facebook

ஞாயிறு, டிசம்பர் 12, 2010

தேவதை வரும் நேரம்



தேவதை வரும் நேரம்


மணி இரவு  இரண்டு!!

வயிற்றை புரட்டுவது போலிருந்தது. எழுந்து பாத்ரூம் போய்
விட்டு கதவை திறக்குமுன், யாரோ பாத்ரூம் கதவை தட்டுவது போலிருந்தது. “இத வர்றேன்” என்று குரல் கொடுத்துவிட்டு,
கதவை திறந்து பார்த்தபொழுது இருட்டாய் இருந்தது.
யாருமில்லை!!!

ஹால் விளக்கை போட்டு விட்டுதானே பாத்ரூமுக்குள்
நுழைந்தேன். கிச்சனில் எரிந்துக் கொண்டிருந்த விடிலைட் கூட
ஆபாஃகி இருந்தது. யார் ஆப் செய்திருப்பா? புரட்டிய வயிற்றை
காலி செய்து விட்டு வந்தாலும், இந்த சம்பவத்தால் மறுபடியும்
புரட்ட ஆரம்பித்து.

ஏதோ ஒன்னு என்னையே பார்க்கிறமாதியே எனக்குள் ஒரு
குறு குறுப்பு ஓட ஆரம்பித்தது. சுற்றும் முற்றும் சுற்றிப் பார்த்து
கண்களை சுழலவிட்டேன். யாராது என்று கேட்கலாம் என்ற
வார்த்தை தொண்டை வரை வந்து அங்கேயே அமுங்கிப் போனது.

சட்டென்று யோசனை வந்து ரூமுக்குள் நுழைந்து தூங்கிய
மனைவியை எழுப்பி "நீயா கதவை தட்டினாய்" என்று கேட்ட
போது, அது திடுக்கிட்டு போய் என்னை ஏறிட்டு கண்ணை
உருட்டிய போது நான் வெலவெலத்துப் போனேன். என்ன
நடக்குது இங்கே??

பின்னே எப்படி நான் பாத்ரூமில் நிற்கும்போது பேச்சுக்
குரல், ஏதேதோ பாத்திரங்கள் நகர்த்தும் சப்தமெல்லாம்
கேட்டதே!! அதெல்லாம் என்ன? யார் செய்தது?

"கதவை தட்டியது யார்?? "

இப்படி நான் கேட்டது வார்த்தையாய் வெளியே வந்து
வீடு முழுக்க எதிரொலித்தவுடன் குபீரென்று பத்திக்கொண்ட
மாதிரி வீடு முழுக்க லைட்டெரிய ஆரம்பித்தது.

********

மறுநாள் எதிலும் ஈடுபாடு இல்லாமல், BBC தமிழோசையை
கிளிக்கி செய்தி கேட்டுக் கொண்டிருந்தபோது, பிலிப்பைன்ஸில்
ஒரு பெண்ணை முட்டி தள்ளிவிட்டு லாட்டரி சீட் வாங்கிய
பெண்ணுக்கு பரிசு விழாமல், வழி விட்ட பெண்ணுக்கு மில்லியன் கணக்கில் லாட்டரி அடித்திருப்பதாகச் சொல்லிய செய்தியில்
ஈடுபாடில்லாமல், சன் நியூஸுக்கு தாவினேன். நியூஸில் மனம் லயிக்காமல் லாட்டரி சீட்டு செய்தியே மனசில் வட்டமடித்தது.

இப்படி நம்மை இந்த அவசர வாழ்க்கை பொறுமையில்லாமல் மாற்றிக் கொண்டிருக்கிறதே.  அதை ஏன் நாம் கண்டுக் கொள்ளாமல் இருக்கிறோம்?? 

அதே யோசனையில்  கண்ணயர்ந்து போனேன். எவ்வளவு நேரம்
உறங்கினேனோ  தெரியவில்லை. "கிரீக்... கிரிக்.." என்ற  சப்தம்
வருவதை உணர்ந்து கண்விழித்தபோது சன் நியூஸ் சானல்
கட்டிங் வந்து  வெட்டி வெட்டி ஸ்க்ரீன் முழுதும் போர்களம் போல்  காட்சியளித்தது. ஆஃப் செய்து விட்டு நகர்ந்தபோது...

