர்கள் அடங்குவர். இன்னும் அரசியல்,
இலக்கியம், இசை சார்ந்தவர்களும் நிறைய பேர் இருந்தாலும்,
தன்னடக்கம் காரணமாகவும், எனக்கு அவர்களின் பெயர்கள்
தெரியாததாலும், வாளா விடுகிறேன்.
தெரியாததாலும், வாளா விடுகிறேன்.
கந்தூரி கொடியேற்றம், சந்தனக் கூடு, கச்சேரிகள் எந்த ஊரில்
நடந்தாலும் இவர்கள் கூடினால் தான் கலைக்கட்டும் என்று
சொல்வார்கள். அந்தக் காலத்தில் வில்வண்டியைக் கட்டிக் கொண்டு, கழுத்தில் மப்ளரை சுற்றிக் கொண்டு, டார்ச் லைட் சகிதம் ஒரு
குரூப்பே செல்வார்களாம். சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்ப கார்,
பைக் எடுத்துக் கொண்டு போய் அதகளம் பண்ணுகிறார்கள் போல!
பேச்சு வழக்கு என்று எடுத்துக் கொண்டால், வாலே, போலே,
சொல்லுதியலா, போனியலா போன்றவை நம் திருநெல்வேலி
சொல்லாடலை நினைவு படுத்தும். மற்றபடி நாகூரின் வாங்கனி,
போங்கனி, இக்கிது, பிக்கிது பாஷையை இவை அடிச்சுக்க முடியா-
தென்பேன்!
சொல்லாடலை நினைவு படுத்தும். மற்றபடி நாகூரின் வாங்கனி,
போங்கனி, இக்கிது, பிக்கிது பாஷையை இவை அடிச்சுக்க முடியா-
தென்பேன்!
முன்பு இங்கிருந்த கீற்று சினிமா தியேட்டரை ஊரின் நிர்வாகம்
அப்புறப் படுத்திவிட்டது. கடைசி படம் நாடோடிமன்னன் என்கிறார்-
கள். மற்றபடி பொழுதுபோக்கு என்று எடுத்துக் கொண்டால் பக்கத்தி-
லுள்ள நாகூர் காரைக்கால் தான் சென்றாகணும். இங்கே தான்
சினிமா தியேட்டர், காலார நடக்க கடற்கரை இன்னபிற உயர்வகை ஹோட்டல்கள் அமைந்திருக்கின்றன. கடற்கரைகளில் வியாழன்,
வெள்ளிக் கிழமைகளில் நாகூரிலும், ஞாயிற்றுக் கிழமையில் காரைக்காலிலும் கூட்டம் அலையோடு அலைமோதும்.
மனதுக்கு நிறைவான அமைதி தரும் இந்த ஊரைப் பற்றி
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். பதிவின் விரிவஞ்சி
இத்தோடு முடிக்கிறேன். பிறகு வேறொருப் பதிவில் மற்றவை
களை பதிவிடுகிறேன்.
களை பதிவிடுகிறேன்.
57 கருத்துகள்:
ஆச்சர்யமான தகவலா இருக்கேய்யா....!!!!
வாங்க தல ஊரில் எல்லோரும் நலமா??
//சாப்பிட்டு முடியும் தருவாயில் சும்மா செறிமானத்திற்காக சாப்பிடும் சாப்பாடு தான் இந்த பால் சோறு. அதற்குரிய பக்குவத்தைப் பாருங்கள் //
நீங்க சொன்ன பால் சோறுல கால்வாசி சாப்பிட்டாலே என் வயிறு நிறைஞ்சிரும். :)
இது சாப்பிட்டதுக்கப்புறம் சாப்பிடுற சாப்பாடாம்!
தல உங்க ஊருக்காரங்களை கம்மியா “எடை” போட முடியாது போலிருக்கே :)
உண்மையிலேயே நீங்க சொன்ன அனைத்து உணவு ஐட்டங்களையும் படிக்கும் போது கழுத்து வரைக்கும் சாப்பிட்ட ஃபீலிங் ஆகுது. மூச்சு முட்டுது.
