facebook

புதன், மார்ச் 30, 2011

கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!!

கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!!


நன்றி : சகோதரர்கள் ஜாகிர் ஹுசைன் & ஷாஜஹான்

நிலநடுக்கத்தால், குறுக்கும் நெடுக்குமாக, பிளக்கப்பட்ட சாலையை பாருங்கள். குற்றுயிரும், குலையுயிருமாய் கிடந்த சாலையை, மார்ச் 17ந்தேதி ஆரம்பித்து, ஆறு நாட்களுக்குப் பின்னர், பிளவை/சரிவை/
ஆழக் குழியை சரிசெய்து, மீண்டும் அந்த சாலையிலே போக்கு-
வரத்தை, ஏற்படுத்திய விதம்  நம்மை  ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது

10 THINGS TO EMULATE FROM JAPAN

ஜப்பானிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியிலிருந்து நாம் கற்றுக்
கொள்ள வேண்டிய 10 படிப்பினைகள்.

1. THE CALM - அமைதி

Not a single visual of chest-beating or wild grief. Sorrow itself has been elevated.
நெஞ்சில் அடித்துக்கொண்டு அழும் அல்லது இழப்பை தாங்க
முடியாமல் ஒப்பாரி வைத்து அழும் ஒரு காட்சியைக் கூட
காண முடியவில்லை. இழந்த வ‌ருத்தமும், சோகமும் அப்பிய முகங்களினோடு தான் மக்களை பார்க்க முடிந்தது.

2.THE DIGNITY - கண்ணியம்

Disciplined queues for water and groceries. Not a rough word or a crude gesture. தண்ணீருக்காகவும், பொருட்களுக்காகவும், சீராக, ஒழுங்காக
வரிசையில் நின்று பொருட்களை வாங்கிய விதம். முண்டி-
யடித்துக் கொண்டும், ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டும்,
"எனக்கு கிடைக்கவில்லையே" என வசை மாறி பொழிந்துக்
கொண்டும் யாரும் நடக்கவில்லை.

3. THE ABILITY - ஆற்றல், திறமை

The incredible architects, for instance. Buildings swayed but didn’t fall.
நம்ப முடியாத கட்டிடகட்டமைப்பு. கட்டிடங்கள் கொஞ்சம்
ஆட்டங்கண்டாலும், அப்படியே நிலைகுலைந்து சரியாமல்,
இருந்த நிலை. அதை அப்படி கட்டிய திறமைமிக்க வல்லுனர்கள்.
நம் பகுதியில், மறுபாதி கட்டிக் கொண்டிருககும் பொழுதே,
முந்தைய பாதி இடிந்து விழும் அபாயத்தில் தான் நம்
காண்டிராக்டர்கள் நடந்து கொள்கிறார்கள். (எல்லோரும் அல்ல).

4. THE GRACE - நல்ல எண்ணம்/நற்பண்பு

People bought only what they needed for the present, so everybody could get something.
எது இன்றைக்கு வேண்டுமோ/அன்றைய தேவையோ, அதை
மட்டுமே வாங்கியது. இதன் மூலம், மற்றவர்களுக்கும் கிடைக்க
ஏதுவாய் அமைந்தது. பதுக்கல்/கள்ள மார்க்கெட்டில் விலை
உயர்த்தி விற்பது போன்ற செயல்கள் நடைபெறவில்லை

5. THE ORDER - ஒழுங்கு/கட்டுப்பாடு

No looting in shops. No honking and no overtaking on the roads. Just understanding.
சந்தடி சாக்கில், குழப்பமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு,
சூறையாடலும், கொள்ளையடித்தலும் நடக்கவில்லை. கார்
ஹார்னை காது செவிடாகும் அளவிற்கு அடித்து, ரோட்டில்
ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியில் மோசமாக நடந்து
கொள்ளாமை. ஒருவரை ஒருவர் முந்திச் செல்லாமல் இருந்தது.
நன்றாக, ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொண்டது.

6. THE SACRIFICE- தியாகம்/அர்ப்பணிப்பு

Fifty workers stayed back to pump sea water in the N-reactors. How will they ever
be repaid? 50 ஊழியர்கள் அணு உலை இடத்திலேயே தங்கியிருந்து, உலைகளை குளிர்விப்பதற்காக, கடல் தண்ணீரை வாரி
இறைத்தது. அப்படிப்பட்டவர்களுக்கு, எப்படிப்பட்ட கைம்மாறு
செய்யப் போகிறார்கள்?

7. THE TENDERNESS - அன்பு/கருணையின் அடிப்படையில்
மக்களின் நலன் காத்து பேணுதல்

Restaurants cut prices. An unguarded ATM is left alone. The strong cared for the weak.
உணவகங்கள் சாப்பாட்டு விலையை குறைத்துக் கொண்டன.
ஏ.டி.எம்(தானியங்கி பண பட்டுவாடா கருவி) எந்த வித பாதுகாப்பு-
மின்றி, தனித்து விடப்பட்ட நிலையிலும் பாதுகாப்பாக இருந்தது.
பலம் வாய்ந்தவர்கள், பலவீனர்களை கவனித்து கொண்டது.

