facebook

ஞாயிறு, அக்டோபர் 10, 2010

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? (தொடர் பதிவு)

                                                                                      

நேற்று நண்பர் "மங்குனி அமைச்சரிடமிருந்து" அவசர ஓலை! அதிலிருந்த சாரம்சம் கீழே!
-------

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? (தொடர் பதிவு)

முஸ்கி : நண்பர்களே நேற்று "சந்தோஷ் பக்கங்கள்" இந்த பதிவை போட்டு இருந்தார், "இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க" அப்படின்னு கேட்டு இருந்தார், ரொம்ப நல்ல விஷயம். எனவே நண்பர்களே உங்களால் முடிந்த அளவுக்கு அனைவரும் குறைந்த பட்சம் ஒரே ஒரு நாளாவது உங்கள் பிளாக்கில் இந்த பதிவை போடுங்க. நிறைய பேருக்கு 'ரீச்' ஆகும். விருப்பமுள்ளவர்கள் அனைவரும் இந்த தொடர்பதிவை தொடரலாம் .

For your quick referance:

http://santhoshpakkangal.blogspot.com/2010/10/blog-post.html

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா?

உங்க கிட்ட நீங்க உபயோகப்படுத்தாத பொருட்கள் ஆடைகள், பொம்மைகள் இருக்கா? அதை தூக்கி எறியவும் மனசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிங்களா? அதை எங்களிடம் கொடுங்க நாங்க அதை ஏழை எளியவர்களுக்கு கொடுக்கிறோம்.

CTC - Chennai Trekking Club என்று ஒரு இயக்கம் இருக்கிறது.. நீங்க மேற் சொன்ன விஷயங்களை இவர்களிடம் அளிக்க விரும்பினால்...

"இந்த சுட்டியில்"

(https://spreadsheets1.google.com/viewform?hl=en&formkey=dEU1d2gzVnNVVTBMR3Z2eGNiMS1RaVE6MQ#gid=0)

உள்ள EXCEL FORM-ஐ நிரப்பினால் எங்க தன்னார்வலர் ஒருவர்
உங்களை தொடர்பு கொண்டு உங்களை நேரில் சந்தித்து அதை
பெற்றுக் கொள்வார்கள். இப்போதைக்கு இது "சென்னையில்" உள்ளவர்களுக்கு மட்டுமே. நீங்கள் அளிக்க இருக்கும் பொருட்களை சென்னைக்கு அனுப்ப முடிந்தால் நீங்களே  கூட  இவர்களை   தொடர்பு கொள்ளலாம்.

"முத்துலட்சுமி" அக்கா சொன்ன மாதிரி இது ஆதரவற்ற முதியோர்களுக்கும், குழந்தைகளுக்கும் கொடுக்கப் போறாங்க. எனவே தயவு செய்து திரும்ப உபயோகப்படுத்தும் நிலையில் இருந்தால் மட்டும் கொடுங்க. கிழிந்த நிலையில் உள்ள துணிகளை எல்லாம் கொடுக்காதீங்க  பிளீஸ்!!

இது ஒரு நல்ல விஷயம். இதை படிப்பவர்கள் மற்றவர்களுக்கு தெரிவித்தால் கூட நம்மால் முடிந்த அளவுக்கு உதவி செய்யலாம்.
இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க!!

டிஸ்கி : உதவி பண்றேன்னு பெருமைக்காக நிறைய பேர் கிழிந்த,
உடைந்த பொருட்களை தருகிறார்கள், உங்களை யாரும் கட்டாயப்
படுத்தப் போவதில்லை, கொடுக்கபோகும் துணிகளை நன்றாக
துவைத்து, அயன் செய்து   உபயோகிக்கும் நிலையில் கொடுங்கள்.
இல்லை யென்றால் வேண்டாம். யாரும் உங்களை குறை
சொல்ல மாட்டார்கள்.

(நன்றி : சந்தோஷ் பக்கங்கள் + மங்குனி அமைச்சர்)


----------
சகோதர! சகோதரிகளே!! உங்களின் அவசர வேலையின் நேரத்திலும்,  சில நிமிடத் துளிகள் ஒதுக்கி இதை  படித்து மனதால்
புரிந்து கொண்டமைக்கு நன்றி!!



                                                                  

14 கருத்துகள்:

Chitra சொன்னது…

பலர் பயன் பெற உதவும் பதிவு.

Asiya Omar சொன்னது…

நல்ல பகிர்வு.பாராட்டுக்கள்.

நாடோடி சொன்னது…

ந‌ல்ல‌ முய‌ற்ச்சி.. வாழ்த்துக்க‌ள் ந‌ண்ப‌ரே..

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நல்ல முயற்சி.. தொடருங்கள்..

Santhosh சொன்னது…

ரொம்ப நன்றி நண்பரே...

Unknown சொன்னது…

நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்..

http://rkguru.blogspot.com/ சொன்னது…

நல்ல பதிவு வாழ்த்துகள்.....

மோகன்ஜி சொன்னது…

உங்களுக்கும் மங்குனி அமைச்சருக்கும் என் பாராட்டுகள் ! நல்ல தொண்டு இது

மங்குனி அமைச்சர் சொன்னது…

நன்றி நண்பரே

பவள சங்கரி சொன்னது…

நல்ல விடயம். நன்றி.

எம் அப்துல் காதர் சொன்னது…

இந்த பதிவுக்கு கருத்துரை வழங்கிய

@ சித்ரா மேடம்
@ ஆசியா உமர் மேடம்
@ ஸ்டீபன் சார்
@ ஸ்டார்ஜான் சார்
@ சந்தோஷ் சார்(முதல் வரவுக்கு
நன்றி நண்பரே!)

@ பதிவுலகில் பாபு
@ R K குரு சார்
@ மோகன்ஜி சார்
@ மங்குனி அமைச்சர் சார்
@ நித்திலம் சிப்பிக்குள் முத்து சார்

அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி!!

எம் அப்துல் காதர் சொன்னது…

இந்த பதிவுக்கு ஒட்டு போட்ட இன்னும் போட்டுக் கொண்டிருக்கிற அனைவருக்கும் நன்றிகள்!!

• chitrax
• asiya
• RDX
• nadodiyinparvaiyil
• hareekaa
• aasifaa
• mannanmagal
• rukya
• azhagiyanila
• poomayil
• rosemary
• muthumalar
• asaithambi
• maharaj
• chuttiyaar
• hihi12
• tamilz
• mounakavi
• easylife
• kaelango
• kvadivelan
• VGopi
• starjan
• jegadeesh
• jollyjegan
• vasanth1717
• Maayavan
• amaithiappa
• soundar1987
• sjsanthose
• Jayanthig64
• abdulkadher
• muthu04
• rkguru
• sriramanandaguruji
• verumpaye
• Riyas363
• bharani
• tamilsabari
• manguniamaicher
• winner
• shadiqah
• pannikkuttir
• nickyjohn

எம் அப்துல் காதர் சொன்னது…

இந்த பதிவுக்கு இன்னும் கருத்துரை வழங்கிக் கொண்டிருக்கும் ஒட்டு போட்ட, இன்னும் போட்டுக் கொண்டிருக்கிற அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்!!

vanathy சொன்னது…

நாட்டாமை, நல்ல பதிவு & முயற்சி. பலர் பயன்பெற வேண்டும்.