//காரைக்கால் அருகே இருப்பதாலோ என்னவோ, பக்கத்தில் பனங்’குடி’, ஏனங்’குடி’ போன்ற ஊர்கள் சுற்றிலும் இருக்கின்றன. ஊர்காரர்கள் கோபிக்க வேண்டாம்;//
சொல்றதையும் சொல்லிட்டு சமாதானம் வேற :)
//அந்தந்த வீட்டு மாப்பிள்ளை மார்களின் உடலளவை வைத்துப் பார்த்து, வீட்டின் கைமணத்தை அறிந்துக் கொள்ளலாம் என்று சொல்வார் கள்.//
டூ லேட்.
// (நீங்கள் குண்டா ஒல்லியா என்று என்னை கேட்டு விடாதீர்கள். உடலவை குறைக்க (படாத பாடு படுபவர்களுக்காக) இரண்டு மூன்று பதிவு போட்ட என்னை குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம்.) //
அதானே
உங்க ஊரைப் பற்றி “சுவையாக” எழுதியதற்கு வாழ்த்துகள் தல.
ஒவ்வொரு விசயமும் இதுவரை கேட்டறியாததாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது.
உங்கள் சுவாரஸ்யமான எழுத்து நடை தொடரட்டும்.
நல்ல பகிர்வு தல. புதிய தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது. எழுத்து நடையும் அருமை.
பனங்'குடி', ஏனங்'குடி'... ரசித்தேன்.
'வாடா'... ஆஹா!! இங்க நம்மூர்ல எங்கியாச்சும் கெடைக்குமா தல..
ஆஹா ஆஹா என்று போடவைக்கிறது பதிவு,எழுத்தாளர் பரம்பரையல்லோ,சொல்லவா வேண்டும்?சமையல்,சாப்பாடுன்னு நம்ம துறையில் சொன்ன வகைகளின் செய்முறையை செல்லம்மா,மெஹர் வீட்டிற்கு சென்று தெரிந்து கொள்ள ஆவல் ஏற்படுகிறது,முதல்ல இந்த வாடாவை ருசி பார்க்க வேண்டும்.
நாகூரில் எங்க ஷாபு வீட்டில் அத்த்னை வெரைட்டியும் செய்து உபசரிப்பார்கள்,கடைகளில் வேறு வாங்கி பரத்தி விடுவார்கள்.விருந்தோம்பலுக்கும் வெரைட்டிக்கும் பெயர் போன ஊர் நாகூரும் அதனை சுற்றியுள்ள ஊர்களும் என்பது நான் அறிந்தது தான் என்றாலும் விவரித்த விதம் சூப்பர்.
மொத்தத்தில் தங்களின் ஊர் பற்றிய அனைத்து செய்தி தொகுப்பு மிக அருமை சகோ.
முதலில் இந்த தொடரை ஆரம்பித்து வைத்த அன்புத்தோழி ஸாதிகாவிற்கு ஒரு ஓஓஓ போட்டுக்கறேன்.
nannilaththukkum kodavasalukkum idaiyil irukkum thivadachiriyai patriyum sollungal
தங்கள் ஊர் பற்றிய பதிவுக்கு நன்றி..மேலும் தெரிந்துக் கொண்டதில் மகிழ்ச்சி...
என்ன தல இப்படி?.. என்ன கடன் வாங்குறதுனு இல்லையா?... ஊரை எல்லாமா கடன் வாங்கி எழுதிறது?..
//இரண்டாமவர் குஸ்தி, கம்பு சுழற்றுதல், மற்றும் வீர விளையாட்டு
களில் படுசமத்தர். இவர் கம்பு சுழற்றும் போது பத்து பேர் எதிர்
நின்று எலுமிச்சை பழத்தை வீசினாலும் லாவகமாக தன்மேல்
படாமல் விர்ர்.. விர்ர்.. என்று கம்பு சுழற்றி அசத்துவார் என்று
அந்தக் கால பெரியவர்கள் சிலாகிக்கின்றனர்.//
வடிவேலு காமெடி ஞாபகம் வருது தல..
சாப்பாடு அயிட்டங்கள் எதுவும் நான் கேள்விபடாத அயிட்டங்களா இருக்கு.. உங்க வீட்டுக்கு வந்த இந்த உபசரிப்பு இருக்குமா தல.. அப்படினா அடுத்த முறை உங்க ஊருக்கு தான் டைரக்ட் பிளைட்..... :)))))))))
நிறைய விசயங்கள் புதுசா இருந்தது தல.. எழுத்து நடையும் சலிப்பில்லாமல் படிக்க வைத்தது. வாழ்த்துக்கள்.