8. THE TRAINING - பயிற்சி

The old and the children, everyone knew exactly what to do. And they did just that.
வயது முதிர்ந்தவர்களும், குழந்தைகளும்,என்ன செய்ய வேண்டு-
மென்பதை அவரவர் அறிந்து வைத்திருந்தது/அதன்படி நடந்து
கொண்டது.

9. THE MEDIA - பத்திரிக்கை/ரேடியோ/தொலைக்காட்சிகள்
நடந்த விதம்

They showed magnificent restraint in the bulletins. No silly reporters. Only calm reportage. பத்திரிக்கை/ரேடியோ/தொலைக்காட்சிகள் நடந்து கொண்ட‌
விதம். செய்தித்தாள்களிலும், செய்தி அறிக்கைகளிலும், சுயகட்டுப்-
பாட்டோடு நடந்துக் கொண்டது. “நான்”, “நீ” என்று போட்டி போட்டு
செய்தி வெளியிடாமல், அமைதியான முறையில் செய்தி
வெளியிட்டார்கள். நம் சேனல்கள், "என்னால் தான் இந்த நில-
நடுக்கமே நடந்தது" என்றும், “இதை வெளியிட்ட முதல் சேனல்
நாங்கள் தான்” என்று மார்தட்டிக்கொண்டு நடந்திருப்பார்கள்.

10.THE CONSCIENCE - மனசாட்சியின் அடிப்படையில் நடந்து
கொண்டது.

When the power went off in a store, people put things back on the shelves
and left quietly.
சூப்பர் மார்க்கெட்டில், மின்சாரம் நின்று போனவுடன், எடுத்த
பொருட்களை அந்தந்த அலமாரிகளிலேயே திரும்ப வைத்து
விட்டு, அமைதியாக திரும்பியது.

May we learn few good things from our fellow beings and Be Good to all beings…..

நன்றி : கூகிள்


40 கருத்துகள்:

Chitra சொன்னது…

அங்கே மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

Anisha Yunus சொன்னது…

மெயிலில் வந்ததை நான் போட யோசித்தேன். ஏனெனில் உண்மையாக ஆதாரம் கிட்டவில்லை. ஆனால் எதிர்மறை ஆதாரமும் கிடைக்காததால் விட்டுவிட்டேன். உண்மையில் பாராட்டப்பட வேண்டிய மக்கள்தான். இந்த ஒழுங்கு ரேசன் கடைல கூட நம்ம மக்களுக்கு இல்லைங்கறப்பதேன் கஷ்டமா இருக்கு !!

ப.கந்தசாமி சொன்னது…

இதுவல்லவோ நாடு, இவர்களல்லவோ மக்கள். வாழ்க அவர்களின் தேசியப் பண்பு.

இந்த மாதிரி சொல்வதற்கு ஏதாவது ஒரு பண்பு இருக்கிறதா இங்கு?

எல் கே சொன்னது…

அவர்களிடம் இருந்து நாம் கற்க வேண்டும்

Asiya Omar சொன்னது…

என் கணவர் ஒரு ஜாப்பானிய கம்பெனியில் ஏழு வருடம் வேலை பார்த்தார்,அவர்கள் உழைப்பிற்கு வேறு ஈடே இல்லை என்கிறார்,அந்த நாட்டிற்கு ட்ரைனிங் போனப்ப அங்கு இருந்த ஆட்டோமேஷன் அத்தனை ஆச்சரியமாக இருந்ததாம்.அவர்களும் நம்ம ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் தான்.நாம எங்கே அவங்க எங்கே?
எனக்கும் மெயில் வந்தது.அது தான் சுனாமி காட்சி அமைப்பை டிவியில் அப்பவே பார்த்தோமே,யாரும் வாயில்,வயிற்றில் அடித்து கொள்ளாமல்,அடுத்து என்ன செய்வதுன்னு திறம்பட செயல் பட்டதை.ஆனால் அங்கு வாழ்க்கை ரொம்ப காஸ்ட்லி என்று என் கணவர் சொல்வதுண்டு.

சகாதேவன் சொன்னது…

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் ஒன்றுமில்லாமல் போன ஜப்பான் எப்படி முன்னேறியது என்று அறிவோம். ஜப்பானியர்கள் மாறவில்லை.
சகாதேவன்

சகாதேவன் சொன்னது…

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் ஒன்றுமில்லாமல் போன ஜப்பான் எப்படி முன்னேறியது என்று அறிவோம். ஜப்பானியர்கள் மாறவில்லை.

சகாதேவன்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!

மிக நல்ல பகிர்வு சகோ.அப்துல் காதர்,
மிக்க நன்றி.

அவ்வளவாக வேலை நிறுத்ததுக்கெல்லாம் அவசியம் நேராத ஜப்பானில், ஒரு செருப்பு தயாரிக்கும் அராஜக முதலாளியின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து அத்தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்தனராம்.(பலர் கேள்விப்பட்ட விஷயமாக இருக்கும்)

அதாவது... ஸ்ட்ரைக் நேரத்திலும் அதே எட்டு மணிநேரம் நிறுவனத்தில் உழைத்தனர்..!