இன்னதென்று யூகிக்கமுடியாத ஒரு வினோத சப்தம். வாசல்
கதவை ஏதோ நகம் கொண்டு  சுரண்டுவதைப் போல் கேட்டு
ஒரு அடிகூடமுன்னெடுத்து வைக்க முடியாமல் அப்படியே
நிலைகுலைந்து நின்றேன். கண்களை ஜூம் செய்து பார்த்தபோது...

வாசல் கதவின் கீழே ஏதோ நிழலாடியது..........!!!!

                                                                                               
                                                                               -  தொடரும்

             

42 கருத்துகள்:

Philosophy Prabhakaran சொன்னது…

தேவதை வரும் நேரம்னு சொல்லிட்டு பைக்கதை எழுதியிருக்கீங்களே... அதுலயும் தொடரும் வேற...!!!

Unknown சொன்னது…

என்னதான் நடக்குதுங்க....திகில்.

nis சொன்னது…

பயங்கரமான திகிலா இருக்கின்றதே.
தொடருங்கள்

சிவராம்குமார் சொன்னது…

பாஸ்! இன்னும் தேவதை வரலை!!!

சிவராம்குமார் சொன்னது…

பாஸ்! இன்னும் தேவதை வரலை!!!

Unknown சொன்னது…

ஆ!! என்ன திகில் கதையெல்லாம் எழுதறீங்க.. கலக்குங்க..

தலைப்பு சூப்பர்..

தூயவனின் அடிமை சொன்னது…

என்ன நடக்குது, வர வர எல்லாம் திகில் கதைக்கு போய்டிங்க, உம் நடக்கட்டும் நடக்கட்டும்...

சிநேகிதன் அக்பர் சொன்னது…

பட்டைய கிளப்புறீங்க. நல்லாயிருக்கு தொடருங்க.

Mohamed Faaique சொன்னது…

என்னங்க திகில் கதையா? நாம ரொம்ப பயந்த சுபாவங்க.... இந்த ஊர்'ல பேய் விரட்டுவும் யாரும் கிடையாது..

ஆமினா சொன்னது…

ஆரம்பமே அசத்தலா இருக்கு!!!

கொஞ்சம் அதிகமாவே பயந்துட்டேன் :)

ஹுஸைனம்மா சொன்னது…

அந்த தேவதை, பூனையா, எலியா பாஸ்?

RVS சொன்னது…

அடிச்சு தூள் கிளப்புங்க. ரொம்ப நல்லா இருக்கு. ;-)

நிழலாக ஆடியது என்ன என்று அறியும் ஆவலில்...

Asiya Omar சொன்னது…

கதை திரில்லாக இருக்கு.அருமை.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ philosophy prabhakaran கூறியது

// தேவதை வரும் நேரம்னு சொல்லிட்டு 'பை'க்கதை எழுதியிருக்கீங்களே... அதுலயும் தொடரும் வேற...!!! //

ஒரே பதிவில் போட்டா ரொம்ப நீளமாத் தெரியுமே ...அதான் பாஸ்.

நன்றி philosophy prabhakaran உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ கலாநேசன் கூறியது...

// என்னதான் நடக்குதுங்க....திகில்.//

வாங்க sir, கொஞ்சம் சஸ்பென்ஸ், அடிக்கடி வாங்க பாஸ்!!

நன்றி கலாநேசன் உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ nis கூறியது...

// பயங்கரமான திகிலா இருக்கின்றதே. தொடருங்கள்//

வாங்க பாஸ். தொடர்ந்து வாங்க!!

நன்றி nis உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

Unknown சொன்னது…

திகிலோடு நகரும் கதை, அடுத்த பாகத்திற்காக காத்திருக்க வைத்து விட்டீர்களே...

Unknown சொன்னது…

//பாஸ்! இன்னும் தேவதை வரலை!!!//

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ரஹீம் கஸாலி கூறியது.

// அப்படியே நம்ம கடைப்பக்கம் வாங்கே....நானும் ஒரு போட்டி வச்சுருக்கேன். http://ragariz.blogspot.com/2010/12/riddle-to-rajini-fans.html //

தினம் காலையில் உங்கள் மெயிலில் கண்விழித்து, பூத் பக்கம் வந்து ஓட்டும் போட்டுட்டு போறேன், இன்னும் இலவசத்தைத் தான் காணோம். ஹா! ஹா!!

