facebook

புதன், ஜனவரி 19, 2011

சவுதியில் மழை...!!!



சவுதியில் மழை...!!!
(ரொம்ப முக்கியம் பாருங்க!!) அது மழை தானா என்பதை கன்ஃபர்ம்
செய்ய நாலு பேரை விசாரிக்க வேண்டியதாகிவிட்டது. செ.சரவணக்
குமார் சார், அக்பர் சார், பன்னி சார் ஆகியோர்களுக்கு அலைபேசி,
அவர்கள் சொன்ன பிறகு தான் அது ஊர்ஜிதமானது. பின்னரும்
நேற்று (மட்டும்) லீவில் இருந்த இளம்தூயவன் சார் வந்து சொன்ன
பிறகு தான் அந்த மழை குளிரானது. ஸ்ஸ்ஸ்... அப்பா...தாங்க முடியலையேன்னு யாரும் 'எஸ்' ஸாகிடக் கூடாது பாருங்க!
அதான் உங்கள சீட் நுனி வரைக்கும் கொண்டாந்து  சினிமா
கிளைமாக்ஸ் மாதிரி சஸ்பென்சா கட்டிப் போட்டிருக்கோம்! ஹி..ஹி.. 

மழை குளிருக்கெல்லாம் ஒரு பதிவான்னு யாரும் நம்மை
கேட்டுடக் கூடாது பாருங்க. ஹி..ஹி நாம அப்படியெல்லாம்
மொக்கப் போடுற ஆளா?? (அங்க யாருக்கோ காது நுனி சிவந்து புகைவருது!! மூக்கு நுனி வேக்குது!! (வரட்டும் வரட்டும் நாம எல்லாத்துக்கும் தயாரா தானே இருக்கோம்) அவ்வ்வ்வ்...!!!

ஏன் கடந்த ஒருவாரமா நீங்க பதிவே போடலைன்னு உலகம் முழுவதிலிருந்தும் ஒரே நச் நச்..ச்ச்!! சாட்டு, மெயில், மொபைலி
ன்னு அல்லோல கல்லோலப் பட்டுப் போச்சு! (யாரு கேப்பா
ஹி..ஹி.. நம்மை நாமே கேட்டுக் கொண்டால்தான் உண்டு!!)

இடையில் இந்த கக்கு மாணிக்கம் சார் வேற அன்புத் தொல்லை
தாங்க முடியலை!! டாக்குடர் பட்டம் தர்றேன்னு ஒரே அடம்.
கேட்க மாட்டேங்குறாங்கைய்யா..!! இந்த பதிவுலக அன்புத்
தொல்லைக்கு அளவே இல்லாமப் போச்சு!!


நன்று.. நன்று..!!

"சொல்லவந்த செய்தியை மட்டும் சொல்லிட்டு போய்டு 
இல்லாக்காட்டி பதிவுலகமே திரண்டு வந்து மொக்கிடும்னு
நீங்க சொல்றது கேக்குது மக்கள்ஸ்".

நன்று.. நன்று.. பார்ரா...!!



ஊரிலிருந்து ‘மகர்’ (மரியாதி) வந்திருக்கார். விசா ரினிவல்ஸ்.
ஜஸ்ட் ரெண்டு வாரம் தான் ஹாலிடே!! அவரோடு ஒரே ஊர்
சுற்றல்ஸ். சந்தோசம்ஸ். மகிழ்ச்சிஸ்.. அளவில்லாத இன்ன பிற
இத்யாதீஸ். இதோ கண்மூடி திறப்பது போல் நாள் ஓடிவிட்டது. வெள்ளிக்கிழமை அவரும் புறப்பட்டு விடுவார். பிறகு வலையுலக மக்கள்ஸ் தான் என் மக்கள்ஸ். நன் மக்கள்ஸ். ஒரு பிரிவில் சோகமென்றால், உங்களோடு அளவளாவி நேரம் செலவிடுவதில்
தனி மகிழ்ச்சிஸ் தானே!..... என்னான்றீங்க!!

இதுல ஒரு குரூப் வேற நம்மை வேவு பாக்குதுங்க. நான் யூத்தா யூத்தில்லையா என்பதை கண்டுபிடிக்க!! அதுவும் எப்படி தெரியுமா??
என் 'மகர்' என்ன படிக்கிறார்னு நான் சொல்லணுமாம்!! அத வச்சு
அவங்க  என் வயசை கண்டுபிடிக்கிறாங்களாம். ங்.. ங்கொய்யா.
நாமெல்லாம் அலாஸ்கா யுனிவர்சிட்டில அரிஸ்டாடிலப் பத்தி
எத்தன மொற படிச்சிருக்கோம்... சொல்வேனா.. சொல்வேனா..!!