புல் மீல்ஸ் சாப்பிட்ட போல இருக்கு ஸார்...
//சாப்பாடு அயிட்டங்கள் எதுவும் நான் கேள்விபடாத அயிட்டங்களா இருக்கு.. உங்க வீட்டுக்கு வந்த இந்த உபசரிப்பு இருக்குமா தல.. அப்படினா அடுத்த முறை உங்க ஊருக்கு தான் டைரக்ட் பிளைட்..... :))))))))) //
அவ்வளவு எதுக்கு? பக்கத்துல தானே இருக்கீங்க ஒரு எட்டு வீட்டுக்கு போயிட்டு வாங்க :)
//புல் மீல்ஸ் சாப்பிட்ட போல இருக்கு ஸார்...//
எனக்கு, ஃபுல் மீல்ஸ் என்னைய சாப்பிட்ட மாதிரி இருக்கு :)
திருவாரூர் - காரைகால் வழித்தடத்தில் பார்த்து உள்ளேன் , அடுத்த முறை இறக்கிடவேண்டியதுதான் - ராஜன் சென்னை
திட்டச்சேரியப்பற்றி திடமாக சொல்லி அசத்தி விட்டீர்கள் அப்துல்காதர்.சுற்றி உள்ள கிராம்ங்கள்,மக்கள் தொகை,கல்விநிலை,பள்ளிகள்,ஊரிஉன் வளங்கள்,ஹை லைட்டாக உணவு வகைகள்,வீரதீர விளையாட்டுக்Kள்,தர்ஹாக்கள்,என்று மிக விபரமாக,சுவைபட அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி.
//இந்த ஊர் மக்களின் உபசரிப்பும் கனிவும் கரிசனமும் சொல்லில் அடங்காது// நானும் உங்கள் ஊர்க்காரர்களின் உபசரிப்பை அனுபவித்து இருக்கின்றேன்.சாபு வீடுகளில் வித விதமான உணவு பதார்த்தங்கள் பறிமாறப்பட்டு அவர்களின் அன்பில் திளைத்து போய் இருக்கின்றோம்.
ஏ அல்லாவே!! இம்பூட்டு சாப்பாட்டு வகைகளா? ”நாகூர்”ங்கிற பேருக்கு பேச்சு வன்மை காரணமில்லைன்னு புரியுதுங்கனி. ;-)))))
//எல்லைக்கல் யூசுப் என்று பெயர் விளங்கக் காரணமாகியது என்கிறார்கள்.//
அவர்கிட்ட கேட்டு கன்ஃப்ர்ம் பண்ணீங்களா? :-))))
வாப்பா சீனி தொவை யில் கை கழுவிய கதை தெரியுமா.....
சிரிப்பை வரவழைத்த ’எல்லைக்கல் யூசுப்’ பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். 'பூரான் ஷரீப்’-ன் பெயர்க்காரணம் பற்றி சொல்லும். நீர் புகுந்த ஊரின் எழுத்தாளர்களின் படைப்புகளையும் சேகரித்து இங்கே வெளியிடும். - ஆபிதீன்
@ Areef எழுதியது
Wonderful Presentation, So proud and Excellent feel in Reading about Our Place, Thank YOu so much Abdul Khader....
அடடா.... தலைப்பு போட்டதே எனக்குத் தெரியாது, இல்லையெனில் வடையை மிஸ் பண்ணியிருக்க மாட்டேன், ஆஹா பக்கம்... ஓபின் பண்ணினால்தான் தெரியுது புதுத்தலைப்பு உண்டா இல்லையா என:(. சரி இதுவா இப்போ முக்கியம்:).
பிறந்த ஊரோடு நிற்காமல் புகுந்த ஊரையும் சேர்த்து ஒரு கலக்கு கலக்கிட்டீங்க.. பொறுமையாப் படிச்சேன்.. உணவின் பெயர்கள் பசியைத் தூண்டிவிட்டது..
நாகூர்....