நன்றி ரஹீம் கஸாலி உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிவா என்கிற சிவராம்குமார் கூறியது...

// பாஸ்! இன்னும் தேவதை வரலை!!!//

தேவதைக்கு நானும் தான் வெய்டிங் பாஸ்!! :))

நன்றி சிவா என்கிற சிவராம்குமார் உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ பதிவுலகில் பாபு கூறியது...

// ஆ!! என்ன திகில் கதையெல்லாம் எழுதறீங்க.. //

கொஞ்சம் திகிலா இருக்கட்டுமேன்னு தான் பாஸ்!!:)))

//தலைப்பு சூப்பர்..//

ஆஹா உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை தானே!! அதான். ஹா..ஹா..

நன்றி பதிவுலகில் பாபு உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ இளம் தூயவன் கூறியது...

// என்ன நடக்குது, வர வர எல்லாம் திகில் கதைக்கு போய்டிங்க, உம் நடக்கட்டும் நடக்கட்டும்...//

மக்களுக்கு பயம் கொறஞ்சு போச்சு அதான் பாஸ் :))))

நன்றி இளம் தூயவன் உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சிநேகிதன் அக்பர் கூறியது...

// பட்டைய கிளப்புறீங்க. நல்லாயிருக்கு தொடருங்க.//

பதிவுலக மன்னர்கள் 'நீங்கள் இருவரும்' சொன்ன மறுப்பா சொல்லப் போறேன் பாஸ்!! :)))

நன்றி சிநேகிதன் அக்பர் உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Mohamed Faaique கூறியது...

// என்னங்க திகில் கதையா? நாம ரொம்ப பயந்த சுபாவங்க.... இந்த ஊர்'ல பேய் விரட்டுவும் யாரும் கிடையாது..//

நான் எழுதுன கதைய நானே படிக்கல பாஸ். அப்படியே பப்ளிஷ் பண்ணிட்டேன். உங்கள நான் விட அம்புட்டு பயந்த சுபாவங்க!! :)))

நன்றி Mohamed Faaique உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஆமினா கூறியது...

// ஆரம்பமே அசத்தலா இருக்கு!!! கொஞ்சம் அதிகமாவே பயந்துட்டேன் :) //

நீங்களுமா?? நானும் தான் பயந்துக்கிட்டே எழுதினேன்:)))

நன்றி ஆமினா உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாக மூட்டு வதற்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹுஸைனம்மா கூறியது...

//அந்த தேவதை, பூனையா,எலியா பாஸ்?//

இப்படி பொசுக்குன்னு உண்மைய போட்டு ஒடச்சா எப்படி Siss?:)))

நன்றி ஹுஸைனம்மா உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ RVS கூறியது...

// அடிச்சு தூள் கிளப்புங்க. ரொம்ப நல்லா இருக்கு. ;-) நிழலாக ஆடியது என்ன என்று அறியும் ஆவலில்...//

அடுத்தப் பதிவில் உங்களுக்காக RVS சார்!!

நன்றி உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

//கதை திரில்லாக இருக்கு. அருமை.//

வாங்க மேடம். பயப்படாம படிச்சீங்களா!!

நன்றி asiya omar உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ பாரத்... பாரதி... கூறியது...

//திகிலோடு நகரும் கதை, அடுத்த பாகத்திற்காக காத்திருக்க வைத்து விட்டீர்களே...//

வாங்க தல!! உங்கள் ஆர்வத்திற்கு தீனி அடுத்தப் பதிவில் தர்றேன்!!

நன்றி பாரத்... பாரதி... உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ பாரத்... பாரதி... கூறியது...

//பாஸ்! இன்னும் தேவதை வரலை!!!//

உங்கள் தேவதை அடுத்தப் பதிவில்!!

நன்றி பாரத்... பாரதி... உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

ஜெய்லானி சொன்னது…

//தேவதை வரும் நேரம்


மணி இரவு இரண்டு!! //

எந்த பிசாசும் ரெண்டு மணிக்கு வந்ததா சரித்திரமே இல்ல ..ஒரு வேளை ஓவர் டைம் பார்க்குதோ என்னவோ...