தமிழ்மணத்தில் ஒத்தை அவார்ட், ரெட்டை அவார்ட்ஸ், முத்தான அவார்ட்ஸ் பெற்ற நம் அனைத்து  மக்கள்ஸுக்கும் எனது
வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

படித்ததை கற்றதை கேட்டதை எல்லாம் நினைவு படுத்தி
இன்னும் நிறைய எழுதி ‘ஆஸ்கர்’ வரை போய் வர வேண்டு
கிறேன். என்னது?? எழுத்துக்கு ஆஸ்கரெல்லாம் கிடையாதா?
பின்னே..?? இந்த ஆஸ்கர் ஆஸ்கர்ங்கறாங்களே அப்படின்னா
இன்னா சார்?? இசையைப் பத்தி எழுதுறவங்களுக்கும், படமெடுத்து
நம்மை ஓட விடுறவங்களுக்கு மட்டும் தான் ஆஸ்கரா??

எழுத்தாளர்களைக் கொண்டு தான் படமும், அவர்கள் எழுதும்
கற்பனை காட்சிகளுக்கு ஏற்பதான் பாடல்களும், இசையும்,
அவைகளோடு ஒன்றிணைகின்றன. ஆகவே நிறைய நிறையவே
சிந்தித்து எழுதும் எழுத்தாளர்களைப் பற்றியும் பரிசீலிக்கும்படி
ஆஸ்கர் கமிட்டிக்கு இதன் மூலம் பரிந்துரைக்கிறேன். ஙே...ஙே..??
ஏதோ நம்மால  முடிஞ்சது. வர்ட்ட்ட்டா...!!

படங்கள்ஸ் : நன்றிஸ்!! அரப் நியூஸ், கூகிள்ஸ்.

48 கருத்துகள்:

Chitra சொன்னது…

இப்படியும் பதிவு போடலாமா? ஹா,ஹா,ஹா....

Philosophy Prabhakaran சொன்னது…

கடைசி படம் சொல்லும் செய்தி என்ன...? எங்கள் நேரத்தை இந்தப் பதிவை படித்து வீணடித்துவிட்டோம் என்றா...? (சும்மா ஒரு ஜாலிக்குத்தான்...)

பெயரில்லா சொன்னது…

எழுத்துக்கு ஆஸ்கர் கேக்குற உங்க டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு பாஸ் ;)
ஆமா சவுதில எப்பவுமே மழை பெய்யாதா?! # டவுட்டு

ஆமினா சொன்னது…

//இசையைப் பத்தி எழுதுறவங்களுக்கும், படமெடுத்து
நம்மை ஓட விடுறவங்களுக்கு மட்டும் தான் ஆஸ்கரா?? //

இப்படி ஓட ஓட விரட்டுற உங்களுக்கு கண்டிப்பா கொடுக்கணூம்ங்க

இல்லைன்னா ஆஸ்காருக்கே அவமானம் ;)

Asiya Omar சொன்னது…

சவுதியில் மழையா?அல்லது இரண்டு வாரமாக உங்க காட்டில் மழையா?

ஸாதிகா சொன்னது…

எப்படியெல்லாம் யோசித்து பதிவு போடுறீங்க!!!!!!!!

ஆயிஷா சொன்னது…

எப்படியெல்லாம் யோசித்து,இப்படியும் பதிவு போடலாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ம்ம்ம்... வெளங்கிருச்சு.............

பொன் மாலை பொழுது சொன்னது…

அதான் டாக்டர் பட்டம் வாங்கியாச்சே நம்ம டுபாகூர் யுனிவர்சிடியிலிருந்து. அப்புறம் எதுக்கு ஆஸ்கர் ? அது திரைப்பட அவார்ட் . எழுத்துக்கு வாங்கணும்னா நோபல் தான் கிடைக்கும். வேணும்னா சொல்லுங்க , நம்ம யுனிவர்சிடியிலிருந்து அத்தனை பதிவருக்கும் நோபல் கூட தர தயார். என்ன போச்சி? காசா பணமா நைனா??