எனக்கு, பேபியாக இருந்தபோது, நாகூர் இலங்கையிலா அல்லது இந்தியாவிலோ இருக்கெனத் தெரியாது, ஆனால் நாகூர் ஹனிபா அவர்களின் குரலும் பாடல்களும்.. ஏதோ நம் உறவினர் என்பதுபோல அறிமுகமாக இருந்தது, அதனால்தான் நாகூர் என இருப்பதே அப்பவே தெரியும்.
இந்த வாடா... எங்கள் நாட்டில் ரெயின் ஸ்டேஷனில், றால் வடே... என விற்பார்கள்.. நீங்க அதன் விபரம் சொன்னமையாலேயே புரிந்தது.
///சூப்பு தண்ணியில் அவித்த முட்டையைப் போட்டு நடக்கும் வியாபாரம்
ஒரு சில கடைகளில் சூடு பறக்கும். /// அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).
@ MANO நாஞ்சில் மனோ சொன்னது…
// ஆச்சர்யமான தகவலா இருக்கேய்யா....!!!! //
ஆமா மனோ கொஞ்சம் சுவாரஸ்யமா தொகுக்கலாமேன்னு தான்.
மிக்க நன்றி மனோ!
@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...
// நீங்க சொன்ன பால் சோறுல கால்வாசி சாப்பிட்டாலே என் வயிறு நிறைஞ்சிரும். :) இது சாப்பிட்டதுக் கப்புறம் சாப்பிடுற சாப்பாடாம்! //
இயன்ற வரை சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும். அது தான் நம்ம ஊர் பாலிஸி! எப்பூடி!!
//தல உங்க ஊருக்காரங்களை கம்மியா “எடை” போட முடியாது போலிருக்கே :) //
ஆமாமா...,, கம்மியா எடை போட நாங்க என்ன ரேஷன் கடையா வச்சிருக்கிறோம்:-))
மிக்க நன்றி அக்பர்!
@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...
// காரைக்கால் அருகே இருப்பதாலோ என்னவோ, பக்கத்தில்பனங்’குடி’, ஏனங்’குடி’ போன்ற ஊர்கள் சுற்றிலும் இருக்கின்றன. ஊர்காரர்கள் கோபிக்க வேண்டாம்//
// சொல்றதையும் சொல்லிட்டு சமாதானம் வேற :) //
அப்படி சமாதானம் சொன்னாலே அது ஒரு போதை மாதிரி தானே! புரிஞ்சுங்க தல!!
மிக்க நன்றி அக்பர்!
@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...
// அந்தந்த வீட்டு மாப்பிள்ளை மார்களின் உடலளவை வைத்துப் பார்த்து, வீட்டின் கைமணத்தை அறிந்துக் கொள்ளலாம் என்று சொல்வார்கள்.//
// டூ லேட்.//
உங்க உடலளவை வைத்து சொல் றீங்களா? . ஹா..ஹா..ஹா..
மிக்க நன்றி அக்பர்!
@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...
தல உங்க ஊருக்காரங்களை கம்மியா “எடை” போட முடியாது போலிருக்கே :)
ஆமா நாங்கல்லாம் என்ன பழைய பேப்பரா?? அவ்வ்வ்வ்..!!
மிக்க நன்றி அக்பர்!
@!@ செ.சரவணக்குமார் கூறியது...
பனங்'குடி', ஏனங்'குடி'... ரசித்தேன். = உங்க ரசனையை நானும் ரசித்தேன் தல!
'வாடா'... ஆஹா!! இங்க நம்மூர்ல எங்கியாச்சும் கெடைக்குமா தல..= சவுதியில் நஹீன்னா. ஊருக்கு வாங்க!!
மிக்க நன்றி சரவணன்!
@!@ asiya omar
//விருந்தோம்பலுக்கும் வெரைட் டிக்கும் பெயர் போன ஊர் நாகூரும் அதனை சுற்றியுள்ள ஊர்களும் என்பது நான் அறிந்தது தான் என்றாலும் விவரித்த விதம் சூப்பர்.//
பெரும்பாலும் சாபுமார்கள் வீடுகளில் வாடிக்கையாய் கடை சாப்பாடு தான். கடைகளில் கூட சுவையாய் தான் சமைப்பார்கள். ஒரு சிலர் வீடுகளில் ஆட்கள் வைத்து சமைத்து தருவார்கள்.