ஜெய்லானி சொன்னது…

//ஏதோ ஒன்னு என்னையே பார்க்கிறமாதியே எனக்குள் ஒரு
குறு குறுப்பு ஓட ஆரம்பித்தது.//

சொரி ,அரிப்பு .படை... ?
ஆமங்க....ஆமாம்...!!

அஞ்சால் அலுப்பு மருந்து...

ஈறுகளை நாசமாக்க பயோரியா பல் பொடி...

...ச்சே..எதுவுமே நினைவுக்கு.வரமாட்டேங்குதே

ஜெய்லானி சொன்னது…

//அதெல்லாம் என்ன? யார் செய்தது?

"கதவை தட்டியது யார்?? " //

ஏர் வாடிக்கு ஒரு ஆள் ரெடியாயிடுச்சு டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்...!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி சொன்னது…

//தேவதை வரும் நேரம். மணி இரவு இரண்டு!! //

// எந்த பிசாசும் ரெண்டு மணிக்கு வந்ததா சரித்திரமே இல்ல ..ஒரு வேளை ஓவர் டைம் பார்க்குதோ என்னவோ... //

அதான் சொல்லி வைத்த மாதிரி நீங்க வந்துட்டீங்களே பாஸ். அதுக்குன்னு நான் ஓவர் டைம் எல்லாம் போட்டு தரமுடியாது. ஆமா சொல்லிட்டேன். க்கி..க்கி..

நன்றி "வலைஞாநி" உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது...

//ஏதோ ஒன்னு என்னையே பார்க்கிறமாதியே எனக்குள் ஒரு
குறு குறுப்பு ஓட ஆரம்பித்தது.//

// சொரி ,அரிப்பு .படை... ? ஆமங்க....ஆமாம்...!!அஞ்சால் அலுப்பு மருந்து...ஈறுகளை
நாசமாக்க பயோரியா பல் பொடி......ச்சே..எதுவுமே நினைவுக்கு. வரமாட்டேங்குதே//

வராது தான்!! இப்படி ராத்திரி ரெண்டு மணிக்கு வந்து நின்னு திடுதிப்புன்னு கமென்ட் போட்டா?? :)))

நன்றி "வலைஞாநி" உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஜெய்லானி கூறியது...

//அதெல்லாம் என்ன? யார் செய்தது? "கதவை தட்டியது யார்?? " //

// "ஏர்வாடி"க்கு ஒரு ஆள் ரெடியாயிடுச்சு டோய்ய்ய்ய்ய்..!!//

பதிவுலகில் "யார்வாடி" நின்றாலும் முதலில் போய் கைக் கொடுக்கும் தல நீங்க பாஸ். நீங்களே அப்படி சொல்லலாமா. 'பயோரியா' இல்லாவிட்டால் 'கோபால்' பல்பொடி இருக்கவே இருக்கு. சார்ஜாவில் கிடைக்குதா?? ஹி..ஹி..

நன்றி "வலைஞாநி" உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

a சொன்னது…

திகில் தொடர்???

vanathy சொன்னது…

நாட்டாமை, பேய்க்கதையா??? நான் பகலில் தான் படிப்பேன்.

Jaleela Kamal சொன்னது…

என்ன்ன தான் ஆச்சு பயங்கரமான திகிலா இருக்கே

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ வழிப்போக்கன் - யோகேஷ் சொன்னது…

// திகில் தொடர்??? //

வாங்க பாஸ்!! ஏன் திகிலில்லையா??

நன்றி வழிப்போக்கன்-யோகேஷ் உங்கள் முதல் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ vanathy கூறியது...

// நாட்டாமை, பேய்க்கதையா??? நான் பகலில் தான் படிப்பேன்//

வாங்க வான்ஸ், பகலில் படித்தாலும் இரவில் படித்தாலும் கதை ஒன்னு தான். பயம் நெஞ்சில் வரக்கூடாது. அம்புட்டுதேங்!!

நன்றி வானதி உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Jaleela Kamal கூறியது...

// என்ன்ன தான் ஆச்சு பயங்கரமான திகிலா இருக்கே//

அடுத்தப் பதிவில் திகில் இன்னும் கொஞ்சம் கூடுதலா இருக்கும். அவசியம் வாங்க ஜலீலாக்கா!!

நன்றி Jaleela Kamal உங்கள் வருகைக்கும் என்னை எழுத உற்சாகமூட்டுவதற்கும்.