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பஹ்ரைன்லையும் ரெண்டு நாளா மழை பெய்யுதுய்யா, பதிலுக்கு நானும் ஒரு மொக்கைய போட்டு கொன்னேபுடுவேன்.....:]

சிநேகிதன் அக்பர் சொன்னது…

//(ரொம்ப முக்கியம் பாருங்க!!) அது மழை தானா என்பதை கன்ஃபர்ம்
செய்ய நாலு பேரை விசாரிக்க வேண்டியதாகிவிட்டது. செ.சரவணக்
குமார் சார், அக்பர் சார், பன்னி சார் ஆகியோர்களுக்கு அலைபேசி, //

இது எப்ப?

நாங்கெல்லாம் கடைசி தம்பி. பின்னே எதுக்கு சாரெல்லாம்?

சிநேகிதன் அக்பர் சொன்னது…

//ஏன் கடந்த ஒருவாரமா நீங்க பதிவே போடலைன்னு உலகம் முழுவதிலிருந்தும் ஒரே நச் நச்..ச்ச்!! சாட்டு, மெயில், மொபைலி
ன்னு அல்லோல கல்லோலப் பட்டுப் போச்சு! //

பின்னே. இப்படி எழுதுறதுக்கு உங்களை விட்டா யார் இருக்கா! அதுக்குத்தானே டாக்டரு பட்டமே கொடுத்திருக்கோம் :)

டாக்டரு அப்துல்காதர் வாழ்க!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

//இதுல ஒரு குரூப் வேற நம்மை வேவு பாக்குதுங்க. நான் யூத்தா யூத்தில்லையா என்பதை கண்டுபிடிக்க!! அதுவும் எப்படி தெரியுமா??
என் 'மகர்' என்ன படிக்கிறார்னு நான் சொல்லணுமாம்!! அத வச்சு
அவங்க என் வயசை கண்டுபிடிக்கிறாங்களாம். ங்.. ங்கொய்யா. //

ஏய்! யாருப்பா அது? அண்ணந்தான் யூத்துன்னு சொல்றாருல்ல.

நீங்க சொல்லுங்ணா.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

//அவரோடு ஒரே ஊர்
சுற்றல்ஸ். சந்தோசம்ஸ். மகிழ்ச்சிஸ்.. அளவில்லாத இன்ன பிற
இத்யாதீஸ். இதோ கண்மூடி திறப்பது போல் நாள் ஓடிவிட்டது. //

ஆமாங்க. ஊர்ல இருந்தாலும் இப்படித்தான் நாள் போறதே தெரியாது.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

//நிறைய நிறையவே
சிந்தித்து எழுதும் எழுத்தாளர்களைப் பற்றியும் பரிசீலிக்கும்படி
ஆஸ்கர் கமிட்டிக்கு இதன் மூலம் பரிந்துரைக்கிறேன். ஙே...ஙே..??
ஏதோ நம்மால முடிஞ்சது. வர்ட்ட்ட்டா...!!//

என்னது முடிஞ்சதா. இப்பதானே ஆரம்பிச்சு இருக்கிங்க.

செ.சரவணக்குமார் சொன்னது…

சிநேகிதன் அக்பர் கூறியது...

//(ரொம்ப முக்கியம் பாருங்க!!) அது மழை தானா என்பதை கன்ஃபர்ம்
செய்ய நாலு பேரை விசாரிக்க வேண்டியதாகிவிட்டது. செ.சரவணக்
குமார் சார், அக்பர் சார், பன்னி சார் ஆகியோர்களுக்கு அலைபேசி, //

இது எப்ப?

நாங்கெல்லாம் கடைசி தம்பி. பின்னே எதுக்கு சாரெல்லாம்?//

சரியா சொன்னீங்க அக்பர்.

நம்ம அண்ணன் 'யூத்' தாம். இப்படியெல்லாம் சொன்னா நம்பிடுவோமா?

மழை இங்கேயும் மனதை நனைக்கிறது.

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

நானும் இது குறித்து பதிவு எழுதலாம் என நினைத்தேன் நீங்கள் முந்திக் கொண்டீர்கள். மழை பெய்தது பற்றி விடுங்க இரண்டு நாளா குளிர் தாங்கமுடியவில்லை. ஆமா நீங்க சவுதியில் எங்க இருக்கீங்க...

enrenrum16 சொன்னது…

மகர் வந்திருக்கார்னு சொல்லும்போதே தெரியுது...நீங்க ரொம்ப சின்ன பையன் தான்னு... ;)

சௌதியில காரே மூழ்கிற அளவுக்கு வெள்ளமா? ஆச்சரியமாயிருக்கு.