நீங்களே நான் குறிப்பிட்ட முக்கால் வாசி சமையல்களின் பக்குவத்தை அறிந்தவர்கள் தானே சகோ. இன்ஷா அல்லாஹ் நாங்கள் ஊரில் இருக்கும் போது நீங்களும் ஒருமுறை குடும்பத் தோடு எங்க வீட்டுக்கு அவசியம் வாங்க! இந்த வாடா இங்க சுட்டுப் பார்த்தாலும் ஊரில் உள்ள பக்குவம் போல் வரமாட்டேங்குது. ஆனாலும் சிலநேரங்களில் ஆசை படும்போது செய்து தான் சாப்பிடுவோம்.
ஆசியா உமர் உங்க வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!
@!@ நண்பன் கூறியது...
// nannilaththukkum kodavasalukkum idaiyil irukkum thivadachiriyai patriyum sollungal //
திருவிடைச்சேரியப் பத்தி தானே?? அவசியம் சொல்கிறேன் நண்பரே!!
ஃபிரெண்ட் உங்க முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!
@!@ S.Menaga கூறியது...
// தங்கள் ஊர் பற்றிய பதிவுக்கு நன்றி..மேலும் தெரிந்துக் கொண்டதில் மகிழ்ச்சி...//
உங்களின் பிஸியான நேரத்திலும் வந்து எங்களூரை பற்றி படித்து தெரிந்துக் கொண்டதில் ரொம்ப மகிழ்ச்சி சகோ.
மிக்க நன்றி S.Menaga siss
@!@ நாடோடி கூறியது...
// என்ன தல இப்படி?.. என்ன கடன் வாங்குறதுனு இல்லையா?... ஊரை எல்லாமா கடன் வாங்கி எழுதிறது?..//
தல நான் தான் மொதல்லேயே சொல்லிட்டேன்ல! "என் கைத்தளம் பற்றி மனம் கவர்ந்த துணையூர் என்று", பின்னே ஏன் இந்த கொலைவெறி!!
மிக்க நன்றி ஸ்டீபன்!!
நாடோடி கூறியது...
// சாப்பாடு அயிட்டங்கள் எதுவும் நான் கேள்விபடாத அயிட்டங்களா இருக்கு.. உங்க வீட்டுக்கு வந்த இந்த உபசரிப்பு இருக்குமா தல.. அப்படினா அடுத்த முறை உங்க ஊருக்கு தான் டைரக்ட் பிளைட்..... :))))))))) //
எங்க ஊருக்கு டைரக்ட் ஃபிளைட் எல்லாம் கிடையாது. ஒன்லி சென்னை அல்லது திருச்சி வந்து இறங்கி தான் வரணும். ஓகேவா?? அவ்வவ்வ்வ்வ். ஊருக்கு வந்து தான் வரணும்னு என்ன யோசனை. அக்பர் சொல்ற மாதிரி இங்க வீட்டுக்கு வந்திடுங்க. கட்ட வேண்டியதை ஒரு கட்டு கட்டிடுவோம். என்னாங்கிறீங்க?
மிக்க நன்றி ஸ்டீபன்.
@!@ Mohamed Faaique கூறியது...
// புல் மீல்ஸ் சாப்பிட்ட போல இருக்கு ஸார்...//
பின்னே ஹாஃப் மீல்ஸ் சாப்பிட்டா வயிறு பசிக்காதா??
மிக்க நன்றி Mohamed Faaique!!
@!@ RAJAN கூறியது...
// திருவாரூர் - காரைகால் வழித் தடத்தில் பார்த்து உள்ளேன், அடுத்த முறை இறக்கிட வேண்டியது தான் - ராஜன் சென்னை//
வாங்க ராஜன். அவசியம் எங்க ஊருக்கு வாங்க!!
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!
@!@ ஸாதிகா கூறியது...
// திட்டச்சேரியப் பற்றி திடமாக சொல்லி அசத்தி விட்டீர்கள் மிக விபரமாக, சுவைபட அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி.//
எழுதுவதற்கு ஆர்வத்தை தூண்டியதே நீங்கள் தானே சகோ!அந்த வகையில் சகோ.asiya omar சொல்வது போல் உங்களுக்கு தான் ஒரு ஓஓஓ... போடனும்
@!@ ஸாதிகா கூறியது...
