facebook

சனி, ஆகஸ்ட் 28, 2010

நேற்று நடந்தது??

                                                                                   

நேற்று நடந்தது??


வாரா வாரம் வியாழன் ஆனால் ஒரு ஆரவாரம் தான். மறு நாள்  வெள்ளிக்கிழமை எல்லோருக்கும் லீவாச்சே. அதை நினைத்து ஒரு சந்தோசம். அது மாதிரி தான் ஒரு நண்பரின் தேவை விஷயமாய் இன்னொரு நண்பரை பார்த்து விட்டு வரும்போது அந்த நண்பர் சொன்னார் இன்னிக்கி நைட் அல் கோபார் போலாம். பின்னிரவு சொற்பொழிவு நடக்கும் அதைக் கேட்டு விட்டு சஹர் சாப்பாடு (காலைப் பொழுது விடிவதற்கு சற்று முன் வரை) அங்கேயே சாப்பிட்டு விட்டு வந்து விடலாம் என்று சொன்னார். சாப்பாடாச்சே விடலாமா ?? விடக் கூடாது. போய் விட்டேன். என்ன பார்க்கிறீங்க நாமெல்லாம் அப்படி தான்!!

போய்ப் பார்த்தால் உருதுவில் சொற்பொழிவு நடந்துக் கொண்டி ருந்தது. அட வெளங்காதவனே அத மொதல்லேயே சொல்லி இருக்கக் கூடாது என்று நண்பனை திட்டி விட்டு (என்னையும் தான்), ஆனாலும் புரிந்த மாதிரி உட்காராவிட்டால் தமிழ் கூறும் நல்லுலகுக்கு இழுக்காச்சே, உட்கார்ந்து விட்டேன்!! அப்ப தான் எனக்கு நன்கு பரிட்சையமான குடும்ப நண்பர் ஒருவர் அங்கு அவருடைய பரிவாரங்களோடு வந்திருப்பது கண்டு அப்படியே சொற்பொழிவின் சப்தமில்லாத பகுதிக்கு அவரை அழைத்துச்
சென்று பேசிக் கொண்டிருந்தேன். அப்ப தான் அந்த செய்தியை சொன்னார். அது இது.

நேற்று பிற்பகல் (3 30 மணி) அசர் தொழுது விட்டு சற்று கண்ண சரலாம் என்று படுத்து சிறிது நேரமே உறங்கி இருப்பேன். அப்ப எனக்கு ஒரு அலை பேசி வந்தது. அதை எடுத்துப் பேசும் போது ஒரு அரபு காரன் பேசினான். என்னுடைய அலை பேசி நம்பரைச் சொல்லி "இது யார் நம்பர்" என்று கேட்டான். என்னுடையது தான் என்றேன். பெயரென்ன என்றான். நான் என் பெயரைச் சொன்னேன். எத்தனை வருஷமா யூஸ் பண்ணிக் கிட்டிருக்கே என்று கேட்டான். பத்து வருஷமா என்றேன். அப்படியா என்று நிறுத்தி "இந்த நம்பருக்கு லக்கி ப்ரைஸ் அடிச்சிருக்கு என்றான். எனக்கு தூக்கம் கலஞ்சுடுசுங்க. என்னது என்று சொல்லி பட்டென்று எழுந்து உட்கார்ந்து விட்டேன்.

ரெண்டு லட்சம் ரியால் (இந்திய ரூபாய் மதிப்பு 25 லட்சம்) கார் உனக்கு உன் செல் நம்பருக்கு லாட்டரி அடிச்சிருக்கு. கார் வேணுமா அல்லது கேஸா வேணுமா என்றான். நான் கேஸாவே கொடு கார் வேணாம் என்று சொன்னேன். (இந்த சப்தம் கேட்டு வீட்டில் மனைவி பிள்ளைகள் அனைவரும் என் முன் குழுமி விட்டனர்) அப்படியா என்று சொல்லி, இந்த நம்பரை நோட் பண்ணிக்கோ என்று சொன்னான் ( 8996601 ) பண்ணிக் கொண்டேன். உடனே உன் சிம்மை கழட்டிப் பாரு அந்த நம்பர் இருந்தா அந்த ப்ரைஸ் உனக்கு தான். நீ செக் பண்ணிட்டு சரியா இருந்தா எனது செல்லுக்கு திரும்ப பேசு என்று சொல்லி கட் பண்ணிட்டான்.