ராஜவம்சம் சொன்னது…

ம்ம்ம்ம் சரி சரி ரொம்ப குளுரா இருக்கு அப்பரம் வர்றேன்.

ஹேமா சொன்னது…

மழையும் குளிரும் எல்லா இடங்களையும் இந்தமுறை கொஞ்சம் ஆட்டித்தான் வைக்குதுபோல !

vanathy சொன்னது…

நாட்டாமை, இம்பூட்டு அப்பாவியா நீங்க!!! மழை பெய்வதைக் கூட இவ்வளவு சந்தேகமா பார்க்கிறீங்க? அப்பவே சொன்னேன் ஷார்ஜா தல கூட கூட்டு சேர வேணாம்ன்னு.

உங்க வயசை நான் ஓரளவுக்கு கணிச்சு விட்டேன். நீங்க கண்டிப்பா என்னை விட வயசில் பெரியவர் தான்!!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Chitra கூறியது...

// இப்படியும் பதிவு போடலாமா? ஹா,ஹா,ஹா....//

வாங்க டீச்சர், இதுக்கு ரூல்ஸ் & ரெகுலேசன்ஸ் ஏதுமுண்டா??? ஹா..ஹா..ஹா..ஹா

நன்றி சித்ரா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ Philosophy Prabhakaran கூறியது...

// கடைசி படம் சொல்லும் செய்தி என்ன...? எங்கள் நேரத்தை இந்தப் பதிவை படித்து வீணடித்துவிட்டோம் என்றா...? (சும்மா ஒரு ஜாலிக்குத் தான்...) //

அது அப்படி அல்ல தல, "நாம எல்லோருமேன்னும்"- நம் நம் வலைப் பதிவுகளில் என்றும் கொள்ளனும். ஆனா 'வீணடித்து அல்ல'
'உபயோகமாய்' என்றும் வாசிக்கணும் சரியா?? ha..ha..

நன்றி பிரபா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்

எம் அப்துல் காதர் சொன்னது…

வாங்க மாணவன் சார், உங்கள் வருகைக்கு நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Balaji saravana கூறியது...

// எழுத்துக்கு ஆஸ்கர் கேக்குற உங்க டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு பாஸ் ;) //

சேம் பிளட்!!

// ஆமா சவுதில எப்பவுமே மழை பெய்யாதா?! # டவுட்டு //

இப்ப பெய்தால் இனி அடுத்த வருடம் தான்.(சில நேரங்களில் மட்டும் 2-3
நாள் தொடர்ச்சியாய் பெய்யும். மற்றபடி ஊர் மாதிரி எல்லாம் நசநசப்பு இல்லை. ஆனா குளிர் மட்டும் நிறைய.. நிறைய.. முதுகு தண்டில் சுளீரும். அப்ப்பா..!!

நன்றி Balaji saravana உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஆமினா கூறியது...

// இப்படி ஓட ஓட விரட்டுற உங்களுக்கு கண்டிப்பா கொடுக்கணூம்ங்க.
இல்லைன்னா ஆஸ்காருக்கே அவமானம் ;) //

ஆமா நிச்சயம் தரணும். இல்லாட்டி இப்படி ரெக்கமன்ட் செய்த உங்களுக்கு தான் அவமானம் ஹா ஹா.. (சும்மா...!!)

நன்றி ஆம்ஸ் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

அந்நியன் 2 சொன்னது…

ஆமா நீங்க சவுதியில் எங்க இருக்கீங்க...?

Unknown சொன்னது…

ஒரு பக்கம் பதிவர்களுக்கு டாக்டர் பட்டம், இன்னொரு பக்கம் எழுத்தாளர்களுக்கு ஆஸ்கார், உலகம் இப்படி போகும் போது, சவுதியில மழை பெய்யாம என்ன பண்ணும்?

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ asiya omar கூறியது...

// சவுதியில் மழையா? அல்லது இரண்டு வாரமாக உங்க காட்டில் மழையா?//

சவுதியிலும் மழை, வீட்டிலும் மழை, மகன் இன்று ஊருக்குப் போகும் போது கண்களில் மழை!!

ரொம்ப சந்தோசம் டீச்சர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ராம்ஜி_யாஹூ கூறியது...

// nice //

வாங்க பாஸ்!!

நன்றி உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஆயிஷா கூறியது...