//நானும் உங்கள் ஊர்க்காரர்களின் உபசரிப்பை அனுபவித்து இருக்கின்றேன்.சாபு வீடுகளில் வித விதமான உணவு பதார்த்தங்கள் பறிமாறப்பட்டு அவர்களின் அன்பில் திளைத்து போய் இருக்கின்றோம்.//
இன்ஷா அல்லாஹ் நாங்கள் ஊரில் இருக்கும் போது நீங்களும் ஒருமுறை குடும்பத் தோடு எங்க வீட்டுக்கு அவசியம் வாங்க சகோ!
ஸாதிகா உங்க வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!
@!@ ஹுஸைனம்மா கூறியது...
// ஏ அல்லாவே!! இம்பூட்டு சாப்பாட்டு வகைகளா? ”நாகூர்”ங்கிற பேருக்கு பேச்சு வன்மை காரண மில்லைன்னு புரியுதுங்கனி. ;-)))))//
எங்க ஊர் பாஷை உங்களுக்கும் வந்துடுச்சா!! இது ரொம்ப நல்லா தான் இக்கிது:) பேச்சு வன்மைக்கு சாப்பாட்டு வகைகள் தான் காரணம் என்கிறீர்களா ஹுசைனம்மா. அதில்லை!! விருந்தினர்களை உபசரிக்கத்தான் அத்தனை வகை. நாங்கள் சாப்பிடுவதென்னவோ விள்ளல் அளவு தான்.. அவ்வவ்..!!
ஹுஸைனம்மா உங்க வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!
ஹுஸைனம்மா கூறியது...
//எல்லைக்கல் யூசுப் என்று பெயர் விளங்கக் காரணமாகியது என்கிறார்கள்.//
//அவர் கிட்ட கேட்டு கன்ஃப்ர்ம் பண்ணீங்களா? :-)))) //
நானெங்கே அவர பாக்குறது??அவர் போய் சேர்ந்து பலகாலமாச்சாமே!! அவங்க வீட்டில் சொன்னது தானது!!
ஹுஸைனம்மா உங்க வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!
@!@ பெயரில்லா கூறியது...
//வாப்பா சீனி தொவையில் கை கழுவிய கதை தெரியுமா.....??//
தெரியுமே! சீனிதொவையே கைகழுவத் தானே என்று சொல்லி குடலை கழுவிக்கிறோம். அவ்வளவு தான். அதுசரி நீங்க யாரு? ஒரு பெயரை வச்சுக்கிட்டு வர வேண்டியது தானே!! நல்லாத்தான் போங்க!!
இருந்தாலும்......
பெயரில்லா உங்க முதல் வருகைக் கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!
@!@ Abedeen கூறியது...
// சிரிப்பை வர வழைத்த எல்லைக் கல் யூசுப் பற்றி இப்போது தான் கேள்விப் படுகிறேன். 'பூரான் ஷரீப்’-ன் பெயர்க்காரணம் பற்றி சொல்லும். நீர் புகுந்த ஊரின் எழுத்தாளர்களின் படைப்புகளையும் சேகரித்து இங்கே வெளியிடும். - ஆபிதீன்//
வாருங்கனி, வாராது வந்த என்னருமை எழுத்தாள நண்பரே! பூரான் ஷரீப் பற்றி எழுத சொல்லிட் டியும்ல! ஒரு பதிவ தேத்திப்புடுறேன். ஆனாலும் நான் புகுந்த ஊரில் எழுத்தாளர்களை எங்கே தேடி கண்டு பிடிப்பேன். வீட்டுக்கு வீடு கதவா இருக்குமே! பூட்டிக்கிட்டு உள்ளேல உட்கார்ந்திருப்பாங்க! :-)))
ஆபிதீன் உங்க முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!
@ Areef (globe marine) எழுதியது..
//Wonderful Presentation, So proud and Excellent feel in Reading about Our Place, Thank YOu so much Abdul Khader....//
u welcome areef
Areef உங்க முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!