கட கட வென்று செல்லை ஓபன் பண்ணி சிம்மை கழட்டிப் பார்த்தா அந்த நம்பர் இருக்கு. எங்களுக்கு சந்தோஷத்தில் கையும் ஓடல காலும் ஓடல. இங்கு வீட்டில் ஆளாளுக்கு ஏதேதோ பேசிக் கொண்டிருக்க, நான் திரும்ப அந்த அரபுக்காரனுக்கு செல் பண்ணினேன். அவன் தான் எடுத்தான். பார்த்தியா இருக்கா என்றான்; இருக்கு என்றேன். அப்ப உனக்கு கேஷ் தான் வேணுமா? அப்படியானால் ஒரு குறிப்பிட்ட பேங்க் பெயரைச் சொல்லி அங்க வந்து தான் கலக்ட் பண்ணிக்கணும் சரியா என்றான் ; சரி என்றேன். திரும்பவும் உனக்கு பேங்கில் அக்கவுண்ட் இருக்கா என்றான்; இல்லை என்றேன்.

நான் உடனே கலக்ட் பண்ரதுக்குள்ள "சீக்ரட் கோட் நம்பர்" ஏதேனும் இருக்குமே அதைக் கொடு என்றேன். அப்ப தான் அவன் சொன்னான். அது வேணும்னா நீ ஒரு காரியம் பண்ணனும் என்றான் ; என்ன?? என்றேன். 300 ரியால் மதிப்புள்ள sawa  டெலிபோன் கார்டு 4  வாங்கி என்னுடைய மொபைல் நம்பருக்கு top up பண்ணு தருகிறேன் என்றான். உஷாராகி விட்டேன்.

என்னிடம் அவ்வளவு பணமெல்லாம் இல்லை ; நான் சாதா கூலி தொழிலாளி என்றேன். அவன் விடாப் பிடியாக, இல்லையென்றால் உனக்கு பரிசு கிடைக்காது என்றான்.

இதற்கிடையே வீட்டில் என் பிள்ளைகள் மனைவி உள்பட நான்கு பேரும் அவரவர்களுடைய செல்லை ஓபன் செய்து சிம்மை கழட்டிப் பார்க்கையில் அத்தனையிலும் மேற்படி குறிப்பிட்ட நம்பர் இருப்பதை ரகசியமாக என்னிடம் தெரிவித்தார்கள். (அந்த நம்பருக்கு பக்கத்தில் டேஷ் போட்டு 48000 என்று சில நம்பர்கள் இருக்கும் என்பது வேறு விஷயம்)

நான் அந்த அரபுக்காரனுக்குப் பிடி கொடுக்காததால், செல் கை மாறி ஒரு பாகிஸ்தானியிடம் போனது. அவன் "இந்த ரமலான் நேரத்தில் அல்லாஹ் உனக்கு மிகப் பெரிய ரஹ்மத்தும் பரக்கத்தும் செய்திருக்கிறார் சகோதரா! அதனால நீ கொஞ்சம் கூட தாமதிக்காது அந்த அரபுக்காரர் சொன்னதை செய். உனக்கு மிகப் பெரிய தொகை கிடைக்க இருக்கிறது" என்றான்.

(இதற்கிடையே என்னிடம் பேசிகொண்டிருக்கும் போதே ஒவ்வொரு விவரமும் கம்பியூட்டரில் சரி பார்ப்பது போல் கீ போர்ட் சப்தம் வருவது மாதிரி  பிரமையை உருவாக்கி கொண்டிருந்தான்கள்)

நான் ரூட்டை மாற்றினேன். "ஒன்று வேணும்னா செய்யலாம், அதாவது எனக்கு கிடைக்கும் தொகையில் ஐயாயிரம் ரியால் வேணும்னா கழித்துக் கொள்ளுங்கள்" என்றேன். டக்கென்று அவன் சுருதி குறைந்தது. ரெண்டு 300 ரியால் கார்டாவது வாங்கி ஃபார்வர்ட் பண்ணு என்றான். பத்தாயிரம் ரியால் வேணும்னாலும் கழித்துக் கொண்டு கொடு, என்னிடம் பைசா காசு இல்லை என்றேன். டக்கென்று செல்லை கட் பண்ணி விட்டான்கள்.