//எப்படியெல்லாம் யோசித்து, இப்படியும் பதிவு போடலாமா?//

வாங்க ஆயிஷா, இப்படியெல்லாம் பதிவு போட்டா தான் கல்லா கட்ட முடியும், இல்லாட்டி நடைய கட்ட வேண்டியது தான் ஹா..ஹா..

நன்றி சகோ உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

// ம்ம்ம்... வெளங்கிருச்சு.............//

வெளங்கலேன்னா உங்க கிட்ட சொல்லிடுவேன் ஆமா??

நன்றி பன்னிக்குட்டி ராம்சாமி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ கக்கு - மாணிக்கம் கூறியது...

// நோபல் தான் கிடைக்கும். வேணும்னா சொல்லுங்க, நம்ம யுனிவர்சிடி யிலிருந்து அத்தனை பதிவருக்கும் நோபல் கூட தர தயார். என்ன போச்சி? காசா பணமா நைனா?? //

ஊஹூம்.. எங்களுக்கு ஆஸ்கர் தான் வேணும் அண்ணே!!

நன்றி கக்கு - மாணிக்கம் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ MANO நாஞ்சில் மனோ கூறியது

//பஹ்ரைன்லையும் ரெண்டு நாளா மழை பெய்யுதுய்யா, பதிலுக்கு நானும் ஒரு மொக்கைய போட்டு கொன்னேபுடுவேன்.....:]//

கக்கு சார் டாகுடர் பட்டம் கொடுத்தது அதுக்கு தானா? நடத்துங்க நடத்துங்க!! ஹா..ஹா..

நன்றி MANO நாஞ்சில் மனோ உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அக்பர் கூறியது...

// நாங்கெல்லாம் கடைசி தம்பி. பின்னே எதுக்கு சாரெல்லாம்? //

நீங்க எனக்கு தம்பியா?? அப்ப சரிங்க சார்!! ஹா..ஹா

நன்றி அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அக்பர் கூறியது...

// பின்னே. இப்படி எழுதுறதுக்கு உங்களை விட்டா யார் இருக்கா! அதுக்குத்தானே டாக்டரு பட்டமே கொடுத்திருக்கோம் :) டாக்டரு அப்துல்காதர் வாழ்க!//

ஆனா நாங்க கேட்ட பிலிப்பைனி நர்ஸ்கள தரலையே!! எங்கே?? ஹா..ஹா..

நன்றி அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அக்பர் கூறியது...

//பரிசீலிக்கும்படி ஆஸ்கர் கமிட்டிக்கு இதன் மூலம் பரிந்துரைக்கிறேன். ஙே...ஙே..?? ஏதோ நம்மால முடிஞ்சது. வர்ட்ட்ட்டா...!!//

//என்னது முடிஞ்சதா. இப்பதானே ஆரம்பிச்சு இருக்கிங்க... //

ஆரம்பிக்கும் போதே இப்படி எல்லோரும் கும்முறீங்களே அவ்வ்வ்வ்...

நன்றி அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

Jaleela Kamal சொன்னது…

சவுதியில் மழையா இங்கு மழை வந்து வந்து சொல்கீறது,
ஊர் போல பெயதால் அவ்வளவு தான்

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ சரவணக்குமார் சொன்னது…

// நம்ம அண்ணன் 'யூத்' தாம். இப்படியெல்லாம் சொன்னா நம்பிடுவோமா?//

நேர்ல பாத்த நீங்களே இப்படி சொன்னா எப்படி தல? (இன்னும் என்னை இந்த ஒலகம் நம்ப மாட்டேங்குதே!! அவ்வ்வ்வ்!!

// மழை இங்கேயும் மனதை நனைக்கிறது. //

ஆஹா இது கவுஜ கவுஜ!! ஹி..ஹி

நன்றி சரவணக்குமார் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ தங்கராசு நாகேந்திரன் கூறியது...

// நானும் இது குறித்து பதிவு எழுதலாம் என நினைத்தேன் நீங்கள் முந்திக் கொண்டீர்கள். மழை பெய்தது பற்றி விடுங்க இரண்டு நாளா குளிர் தாங்க முடியவில்லை. ஆமா நீங்க சவுதியில் எங்க இருக்கீங்க...//

நீங்க எழுதினா என்ன..நான் எழுதினா என்ன பாஸ்!! ஹி..ஹி..பெய்த மழை பெய்தது தானே!! குளிரும் வருஷா வருஷம் அப்படிதான். சவுதில நான் தம்மாம். நீங்க?