@!@ athira கூறியது
// பிறந்த ஊரோடு நிற்காமல் புகுந்த ஊரையும் சேர்த்து ஒரு கலக்கு கலக்கிட்டீங்க..//
பி..ன்..னே..!!!! வாழும் போது
'வரலாறு' முக்கியமல்லவா??? இல்லாகாட்டி... அவ்வ்வ்வ்....!!
பூஸார் உங்க வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!
@!@ athira கூறியது
// நாகூர் ஹனிபா அவர்களின் குரலும் பாடல்களும்.. ஏதோ நம் உறவினர் என்பதுபோல அறிமுகமாக இருந்தது, அதனால்தான் நாகூர் என இருப்பதே அப்பவே தெரியும்//
உண்மை தான் பூஸ்!! ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு அடையாளம் போல், எங்க ஊரின் பெயரை சொன்னால், கவனத்தை ஈர்ப்பவர் எங்கள் ஹனீபா அண்ணன் தான்!!
பூஸார் உங்க வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!
athira கூறியது
// நாகூர்....எனக்கு, பேபியாக இருந்தபோது, நாகூர் இலங்கையிலா அல்லது இந்தியாவிலோ இருக்கெனத் தெரியாது //
இங்க பார்டா... இதுவேறையா?? இது 'ஜெய்லானி'க்கி தெரியுமா? மியாவ்..!!
பூஸார் உங்க வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!
@!@ athira கூறியது
///சூப்பு தண்ணியில் அவித்த முட்டையைப் போட்டு நடக்கும் வியாபாரம் ஒரு சில கடைகளில் சூடு பறக்கும். ///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).//
இதுக்கே இப்படி சொல்றீங்களே!! வெறுமனே மைதாமாவை, தண்ணியில் முட்டையுடன் அடித்து கலக்கி, எண்ணையில் போட்டால் உருண்டையாக்கி, பொசு பொசு வென்று 'பாராட்டா உருண்டை' யாக விற்பனையாகும் டேஸ்ட்டான தின்பண்டத்தை என்னவென்று சொல்வது. அதுவும் வியாபாரம் அமோகமா இருக்கும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....!!(பதிவில் எழுத மறந்து போயினம்.... மியாவ்!)
பூஸார் உங்க வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!!
அருமை. சாப்பாட்டை விட உங்களின் எழுத்து நடை அதிகம் சுவைக்கிறது.
ரசித்து ருசித்து எழுதியிருக்கிறீகள். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
@!@ இராஜராஜேஸ்வரி கூறியது...
// அருமை. சாப்பாட்டை விட உங்களின் எழுத்து நடை அதிகம் சுவைக்கிறது.ரசித்து ருசித்து
எழுதியிருக்கிறீகள். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள் //
வாங்க இராஜராஜேஸ்வரி!
நன்றி உங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுரைக்கும்!!
இதுல உள்ள சாப்பாடு , வெரைட்டிகள் எங்க ஊரிலும் கிடைக்கும். பழச நினைக்க வச்சிட்டீங்க .
முக்கியமா ’’பூரியான்”’அப்படின்னு ஒரு ஸ்வீட் இருக்கே மறந்துட்டீங்களா..? பாத்திஹா ஓதும் மாசத்துல ஸ்பெஷலா செய்வாங்களே ஆனா இப்ப கிடைப்பதில்லை
//தம்ரோட், நனஹத்தா, ஹஜூர் பணியாரம், முட்டைப் பணியாரம் //
//அஞ்சுவகைக்கறி நெய்ச்சோறு என்பது நான்கு பேர்
உட்கார்ந்து சாப்பிடும் இந்த Bபாசன் சாப்பாடு//
//அலியதரம், ஆட்டுக்கால் பணியாரம், 'போனவம்', போன்ற தீண் பதார்த்தங்கள் போன இடம் தெரியவில்லை. இப்பொழுதெல்லாம் இவைகளை வீடுகளில் செய்ய அலுப்புப்பட்டுக் கொண்டு கடை-
களில் ஆர்டர் செய்தே தருவிக்கிறோம்//
ஆஹா!
அப்படியே எங்க ஊர் மாதிரியே 'இக்கிது' நானா.
எங்க ஊர் பத்தி இங்க பாருங்க
முன்பே நான் படித்துள்ளேன்!
எல்லாமே சுவையாக இருக்கின்றன!
கருத்துரையிடுக