facebook

திங்கள், அக்டோபர் 17, 2011

தமிழ் மணம்!!!


உங்கள்  அனைவர்களின்  மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...!!

எனக்கு நட்பு வட்டங்களில் மிகப் பெரியது மாற்று மதசகோதரர்கள் தான். அவர்களே நான் சொல்லும் சலாத்தின் அர்த்தம் அறிந்து கொண்டு, என்னை சந்திக்க வரும் பல நேரங்களிலும் சலாம் சொல்லாமல் என்னை பார்க்க வருவதில்லை. அவர்களோடு பழக்க வழக்கங்களும் சொல்லில் சொல்ல முடியாதவை.

சமீபத்தில் தமிழ்மணம் பற்றி தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா... என்ற பதிவு டெர்ரர் கும்மி தளத்தில் வந்தது. அதில் தமிழ்மணம் திரட்டியின் சமீப நிலைகளை நகைச்சுவையாக அல்லது நக்கலாக எழுதப்பட்டிருந்தது. அதில் பின்னூட்டமிட்ட பெயரிலி என்கிற இரமணிதரன் என்கிற தமிழ்மணத்தின் நிர்வாகி ஒருவர் அப்பதிவிற்கு ஆட்சேபனை செய்தார். அவர் ஆட்சேபனை செய்ததில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தான் கண்டனத்துக்குரியது. சக பதிவர்கள் பலர் மீது அவர் பயன்படுத்திய கீழ்த்தரமான, கேவலமான வார்த்தைகள் இங்கு மேற்கோள்காட்டுவதற்காக கூட பிரசுரிக்க முடியாதவைகள். அந்த பதிவிற்கு சென்று நீங்களே அறிந்துக் கொள்ளுங்கள்.

மேலும், முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது சொல்லிக்கொள்ளும் "சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது நிலவட்டுமாக" என்னும் முகமனை கேலி செய்யும் விதமாக "...சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்..." என்று கொச்சைப் படுத்தியுள்ளார்.

இப்பொழுது வலைத்தளத்தை கேலி மற்றும் மனித மதங்களை (மனங்களை) புண்படுத்தும் ஒரு ஆயுதமாக  பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். தனது வக்கிரத்திற்காக மதங்களை பயன்படுத்திக் கொள்ளும் நபர்களை இங்கே வண்மையாய் கண்டிக்கிறோம்.

11 கருத்துகள்:

ஆமினா சொன்னது…

அதுக்கு கேனத்தனமா விளக்கங்கள் வேறு

Pebble சொன்னது…

//சாந்தியும் அவ அக்கா சமாதானியும் //
Will he write/say like this, if both of them are his sisters.

எம் அப்துல் காதர் சொன்னது…

தமிழ்மணம் தற்போது விளக்கம் வெளியிட்டுள்ளது. பார்க்க http://blog.thamizmanam.com/archives/359

Mohamed Faaique சொன்னது…

தமிழ் மணத்தோட விளக்கம் கிடையாது... அவங்க குரூப் ஆளுக்கு (ஆப்பிழுத்த குரங்கு) வக்காலத்து வாங்கி இருக்காங்க..

ஜெய்லானி சொன்னது…

அங்கே விளக்கம் குடுத்திருப்பது கண்துடைப்பு மாதிரிதான்.இருங்க அதுக்கும் ஒரு மாற்று வழியுடன் வருகிறேன் :-)))

Anisha Yunus சொன்னது…

romba naal kalichu, soodaana oru naermaiyaana pathivu kader bhai. alhamthulillaah. vaalthukkal.

அப்துல்மாலிக் சொன்னது…

தமிழ்மணமே மன்னிப்புகேள்


தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்...

செ.சரவணக்குமார் சொன்னது…

அநாகரிகமான கமெண்ட் அது. தமிழ்மணம் சார்பாக என்று வேறு இருக்கிறது. தமிழ்மணம் சேவை நோக்குடன் துவக்கப்பட்ட நல்ல அமைப்பு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும் அதன் நிர்வாகிகளில் ஒருவர் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்த கருத்தைச் சொல்லியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

எனது கடுமையான கண்டனங்கள்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இன்னும் மன்னிப்பு கேட்கலையே...???

பஹ்ரைனிலும் தமிழ்மணம்[[துக்கு]] ஆப்பு ரெடியாகிட்டு இருக்கு...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஜெய்லானி கூறியது...
அங்கே விளக்கம் குடுத்திருப்பது கண்துடைப்பு மாதிரிதான்.இருங்க அதுக்கும் ஒரு மாற்று வழியுடன் வருகிறேன் :-)))//

சீக்கிரம் வாங்க...

Unknown சொன்னது…

தமிழ் நாத்தம்.
தமிழ் மணம் திரட்டியின் கயமைத்தனத்தை அம்பலப்படுத்தி தமிழ்10, இன்ட்லி, தமிழ்வெளி, வலைபூக்கள், உழவன், தேன்கூடு, ஹாரம், போன்ற திரட்டிகளுக்கு மக்களை வரவேற்பதே.