நன்றி தங்கராசு நாகேந்திரன் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ enrenrum16 கூறியது...

// மகர் வந்திருக்கார்னு சொல்லும் போதே தெரியுது...நீங்க ரொம்ப சின்ன பையன் தான்னு... ;)//

இத இத தான் எதிர் பார்த்தேன் நீங்க என் நண்பேன் நண்பா!! ஹா..ஹா..

//சௌதியில காரே மூழ்கிற அளவுக்கு வெள்ளமா? ஆச்சரியமாயிருக்கு.//

மொதல்ல கொஞ்சமா தான் பேஞ்சது. அப்புறம் அதுவே நெறய ஆயிடுச்சு!!

நன்றி enrenrum16 உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஸாதிகா கூறியது...

//எப்படியெல்லாம் யோசித்து பதிவு போடுறீங்க??//

வாங்க ஸாதிகாக்கா.. பிசினெஸ் சீக்ரெட்டை வெளில சொல்லக் கூடாது.
ஹா.. ஹா சும்மா..!!

நன்றி சகோ உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ராஜவம்சம் கூறியது...

// ம்ம்ம்ம் சரி சரி ரொம்ப குளுரா இருக்கு அப்பரம் வர்றேன்.//

ஆஹா குளிருக்கு இதமா ஒரு "தம்-டீ" குடிச்சிட்டு போயிருக்கலாம்ல!! :-))

நன்றி ராஜவம்சம் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ ஹேமா கூறியது...

// மழையும் குளிரும் எல்லா இடங்களையும் இந்தமுறை கொஞ்சம் ஆட்டித்தான் வைக்குது போல! //

வாங்க ஹேமா, நாமெல்லாம் அதுக்கு பயந்திடுவமா என்ன?? ஹா..ஹா..

நன்றி சகோ உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ vanathy கூறியது...

// நாட்டாமை, இம்பூட்டு அப்பாவியா நீங்க!!! மழை பெய்வதைக் கூட இவ்வளவு சந்தேகமா பார்க்கிறீங்க? அப்பவே சொன்னேன் ஷார்ஜா தல கூட கூட்டு சேர வேணாம்ன்னு. //

நீங்க சொல்றது உண்மை தான் வான்ஸ், தல என் கூட சேர்ந்து தான் கெட்டுப் போயிடுச்சு. ஹா..ஹா..

//உங்க வயசை நான் ஓரளவுக்கு கணிச்சு விட்டேன். நீங்க கண்டிப்பா என்னை விட வயசில் பெரியவர் தான்!!!//

ஒத்துக்கவே மாட்டீங்களே!! ஆனாலும் இம்புட்டு பேராசை கூடாது வான்ஸ். ஆமா இப்படி சொன்னா சந்தோஷப் படுவீங்களே!! நான் நேற்று பிறந்தேன். நீங்க இன்னும் பிறக்கவே இல்ல போதுமா?? அப்பாஆஆஆ.. அவ்வ்வ்வ்..!!

நன்றி vanathy உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ அந்நியன்-2 கூறியது...

// ஆமா நீங்க சவுதியில் எங்க இருக்கீங்க...? //

வாங்க சகோ,"தம்மாம்"ல, நீங்க??

நன்றி அந்நியன்-2, உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ பாரத்... பாரதி... கூறியது...

// ஒரு பக்கம் பதிவர்களுக்கு டாக்டர் பட்டம், இன்னொரு பக்கம் எழுத்தாளர் களுக்கு ஆஸ்கார், உலகம் இப்படி போகும் போது, சவுதியில மழை பெய்யாம என்ன பண்ணும்? //

அச்சச்சோ இங்க பாருங்களேன், என்ன காப்பாத்த யாருமே இல்லையா??? ஹா ஹா... உண்மையிலேயே உங்க இந்த கமெண்ட்ஸ் சூப்பர் தல! அசத்திட்டீங்க

நன்றி பாரத்... பாரதி...உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

@!@ Jaleela Kamal கூறியது...

// சவுதியில் மழையா இங்கு மழை வந்து வந்து சொல்கீறது,ஊர் போல
பெயதால் அவ்வளவு தான்//

வாங்க ஜலீலாக்கா, ஆமா நாமெல்லாம் ஊருக்கு போய்ட வேண்டியது தான். ஹி..ஹி..

நன்றி Jaleela Kamal உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.