என்னங்க இது!  முன்பு   இன்டர்நெட்டில் வந்து தான் நைஜீரியாக் காரன்கள் கொள்ளையடிப்பதாக கேள்விப் பட்டிருக்கிறேன். இது ரொம்ப மோசமாவுல தெரியுது.

டிஸ்கி : மக்களே உஷாரா இருங்கள்!! எல்லோரையும் உஷார்ப்
படுத்துங்கள்!  இது நமது பொறுப்பான கடமையும் கூட..!

 

40 கருத்துகள்:

kavisiva சொன்னது…

இப்படி வேற ஆரம்பிச்சுட்டானுங்களா?! உஷாரா இருக்க வேணும்

Unknown சொன்னது…

இப்படி வேற ஆரம்பிச்சுட்டானுங்களா?!

vanathy சொன்னது…

நாட்டாமை, என்ன இப்படி வேறு ஆரம்பிச்சுட்டானுங்களா?? உஷாரா இருங்கப்பு.
எனக்கு சில வருடங்களுக்கு முன்பு ஒரு மெயில் சௌத் ஆப்பிரிக்காவிலிருந்து வந்திச்சு.
யாரோ அரசரின் மகள், நிறைய பணம்....இப்படி ஏதேதோ கதைகள். நம்ம யாரு. பரவாயில்லை நீயே முழுப்பணத்தையும் வைச்சுக்கோன்னு சொன்னேன். அதன் பிறகு அந்தப் பெண்ணைக் காணவில்லை.

Chitra சொன்னது…

எப்படி எல்லாம் ஐடியா வருது? ம்ம்ம்ம்.....

நாடோடி சொன்னது…

என்ன‌ த‌ல‌... இப்ப‌டி வேற‌ கிள‌ம்பிட்டாங்க‌ளா?... பாத்து சூதான‌மா இருங்க‌. :)

Abdulcader சொன்னது…

எப்படில்லாம் யோசிக்கிறானுங்க திருட்டுபசங்க.

Asiya Omar சொன்னது…

ப்ராடுத்தனம் எல்லா நாட்டிலும் சகஜமாகிவிட்டது போலும்.

Asiya Omar சொன்னது…

என் மொபைல் நம்பருக்கு ரொம்ப நாளாக நைஜிரியாவில் இருந்து அப்துஸ்லாம என்பவன் கால் செய்து ஒரே தொந்திரவு.கடைசியில் என் கணவர் உட்பட குடும்பமே ஈடுபட அவனுக்கு யு.ஏ.யில் வேலை வேண்டும் என்று முடித்து கொண்டான்,யார் தான் நம்ப நம்பர் எல்லாம் கொடுக்கிறாங்களோ.

புல்லாங்குழல் சொன்னது…

விதவிதமான வலைகள். எச்சரிக்கையாக இருப்பதற்கு இது போன்ற பதிவுகள் அவசியம் தான்.

ஜெய்லானி சொன்னது…

இது சப்பை மேட்டரூ.. நாலு வருஷத்துக்கு முன்னே எனக்கு இப்பிடிதான் மெயில வந்துச்சி எல்லா டாக்கு மெண்டும் ஒரிஜினல் வந்தது லண்டனிலிருந்து .20 மில்லியன் பவுண்டுன்னு .. கடைசியில என் பேங்க் அக்கவுண்ட் நெம்பர் கேக்கும்(வயர் டிரன்ஸ்பர்)போது உஷாராகி ..

அப்படியே கிரைம் பிராஞ்ச் லண்டன் போலீசுக்கு ஃபேர் வர்ட் பண்ணி விளக்கம் கேட்டேன் 3நாள் கழிச்சி அத்தனை பேரையும் பிடித்து விட்டதாகவும் ..இது போர்ஜரி குருப்புமுன்னு எனக்கு மெயில் வந்துச்சி

இனி இதுப்போல வரும் மெயில் ,டெலிபோன் காலுக்கு பதில் தரவேனாமுன்னும் என்னை பாராட்டி ஒரு லட்டரும் மெயிலில் வந்தது..