ஆனால், ஒரு கால் செருப்பு மட்டுமே செய்ய..!!

மற்றொரு கால் செருப்பை செய்யவில்லை..!

இந்நிலை தொடர, ஒருவாரம் கழித்து முதலாளி வேறுவழியின்றி பணித்துவிட்ட பின்னர், அந்த இன்னொரு கால் செருப்பையும் செய்து விற்பனைக்கு அனுப்பினராம்.

பாருங்கள்... ஸ்ட்ரைக்குக்கு ஸ்ட்ரைக்கும் ஆச்சு.., உற்பத்தி நேரமும் எவ்விதத்திலும் பாதிக்க வில்லை. என்னே ஒரு தெளிவு..! அற்பணிப்பு..! கடமை உணர்ச்சி..! அதேநேரம் போராட்டமும் வெற்றி..!

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

உண்மையை சொன்னால் ஜப்பானியர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது.

Unknown சொன்னது…

இதெல்லாம் எப்படி நம்மாளுகளால்...நடக்கிற காரியமா?
அருமையான பகிர்வு நன்றி!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எல்லா நாட்டுக்குக்கும் முன்னுதாரணம் ஜப்பான்'தான்...அது அழிவானாலும் சரி பண்பு ஆனாலும் சரி....ஆச்சர்யம்தான்....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

பாராட்ட வேண்டும் ஜப்பானியர்களின் குணத்தை!
நமக்கும் வேண்டும் அவ்வாறான குணம்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஆச்சர்யமாத்தான் இருக்கு, இந்த மாதிரி ஒரு சமூகம் அமையும் வரை,நாம் முன்னேறிட்டோம்னு சொல்லிக்கறது அர்த்தமில்லாதது...!

Hakkim Basha சொன்னது…

மிக அருமையான நாடு

vanathy சொன்னது…

கடின உழைப்பாளிகள் ஜப்பானிய மக்கள். இதுவே எங்க ஊர் எனில் அதில் ஒரு 50 பேராவது விழுந்து செத்த பிறகு தான் சரி செய்வானுங்க.
நல்ல பதிவு, நாட்டாமை.

ஜெய்லானி சொன்னது…

தனி மனுஷ குணம் மாறாம ஒரு சமுதாயம் மாறுமா..???
நான் மாறிட்டேன் ..நீங்க எப்போ மாறப்போறீங்க ...???

Jaleela Kamal சொன்னது…

கண்டிப்பா எல்லோரும் கற்று கொள்ள வேண்டியது தான்

athira சொன்னது…

அருமையான தொகுப்பை வெளியிட்டிருக்கிறீங்க.

Unknown சொன்னது…

இதுவல்லவோ நாடு, இவர்களல்லவோ மக்கள். வாழ்க அவர்களின் தேசியப் பண்பு.

இந்த மாதிரி சொல்வதற்கு ஏதாவது ஒரு பண்பு இருக்கிறதா இங்கு?

நாடும் மக்களுடையது. மக்களும் நாட்டின் உரிமையாளர். கலப்பு மிகா ஓரின மக்கள் நாட்டின் உரிமையாளர்கள். வந்தேறிகள் பெரும்பான்மையரை ஆளும் நாட்டில் இந்த ஒழுங்கு வராது. துரோகிகள் மிகுந்து மக்களின் இடையே வாழ்ந்தாலும் நன்னிலை கிடைக்காது.
யப்பானியர் உலகின் சிறந்த மக்கள் என்பது தெரிகிறது.
அன்பன்

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நல்ல கருத்துள்ள பகிர்வு சகோ

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ வாங்க சித்ரா நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ வாங்க அன்னு நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ வாங்க டாக்டர் சார் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ வாங்க எல் கே சார் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ வாங்க ஆசியா உமர் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ வாங்க சகாதேவன் முதல் வருகைக்கு நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ வாங்க முஹம்மத் ஆஷிக் நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ வாங்க ரஹீம் கஸாலி நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ வாங்க 'ஜீ' முதல் வருகைக்கு நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ வாங்க NIZAMUDEEN நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ வாங்க பன்னிக்குட்டி ராம்சாமி நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ வாங்க Hakkim Basha முதல் வருகைக்கு நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ வாங்க வானதி நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ வாங்க MANO நாஞ்சில் மனோ நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ வாங்க ஜெய்லானி நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ வாங்க Jaleela Kamal நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ வாங்க athira நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ வாங்க R.முதல் வருகைக்கு நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ வாங்க சிநேகிதன் அக்பர் நன்றி!

Unknown சொன்னது…

உண்மையில் ஜப்பானியர்களை தலை வணங்கி பாராட்ட வேண்டும்.
அசாதாரண மன உறுதி இருந்தால் மட்டுமே, இது மாதிரி நடந்துக்கொள்ள வேண்டும்.

இந்தியாவை பொறுத்த வரை, ஜப்பானியர்கள் என்றுமே ஆசான்கள் தான்..