போர்ஜரி ஆட்கள் கோடிஸ்வரரின் பேரால் இப்படி செய்வதும் உண்டு. நாம் டீடைலை பார்த்து சிலநேரம் நம்பி விடுவோம் . கிடைத்த வரை அவர்களுக்கு லாபம்

முதலில் அக்கவுண்ட் நெம்பர் கேட்பார்கள் பிறகு அது வேலை செய்யலை அதன் சீக்ரட் நெம்பர் கேட்பார்கள் அவ்வளவுதான் மேட்டர் முடிஞ்சுது...

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

சவுதிக்காரர்கள் இப்போது ரொம்ப மோசமாகிட்டுவாராங்க.. திடீர் தாக்குதல், இந்தமாதிரி மோசடிகள் எல்லாம் அவர்களுக்கு சர்வ சாதாரணமாகி விட்டது..

நாம்தான் எப்போதும் உசாரா இருக்க வேண்டும்..

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

எப்படில்லாம் யோசிக்கிறானுங்க திருட்டுபசங்க.

பா.ராஜாராம் சொன்னது…

use ful sir. thanks!

Ahamed irshad சொன்னது…

இதே மாதுரி ஒரு பங்களாதேஷ்க்காரர் கிட்டத்தட்ட கத்தார் ரியால் 28 ஆயிரம் வரை ஏமாந்து கடைசியில் கேன்சல்'ல போய்ட்டார்.. உங்காளு ஏமாறாதவரை ஓகே..

ஸாதிகா சொன்னது…

எப்படி எல்லாம் ஏமாற்றுவார் இந்த உலகிலே உலகிலே..

Unknown சொன்னது…

நல்ல தகவலைக் கொடுத்துருக்கீங்க.. நிறைய வழிகள்ல இந்த மாதிரி ஏமாத்திட்டு இருக்காங்க..

நம்ம மெயில் ஐடிக்கு உங்களுக்கு ஜேக்பாட் விழுந்திருக்கு.. வாங்கனுமா இவ்வளவு தொகை கட்டுன்னு நிறைய மெயில் வந்து பார்த்துருக்கேன்.. ஆனா டைரக்டா இப்படி போன்லயே ஏமாத்தறாங்களா.. ரொம்ப உஷாராத்தான் இருக்கனும்..

தகவலுக்கு நன்றி..

ராஜவம்சம் சொன்னது…

இதுல எனக்கு சொந்த அனுபவம் இருக்கு சார்
அனால் பேசிய இருவரும் பாகிஸ்தானியர்கள்

எனக்கு நஸ்டம் எதுவும் ஏற்படாமல் உஸார் ஆகிவிட்டேன்

விழிப்புணர்வுக்கு நன்றி.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு.

எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க பாருங்களேன்.

Butter_cutter சொன்னது…

nalla vealai indiavula innum varalai

வரதராஜலு .பூ சொன்னது…

இப்படியும் கௌம்பிட்டானுங்களா? அலர்ட் ஆகுங்கப்பா எல்லாரும்

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க!!

கவிசிவா

உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க!!

கலாநேசன்

உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க!!

வானதி

உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க!!

சித்ரா

உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க!!

ஸ்டீபன்

உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க!!

காயலாங்கடை

உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க!!

ஆசியா உமர்

உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க!!

O.நூருல் அமீன்

உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க!!

ஜெய்லானி

உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க!!

ஸ்டார்ஜன்

உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க!!

வெறும்பய

உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க!!

பா.ராஜாராம்

உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க!!

அஹமத் இர்ஷாத்

உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க!!

ஸாதிகா

உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க!!

பதிவுலகில் பாபு

உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க!!

ராஜவம்சம்

உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க!!

சிநேகிதன் அக்பர்

உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க!!

winstea

உங்கள் முதல் வருகைக்கும் உங்கள் கருத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க!!

வரதராஜலு .பூ

உங்கள் முதல் வருகைக்கும் உங்கள் கருத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி!

எம் அப்துல் காதர் சொன்னது…

கருத்துரை வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், என்னை ஊக்கப் படுத்தி எழுத தூண்டும் அனைவர்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!